WHATS APP

உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.

Bala's Jothidam

CONTACT INFORMATION

BALA'S THIRUPURASUNTHARI JOTHIDAM

நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1. உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
    2. இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க நல்ல முடிவுகள் கொடுக்கப்படும்.
    3. உங்கள் எதிர்காலத்தை திறமை பட செயலாற்ற ஒரு புத்துணர்வு கொடுக்கப்படும்..
    4. உங்கள் சந்தேகங்களை போக்கி வாழ்க்கை வளம்பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது..
    5 - உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
    6. இதன் மூலம் செயல் முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியும் நிலைக்கும்..
    பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
    G.V. Manikanda Sharma
    No.1/404, J.J. Nagar
    Mugappair East, Chennai - 600037.
    Tamil Nadu, India.
    Telephone:+91-9962225358, 9444226039.
    WhatsApp No : +91-9444226039.
    E-mail: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    எங்கள் முகவரி .
    1 / 404, ஜெ.ஜெ.நகர்.
    முகப்பேர் கிழக்கு,
    சென்னை – 600 037.
    செல் : +91-9962225358, 9444226039.
    தமிழ்நாடு – இந்தியா.
    E-mail ID: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    12 - எங்கள் சேவை .
    Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest.
    மூலம் சேவை செய்து தருகிறோம். .

Mani Sharma

Sri Bala's Thirupurasunthari Jothidam
  • இது தமிழர்களுக்கான சிறந்த ஆன்லைன் திருமணத் தகவல் மையம் ஆகும். பதிவு இலவசம். பதிவு செய்ய வரனின் பெயர், வயது, பிறந்த தேதி,பிறந்த நேரம், தந்தை பெயர், தாயர் பெயர், படிப்பு, தொழில், மாத வருமானம், பிறந்த ஊர், மொபைல் எண், ராசி, நட்சத்திரம், இலக்கினம், செவ்வாய் தோஷம், ராது-கேது தோஷம், உள்ளதா, தங்களின் வசதி மற்றும் எதிர்பார்ப்பு ஆகிய விபரங்களுடன் தங்களுடைய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து அனுப்பி வைத்தால் தங்களின் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரணுக்கும் ரூபாய் 50/- மட்டுமே கட்டணமாகும். நீங்கள் தேர்ந்தடுக்கும் வரனின் அடையாள எண் மற்றும் மொத்த வரண்களின் எண்ணிக்கையை கட்டாயம் மணி ஆர்டரில் குறிப்பிட வேண்டும். மேலும் மொத்தக் கட்டணத்துடன் ரூபாய். 30 மட்டும் கூரியர் கட்டணமாக சேர்த்து அனுப்பவும். தாங்கள் விரும்பிய வரங்களின் விபரங்கள் மறு தினமே கூரியர் தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விலாசம் பெற மணிகண்ட ஷர்மா தொடர்பு கொள்ளலாம்.
  • திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சிறந்த துவக்கமே பாதி வெற்றி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு பரம்பரையின் மூலகாரணமாக திருமணத்தை, மிகச்சிறப்பாக அமைத்துத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த நீலா மேட்ரிமோனி திருமண தகவல் மையம் கமிஷன், தரகு ஏதும் இன்றி இருமண வீட்டார்களிடமும் உண்மையான தகவல்களைக் கொடுத்து மிகச்சிறப்பான இல்வாழ்க்கை அமைய உதவ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்கள் தகவல் மையத்தில் பதிவுக் கட்டணம் குறைவாதே பதிவு செய்வதற்கு தங்களின் பயோ-டேட்டா, ஜாதகம், போட்டா மட்டும் போதுமானது. தங்கள் தகவல்களைத் தமிழிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து ஒருவாரத்திற்குள் தங்களது பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தங்களுக்கு பொருத்தமான ஒரு வரனை தேர்ந்தெடுக்க ரூ.50 மட்டுமே. வேறு எந்த கட்டணமும் கிடையாது. மணமக்கள், மண வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல்கள் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும் எங்களது சேவை அனைத்து மதத்தவர்க்கும், அனைத்து இனத்தவர்க்கும் உண்டு. எங்களது சேவயை மேலும் சிறப்புடன் செய்யவும், சேவையில் குறைபாடுகள் எதுவும் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். நீலா மேட்ரிமோனி திருமண தகவல் தொடர்பு மையம் 1 / 255, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9962225358, 9444226039 தம்ழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com

