WHATS APP

உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.

Bala's Jothidam

CONTACT INFORMATION

BALA'S THIRUPURASUNTHARI JOTHIDAM

நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1. உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
    2. இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க நல்ல முடிவுகள் கொடுக்கப்படும்.
    3. உங்கள் எதிர்காலத்தை திறமை பட செயலாற்ற ஒரு புத்துணர்வு கொடுக்கப்படும்..
    4. உங்கள் சந்தேகங்களை போக்கி வாழ்க்கை வளம்பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது..
    5 - உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
    6. இதன் மூலம் செயல் முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியும் நிலைக்கும்..
    பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
    G.V. Manikanda Sharma
    No.1/404, J.J. Nagar
    Mugappair East, Chennai - 600037.
    Tamil Nadu, India.
    Telephone:+91-9962225358, 9444226039.
    WhatsApp No : +91-9444226039.
    E-mail: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    எங்கள் முகவரி .
    1 / 404, ஜெ.ஜெ.நகர்.
    முகப்பேர் கிழக்கு,
    சென்னை – 600 037.
    செல் : +91-9962225358, 9444226039.
    தமிழ்நாடு – இந்தியா.
    E-mail ID: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    12 - எங்கள் சேவை .
    Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest.
    மூலம் சேவை செய்து தருகிறோம். .

Mani Sharma

Sri Bala's Thirupurasunthari Jothidam
  • இது தமிழர்களுக்கான சிறந்த ஆன்லைன் திருமணத் தகவல் மையம் ஆகும். பதிவு இலவசம். பதிவு செய்ய வரனின் பெயர், வயது, பிறந்த தேதி,பிறந்த நேரம், தந்தை பெயர், தாயர் பெயர், படிப்பு, தொழில், மாத வருமானம், பிறந்த ஊர், மொபைல் எண், ராசி, நட்சத்திரம், இலக்கினம், செவ்வாய் தோஷம், ராது-கேது தோஷம், உள்ளதா, தங்களின் வசதி மற்றும் எதிர்பார்ப்பு ஆகிய விபரங்களுடன் தங்களுடைய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து அனுப்பி வைத்தால் தங்களின் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரணுக்கும் ரூபாய் 50/- மட்டுமே கட்டணமாகும். நீங்கள் தேர்ந்தடுக்கும் வரனின் அடையாள எண் மற்றும் மொத்த வரண்களின் எண்ணிக்கையை கட்டாயம் மணி ஆர்டரில் குறிப்பிட வேண்டும். மேலும் மொத்தக் கட்டணத்துடன் ரூபாய். 30 மட்டும் கூரியர் கட்டணமாக சேர்த்து அனுப்பவும். தாங்கள் விரும்பிய வரங்களின் விபரங்கள் மறு தினமே கூரியர் தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விலாசம் பெற மணிகண்ட ஷர்மா தொடர்பு கொள்ளலாம்.
  • திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சிறந்த துவக்கமே பாதி வெற்றி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு பரம்பரையின் மூலகாரணமாக திருமணத்தை, மிகச்சிறப்பாக அமைத்துத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த நீலா மேட்ரிமோனி திருமண தகவல் மையம் கமிஷன், தரகு ஏதும் இன்றி இருமண வீட்டார்களிடமும் உண்மையான தகவல்களைக் கொடுத்து மிகச்சிறப்பான இல்வாழ்க்கை அமைய உதவ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்கள் தகவல் மையத்தில் பதிவுக் கட்டணம் குறைவாதே பதிவு செய்வதற்கு தங்களின் பயோ-டேட்டா, ஜாதகம், போட்டா மட்டும் போதுமானது. தங்கள் தகவல்களைத் தமிழிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து ஒருவாரத்திற்குள் தங்களது பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தங்களுக்கு பொருத்தமான ஒரு வரனை தேர்ந்தெடுக்க ரூ.50 மட்டுமே. வேறு எந்த கட்டணமும் கிடையாது. மணமக்கள், மண வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல்கள் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும் எங்களது சேவை அனைத்து மதத்தவர்க்கும், அனைத்து இனத்தவர்க்கும் உண்டு. எங்களது சேவயை மேலும் சிறப்புடன் செய்யவும், சேவையில் குறைபாடுகள் எதுவும் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். நீலா மேட்ரிமோனி திருமண தகவல் தொடர்பு மையம் 1 / 255, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9962225358, 9444226039 தம்ழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com

