WHATS APP

உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.

Bala's Jothidam

CONTACT INFORMATION

BALA'S THIRUPURASUNTHARI JOTHIDAM

நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1. உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
    2. இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க நல்ல முடிவுகள் கொடுக்கப்படும்.
    3. உங்கள் எதிர்காலத்தை திறமை பட செயலாற்ற ஒரு புத்துணர்வு கொடுக்கப்படும்..
    4. உங்கள் சந்தேகங்களை போக்கி வாழ்க்கை வளம்பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது..
    5 - உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
    6. இதன் மூலம் செயல் முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியும் நிலைக்கும்..
    பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
    G.V. Manikanda Sharma
    No.1/404, J.J. Nagar
    Mugappair East, Chennai - 600037.
    Tamil Nadu, India.
    Telephone:+91-9962225358, 9444226039.
    WhatsApp No : +91-9444226039.
    E-mail: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    எங்கள் முகவரி .
    1 / 404, ஜெ.ஜெ.நகர்.
    முகப்பேர் கிழக்கு,
    சென்னை – 600 037.
    செல் : +91-9962225358, 9444226039.
    தமிழ்நாடு – இந்தியா.
    E-mail ID: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    12 - எங்கள் சேவை .
    Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest.
    மூலம் சேவை செய்து தருகிறோம். .

Mani Sharma

Sri Bala's Thirupurasunthari Jothidam
  • இது தமிழர்களுக்கான சிறந்த ஆன்லைன் திருமணத் தகவல் மையம் ஆகும். பதிவு இலவசம். பதிவு செய்ய வரனின் பெயர், வயது, பிறந்த தேதி,பிறந்த நேரம், தந்தை பெயர், தாயர் பெயர், படிப்பு, தொழில், மாத வருமானம், பிறந்த ஊர், மொபைல் எண், ராசி, நட்சத்திரம், இலக்கினம், செவ்வாய் தோஷம், ராது-கேது தோஷம், உள்ளதா, தங்களின் வசதி மற்றும் எதிர்பார்ப்பு ஆகிய விபரங்களுடன் தங்களுடைய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து அனுப்பி வைத்தால் தங்களின் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரணுக்கும் ரூபாய் 50/- மட்டுமே கட்டணமாகும். நீங்கள் தேர்ந்தடுக்கும் வரனின் அடையாள எண் மற்றும் மொத்த வரண்களின் எண்ணிக்கையை கட்டாயம் மணி ஆர்டரில் குறிப்பிட வேண்டும். மேலும் மொத்தக் கட்டணத்துடன் ரூபாய். 30 மட்டும் கூரியர் கட்டணமாக சேர்த்து அனுப்பவும். தாங்கள் விரும்பிய வரங்களின் விபரங்கள் மறு தினமே கூரியர் தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விலாசம் பெற மணிகண்ட ஷர்மா தொடர்பு கொள்ளலாம்.
  • திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சிறந்த துவக்கமே பாதி வெற்றி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு பரம்பரையின் மூலகாரணமாக திருமணத்தை, மிகச்சிறப்பாக அமைத்துத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த நீலா மேட்ரிமோனி திருமண தகவல் மையம் கமிஷன், தரகு ஏதும் இன்றி இருமண வீட்டார்களிடமும் உண்மையான தகவல்களைக் கொடுத்து மிகச்சிறப்பான இல்வாழ்க்கை அமைய உதவ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்கள் தகவல் மையத்தில் பதிவுக் கட்டணம் குறைவாதே பதிவு செய்வதற்கு தங்களின் பயோ-டேட்டா, ஜாதகம், போட்டா மட்டும் போதுமானது. தங்கள் தகவல்களைத் தமிழிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து ஒருவாரத்திற்குள் தங்களது பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தங்களுக்கு பொருத்தமான ஒரு வரனை தேர்ந்தெடுக்க ரூ.50 மட்டுமே. வேறு எந்த கட்டணமும் கிடையாது. மணமக்கள், மண வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல்கள் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும் எங்களது சேவை அனைத்து மதத்தவர்க்கும், அனைத்து இனத்தவர்க்கும் உண்டு. எங்களது சேவயை மேலும் சிறப்புடன் செய்யவும், சேவையில் குறைபாடுகள் எதுவும் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். நீலா மேட்ரிமோனி திருமண தகவல் தொடர்பு மையம் 1 / 255, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9962225358, 9444226039 தம்ழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com