Jothidam

    ஜாதகம் கணிக்க ரூ 700/- மட்டுமே

    ஒரு ஜாதகம் பார்க்க ரூ 300/- மட்டுமே

    திருமணபொருத்தம் ஜாதகம் ஒன்றுக்கு ரூ 250/- மட்டுமே

    நேரில் பிரசன்னம் பார்க்க ரூ 500/- மட்டுமே

Wednesday 1 January 2014

கடகம் ராசி, புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்




புத்தாண்டு பலன்  2014  கடகம்

கடகம் ராசி,  புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
     
உயர்ந்த லட்சியங்களை கொண்டவராகவும் விடா முயற்சியுடன் செயல்படுவராகவும் விளங்கும் கடக ராசி நேயர்களே
உங்களுக்கு என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2014 ஆம் ஆண்டு உங்களுக்கு சற்று ஏற்றத் தாழ்வுகள் நிறைந்த தாகவே இருக்கும். சனி பகவான் 4&இல் சஞ்சரித்து அர்த்தாஷ்டம சனி நடைபெறுவதால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன், அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் உண்டாகும். தற்போது விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவும் வரும் 13.06.2014 முதல் ஜென்ம ராசியிலேயே சஞ்சரிக்கவிருப்பதால் பணவரவுகளில் நெருக்கடிகள் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகும். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளிலும் தடை தாமதங்கள் ஏற்படும். தற்போது 4,10,இல் சஞ்சரிக்கும் ராகு கேது வரும் 21.06.2014 முதல் மாறுதலாகி ராகு 3-ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் எந்த பிரச்சனைகளையும் சமாளிக்கும் அளவிற்கு துணிவும் தைரியமும் கொடுக்கும். பணம் கொடுக்கல், வாங்கலில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கவும். எதிர்பாராத சிறு சிறு உதவிகள் கிடைக்கப் பெறுவதால் எல்லா வித தேவைகளும் பூர்த்தியாகும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சலை குறைத்துக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவதன் மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

தேக ஆரோக்கியம்
    உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். குடும்பத்திலுள்ளவர்களால் உண்டாகக் கூடிய மருத்துவ செலவுகளை சமாளிக்க கடன் வாங்கவேண்டியிருக்கும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் உண்டாவதால் மனநிம்மதி குறையும்.

குடும்பம் பொருளாதார நிலை
   கணவன்&மனைவி சற்று விட்டுக் கொடுத்து நடந்துக் கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பூமி நிலம் வண்டி வாகனம் போன்றவற்றால் சிறு சிறு விரயங்களை எதிர் கொள்ள வேண்டியிருக்கும். உற்றார் உறவினர்கள் தேவையற்றப் பிரச்சனைகளை ஏற்படுத்தினாலும் சில நேரங்களில் அனுகூலமாக செயல்படுவார்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது.

கொடுக்கல் வாங்கல்
   பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை ஏற்பட்டாலும் எதையும் சமாளிக்க கூடிய அளவிற்கு பலமும் வலிமையும் கூடும். கொடுக்கல்&வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது நிதானித்து செயல் படவும். பண விஷயத்தில் நம்பியவர்களே துரோகம் செய்யக் கூடும் என்பதால் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

தொழில் வியாபாரிகளுக்கு
   தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட்த் தேக்கம் உண்டாகாது. புதிய ஒப்பந்தங்களில் கையழுத்திடும் போது கூட்டாளிகளை கலந்தாலோசித்து செய்யவும். வெளியூர் வெளி நாட்டு தொடர்புடையவைகளால் சிறு சிறு அனுகூலங்கள் ஏற்பட்டாலும் நிறைய அலைச்சல்கள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப் படும். உடல் நிலை சோர்வடையும்.