Jothidam

    ஜாதகம் கணிக்க ரூ 700/- மட்டுமே

    ஒரு ஜாதகம் பார்க்க ரூ 300/- மட்டுமே

    திருமணபொருத்தம் ஜாதகம் ஒன்றுக்கு ரூ 250/- மட்டுமே

    நேரில் பிரசன்னம் பார்க்க ரூ 500/- மட்டுமே

Wednesday 27 December 2017

வைகுண்ட ஏகாதசி 29-12-2017

ஓம் வாஸுதேவம் ஹ்ருஷீகேஸம் வாமனம் ஜலஸாயினம் ஜனார்தனம் ஹரிம் க்ருஷ்ணம் ஸ்ரீவக்ஷம் கருடத்வஜம்
வராஹம் புண்டரீகாக்ஷம் ந்ருஸிம்ஹம் நரகாந்தகம் அவ்யக்தம் ஸாஸ்வதம் விஷ்ணும் அனந்த மஜமவ்யயம்
நாராயணம் கதாத்யக்ஷம் கோவிந்தம் கீர்திபாஜனம் கோவர்தனோத்தரம் தேவம் பூதரம் புவனேஸ்வரம்
வேத்தாரம் யக்ஞபுருஷம் யக்ஞேஸம் யக்ஞவாஹகம் சக்ரபாணிம் கதாபாணிம் ஸங்கபாணிம் நரோத்தமம்
வைகுண்டம் துஷ்டதமனம் பூகர்பம் பீதவாஸஸம்த்ரிவிக்ரமம் த்ரிகாலஜ்ஞம் த்ரிமூர்த்திம் நந்திகேஸ்வரம்
ராமம் ராமம் ஹயக்ரீவம் பீமம் ரௌத்ரம் பவோத்பவம்ஸ்ரீபதிம் ஸ்ரீதரம் ஸ்ரீஸம் மங்கலம் மங்கலாயுதம்
தாமோதரம் தமோபேதம் கேஸவம் கேஸிஸூதனம்வரேண்யம் வரதம் விஷ்ணுமானந்தம் வஸுதேவஜம்
ஹிரண்யரேதஸம் தீப்தம் புராணம் புருஷோத்தமம்ஸகலம் நிஷ்கலம் ஸுத்தம் நிர்குணம் குணஸாஸ்வதம்
ஹிரண்யதனுஸங்காஸம் ஸுர்யாயுத ஸமப்ரபம்மேகஸ்யாமம் சதுர்பாஹும் குஸலம் கமலேக்ஷணம்
ஜ்யோதீ ரூமரூபம் ச ஸ்வரூபம் ரூப ஸம்ஸ்திதம்ஸர்வஞ்ஜம் ஸர்வரூபஸ்தம் ஸர்வேஸம் ஸர்வதோமுகம்
ஜ்ஞானம் கூடஸ்தமசலம் ஜ்ஞானதம் பரமம் ப்ரபும்யோகீஸம் யோக நிஷ்ணாதம் யோகினம் யோகரூபிணம்
ஈஸ்வரம் ஸர்வபூதானாம் வந்தே பூதமயம் ப்ரபும்இதி நாமஸதம் திவ்யம் வைஷ்ணவம் கலுபாபஹம்
வ்யாஸேன கதிதம் பூர்வம் ஸர்வபாப ப்ரணாஸனம்
ய: படேத் ப்ராதருத்தாய ஸ பவேத் வைஷ்ணவோ நர: ஸர்வ பாப விஸுத்தாத்மா: விஷ்ணு ஸாயுஜ்யமாப்னுயாத்
சாந்த்ராயண ஸஹஸ்ராணி கன்யாதான ஸதானி ச
கவாம் லக்ஷஸஹஸ்ராணி முக்திபாகீ பவேந்நர: அஸ்வமேதாயுதம் புண்யம் பலம் ப்ராப்னோதி மானவ: 
விஷ்ணு ஸதநாம ஸ்தோத்திரம்.

*திருமாலின் திவ்ய நாமங்கள் அனைத்தும் இடம் பெற்றிருக்கும் இத்துதியை வைகுண்ட ஏகாதசி (29.12.2017) வெள்ளிக்கிழமை அன்று பாராயணம் செய்தால் அஸ்வமேதயாகம் செய்த பலன் கிட்டுவதோடு நாராயணனின் பேரருளும் கிட்டும்*

Monday 25 December 2017

சபரிமலை 18 படிக்கட்டுகளும் அதன் மகத்துவமும்

*சபரிமலை 18 படிக்கட்டுகளும் அதன் மகத்துவமும் !

*முதல் படி*

பிறப்பு நிலையற்றது. நாம் செய்யும் நல்லவையும் கெட்டவையுமே நம் பாவ புண்ணியங்களை நிர்ணயிக்கும் என்று ஒவ்வொருவரும் உணர வேண்டும். இறைவன் திருவருளால் முக்தி பெற வேண்டும் என்ற ஆத்ம துடிப்பே விஷாத யோகம். இதுவே முதல்படி.

*இரண்டாம் படி*

பரமாத்மாவே என் குரு என உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெறுவது சாக்கிய யோகம்.

*மூன்றாம் படி*

கர்மயோகம் உபதேசம் பெற்றால் மட்டும் போதுமா? மனம் பக்குவம் அடைய வேண்டாமா? பலனை எதிர்பாராமல் கடமையை செய்யும் பக்குவம் கர்ம யோகம்.

*நான்காம் படி*

பாவ - புண்ணியங்கள் பற்றிக்கூட கவலைப்படாமல் எதன் மீதும் பற்றில்லாமல் பரமனை அடையும் வழியில் முன்னேறுவது ஞானகர்ம சன்னியாச யோகம் ஆகும்.

*ஐந்தாம் படி*

நான் உயர்ந்தவன் என்ற ஆணவம் இல்லாமல் தான தர்மங்கள் செய்வது ஐந்தாம்படி.