Jothidam

    ஜாதகம் கணிக்க ரூ 700/- மட்டுமே

    ஒரு ஜாதகம் பார்க்க ரூ 300/- மட்டுமே

    திருமணபொருத்தம் ஜாதகம் ஒன்றுக்கு ரூ 250/- மட்டுமே

    நேரில் பிரசன்னம் பார்க்க ரூ 500/- மட்டுமே

Wednesday 1 January 2014

தனுசு ராசி, மூலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்




புத்தாண்டு பலன்  2014 தனுசு

தனுசு ராசி, மூலம், பூராடம், உத்திராடம்  1-ம் பாதம்
     
கள்ளம் கபடமின்றி உண்மையை மட்டுமே பேசும் குணம் கொண்ட தனுசு ராசி நேயர்களே!
உங்களுக்கு என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2014 ஆம் ஆண்டு உங்களின் பெயர், செல்வம், செல்வாக்கு புகழ் போன்ற அனைத்தையும் உயர்த்தும் ஆண்டாக இருக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது. ஜென்ம ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-இல் குருபகவான் ஆண்டின் முற்பாதி வரை சஞ்சரிக்கவிருப்பதால் பணவரவுகளுக்குப் பஞ்சம் இருக்காது. குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். கணவன்-மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். சனியும் ராகுவும் 11-இல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்திலும் நல்ல லாபங்கள் கிட்டும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளால் லாபம் உண்டாகும். கொடுக்கல்-&வாங்கலிலும் சரளமான நிலை இருக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு பாராட்டுதல்களையும், உயர் பதவிகளையும் பெறுவார்கள். வரும் 13.06.2014 இல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு 8-ஆம் வீட்டிற்கு மாறுதலாக விருப்பதால் பண விஷயங்களில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. 21.06.2014 இல் ஏற்படவுள்ள சாப் கிரக மாற்றத்தால் கேது 4-ஆம் வீட்டிலும் ராகு 10-ஆம் வீட்டிலும் சஞ்சரிக்கவுள்ளனர். இதனால் சிறு சிறு விரயங்கள் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அனுகூலங்களும் உண்டு. உற்றார் உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. இவ்வருட இறுதியில் 16.12.2014 ஏற்படவுள்ள சனி மாற்றத்தால் சனி உங்கள் ராசிக்கு 12-ஆம் வீட்டில் சஞ்சரிக்க விருப்பதால் ஏழரைசனியில் விரய சனி தொடங்கவுள்ளது.

தேக ஆரோக்கியம்
  
 உடல் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும் எடுக்கும் எல்லா காரியங்களிலும் வெற்றிகளைப் பெறுவதால் மன நிம்மதியும், மகிழ்ச்சியும் உண்டாகும். நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் மருத்துவச் செலவுகள் குறையும். குடும்பத்திலுள்ளவர்களும் மருத்துவ செலவுகளின்றி மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

குடும்பம் பொருளாதார நிலை

   கணவன்&மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கும் நல்ல வரன்கள் தேடி வரும். சிலருக்கு புத்திர பாக்கியமும் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். அதி நவீன பொருட்களின் சேர்க்கை, ஆடை ஆபரண சேர்க்கை போன்ற யாவும் உண்டாகும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும் எதிர் பாராத உதவிகளும் கிட்டும்.

கொடுக்கல்&வாங்கல்

  ஆண்டின் முற்பாதியில் பணவரவுகள் சரளமாக இருப்பதால் கொடுக்கல்&வாங்கலும் சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். பெரிய முதலீடுகளையும் எளிதில் ஈடுபடுத்த முடியும் என்றாலும் பிற்பாதியில் பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பது வாக்குறுதி கொடுப்பது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமான பலன் கிட்டும்.