உத்தியோகஸ்தர்களுக்கு
   பணியில் உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்துக் கொண்டால் வேலை பளுவைக் குறைத்துக் கொள்ள முடியும். எதிர் பார்க்கும் உயர்வுகள் தாமதப்பட்டாலும், உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு குடும்பத்தை விட்டுப் பிரியக் கூடிய சூழ்நிலைகளும் ஏற்படும். உடல் நிலையில் உண்டாக கூடிய பாதிப்புகளால் அடிக்கடி விடுப்பு எடுக்க நேரிடும்.

அரசியல்வாதிகளுக்கு
   பெயர் புகழ் மங்கக் கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது கட்சிப் பணிகளுக்காக நிறையப் பயணங்களை மேற்க் கொள்ள வேண்டியிருப்பதால் அலைச்சல்கள் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளுக்கும் மற்ற கட்சிகளின் ஆதரவுக் கிடைக்காது. வீண் விரயங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைகளும் உண்டாகும்.

விவசாயிகளுக்கு
    பயிர் விளைச்சல்கள் சிறப்பாக இருந்தாலும் சந்தையில் விளைப் பொருளுக்கேற்ற விலையினைப் பெற இயலாது. பட்டபாட்டிற்குப் பலலின்றிப் போகும். அரசு வழியில் எதிர்பாராத சில மானிய உதவிகள் கிடைக்கப் பெறுவதால் எதையும் சமாளித்து விடுவீர்கள். பூர்வீக சொத்து விஷயங்களில் தேவையற்ற வம்பு வழக்குகள் ஏற்பட்டு மனநிம்மதி குறையும்.

பெண்களுக்கு
   உடல் நிலையில் பாதிப்புகள் உண்டாகி அடிக்கடி மருத்துவ செலவுகள் ஏற்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைவதில் தடை உண்டாகும். பண வரவுகளில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கணவன்&மனைவி விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உறவினர்களிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்டும். சேமிக்க முடியாது.

படிப்பு
   கல்வியில் ஞாபக மறதி ஏற்பட்டு படித்ததெல்லாம் தக்க சமயத்தில் ஞாபகத்திற்கு வராமல் போகும். இதனால் எதிர்பார்த்த மதிப்பெண்களை எடுப்பதில் சிரமம் ஏற்படும். பெற்றோர் ஆசிரியர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். விளையாட்டுப் போட்டிகளின் போது கவனமுடன் செயல் படுவது நல்லது.

   லாட்டரி, ரேஸ், ஷேர் போன்றவற்றில் பெரிய தொகைகளை முதலீடு செய்யாமலிருப்பதன் மூலம் வீண் விரயங்களை தவிர்க்கலாம்.

ஜனவரி
    விடா முயற்சியுடன் செயல்பட்டு வெற்றி காணும் உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3&இல் செவ்வாயும், 6&இல் சூரியனும் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைக் காண்பீர்கள். பணவரவுகள் தேவைக்கேற்ற படியிருக்கும் என்றாலும் ஆடம்பரமாக செலவு செய்வதை தவிர்க்கவும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சிறு சிறு தடைகளுக்குப் பின் நற்ப்பலன் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் சற்றே தேக்க நிலை ஏற்பட்டாலும் லாபம் குறையாது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்
04.01.2014 மாலை 06.18 மணி முதல் 06.01.2014 இரவு 09.36 மணி வரை.

பிப்ரவரி
  சாந்தமும், சகிப்புத் தன்மையும், கொண்ட உங்களுக்கு ஜென்ம  ராசிக்கு 3&இல் செவ்வாயும், விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு வக்ர கதியிலும் சஞ்சரிப்பதால் பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படாது. கணவன்&மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படக் கூடும் என்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் ஏற்பட்டாலும் தேவையற்ற அலைச்சல்களை சந்திக்க வேண்டி வரும். முடிந்த வரை பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. சிவபெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்
01.02.2014 அதிகாலை 02.28 மணி முதல் 03.02.2014 காலை 05.38 மணி வரை.
மற்றும் 28.02.2014 காலை 10.29 மணி முதல் 02.03.2014 பகல் 01.33 மணி வரை.