*ஆறாம் படி*

கடவுளை அடைய புலனடக்கம் மிகவும் அவசியம். இந்த புலன்கள் எல்லாம் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமே தவிர அவை இழுத்த இழுப்புக்கு நாம் போய்விடக் கூடாது. இதுவே ஆறாவது படி.

*ஏழாம் படி*

இந்த உலகில் காண்பவை எல்லாமே பிரம்மம் தான். எல்லாமே இறைவன் தான் என உணர்வது பிரம்ம ஞானம்.

*எட்டாம் படி*

எந்நேரமும் இறைவனின் திருவடி நினைவுடன் இருப்பது. வேறு சிந்தனைகள் இன்றி இருப்பது எட்டாம் படி.

*ஒன்பதாம் படி*

கடவுள் பக்தி மட்டும் இருந்தால் பயனில்லை. சமூக தொண்டாற்றி ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பது தான் உண்மையான பக்தி என்று உணர்வது இந்தப்படி.

*பத்தாம் படி*

அழகு, அறிவு, ஆற்றல் போன்று எத்தகைய தெய்வீக குணத்தைக் கண்டாலும் அதை இறைவனாக பார்ப்பது பத்தாம் படி.

*பதினொன்றாம் படி*

பார்க்கும் அனைத்திலும் இறைவன் குடிகொண்டுள்ளான் என்று பார்க்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்வது.

*பனிரெண்டாம் படி*

இன்பம் - துன்பம், விருப்பு - வெறுப்பு ஏழை - பணக்காரன், போன்ற அனைத்து வேறுபாடுகளையும் களைந்து அனைத்திலும் சமத்துவத்தை விரும்புவது பனிரெண்டாம் படி.

*பதிமூன்றாம் படி*

எல்லா உயிர்களிலும் இறைவன் வீற்றிருந்து இறைவனே அவர்களை இயக்குகின்றான் என்பதை உணர்தல் பதிமூன்றாம் படி.

*பதினான்காம் படி*

யோகம், பிறப்பு, இறப்பு மூப்பு ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்களை அகற்றி இறைவனின் முழு அருளுக்கு பாத்திரமாவதே பதினான்காம் படி.

*பதினைந்தாம் படி*
தீய குணங்களை ஒழித்து நல்ல குணங்களை மட்டும் வளர்த்துக்கொண்டு நம்மிடம் தெய்வம்சத்தை அதிகரிப்பது பதினைந்தாம் படி.

*பதினாறாம் படி*

இறைவனின் படைப்பில் அனைவரும் சமம் என்று உணர்ந்து ஆணவம் கொள்ளாமல் நடப்பது பதினாறாம் படி.

*பதினேழாம் படி*

சர்வம் பிரம்மம் என்று உணர்ந்து பரப்பிரம்ம ஞானத்தை அடைவது பதினேழாம் படி.

பதினெட்டாம் படி

யாரிடமும் எந்த உயிர்களிடத்தும் பேதம் பார்க்காமல், உன்னையே சரணாகதி அடைகிறேன் என்று அவனையே சரணடைவது பதினெட்டாம் படி..

*சுவாமியே சரணம் ஐயப்பா..!

Thursday 26 October 2017

முனிவர் ஒருவர்

#முனிவர் ஒருவர் மரத்தடியில் அமர்ந்து தம் வேட்டியில் இருந்த கிழிசலைத் தைத்துக்கொண்டு இருந்தார். அவர் ஒரு சிவபக்தர். அப்போது சிவனும், பார்வதியும் வான்வெளியில் வலம் வந்து கொண்டிருந்தனர். மரத்தடியில் ஒளிப்பிழம்பாய் அமர்ந்திருந்த முனிவரைக் கண்டதும் உளம் நெகிழ்ந்த அம்மை, ஐயனைப் பார்த்து,”மரத்தடியில் பார்த்தீர்களா?” என்றாள்.

#பார்த்தேன்” என்றார் பரமன்.

#பார்த்தபிறகு சும்மா எப்படி போவது? ஏதேனும் வரம் கொடுத்துவிட்டுப் போகலாம், வாருங்கள்” என்றாள் அம்மை.

#அட, அவன் அந்த நிலையெல்லாம் கடந்தவன். இப்போது அவனிடம் செல்வது வீண்வேலை, வேண்டாம் வா! நம் வழியே போகலாம்”

#ஆனால் பார்வதி விடவில்லை. ஐயனை வற்புறுத்தி மரத்தடிக்கு அழைத்து வந்துவிட்டாள்.

#வணக்கம், முனிவரே!” என வணங்கினர் அம்மையும் அப்பனும்.

#முனிவர் நிமிர்ந்து பார்த்தார். “அடடே! எம்பெருமானும் பெருமாட்டியுமா! வரணும் வரணும்…” என்று வரவேற்றார் முனிவர். தாகத்திற்கு மோர் கொடுத்து உபசரித்தார். அவ்வளவுதான். மீண்டும் கிழிசலைத் தைக்கத் தொடங்கிவிட்டார்.

#சற்றுநேரம் பொறுமையாகக் காத்திருந்துவிட்டு, “சரி, நாங்கள் விடை பெறுகிறோம்” என்றனர் அம்மையும் அப்பனும்.