தொழில் வியாபாரிகளுக்கு

   தொழில் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றங்கள் உண்டாகும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளாலும் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் தொழிலாளர்களின் ஆதரவும் அபிவிருத்தியை பெருக்க உதவும். ஆண்டின் பிற்பாதியில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது. தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

உத்தியோகஸ்தர்களுக்கு

    பணியில் கௌரமான நிலையிருக்கும். எதிர்பாராத பதவி உயர்வுகள் கிட்டும். உயரதிகாரிகளின் ஆதரவுகளால் பணியில் திறம்பட செயல்பட்டு பாராட்டுதல்களைப் பெற முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிடைக்கும். ஆண்டின் பிற்பாதியில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது.

அரசியல்வாதிகளுக்கு

   உங்களின் பெயர் புகழ் உயரக் கூடிய காலமாக இந்த ஆண்டு இருக்கும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். மறைமுக வருவாய்களும் பெருகும். கட்சிப் பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். ஆண்டின் பிற்பாதியில் மேடை பேச்சுகளில் கவனமுடனிருப்பது மூலம் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்க முடியும்.

விவசாயிகளுக்கு

  பயிர் விளைச்சல் அமோகமாக இருக்கும். விளை பொருளுக்கேற்ற விலை சந்தையில் கிடைக்கப் பெறுவதால் உழைப்பிற்கேற்றப் பலனைப் பெறுவீர்கள். புதிய நவீன கருவிகள் வாங்கும் யோகம், பூமி மனை போன்றவற்றால் அதிர்ஷ்டம் உண்டாகும். குடும்பத்திலும் சுபிட்சமான நிலையிருக்கும். சுப காரியங்களும் நடைபெறும். ஆண்டின் பிற்பாதியில் பண விஷயங்களில் கவனமுடனிருப்பது நல்லது.

பெண்களுக்கு

   உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். உறவினர்களிடையே இருந்த பகைமை விலகும். பிறந்த இடத்திற்கும், புகுந்த இடத்திற்கும் பெருமை சேர்க்கும் விதத்தில் நடந்து கொள்வீர்கள். திருமணமாகதவர்களுக்கு மணமாகும். அழகான புத்திர பாக்கியமும் அமையும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் புதிய ஆடை ஆபரணம் போன்றவற்றை வாங்குவீர்கள். சேமிப்பும் பெருகும்.

படிப்பு

   கல்வியில் முதன்மை பெற்று விளங்கி பள்ளி, கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பீர்கள். சிலருக்கு வெளியூர், வெளி நாடுகளுக்கு சென்று பணி புரிய கூடிய வாய்ப்பும் உண்டாகும். நல்ல நண்பர்களின் தொடர்புகளால் மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும்.

  லாட்டரி, ரேஸ், ஷேர் போன்றவற்றில் ஆண்டின் முற்பாதியில் நல்ல லாபம் கிடைக்கும். பிற்பாதியில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது கவனமுடனிருப்பது நல்லது.

ஜனவரி

  எதையும் எளிதில் கிரகிக்கும் தன்மை கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பது உடல் நிலையில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும் என்றாலும் 10-இல் செவ்வாயும், 11-இல் சனி ராகுவும் சஞ்சரிப்பதால் எதையும் எதிர் கொள்ளும் வலிமையும் உண்டாகும். 7-இல் சஞ்சரிக்கும் குரு வக்ர கதியிலிருப்பதால் பணம் கொடுக்கல்&வாங்கல் விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் எதிர் பார்த்த லாபத்தினை அடைய முடியும். கூட்டாளிகளை சற்று அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் சிறு சிறு வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. சிவனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்
16.01.2014 காலை 07.13 மணி முதல் 18.01.2014 மாலை 06.48 மணி வரை.

