WHATS APP

உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.

Bala's Jothidam

CONTACT INFORMATION

BALA'S THIRUPURASUNTHARI JOTHIDAM

நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1. உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
    2. இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க நல்ல முடிவுகள் கொடுக்கப்படும்.
    3. உங்கள் எதிர்காலத்தை திறமை பட செயலாற்ற ஒரு புத்துணர்வு கொடுக்கப்படும்..
    4. உங்கள் சந்தேகங்களை போக்கி வாழ்க்கை வளம்பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது..
    5 - உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
    6. இதன் மூலம் செயல் முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியும் நிலைக்கும்..
    பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
    G.V. Manikanda Sharma
    No.1/404, J.J. Nagar
    Mugappair East, Chennai - 600037.
    Tamil Nadu, India.
    Telephone:+91-9962225358, 9444226039.
    WhatsApp No : +91-9444226039.
    E-mail: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    எங்கள் முகவரி .
    1 / 404, ஜெ.ஜெ.நகர்.
    முகப்பேர் கிழக்கு,
    சென்னை – 600 037.
    செல் : +91-9962225358, 9444226039.
    தமிழ்நாடு – இந்தியா.
    E-mail ID: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    12 - எங்கள் சேவை .
    Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest.
    மூலம் சேவை செய்து தருகிறோம். .

Mani Sharma

Sri Bala's Thirupurasunthari Jothidam
  • இது தமிழர்களுக்கான சிறந்த ஆன்லைன் திருமணத் தகவல் மையம் ஆகும். பதிவு இலவசம். பதிவு செய்ய வரனின் பெயர், வயது, பிறந்த தேதி,பிறந்த நேரம், தந்தை பெயர், தாயர் பெயர், படிப்பு, தொழில், மாத வருமானம், பிறந்த ஊர், மொபைல் எண், ராசி, நட்சத்திரம், இலக்கினம், செவ்வாய் தோஷம், ராது-கேது தோஷம், உள்ளதா, தங்களின் வசதி மற்றும் எதிர்பார்ப்பு ஆகிய விபரங்களுடன் தங்களுடைய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து அனுப்பி வைத்தால் தங்களின் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரணுக்கும் ரூபாய் 50/- மட்டுமே கட்டணமாகும். நீங்கள் தேர்ந்தடுக்கும் வரனின் அடையாள எண் மற்றும் மொத்த வரண்களின் எண்ணிக்கையை கட்டாயம் மணி ஆர்டரில் குறிப்பிட வேண்டும். மேலும் மொத்தக் கட்டணத்துடன் ரூபாய். 30 மட்டும் கூரியர் கட்டணமாக சேர்த்து அனுப்பவும். தாங்கள் விரும்பிய வரங்களின் விபரங்கள் மறு தினமே கூரியர் தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விலாசம் பெற மணிகண்ட ஷர்மா தொடர்பு கொள்ளலாம்.
  • திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சிறந்த துவக்கமே பாதி வெற்றி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு பரம்பரையின் மூலகாரணமாக திருமணத்தை, மிகச்சிறப்பாக அமைத்துத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த நீலா மேட்ரிமோனி திருமண தகவல் மையம் கமிஷன், தரகு ஏதும் இன்றி இருமண வீட்டார்களிடமும் உண்மையான தகவல்களைக் கொடுத்து மிகச்சிறப்பான இல்வாழ்க்கை அமைய உதவ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்கள் தகவல் மையத்தில் பதிவுக் கட்டணம் குறைவாதே பதிவு செய்வதற்கு தங்களின் பயோ-டேட்டா, ஜாதகம், போட்டா மட்டும் போதுமானது. தங்கள் தகவல்களைத் தமிழிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து ஒருவாரத்திற்குள் தங்களது பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தங்களுக்கு பொருத்தமான ஒரு வரனை தேர்ந்தெடுக்க ரூ.50 மட்டுமே. வேறு எந்த கட்டணமும் கிடையாது. மணமக்கள், மண வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல்கள் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும் எங்களது சேவை அனைத்து மதத்தவர்க்கும், அனைத்து இனத்தவர்க்கும் உண்டு. எங்களது சேவயை மேலும் சிறப்புடன் செய்யவும், சேவையில் குறைபாடுகள் எதுவும் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். நீலா மேட்ரிமோனி திருமண தகவல் தொடர்பு மையம் 1 / 255, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9962225358, 9444226039 தம்ழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com