#மகிழ்ச்சியாய்ப் போய் வாருங்கள், வணக்கம்” என்று சொல்லிவிட்டு மீண்டும் கிழிசலைத் தைக்க முனைந்தார் முனிவர்.

#அம்மை குறிப்புக் காட்ட, அப்பன் பணிவாய்க் கேட்டார். “முனிவரே! நாங்கள் ஒருவருக்குக் காட்சி கொடுத்துவிட்டால் வரம் கொடுக்காமல் போவதில்லை.எனவே தாங்கள் ஏதாவது வரம் கேளுங்கள்.கொடுக்கிறோம்” என்றார்.

#முனிவர் சிரித்தார். “வரமா! உங்கள் தரிசனமே எனக்குப் போதும். வரம் எதுவும் வேண்டாம். உங்கள் வழியைத் தொடருங்கள்” என்று சொல்லிவிட்டுப் பணியில் ஆழ்ந்தார்.

#அப்பனும் அம்மையும் விடவில்லை. “ஏதாவது வரம் கொடுக்காமல் செல்லமாட்டோம்” என்று பிடிவாதமாய் நின்றனர்.

#முனிவர் வேறு வழியின்றி ஒரு வரம் கேட்டார். “நான் தைக்கும்போது இந்த ஊசிக்குப் பின்னாலேயே நூல் போகவேண்டும்; அது போதும்” என்றார்.

#இதைக்கேட்ட அம்மையும் அப்பனும் திகைத்தனர்.

#ஏற்கனவே ஊசிக்குப் பின்னால்தான் நூல் போகிறதே. இதற்கு நாங்கள் ஏன் வரம் தரவேண்டும்?”என்று அம்மை பணிவாய்க் கேட்டார்.

#அதைத்தான் நானும் கேட்கிறேன். நான் ஒழுங்கு தவறாமல் நடந்துகொண்டு வந்தால் வரவேண்டிய பலன் நியதிப்படி தானாகப் பின்னால் வருமே.இடையில் நீங்கள் எதற்கு எனக்கு வரம் தரவேண்டும்?”என்று கேட்டார் முனிவர்.

#முனிவரின் விளக்கத்தைக் கேட்ட அம்மையும், அப்பனும் சிரித்துவிட்டு சென்றனர்.

#இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு.-----வள்ளுவர்.

#தூய்மையான இறை நம்பிக்கை கொண்டவர்களுக்கு,”நாம் சரியாக நடந்துகொண்டால் நமக்குரிய விளைவும் சரியாக இருக்கும் என்ற மனத்தெளிவு பிறக்கிறது.

#திருச்சிற்றம்பலம்.

Wednesday 25 October 2017

யுகம் என்றால் என்ன

யுகம் என்றால் என்ன? எதை கொண்டு அவை நிர்ணயிக்கப்படுகிறது? அவற்றுக்கு அடிப்படை என்ன? எதை கொண்டு அவை பிரிக்கப்படுகிறது? மொத்தம் எத்தனை யுகங்கள் உள்ளது?

இவை அனைத்திற்கும் விடை “பிரம்மனின் காலம்”. சரி பிரம்மனின் காலம் என்றால் என்ன? யுகங்கள் எவ்வாறு பிரம்மனுடன் தொர்பு உடையதாகிறது?
இதை பற்றி ஒவ்வொருவரும் விரிவாக தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. நம் புராணங்களும் இதிகாசங்களும் இந்த பிரம்மனின் கால அளவை கொண்டே நிகழ்வுகளை குறிக்கிறது. எனவே இதை பற்றி சற்று விரிவாக அலசலாம்.

மனிதர்களின் கால அளவும், தேவர்களின் கால அளவும் வேறுபடும். நமக்கு ஒரு வருடம் என்பது 12 மாதங்கள். ஆனால் தேவர்களுக்கு மனிதர்களின் ஒரு வருடம் என்பது ஒரு நாள்.

1 மனித வருடம் = 1 தேவ நாள்.
360 மனித வருடம் = 1 தேவ வருடம்.

இப்போது தேவர்களின் கால கணக்கை துவங்குவோம்.....

12000 தேவ வருடம் = 1 சதுர்யுகம் (43,20,000 மனித ஆண்டுகள்).

1 சதுர்யுகம் என்பது 4 யுகங்களை கொண்டது. அதாவது 12000 தேவ வருடங்களை நான்கு யுகங்களாக பிரிக்கலாம்.

கிருத யுகம் 17,28,000 மனித வருடம் / 4800 தேவ வருடம்.
திரேதாயுகம் 12,96,000 மனித வருடம் / 3600 தேவ வருடம்.
துவாபரயுகம் 8,64,000 மனித வருடம் / 2400 தேவ வருடம்.
கலியுகம் 4,32,000 மனித வருடம் / 1200 தேவ வருடம்.

அதாவது ஒரு சதுர்யுகம் என்பது 43,20,000 மனித ஆண்டுகள் அல்லது 12,000 தேவ வருடங்கள். சதுர்யுகத்தை மஹாயுகம் என்றும் அழைப்பர்.

71 மகாயுகங்கள் = 1 மனுவந்தரம்.