பிப்ரவரி

  ஒழுக்கமும், நெறி தவறாத பண்பும் கொண்ட உங்களுக்கு 7-இல் சஞ்சரிக்கும் குரு வக்ரகதியில் சஞ்சரித்தாலும் 10-இல் செவ்வாயும் 11-இல் சனி ராகுவும் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். பயணங்களாலும் அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். பணவரவுகளும் தேவைக்கேற்றபடி அமையும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்கு பின் வெற்றி கிட்டும். கொடுக்கல், வாங்கலில் சற்று கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களும் பணியில் எதிர்பார்த்த உயர்வுகளைப் பெற முடியும். புத்திர வழியில் சிறு சிறு மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்
12.02.2014 மதியம் 02.22 மணிமுதல் 15.02.2014அதிகாலை 01.59 மணிவரை

மார்ச்
   முன் கோபியாக இருந்தாலும், கள்ளம் கபடமில்லாத குணம் கொண்ட உங்களுக்கு 3-இல் சூரியனும், 11-இல் சனி ராகுவும் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். எதிர்பாராத உதவிகள் தேடி வரும். பல பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். குடும்பத்திலும் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். பண வரவுகள் தேவைக்கேற்றயிருக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் அனுகூலப் பலனை உண்டாக்கும். கொடுக்கல் வாங்கலிருந்த தடைகள் விலகும். கொடுத்த கடன்கள் யாவும் வசூலாகும். தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்
11.03.2014 இரவு 09.25 மணி முதல் 14.03.2014 காலை 09.05 மணி வரை.

ஏப்ரல்

   அவசர குணமிருந்தாலும் எதையும், திருத்தமாக செய்து முடிக்கும் குணம் கொண்ட உங்களுக்கு, சம சப்தம ஸ்தானமான 7-இல் குரு சஞ்சரிப்பதால் திருமண சுப காரிய முயற்சிகளிலிருந்த தடைகள் விலகும். கணவன்&மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உறவினர்களால் இருந்த பிரச்சனைகள் விலகும். 10-இல் செவ்வாயும் 11-இல் சனி ராகுவும் சஞ்சரிப்பதால் உத்தியோகஸ்தர்களுக்கு  பணியில் உயர்வுகள் கிடைக்கப் பெறுவதோடு, திறமைக்கேற்ற பாராட்டுதல்களும் கிட்டும். வெளியூர் வெளி நாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகளும் உண்டாகும். தொழில் வியாபாரமும் அபிவிருத்தி அடையும். கடன்கள் யாவும் குறையும். சனி ப்ரீதி, ஆஞ்ச நேயரை வழிபடுவது நல்லது

சந்திராஷ்டமம்
08.04.2014 அதிகாலை 03.19 மணி முதல் 10.04.2014 மாலை 04.09 மணி வரை

மே
   எதையும் வெளிப்படையாக பேசும் குணம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 7-இல் குருவும், 10-இல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். கூட்டாளிகளால் அனுகூலம் ஏற்படும். உத்தியோகத்திலிருப்பவர்களும் திறம்பட செயல்படும் ஆற்றலும் உண்டாகும். கௌரவம் புகழ் யாவும் உயரும். கணவன்&மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களும் கை கூடும். உறவினர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சியான அளிப்பதாக அமையும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சிவபெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்
05.05.2014 மதியம் 11.37 மணி முதல் 07.05.2014 இரவு 11.20 மணி வரை.

ஜீன்

  அறிவாற்றலும், தீர்க்க தரிசனமும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 6இல் சூரியனும் 7-இல் குருவும் சஞ்சரிப்பதால் பொருளாதார மேன்மை, எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, எந்த வித  எதிர்ப்புகளையும் எதிர் கொள்ளும் வல்லமை உண்டாகும். வரும் 13-ம் தேதி ஏற்படவுள்ள குருமாற்றத்தால் குரு 8-ஆம் வீட்டிற்கு மாறுதலாக விருப்பதால் பணம் கொடுக்கல்&வாங்கல் போன்ற விஷயங்களில் கவனமுடன் செயல் படுவது நல்லது. வரும் 21-ஆம் தேதி ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தால் கேது 4-லும் ராகு 10-லும் சஞ்சரிக்கவிருப்பதால் ஒரளவுக்கு சுமாரான பலனைப் பெற முடியும். அசையா சொத்துக்களால் வீண் விரயம் உண்டாகும். தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்
01.06.2014 இரவு 06.56 மணிமுதல் 04.06.2014 காலை 06.38 மணி வரை.மற்றும் 29.06.2014அதிகாலை 02.20 மணிமுதல் 01.07.2014 மதியம் 02.02 மணி வரை