மார்ச்
   உயர்ந்த லட்சியங்களுக்காக பாடுபடும் குணம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 4-இல் செவ்வாய், சனி ராகுவும், 8-ல் சூரியனும் சஞ்சரிப்பதால் வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனமுடன் செயல் படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் அதிகரிப்பதால் போட்டி பொறாமைகள் அதிகரிப்பதால் வர வேண்டிய லாபம் குறையும். குடும்பத்தில் வீண் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். முருகனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்
27.03.2014 மாலை 06.26 மணி முதல் 29.03.2014 இரவு 09.23 மணி வரை.

ஏப்ரல்
   அனைவரிடமும் சகஜமாகப் பழகக் கூடிய குணம் கொண்ட உங்களுக்கு, ஜென்ம ராசிக்கு 9-இல் சூரியனும், 10-இல் கேதுவும் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்திலிருந்த நெருக்கடிகள் குறையும். 4-இல் சஞ்சரிக்கும் சனியும் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் நிலைமையை சமாளித்து விட முடியும். உறவினர்களின் ஆதரவும் ஒரளவுக்கு மகிழ்ச்சியினை உண்டாக்கும். கொடுக்கல்&வாங்கலில் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது. உடல் நிலையில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகும். அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

சந்திராஷ்டமம்
24.04.2014 அதிகாலை 02.26 மணி முதல் 26.04.2014 காலை 05.17 மணி வரை.

மே
   எதிலும் துணிந்து செயல்படும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3-இல் செவ்வாயும், 10-இல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் உத்தியோக ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பண வரவுகளும் தாராளமாகவே இருக்கும். ஆடம்பர செலவுகள் செய்வதையும் கொடுக்கல்&வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபத்துவதையும் தவிர்ப்பது நல்லது. கணவன்&மனைவி விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் சிறு சிறு மன சஞ்சலங்கள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் உண்டாகாது. தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்
21.05.2014 பகல் 10.35 மணி முதல் 23.05.2014 பகல் 01.21 மணி வரை.

ஜீன் 
  எந்த எதிர்ப்பையும் சமாளிக்கும் வலிமை கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3-இல் செவ்வாய் சஞ்சரிப்பதும், 4-இல் சஞ்சரிக்கும் சனி வக்ர கதியிலிருப்பதும், 10-இல் சுக்கிரன், கேதுவும், 11-இல் சூரியனும் சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்பதால் நினைத்ததை நிறைவேற்றக் கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். இம்மாதம் 13-ஆம் தேதி முதல் குரு பகவான் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கவிருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. 21-ஆம் தேதி ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தால் ராகு 3-லும், கேது 9-லும் சஞ்சரிக்க விருப்பது ஒரளவுக்கு அனுகூலத்தை உண்டாக்க கூடிய அமைப்பாகும். குருவுக்குரிய பரிகாரங்களை செய்யவும்.

ஜீலை
   எதையும் முன் கூட்டியே அறியும் திறன் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கும் 3-இல் செவ்வாய் ராகுவும், 11-இல் சுக்கிரனும் சஞ்சாரம் செய்வதால் ஒரளவுக்கு எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளைப் பெறுவீர்கள். 12-ஆம் வீட்டில் சூரியன் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்து கொள்வது நல்லது. மாத பிற்பாதியில் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் சற்று மந்த நிலையில் நடைப்பெற்றாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. பயணங்களின் போது கவனமுடன் நடந்து கொள்வது வேகத்தைக் குறைப்பது நல்லது. சிவ பெருமானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்
15.07.2014 அதிகாலை 03.13 மணி முதல் 17.07.2014 அதிகாலை 05.50 மணி வரை