மொத்தம் 14 மனுவந்திரங்கள் உள்ளன அவை :

1.சுவயம்பு
2.சுவாரோசிஷம்
3.உத்தமம்
4.தாமசம்
5.ரைவதம்
6.சாக்சூசம்
7.வைவசுவதம்
8.சாவர்ணி
9.தக்ச சாவர்ணி
10.பிரம்ம சாவர்ணி
11.தர்ம சாவர்ணி
12.ருத்திர சாவர்ணி
13.ரௌசிய தேவ சாவர்ணி
14.இந்திர சாவர்ணி

இப்போது நாம் இருப்பது 7 வது மனுவந்திரம்.
1 மனுவந்திரம் என்பது ஒரு மனுவின் ஆட்சிகாலம் என்பதை மட்டும் இப்போது நினைவில் வைத்து கொள்ளுங்கள். மேலும் விவரங்களை கட்டுரையின் கீழ் காண்போம்.

கல்ப காலம்:
ஒரு கல்பகாலம் என்பது பிரம்மனின் ஒரு பகலை மட்டும் குறிக்கும். எனினும் பகலுக்கு சமமான இரவும் பிரம்மனுக்கு உண்டு.பிரம்மனின் இரவு காலத்தில் எந்தவித படைப்பும் நிகழ்வும் இருக்காது. எனவே பிரம்மனின் பகலை மட்டும் பிரம்மனின் ஒரு நாள் என்று பேச்சு வழக்கில் வந்தது.

பிரம்மனின் கல்பகாலத்தில் 14 மனுவந்திரங்கள் அடங்கும். அதாவது ஒவ்வொரு மனுவந்திரத்திர்க்கும் 1 மனு மற்றும் 1 இந்திரன் வீதம், 14 மனுக்கள் மற்றும் 14 இந்திரன்கள் தோன்றி மறைவார்கள் (இந்திரன் என்பது ஒரு பட்டம் மட்டுமே. ஒவ்வொரு மனுவந்திரத்திர்க்கும் ஒவ்வொரு இந்திரன் இருப்பார். இப்போது இருக்கும் இந்திரனின் பெயர் புரந்தரா).

2 மனுவந்திரத்திர்க்கு இடையில் ஒரு சிறு இடைவேளை காலம் இருக்கும்.
இந்த காலத்தின் பெயர் “ஸந்தியா காலம்”. ஸந்தியா காலத்தின் அளவு நான்கு கலியுகம் அளவு. அதாவது, 432000 X 4 = 1728000 மனித வருடங்கள்.

இதேபோல் 14 மனுவந்திரத்திர்க்கு பின்பு மீண்டும் ஒரு பெரிய இடைவேளை இருக்கும். அதுவே பிரம்மனின் இரவு.

எனவே பிரம்மனின் ஒரு பகலில், 71 X 14 மகாயுகங்களும்,15 ஸந்தியாகாலங்களும் இருக்கும்.
14 மனுவந்தரங்கள் = 71 x 14 மகாயுகங்கள் = 994 மகாயுகங்கள்.
15 ஸந்தியாகாலங்கள் = 15 x 17,28,000 = 2,59,20,000 மனித ஆண்டுகள்.
2,59,20,000 = 6 மஹாயுகங்கள். ( 43,20,000 X 6 = 2,59,20,000).

ஆக பிரம்மனின் 1 பகல் என்பது 1000 சதுர்யுகம் ஆகும் (994 + 6 சதுர்யுகங்கள்). இதையே பிரம்மனின் நாள் என்றும் கல்பம் என்றும், கல்பகாலம் என்றும் கூறுவர்.
இவ்வாறு 360 நாள் (அ) 360 கல்பம் (அ) 360 X 1000 சதுர்யுகம் என்பது பிரம்மனின் ஒரு வருடம்.

பிரம்மனின் 100 வருடம் = ஒரு பிரம்மனின் ஆயுள்.
அதாவது பிரம்மனின் ஆயுள் என்பது 155,520,000,000,000 மனித வருடங்கள்.
அவர் ஆயுள் முடியும்போது, இன்னும் பெரிய பிரளயம் ஏற்பட்டு அவரும் இறைவனிடம் ஒடுங்குவார்.

ஸ்ஸ்ஸ்ஸ்..... இப்பவே கண்ணை கட்டுதே....

யுகங்கள் என்றால் என்ன.... அவை எப்படி பிரம்மனோடு தொடர்பு கொண்டுள்ளது என்று ஓரளவிற்கு விளங்கியிருக்கும் என்று நினைக்கிறேன்.

இப்பொழுது நடந்துகொண்டிருக்கும் கல்பம் அல்லது பிரம்மாவின் பகலுக்கு 'சுவேத வராஹ கல்பம்' என்று பெயர். இக்கல்பத்தினுள், 7-வது மன்வந்தரமான வைவஸ்வத மன்வந்தரத்தில், 28-வது மகாயுகத்தில், கலியுகம் நடந்துகொண்டிருக்கிறது. கி.பி.2015 என்பது கலியுக வருடம் 5116 – 17 என்பதை குறிக்கின்றது.

