வெயிலுக்கு மருந்து...!
கீழ்க்காணும் வழிமுறைகளைப் பின்பற்றினால், கோடை வெயிலுக்கு அஞ்ச வேண்டியதில்லை:
☝ காலை எழுந்தவுடன் 200 மி.லி. குளிர்ந்த நீரைக் குடிக்க வேண்டும்.
☝ பழைய சோறு, நீராகாரம் மிகச் சிறந்தது.
☝ இளநீர், பதநீர் குடிக்கலாம்.
☝ தர்பூசணி, திராட்சை, வெள்ளரி, நுங்கு சாப்பிடலாம்.
☝ எலுமிச்சை சாறு, நன்னாரி சர்பத் (இயற்கையானது, வெறும் சர்க்கரைக் கலவை அல்ல) அருந்தலாம்.
☝ கார வகை உணவு, தின்பண்டங்கள், அசைவ உணவைத் தவிர்க்கலாம்.
☝ கேக், பப்ஸ், துரித உணவைத் தவிர்க்கலாம்.
☝ குளிர்பானங்களைத் தவிர்த்துக் குளிர்ந்த நீரை, மண்பானை நீரைக் குடிக்கலாம்.
☝ காலை, இரவு இரு வேளை குளிக்கவும்.
☝ உடலில் சந்தனம் பூசிக் குளியுங்கள்.
☝ கை, கால் முகத்தை ஒரு நாளைக்கு நான்கு, ஐந்து முறை குளிர்ந்த நீரால் கழுவிக்கொள்ளவும்.
☝ தயிரைக் கடைந்து வெண்ணெய் நீக்கப்பட்ட மோரை நிறைய குடிக்கலாம்.
☝ இறுக்கமாக ஆடை அணிவதைத் தவிருங்கள்.
☝ பருத்தி ஆடைகளை அணியுங்கள்.
☝ மது, புகையிலைப் பொருட்களைத் தவிருங்கள்.
☝ பொதுவாகவே வீடும் அலுவலகமும் காற்றோட்டமாக இருக்க வேண்டும், குறிப்பாக ஹாலும் படுக்கை அறையும்.
☝ பிளாஸ்டிக், இரும்பு, ஃபோம் இருக்கை, படுக்கைகளைப் பயன்படுத்தாதீர்கள்.
☝ தலைக்கு தினமும் எண்ணெய் வைத்துக்கொள்ளுங்கள்.
☝ வாரம் இரண்டு முறை எண்ணெய் தேய்த்துக் குளியுங்கள். உடல் சூடு கட்டுப்பாட்டில் இருக்கும்.
☝ எண்ணெய் தேய்த்து குளிக்கும் நாளில் தயிர், குளிர்பானம், மீன், இறால் சாப்பிட வேண்டாம்.
☝ மலக்கட்டு இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
☝ இரவில் நீண்ட நேரம் கண் விழிக்காதீர்கள்.
☝ பட்டினி, விரத முறைகளைத் தவிருங்கள்.
☝ மனதை லேசாக வைத்துக்கொண்டு, கோடை வெயிலைக் கட்டுப்படுத்தி நலமாக வாழுங்கள்.
No comments:
Post a Comment