ஆகஸ்ட்
    மிகுந்த இரக்க குணம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியனும், குருவும், சஞ்சரிப்பதாலும் 4இல் செவ்வாய் சனியும் சஞ்சாரம் செய்வதாலும் குடும்பத்தில் நிம்மதி குறைவும், உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகளும் உண்டாகும். கணவன்&மனைவி சற்று விட்டுக் கொடுத்து நடந்துக் கொள்வது நல்லது. தேவையற்ற அலைச்சல் டென்ஷன்களும் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் வீண் பழிகளை சுமக்க வேண்டிய காலம் என்பதால் எதிலும் கவனம் தேவை. பணம் கொடுக்கல்&வாங்கலிலும் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். சுப காரியங்களில் தடைகள் உண்டாகும். முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்
11.08.2014 காலை 11.29 மணி முதல் 13.08.2014 மதியம் 02.01 மணி வரை.

செப்டம்பர்
   அறிவும், கற்பனை சக்தியும் அதிகம் கொண்ட உங்களுக்கு, ஜென்ம ராசிக்கு 3-இல் ராகு சஞ்சரிப்பதன் மூலம் எடுக்கும் முயற்சிகளில் ஒரளவுக்கு அனுகூலங்களைப் பெற முடியும். மாத பிற்பாதியில் சூரியனும் 3-ஆம் வீட்டில் சஞ்சரிக்க விருப்பதால் எதையும் சாதித்து விடுவீர்கள். பண வரவுகளில் ஏற்றத் தாழ்வான நிலையிருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை சற்று  குறைத்துக் கொள்வது நல்லது. உடல் நிலையிலும் சோர்வு மந்த நிலை போன்றவை ஏற்படும். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளால் வர வேண்டிய வாய்ப்புகள் கை நழுவிப் போகும். சிவ பெருமானை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்
07.09.2014 இரவு 07.33 மணி முதல் 09.09.2014 இரவு 10.04 மணி வரை.

அக்டோபர்
   வேடிக்கையாகப் பேசக் கூடிய கலா ரசிகரான உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3-இல் சூரியனும் மாத பிற்பாதியில் 6-இல் செவ்வாயும் சஞ்சாரம் செய்யவிருப்பதால் எந்த வித பிரச்சனைகளையும் எளிதில் சமாளித்து விட முடியும். தொழிலிலுள்ள மறைமுக எதிர்ப்புகளும் விலகும். பண வரவுகளில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும், செலவுகள் கட்டுக்குள் இருப்பதாலும், எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவதாலும் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் செயல் பட்டால் வீண் பழிச் சொற்களிலிருந்து தப்பித்துக் கொள்ள இயலும். சனிக்குரிய பரிகாரங்களை செய்யவும்.

சந்திராஷ்டமம்
 05.10.2014 காலை 03.39 மணி முதல் 07.10.2014 காலை 06.04 மணி வரை.

நவம்பர்
    தன்னம்பிக்கையும், தியாக மனப்பான்மையும் கொண்ட உங்களுக்கு, ஜென்ம ராசியில் குரு சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக சிறு சிறு இடையூறுகளை சந்தித்தாலும் 6-ஆம் வீட்டில் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் எதையும் சமாளிப்பீர்கள். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தேவையற்ற வம்வு வழக்குகள் மறையும். 4இல் சூரியன் சனி சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் போட்ட முதலீட்டினை எடுத்து விட முடியும். உத்தியோகத்தில் வேலை பளு கூடும். தட்சிணா மூர்த்தியை வழிபடவும்.