ஜீலை
   தவறு செய்பவர்களை, மன்னிக்கும் சுபாவம் கொண்டே உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 7-இல் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். மாத பிற்பாதியில் 11 லுள்ள சனி வக்ர நிவர்த்தியடைவதாலும், செவ்வாய் 11-இல் சஞ்சரிக்க விருப்பதாலும் தொட்டதெல்லாம் துலங்கும். குரு 8-இல் சஞ்சரித்தாலும் பணவரவுகள் தேவைக்கேற்ற படியிருக்கும். கணவன்&மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் ஏற்பட்டு ஒற்றுமை குறைவு உண்டாகும். தொழில் வியாபாரம் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் வர வேண்டிய லாபம் வரும் சிவபெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்
26.07.2014 காலை 09.42 மணி முதல் 28.07.2014 இரவு 09.24 மணி வரை.

ஆகஸ்ட்
   தாம் கற்றணுர்ந்ததை பிறருக்கு போதிக்கும் சுபாவம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 8-இல் சூரியன் குரு சஞ்சரித்தாலும் 11-இல் செவ்வாய் சனி சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும். பண வரவுகளில் நெருக்கடிகள் ஏற்படக் கூடிய காலம் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைப்பது, கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் செயல்படுவது நல்லது. உற்றார் உறவினர்களால் வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தைப் பெற சற்று எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது, தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. குரு ப்ரீதி தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்
 22.08.2014 மாலை 05.02 மணி முதல் 25.08.2014 அதிகாலை 04.37 மணி வரை.

செப்டம்பர்
  உதாரண குணமும், தர்ம சிந்தனையும் கொண்ட உங்களுக்கு, பாக்கிய ஸ்தானத்தில் சூரியனும் 10-இல் புதன் ராகுவும், 11-இல் செவ்வாய் சனியும் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் லாபங்கள் பெருகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமும், புத்திர வழியில் மேன்மையும் உண்டாகும். தொழில் வியாபாரரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் அதன் மூலம் லாபங்கள் சிறப்பாக அமையும். கொடுக்கல், வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் திருப்பதியுடன் செயல்பட முடியும். வேலை பளுவும் குறையும் விநாயகப் பெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்
 18.09.2014 இரவு 12.12 மணி முதல் 21.09.2014 பகல் 11.41 மணி வரை.

அக்டோபர்
    சுய நலம் பாராமல் எதையும் துணிந்து செய்யக் கூடிய உங்களுக்கு ஜீவன ஸ்தானமான 10-இல் சூரியன் சுக்கிரனும், 11-இல் புதன் சனியும் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் சிறப்பாகவே இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். உறவினர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. 12-இல் செவ்வாய் சஞ்சரிப்பதால் அசையா சொத்துக்களால் வீண் அலைச்சல் விரயம் போன்றவை ஏற்படும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி நடைபெறும். போட்டி பொறாமைகளை சமாளிக்க முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் கிடைக்கப் பெறா விட்டாலும் இடமாற்றங்கள் கிடைக்கப் பெறும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்
16.10.2014 காலை 07.19 மணி முதல் 18.10.2014 மாலை 06.39 மணி வரை.

நவம்பர்
   எல்லா இடங்களிலும் வாதிக்கும் திறமை  கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியில் செவ்வாயும், 8-இல் குருவும் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகளை உண்டாக்கும். உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. லாப ஸ்தானத்தில் சூரியன் சுக்கிரன் சனி போன்ற கிரகங்கள் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சிறப்பாகவே இருக்கும். எந்த இடையூறுகளையும் சமாளிக்கும் ஆற்றலும் உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் முன்னேற்றங்கள் உண்டாகும். சிவனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்
12.11.2014 மதியம் 02.40 மணி முதல் 15.11.2014 அதிகாலை 01.58 மணி வரை.