Jothidam

    ஜாதகம் கணிக்க ரூ 700/- மட்டுமே

    ஒரு ஜாதகம் பார்க்க ரூ 300/- மட்டுமே

    திருமணபொருத்தம் ஜாதகம் ஒன்றுக்கு ரூ 250/- மட்டுமே

    நேரில் பிரசன்னம் பார்க்க ரூ 500/- மட்டுமே

Saturday 25 January 2014

இறை ஞானம் கூட்டும் பஞ்ச கேதார் யாத்திரை கேதார்நாத், மத்யமகேஷ்வர்,



இறை ஞானம் கூட்டும் பஞ்ச கேதார் யாத்திரை கேதார்நாத், மத்யமகேஷ்வர், துங்கநாத் , கர்பேஷ்வார் ,       
இமயத்திலுள்ள கேதார்நாத், மத்யமகேஷ்வர், துங்கநாத் , கர்பேஷ்வார் , ருத்ரநாத் ஆகிய 5 பெருமைமிக்க சிவஸ்தலங்களை தரிசிப்பதே பஞ்ச கேதார் யாத்திரை எனப்படுகிறது . மகாபாரதப் போரில் வெற்றி பெற்ற பாண்டவர்கள் சிவபெருமானை வழிபட கேதார்நாத் வந்தார்கள் . பாண்டர்வர்களைக் கண்ட சிவபெருமான் நந்தியாக உருமாறினார். நந்தி வடிவத்தில் இருந்த சிவபெருமானைப் பாண்டர்வர்கள் அறிந்து கொண்டார்கள். உடனே நந்தி வடிவத்திலிருந்த சிவபெருமான் தனுது கொம்பால் பூமியை பிளந்து மறைவதற்கு முயற்சி செய்தார் . இதனைக் கண்ட பீமன் நந்தியோடு போராடினான் . போராட்டத்தில் நந்தியின் உடலைத் தனித்தனியாக கிழித்து எறிந்தான் . பீமனால் வீசி எறியப்பட்ட நந்தியின் அங்கங்கள் இமயத்தில் 5 இடங்களில் விழுந்தன . அவையே இந்த 5 ஸ்தலங்கள் . மந்தாகினி நதிக்கரையோரத்தில் உள்ள கௌரி குளத்தின் அருகே பிரம்மாண்டமான கேதார்நாத் கோவில் கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது . இவ்வாலயம் அந்தக் காலத்து கட்டயூரி வடிவமைப்பில் அமைந்துள்ளது . கோவிலின் கூரைகள் தேக்கு மரங்களால் வேயப்பட்டுள்ளது மிகவும் விசேஷமானது . கேதார்நாத்தில் நந்தியின் (சிவபெருமான் ) கழுத்துப் பகுதி விழுந்ததால், கோவிலின் பிரதான சந்நிதியில் நந்தி பகவான் கழுத்து பாகம் வரை மட்டுமே தெரியும் வண்ணம் மிகச் சிறப்பாக காட்சிக் கொடுக்கிறார் .
மத்யமகேஷ்வர் கோவிலில் மக்கள் சிவபெருமானின் வயிற்றுப் பகுதியை வணங்குகிறார்கள் . கேதார்நாத்திலிருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் உகிமத் என்ற இடத்திலிருந்து வடகிழக்கு திசையில் 25 கிலோமீட்டர் தொலைவு சென்றால் குப்தகாசி என்ற இடத்தை அடையலாம் . குப்தகாசியிலுள்ள காளிமத் என்ற இடத்தில் மத்யமகேஷ்வர் கோவில் அமைந்துள்ளது . கோவில் நுழைவாயிலில் நந்தி பகவான் காட்சி கொடுக்கிறார் . அடுத்து சிவபெருமான் பார்வதி தேவியோடு அருள் புரியும் சந்நிதியும் உள்ளது .