நவீன கால விஞ்ஞானம் இந்த உலகத்தில் உயிரினம் தோன்றிய காலத்தை கணித்து 1,972,944,456 வருடங்கள் என்று கூறுகிறது. மேலே உள்ள நமது யுகங்களின் கணக்கை வைத்து பார்க்கும் போது தற்போதைய பிரம்மனின் ஆயுள் சரியாக 1,972,944,456 வருடங்கள் என்பது தெளிவாகிறது. பிரம்மாவிற்கு இப்போது 51 வயது நடந்து கொண்டிருக்கிறது. பிரம்மாவின் ஆயுள் 100 என்றால், அதன் பின் பிரளயம் ஏற்பட்டு படைப்புகள் அழியும் என்றால் இன்னும் ஜீவராசிகள் உயிர்வாழ 49 பிரம்மா ஆண்டுகள் பாக்கியுள்ளன. அதாவது 76,20,48,00,000,000 வருடங்கள் இன்னும் பாக்கியுள்ளது. நவீன அறிவியல் இந்த பிரபஞ்சத்தின் மீதம் உள்ள ஆயுள் என்று கணக்கிட்ட வருடங்களும் கிட்டத்தட்ட இதுவே... ஆச்சரியமாக இருக்கிறதா? நம்பிக்கை இல்லாவிட்டால் கூகிள் செய்து பாருங்கள்.....

நமது வேதங்களை மிஞ்சும் எந்த விஞ்ஞானமும் இவ்வுலகில் இல்லை என்பதை பெருமையுடன் சொல்லுவோம்.

Sunday 15 October 2017

எல்லோரும் அர்ச்சகர் ஆகலாமா

,எல்லோரும் அர்ச்சகர் ஆகலாமா?

ஒரு வேளை பின்னாளில் சமுதாய பார்வை மாறி எல்லோரும் அர்ச்சகர் ஆகலாம்.அப்படி இறைப்பணி செய்ய பேரவா கொண்ட வருங்கால அர்ச்சகர்களுக்கு சில கேள்விகள்:

1) அர்ச்சகம் என்பது தொழில் அல்ல. முள் மேல் நடக்கும் வேதனை. முள் குத்தும். வலியால் துடிப்பீர்கள். ஆனால் சிரித்து கொண்டே நடக்க வேண்டும். தயாரா? எந்த விதமான அரசின் சலுகைகள் கிடையாது, தினமும் பணி, ஒய்வூதியம்( சம்பளமே இல்லை ஒய்வூதியமாம்)அந்த லோன் இந்த லோன் என எந்த சலுகைகளும் இல்லை..அரசு தரும் சம்பளம் நீங்க கற்பனை கூட செய்ய முடியாது அவ்வளவு குறைவான சம்பளம்..ஆனாலும் விடுப்பு இல்லாமல் பணி....நீங்க தயாரா? அர்ச்சகர் பணி என்பது வருமானம் வரும் பெரும் கோவில்கள் மட்டுமல்ல ஆளே வராத ஆனால் நாங்கள் பூஜை நடத்தும் கோவில்களும் தான்...இங்கு அவர் நீங்க தயாரா?

2) நீங்கள் மட்டும் அர்ச்சகர் ஆகவில்லை. உங்கள் குடும்பமே அர்ச்சகர் தான்! ஆம். நான் திருவிழாகாலங்களில் சராசரியாக காலை 4 மணி முதல் இரவு 2 மணி வரை உழைக்க வேண்டும். என் குடும்பத்தினரும் என்னோடு எழுந்து என்னோடு துயல வேண்டும் -பலன் எதிர்பாராது. அப்படி இருக்க உம் குடும்பத்தினர் தயாரா?

3) பெரும்பாலான ஆலயங்களின் பல கோடி பெறுமான வைரம் தங்கம் பஞ்சலோக சிலைகள் அத்தனையும் அர்ச்சகரை நம்பியே ஒப்படைக்கப்படும். சிலை கடத்தல் மன்னன் போன்றோர் இவற்றை அபகரித்தால் போலீசில் அடி வாங்கும் முதல் நபர் அர்ச்சகர் தான். போலீஸ் அடி தாங்காமல் சிறு வயதிலேயே செவி திறனை நிரந்தரமாக இழந்த என் தந்தை போன்று நீங்கள் உங்கள் உறுப்புகளையும் உயிரையும் இழக்க தயாரா?

4) அப்படி கோவில் திருட்டு நடந்து எந்த காவாளிப்பயலோ தூக்கி கொண்டு போனாலும் அப்பவே நினைச்சேன்டா இந்த அய்யர் இதெல்லாம் செஞ்சு இருப்பான்னு என்கிற பேச்சுகளையும் கேட்டு கொண்டு அதே ஊரில் அதே தெய்வத்துக்கு தொண்டு செய்ய வேண்டும். தயாரா?

5) தெருவில் போகும்போது நீங்கள் புனிதமாய் நினைக்கும் பூணூல் அறுக்கப்படும். புகார் கொடுத்தால் கொடுத்த நாமே தாக்கபடுவோமே என்று வேறு பூணூல் மாற்றி கொண்ட அர்ச்சகர்களின் கதை எனக்கு தெரியும். அத்தகைய நிலைக்கு நீங்கள் தயாரா?