சந்திராஷ்டமம்
01.11.2014 பகல் 11.48 மணி முதல் 03.11.2014 மதியம் 02.11 மணி வரை
மற்றும் 28.11.2014 இரவு 07.59 மணி முதல் 30.11.2014 இரவு 10.24 மணி வரை

டிசம்பர்
   கொடுத்த வாக்கை நிறைவேற்றத் தவறாத உங்களுக்கு 3-இல் ராகுவும், மாத பிற்பாதியில் 6இல் சூரியனும் சஞ்சரிப்பது, ஒரளவுக்கு சாதகமான அமைப்பு என்றாலும் 7-இல் செவ்வாய் சஞ்சரிப்பதால் கணவன்&மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். முடிந்த வரை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. வரும் 16-ஆம் தேதி ஏற்படவுள்ள சனி மாற்றத்தால் சனி பகவான் விருச்சிக ராசிக்கு மாறுதலாக விருப்பதால் உங்களுக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த  அர்த்தாஷ்டம சனி முழுவதும் முடிவடைகிறது. இதனால் இது வரை இருந்த அலைச்சல் டென்ஷன்கள் குறையும். அசையா சொத்துக்களால் சிறு சிறு அனுகூலங்கள் உண்டாகும். முருகப் பெருமானை வழிபடுவது நல்லது-.

சந்திராஷ்டமம்
26.12.2014 அதிகாலை 04.18 மணி முதல் 28.12.2014 அதிகாலை 06.38 மணி வரை.

புனர்பூசம் 4-ம் பாதம்,
    குரு பகவானின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு பொய் பேசாத குணமும், நல்ல வாக்கு வன்மையும் இருக்கும். இந்த வருடம் நீங்கள் எந்த வொரு காரியத்திலும் சற்று சிந்தித்து செயல் படுவது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். பண வரவுகளிலும் ஏற்ற இறக்கமான நிலையே நிலவும். குடும்பத்தேவைகளை பூர்த்தி செய்ய எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வருவதில் தடைகள் உண்டாகும். தேவையற்றப் பயணங்களை தவிர்ப்பது நல்லது.

நட்சத்திர பலன்

பூசம்
   சனி பகவானின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு எந்த வொரு பிரச்சனையையும் அலசி ஆராயக் கூடிய குணமிருக்கும். இந்த வருடம் நீங்கள் இதையே கடைபிடிக்க வேண்டியிருக்கும். பணவரவுகளில்  திருப்திகரமான நிலையிருக்காது என்பதால் ஆடம்பரச் செலவுகளை குறைப்பது நல்லது. கணவன், மனைவி விட்டுக் கொடுத்து நடந்தும் கொண்டால் ஒற்றுமையும் சிறப்பாக இருக்கும். உறவினர்களின் மூலம் ஒரளவுக்கு அனுகூலங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் நிறைய போட்டிகளை எதிர் கொள்ள நேரிட்டாலும் அடைய வேண்டிய லாபத்தை அடைந்து விட முடியும். கொடுக்கல்&வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. சேமிக்க முடியாது.

ஆயில்யம்
   புதனின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு சகல வித வித்தைகளையும் கற்றறியக் கூடிய ஆற்றலும் இருக்கும். இந்த ஆண்டு உங்களுக்கு சற்று ஏற்றத் தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். பணவரவுகளில் சிறு சிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதையும் ஒரளவுக்கு சமாளித்து விட முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொள்வதை சற்று தள்ளி வைப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் சிறு சிறு அலைச்சல் டென்ஷன் ஏற்பட்டாலும் கிடைக்க வேண்டிய லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை உண்டாகும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை 

எண் & 1,2,3,9,10,11,12,18 
நிறம்,  வெள்ளை, சிவப்பு
கிழமை,  திங்கள் வியாழன்
ராசிகல்,  முத்து
திசை,  வடகிழக்கு 
தெய்வம், வெங்கடாசலபதி

பரிகாரம்
    இந்த வருடத்தின் முற்பாதி வரை குருபகவான் 12-லும் பிற்பாதியில் ஜென்ம ராசியிலும் சஞ்சரிக்க விருப்பதால் குருப்ரீதி, தட்சிணா மூர்த்திக்கு பரிகாரங்கள் செய்வது நல்லது. இந்த ஆண்டு முழுவதும் அர்த்தாஷ்டம  சனி தொடருவதால் சனிக்கிழமை தோறும் சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது. எள் எண்ணெயில் தீபமேற்றுவது, ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு உதவிகள் செய்வது நல்லது.

No comments:

Post a Comment