WHATS APP

உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.

Bala's Jothidam

CONTACT INFORMATION

BALA'S THIRUPURASUNTHARI JOTHIDAM

நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1. உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
    2. இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க நல்ல முடிவுகள் கொடுக்கப்படும்.
    3. உங்கள் எதிர்காலத்தை திறமை பட செயலாற்ற ஒரு புத்துணர்வு கொடுக்கப்படும்..
    4. உங்கள் சந்தேகங்களை போக்கி வாழ்க்கை வளம்பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது..
    5 - உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
    6. இதன் மூலம் செயல் முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியும் நிலைக்கும்..
    பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
    G.V. Manikanda Sharma
    No.1/404, J.J. Nagar
    Mugappair East, Chennai - 600037.
    Tamil Nadu, India.
    Telephone:+91-9962225358, 9444226039.
    WhatsApp No : +91-9444226039.
    E-mail: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    எங்கள் முகவரி .
    1 / 404, ஜெ.ஜெ.நகர்.
    முகப்பேர் கிழக்கு,
    சென்னை – 600 037.
    செல் : +91-9962225358, 9444226039.
    தமிழ்நாடு – இந்தியா.
    E-mail ID: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    12 - எங்கள் சேவை .
    Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest.
    மூலம் சேவை செய்து தருகிறோம். .

Mani Sharma

Sri Bala's Thirupurasunthari Jothidam
  • இது தமிழர்களுக்கான சிறந்த ஆன்லைன் திருமணத் தகவல் மையம் ஆகும். பதிவு இலவசம். பதிவு செய்ய வரனின் பெயர், வயது, பிறந்த தேதி,பிறந்த நேரம், தந்தை பெயர், தாயர் பெயர், படிப்பு, தொழில், மாத வருமானம், பிறந்த ஊர், மொபைல் எண், ராசி, நட்சத்திரம், இலக்கினம், செவ்வாய் தோஷம், ராது-கேது தோஷம், உள்ளதா, தங்களின் வசதி மற்றும் எதிர்பார்ப்பு ஆகிய விபரங்களுடன் தங்களுடைய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து அனுப்பி வைத்தால் தங்களின் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரணுக்கும் ரூபாய் 50/- மட்டுமே கட்டணமாகும். நீங்கள் தேர்ந்தடுக்கும் வரனின் அடையாள எண் மற்றும் மொத்த வரண்களின் எண்ணிக்கையை கட்டாயம் மணி ஆர்டரில் குறிப்பிட வேண்டும். மேலும் மொத்தக் கட்டணத்துடன் ரூபாய். 30 மட்டும் கூரியர் கட்டணமாக சேர்த்து அனுப்பவும். தாங்கள் விரும்பிய வரங்களின் விபரங்கள் மறு தினமே கூரியர் தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விலாசம் பெற மணிகண்ட ஷர்மா தொடர்பு கொள்ளலாம்.
  • திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சிறந்த துவக்கமே பாதி வெற்றி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு பரம்பரையின் மூலகாரணமாக திருமணத்தை, மிகச்சிறப்பாக அமைத்துத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த நீலா மேட்ரிமோனி திருமண தகவல் மையம் கமிஷன், தரகு ஏதும் இன்றி இருமண வீட்டார்களிடமும் உண்மையான தகவல்களைக் கொடுத்து மிகச்சிறப்பான இல்வாழ்க்கை அமைய உதவ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்கள் தகவல் மையத்தில் பதிவுக் கட்டணம் குறைவாதே பதிவு செய்வதற்கு தங்களின் பயோ-டேட்டா, ஜாதகம், போட்டா மட்டும் போதுமானது. தங்கள் தகவல்களைத் தமிழிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து ஒருவாரத்திற்குள் தங்களது பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தங்களுக்கு பொருத்தமான ஒரு வரனை தேர்ந்தெடுக்க ரூ.50 மட்டுமே. வேறு எந்த கட்டணமும் கிடையாது. மணமக்கள், மண வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல்கள் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும் எங்களது சேவை அனைத்து மதத்தவர்க்கும், அனைத்து இனத்தவர்க்கும் உண்டு. எங்களது சேவயை மேலும் சிறப்புடன் செய்யவும், சேவையில் குறைபாடுகள் எதுவும் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். நீலா மேட்ரிமோனி திருமண தகவல் தொடர்பு மையம் 1 / 255, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9962225358, 9444226039 தம்ழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com

Jothidam

    ஜாதகம் கணிக்க ரூ 700/- மட்டுமே

    ஒரு ஜாதகம் பார்க்க ரூ 300/- மட்டுமே

    திருமணபொருத்தம் ஜாதகம் ஒன்றுக்கு ரூ 250/- மட்டுமே

    நேரில் பிரசன்னம் பார்க்க ரூ 500/- மட்டுமே

Thursday 24 March 2016

ஜனநாயக கடமை ஆற்றுவோம்!

ஜனநாயக கடமை ஆற்றுவோம்!

தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு அமலில் இருக்க வேண்டிய தேர்தலுக்கான நடத்தை விதிகள்

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதலே தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்து விடுகின்றன. இதன் பிறகு, வாக்காளர்களுக்கு பயனளிக்கக் கூடிய எவ்வித சலுகை அறிவிப்புகளையும், அரசோ அல்லது அரசு அதிகாரிகளோ அறிவிக்கக் கூடாது.

புதிய திட்டம் தொடர்பான அறிவிப்போ, அடிக்கல் நாட்டு விழாவோ நடத்தக் கூடாது. அது தொடர்பான வாக்குறுதிகளையும் அளிக்கக் கூடாது.

அரசு சார்ந்த நிறுவனங்களில் தனிப்பட்ட எந்தவொரு பணி நியமனத்தையும் செய்யக் கூடாது.

வேட்பாளர் எவரும் எந்தவொரு தனி நபருடைய நிலம், கட்டிடம், மதிற்ச்சுவர் முதலியவற்றின் மீது, அதன் உரிமையாளரின் அனுமதியின்றி கொடிக் கம்பம் நடுதல், விளம்பரத் தட்டிகள் கட்டுதல், சுவரொட்டிகள் ஒட்டுதல், விளம்பரம் எழுதுதல் போன்றவற்றுக்குப் பயன்படுத்தக் கூடாது.

ஓட்டுகளை பெறுவதற்காக சாதி, சமுதாய உணர்வுகளின் பேரில் வேண்டுகோள் விடக்கூடாது. கோயில்கள், மசூதிகள், சர்ச்சுகள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களை தேர்தல் பிரசாரத்திற்குப் பயன்படுத்தக் கூடாது. இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடாது.

தேர்தல் நேரத்தில் பத்திரிக்கைகளிலும், பிற ஊடகங்களிலும் அரசு செலவில் அரசின் சாதனைகளை விளம்பரமாக வெளியிடுதல், ஆளுங்கட்சிக்கு சாதகமாக பயன்படுத்துதல் கூடாது.

ஒரு அரசியல் கட்சியின் கூட்டம் நடத்துமிடத்தில், அதே நேரத்தில் மற்றொரு கட்சி ஊர்வலமோ, பேரணியோ நடத்தக் கூடாது. அதேபோல் ஒரு அரசியல் கட்சியின் விளம்பரங்களை மற்றொரு அரசியல் கட்சி அகற்றக் கூடாது.

வாக்காளர்களுக்கு கையூட்டு, அன்பளிப்பு வழங்குதல், வாக்காளர்களை மிரட்டுதல், ஆள் மாறாட்டம் செய்தல், வாக்குச் சாவடியிலிருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் வாக்காளர்களுடைய ஆதரவைக் கோருதல் போன்றவை தேர்தல் விதிகளுக்கு மாறானவை.

வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு ஒருநாள் முன்பாகவே மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெறும். அதன் பின்னர் எந்தவொரு பிரச்சார நடவடிக்கையிலும் வேட்பாளர்கள் இறங்கக் கூடாது.

வாக்குச் சாவடிக்கு வாக்காளர்களை வாகனங்களில் அழைத்து வர வேட்பாளர் எவரும் ஏற்பாடுகள் செய்யக் கூடாது.

அரசியல் கட்சி அல்லது வேட்பாளர், தான் கூட்டம் நடத்த கருதியுள்ள இடம் மற்றும் நேரம் குறித்து உள்ள+ர் காவல்துறைக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.

கூட்டம் தொடர்பாக ஒலிபெருக்கி அல்லது வேறு வசதிகளுக்கான அனுமதி அல்லது உரிமம் பெறப்பட வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள வேண்டும்.

தேர்தல் ஊர்வலம் நடக்கும் நேரம், அது தொடங்கும் இடம், செல்லும் வழித்தடம், முடியும் நேரம் மற்றும் இடம் போன்றவற்றை காவல்துறைக்கு தெரிவித்து உரிய முன்அனுமதியுடன் ஊர்வலங்களை நடத்த வேண்டும்.

ஊரகப் பகுதிகளில், கட்டிட உரிமையாளரின் ஒப்புதல் பெற்று விளம்பரம் செய்யலாம். இந்த ஒப்புதலை பெற்றதற்கான நகல்களை 3 நாட்களுக்குள் தேர்தல் அதிகாரி அல்லது அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியிடம், அந்த வேட்பாளர் அல்லது அரசியல் கட்சியினர் சமர்ப்பிக்க வேண்டும்.

அரசுக்கு சொந்தமான ஓய்வு இல்லங்கள், பயணிகள் தங்கும் இடங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான தங்கும் இடங்களை அனைத்து அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் எந்த வித பாகுபாடுமின்றி பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். இந்த தங்கும் இடங்களை பிரசார அலுவலகங்களாகவோ, பொதுக்கூட்ட இடமாகவோ, தேர்தல் பிரசார நோக்கத்துக்காக அரசியல் கட்சிகளோ, வேட்பாளரோ பயன்படுத்தக்கூடாது.

50,000-த்திற்கும் மேல் ஒருவர் பணத்தை இடமாற்றம் செய்யும் பொழுது பணத்திற்கான உரிய ஆவணங்களை வைத்திருத்தல் அவசியம்.

No comments:

Post a Comment