6) திருவானைக்காவில் அர்ச்சகர் புடைவை கட்டி கொண்டு தான் பூஜை செய்ய வேண்டும். ஒரு நாள் ஒரு மணி நேரம் நீங்கள் புடவை கட்டி கொண்டு வெளியில் வந்து பாருங்கள். அவர்கள் படும் அவமானங்கள் உங்களுக்கு புரியம். குடுமியும் கடுக்கணும் போட்டு கொண்டு பெண்ணினம் கலந்த ஆண் என்கிற எகத்தாள பேச்சுக்களை கேட்டு கொண்டே இறைப்பணி செய்ய தயாரா?

7) கோவிலில் திருட்டு நடந்தால் உங்களுக்கு உடல் ரீதியான தொந்தரவுகளை கொடுத்த காவலர்களையும் கோவிலுக்கு வந்தால், நல் உயர் பதவி பெற்று மென்மேலும் என்னை அடிக்க வகை செய்வீரே என்று இறைவனை மனதார ஆசீர்வாதம் செய்ய வைக்க வேண்டும்.முடியுமா?

8) ஒரு டிப்ளமா 3 வருஷம். இன்ஜினியரிங் 5 வருஷம். டாக்டர் படிக்க 5 வருஷம். ஒரு சர்ஜன் ஆக 7 வருஷம். ஆனால் முழு அர்ச்சகர் தகுதி பெற 14 வருஷம் பயில வேண்டும். மேலே சொன்ன டிப்ளமா எஞ்சினீர் மருத்துவர் சர்ஜனுக்கு கிடைக்கும் படிச்ச மனுஷன் என்கிற மரியாதை அர்ச்சகருக்கு உண்டா?

9) 7 வருஷ படிப்பு முடித்து சர்ஜன் ஆனவருக்கு சமபளம் ஒரு மணிக்கு ஒரு லக்ஷம். 14 வருஷம் வேதம் படித்தவனுக்கு சம்பளம் மாதம் 50 ரூபாய். அதுவும் பாக்கி வைத்துள்ளது அரசு..அதிலும் எங்களுக்கு தினப்படி உணவுக்கு கடினப்பட்டாலும், இறைவனுக்கு எப்பாடாகிலும் நிவேதனம் செய்யத் தவறாத மனப்பான்மையை கொண்ட அர்ச்சகரகளை அறிந்தது உண்டா நீங்கள்?

10) குழாயும் சட்டையும் அணிந்து கொண்டு மாதம் 5000 ரூபாய் சம்பளத்தில் அர்ச்சகத்தை விட்டு தப்பித்த அர்ச்சகர் வீட்டு பிள்ளைக்கு பெண் கொடுக்க எங்கள் ஜாதி பெற்றோர் தயார்.
25000 வருமானம் இருந்தாலும் குடுமி வைத்து இருப்பதாலும் நிரந்த வருமானம் இல்லை என்பதாலும் யாரும் பெண் கொடுப்பதில்லை. அர்ச்சகன் ஆகி விட்டதால் கல்யாணமே ஆகாமலே 50வயத்தை தாண்டிய என் அர்ச்சக சகோதரர்களுக்கு என்ன வடிகால் ? சமுதாயம் அர்ச்சகர்களை கடைசி வரை பிச்சை எடுத்து ஜீவிக்க வைத்து இருப்பது தானே இந்த இழி நிலைக்கு காரணம்?

11) எல்லா துறைகளும் தங்கள் கோரிக்கை நிறைவேற வேண்டி போராட்டம் ஆர்ப்பாட்டம் சாலைமறியல் வேலை நிறுத்தம் நடத்தியதை கேள்விபட்டு இருப்பீர்கள்...தங்கள் கோரிக்கை என்ன என முணு முணுக்க கூட தெரியாத, தமிழகத்தில் வேலை நிறுத்தம் என்ற ஒன்ற ஒன்றை மறந்து கூட அறிவிக்காத ஒரே பணி அர்ச்சகர் பணி என்பது தெரியுமா?
சுவாமியே இல்லை என்று கூறும் கயவர் கூட்டம், அந்தணர்களாகிய அர்ச்சர்களிடம் ஏன் இந்த போட்டி?

------இப்படிக்கு ஒரு ஏழை கிராமபுற ஏழை அர்ச்சகர்-------

நன்றி

ஹேவிளம்பி வருஷம் ஐப்பசி மாதம், விரத நாட்கள்


ஸ்ரீ பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
1 / 404, J . J  நகர் 17-வது தெரு, முகப்பேர் கிழக்கு, சென்னை – 600037
செல் : +91 9962225358 - 9444226039
ஹேவிளம்பி வருஷம் தக்ஷிணாயணம் - சரத்ருது. ஐப்பசி மாதம், அக்டோபர் - நவம்பர்-2017 முக்கிய விரத நாட்கள் மற்றும் விஷேசதினங்கள்
ஆங்கில தேதி
தமிழ் தேதி
கிழமை
பிறை