டிசம்பர்

   வேகமாக பேசினாலும், திருத்தமாக பேசக் கூடிய உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 2-இல் செவ்வாய், 8-இல் குரு, 12-இல் சூரியன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் கணவன்&மனைவியிடையே  வீண் வாக்கு வாதங்கள் அதிகரிக்கும். பணவரவுகளிலும் நெருக்கடிகள் உண்டாகும். 10-இல் ராகுவும், 11-இல் சனியும் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து எதிர் நீச்சல் போட்டாவது முன்னேறி விட முடியும். இம்மாத பிற்பாதியில் ஏற்படக் கூடிய சனி மாற்றத்தினால் சனி பகவான் விரய ஸ்தானமான  12-இல் சஞ்சரிப்பதால் உங்களுக்கு ஏழரை சனி தொடங்கவிருப்பது குறிப்பிடதக்கது. எனவே எதிலும் சிந்தித்து செயல் படுவது நல்லது. சனி ப்ரீதி, ஆஞ்ச நேயரை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்
09.12.2014 இரவு 10.02 மணி முதல் 12.12.2014 காலை 09.11 மணி வரை.

நட்சத்திர பலன்

மூலம்
   கேதுவின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு கம்பீரமான தோற்றமும், தெய்வ பக்தியும் இயற்கையிலேயே இருக்கும். இந்த வருடம் முழுவதும் நீங்கள் நினைத்ததை நிறைவேற்றக் கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். பண வரவுகள் சரளமாக இருக்கும் என்றாலும் ஆண்டின் பிற்பாதியில் கொடுக்கல், வாங்கலில் கவனமுடன் செயல்படுவது நல்லது. உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். சிலருக்கு பூமி மனை வாங்கும் யோகமும் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபத்தினை பெற முடியும். திருமண சுப காரியங்களும் கை கூடி மகிழ்ச்சியளிக்கும்.

பூராடம்
   சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்துள்ள உங்களுக்கு கனிவான பார்வையால் அனைவரையும் கவர்ந்திருக்கும் ஆற்றல் உண்டாகும். இந்த வருடம் பணவரவுகளுக்குப் பஞ்சம் ஏற்படாது. கொடுக்கல், வாங்கலிலும் லாபம் கிட்டும். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். தொழில் வியாபாரத்திலும் எதிர் பார்த்த லாபங்கள் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களால் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களையும் பெற முடியும். ஆண்டின் பிற்பாதியில் பணவிஷயத்தில் கவனமுடன் செயல்படுவது, உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது, ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது.

உத்திராடம் 1-ம் பாதம்
   சூரியனின் நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு எப்பொழுதும் நண்பர்களின் கூட்டம் அதிகமிருக்கும். இந்த ஆண்டு உங்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொருளாதார நிலையும் மிக சிறப்பாக இருக்கும். கணவன்&மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்களும் கைக்கூடும். பொன் பொருள் சேரும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும் லாபமும் உண்டாகும். ஆண்டின் பிற்பாதியில் பணவரவுகளில் சிறு சிறு நெருக்கடிகள் தோன்றும். உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துவதால் மருத்துவ செலவுகள் குறையும்.

அதிர்ஷடம் அளிப்பவை,

எண் : 1,2,3,9,10,11,12 
கிழமை : வியாழன், திங்கள்
திசை : வடகிழக்கு
நிறம் : மஞ்சள், பச்சை
கல் : புஷ்ட ராகம்
தெய்வம் : தட்சிணா மூர்த்தி

பரிகாரம்
    தனுசு ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு வரும் 13.06.2014 முதல் குருபகவான் 8-ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களை செய்வது, தட்சிணா மூர்த்திக்கு நெய் தீபமேற்றி வழிபாடு செய்வது நல்லது.

No comments:

Post a Comment