உகிமத்திலிருந்து 37 கிலோமீட்டர் தொலைவில், பத்ரிநாத் செல்லுன் வழியில் துங்கநாத் சிவஸ்தலம் உள்ளது . துங்கநாத் கோவிலில் சிவபெருமான் ஒரு அடி உயரத்தில் கருப்பு நிறமுடைய சுயம்பு லிங்கமாகக் காட்சி தருகிறார் . துங்கநாத் கோவிலில் பீமனால் வீசி எறியப்பட்ட நந்தியின் புஜங்கள் விழுந்ததால், இங்குள்ள பிரதான சந்நிதியில் சிவபெருமான் புஜங்களோடு வெகு அழகாக தரிசனம் தருகிறார் . இந்தக் கோவிலில் பார்வதி தேவிக்கு தனிச்சந்நிதி உள்ளது . இந்த இடத்தில்தான் இராவணன் சிவபெருமானை நினைத்து தவம் செய்தான் என்று ராமாயணம் சொல்லுகிறது . நந்தியின் (சிவபெருமானின் ) ஜடை மட்டும் கர்பேஷ்வர் கோவிலில் விழுந்ததால், இங்கு சிவபெருமான் ஜடையோடு தரிசனம் கொடுக்கிறார். இங்கு சிவபெருமான் ஜடாதாரி என்ற பெயராலும் அழைக்கப்படுகிறார் . கர்பேஷ்வர் கோவில் யுர்கம் என்ற பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது . இந்தக் கோவிலில் பிரதான சந்நிதியில் கருப்பு நிறத்தில் நந்தி பகவான் தரிசனம் கொடுக்கிறார் .

சிவபெருமானின் 5 ஆவது அங்கமான முகம் மட்டும் ருத்ரநாத் கோவிலில் விழுந்ததால் இங்கே அழகிய முகத்தோடு சிவபெருமான் காட்சி கொடுக்கிறார் . இந்தக் கோவிலிலும் சுயம்பு லிங்கம் இடம் பெற்றுள்ளது . இடப்புறத்தில் 5 சிறுய லிங்கங்கள் உள்ளன . வலப்புறத்தில் சரஸ்வதி தேவி சந்நிதி உள்ளது . இது இந்தக் கோவிலின் சிறப்பு அம்சமாகும் . பஞ்சகேதார் யாத்திரை கேதார்நாத்திலிருந்து தொடங்கி மத்யமகேஷ்வர், துங்கநாத் , கர்பேஷ்வர், ருத்ரநாத் என்று 5 சிவஸ்தலங்களை கொண்டது. ருத்ரநாத் கோவிலின் அருகே சூர்யா குளம் , சந்திர குளம் , நட்சத்திரக் குளம் என்று மூன்று விசேஷமான குளங்களில் நீராடலாம் . ருத்ரநாத் கோவிலின்
அருகே வைதாரிணி என்ற நதியும் ஓடுகிறது . மறந்த ஆத்மாக்கள் பூலோகத்திலிருந்து தேவலோகத்திற்கு செல்லும்போது இந்த நதியைக் கடந்து செல்வதாக சொல்கிறார்கள் . பஞ்ச கேதார் யாத்திரை மனதிற்கு அமைதியைக் கொடுத்து, தெளிவான சிந்தனையை வளர்க்கிறது . பாவங்களைப் போக்கி இறை ஞானத்தைக் கூட்டுகிறது . இத்தகைய சிறப்பு அமசங்களைக் கொண்ட பஞ்ச கேதார் சிவஸ்தலங்களைப் பார்க்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் .

No comments:

Post a Comment