18-10-2017
ஐப்பசி-01
புதன்
தேய்பிறை
மாத சிவராத்திரி

19-10-2017
ஐப்பசி-02
வியாழன்
தேய்பிறை
அமாவாசை

23-10-2017
ஐப்பசி-06
திங்கள்
வளர்பிறை
மாத சதுர்த்தி

25-10-2017
ஐப்பசி-08
புதன்
வளர்பிறை
சஷ்டி விரதம்

28-11-2017
ஐப்பசி-11
சனி

திருவோண விரதம்

31-10-2017
ஐப்பசி-14
செவ்வாய்
வளர்பிறை
ஏகாதசி

01-11-2017
ஐப்பசி-15
புதன்
வளர்பிறை
பிரதோஷம்

03-11-2017
ஐப்பசி-17
வெள்ளி
வளர்பிறை
பௌர்ணமி

05-11-2017
ஐப்பசி-19
ஞாயிறு

கிருத்திகை விரதம்

07-11-2017
ஐப்பசி-21
செவ்வாய்
தேய்பிறை
சங்கடஹரசதுர்த்தி

09-11-2017
ஐப்பசி-23
வியாழன்
தேய்பிறை
சஷ்டி விரதம்

14-11-2017
ஐப்பசி-28
செவ்வாய் 
தேய்பிறை
ஏகாதசி

15-11-2017
ஐப்பசி-29
புதன்
தேய்பிறை
பிரதோஷம்

16-11-2017
ஐப்பசி-30
வியாழன்
தேய்பிறை
மாத சிவராத்திரி

விஷேசதினங்கள்

18-10-2017
ஐப்பசி-01
புதன்
 தீபாவளி பண்டிகை

19-10-2017
ஐப்பசி-02
வியாழன்
கேதார கௌரி விரதம், லட்சுமி குபேர பூஜை

20-10-2017
ஐப்பசி-03
வெள்ளி
சகல முருகன் ஆலயங்களில் கந்த சஷ்டி விரதாரம்பம்

23-10-2017
ஐப்பசி-06
திங்கள்
நாக சதுர்த்தி

25-10-2017
ஐப்பசி-08
புதன்
கந்த சஷ்டி திருவிழா திருச்செந்தூர் சூரசம்ஹாரம்

28-11-2017
ஐப்பசி-11
சனி
வாஸ்து நாள் காலை 7-44 மணி முதல் 8-20 மணி வரை

03-11-2017
ஐப்பசி-17
வெள்ளி
சகல சிவன்கோவில் அன்னாபிஷேகம்

05-11-2017
ஐப்பசி-19
ஞாயிறு
கிருத்திகை விரதம்

அறுபத்து மூன்று நாயன்மார்கள் மாணிக்கவாசகர் மற்றும் சந்தானக் குரவர்கள் முக்தி பெற்ற நாட்கள்.
20-10-2017 ஐப்பசி-03,ம் தேதி மெய்கண்ட சிவச்சரியார், 23-10-2017 ஐப்பசி-06-ம் தேதி பூசலார் நாயனார், 25-10-2017 ஐப்பசி-08-ம் தேதி ஐயடிகள் காடவர் கோன் நாயனார், 03-11-2017 ஐப்பசி-17-ம் தேதி திருமூலர் நாயனார், 04-11-2017 ஐப்பசி-18-ம் தேதி நின்றசீர் நெடுமாற நாயனார், மற்றும் குலச்சிறை நாயனார், 05-11-2017 ஐப்பசி-19-ம் தேதி இடங்கழி நாயனார், 10-11-2017 ஐப்பசி-24-ம் தேதி சக்தி சாயனார்

ஆழ்வார் – ஆச்சாரியர் அஹோபிலமடம் ஆழகிய சிங்கர்களின் திரு நட்சத்திரம்.
25-10-2017 ஐப்பசி-08-ம் தேதி மணவாள மாமுனிகள், 26-10-2017 ஐப்பசி-09-ம் தேதி சேனை முதலியார் திருக்குறுகைப் பிரான் பிள்ளை, 28-10-2017 ஐப்பசி-11-ம் தேதி பொய்கையாழ்வார் பிள்ளை லோகாச்சாரியார், 29-10-2017 ஐப்பசி-12-ம் தேதி பூதத்தாழ்வார் திருலையாண்டான் நடுவில் திருவீதிப்பட்டர்   30-10-2017 ஐப்பசி-13-ம் தேதி பேயாழ்வார் திருநட்சத்திரம், பின்பழகிய ஜீயர், 01-11-2017 ஐப்பசி-15-ம் தேதி வேலாஞ்சோலைப் பிள்ளை 02-11-2017 ஐப்பசி-16-ம் தேதி இரும்பில்யப்பர், 08-11-2017 ஐப்பசி-22-ம் தேதி கூரம் குலேத்தும தாசர், 11-11-2017 ஐப்பசி-25-ம் தேதி எதிராஜ ஜீயர்

மத்வாச்சாரியர் புண்ய தீர்த்த தினங்கள்.
26-10-2017 ஐப்பசி-09-ம் தேதி  வேதேசர், 30-10-2017 ஐப்பசி-13-ம் தேதி ஸத்திய வீரர் 31-10-2017 ஐப்பசி-14-ம் தேதி வேதநிதி, 07-11-2017 ஐப்பசி-21-ம் தேதி பத்மநாக வித்யாநிதி

கரிநாள் விபரம். 23-10-2017 திங்கள், 06-11-2017 திங்கள்




https://www.facebo ok.com/balaljothidam


https://twitter.com/balajothidam