WHATS APP

உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.

Bala's Jothidam

CONTACT INFORMATION

BALA'S THIRUPURASUNTHARI JOTHIDAM

நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1. உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
    2. இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க நல்ல முடிவுகள் கொடுக்கப்படும்.
    3. உங்கள் எதிர்காலத்தை திறமை பட செயலாற்ற ஒரு புத்துணர்வு கொடுக்கப்படும்..
    4. உங்கள் சந்தேகங்களை போக்கி வாழ்க்கை வளம்பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது..
    5 - உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
    6. இதன் மூலம் செயல் முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியும் நிலைக்கும்..
    பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
    G.V. Manikanda Sharma
    No.1/404, J.J. Nagar
    Mugappair East, Chennai - 600037.
    Tamil Nadu, India.
    Telephone:+91-9962225358, 9444226039.
    WhatsApp No : +91-9444226039.
    E-mail: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    எங்கள் முகவரி .
    1 / 404, ஜெ.ஜெ.நகர்.
    முகப்பேர் கிழக்கு,
    சென்னை – 600 037.
    செல் : +91-9962225358, 9444226039.
    தமிழ்நாடு – இந்தியா.
    E-mail ID: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    12 - எங்கள் சேவை .
    Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest.
    மூலம் சேவை செய்து தருகிறோம். .

Mani Sharma

Sri Bala's Thirupurasunthari Jothidam
  • இது தமிழர்களுக்கான சிறந்த ஆன்லைன் திருமணத் தகவல் மையம் ஆகும். பதிவு இலவசம். பதிவு செய்ய வரனின் பெயர், வயது, பிறந்த தேதி,பிறந்த நேரம், தந்தை பெயர், தாயர் பெயர், படிப்பு, தொழில், மாத வருமானம், பிறந்த ஊர், மொபைல் எண், ராசி, நட்சத்திரம், இலக்கினம், செவ்வாய் தோஷம், ராது-கேது தோஷம், உள்ளதா, தங்களின் வசதி மற்றும் எதிர்பார்ப்பு ஆகிய விபரங்களுடன் தங்களுடைய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து அனுப்பி வைத்தால் தங்களின் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரணுக்கும் ரூபாய் 50/- மட்டுமே கட்டணமாகும். நீங்கள் தேர்ந்தடுக்கும் வரனின் அடையாள எண் மற்றும் மொத்த வரண்களின் எண்ணிக்கையை கட்டாயம் மணி ஆர்டரில் குறிப்பிட வேண்டும். மேலும் மொத்தக் கட்டணத்துடன் ரூபாய். 30 மட்டும் கூரியர் கட்டணமாக சேர்த்து அனுப்பவும். தாங்கள் விரும்பிய வரங்களின் விபரங்கள் மறு தினமே கூரியர் தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விலாசம் பெற மணிகண்ட ஷர்மா தொடர்பு கொள்ளலாம்.
  • திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சிறந்த துவக்கமே பாதி வெற்றி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு பரம்பரையின் மூலகாரணமாக திருமணத்தை, மிகச்சிறப்பாக அமைத்துத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த நீலா மேட்ரிமோனி திருமண தகவல் மையம் கமிஷன், தரகு ஏதும் இன்றி இருமண வீட்டார்களிடமும் உண்மையான தகவல்களைக் கொடுத்து மிகச்சிறப்பான இல்வாழ்க்கை அமைய உதவ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்கள் தகவல் மையத்தில் பதிவுக் கட்டணம் குறைவாதே பதிவு செய்வதற்கு தங்களின் பயோ-டேட்டா, ஜாதகம், போட்டா மட்டும் போதுமானது. தங்கள் தகவல்களைத் தமிழிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து ஒருவாரத்திற்குள் தங்களது பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தங்களுக்கு பொருத்தமான ஒரு வரனை தேர்ந்தெடுக்க ரூ.50 மட்டுமே. வேறு எந்த கட்டணமும் கிடையாது. மணமக்கள், மண வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல்கள் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும் எங்களது சேவை அனைத்து மதத்தவர்க்கும், அனைத்து இனத்தவர்க்கும் உண்டு. எங்களது சேவயை மேலும் சிறப்புடன் செய்யவும், சேவையில் குறைபாடுகள் எதுவும் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். நீலா மேட்ரிமோனி திருமண தகவல் தொடர்பு மையம் 1 / 255, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9962225358, 9444226039 தம்ழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com

Jothidam

    ஜாதகம் கணிக்க ரூ 700/- மட்டுமே

    ஒரு ஜாதகம் பார்க்க ரூ 300/- மட்டுமே

    திருமணபொருத்தம் ஜாதகம் ஒன்றுக்கு ரூ 250/- மட்டுமே

    நேரில் பிரசன்னம் பார்க்க ரூ 500/- மட்டுமே

Wednesday 1 January 2014

ரிஷபம் கிருத்திகை 1,2,3, ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ம் பாதங்கள்





புத்தாண்டு பலன்  2014 ரிஷபம்


ரிஷபம்   கிருத்திகை 1,2,3, ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ம் பாதங்கள்
     
தன்னம்பிக்கையும், அசட்டு தைரியமும் பிடிவாத குணமும் கொண்ட ரிஷப ராசி நேயர்களே உங்களுக்கு என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2014 ஆம் ஆண்டு உங்களுக்கு ஒரு பொற்காலம் என்று கூறினால் அது மிகையாகாது. ஆண்டின் முற்பாதி வரை குரு தனஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணவரவுகளுக்குப் பஞ்சம் ஏற்படாது. குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் கை கூடி மகிழ்ச்சியளிக்கும். புத்திர வழியிலும் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். சனியும் ராகுவும் 6ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொட்ட தெல்லாம் துலங்கும். தொழில் வியாபாரத்திலுள்ள எதிர்ப்புகள் விலகி ஓடும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். உறவினர்களின் ஆதரவுகளும் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். சிலருக்கு சொந்த வீடு, மனை, வண்டி வாகனங்கள் போன்றவற்றை வாங்கக் கூடிய யோகமும் உண்டாகும். தொழில் வியாபாரத்திலும் புதிய யுக்திகளை கையாண்டு லாபத்தை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையும், எதிர்பார்க்கும் உயர் பதவிகளும் கிடைக்கப் பெறும். 13.6.2014 முதல் குரு பகவான் 3ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் பணம் கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. 21.06.2014 இல் ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தால் கேது 11ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் எதிலும் வெற்றியையும் லாபத்தினையும் பெறுவீர்கள்.

தேக ஆரோக்கியம்
    உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். அன்றாடப் பணிகளில் சுறு சுறுப்புடன் செயல்படக் கூடிய ஆற்றலும் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களால் இருந்த மருத்துவ செலவுகள் மறையும். அனைவரும் உங்களிடம் அன்பாக நடத்தும் கொள்வதால் மனநிறைவும் மகிழ்ச்சியும் உண்டாகும். சுக வாழ்க்கை அமையும்.

குடும்ப பொருளாதார நிலை
 
 திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். மணவாழ்க்கை சிறப்பாக அமையும். கணவன்&மனைவியிடையே ஒற்றுமையும், அன்யோன்யமும் அதிகரிக்கும். புத்திர பாக்கியமும் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் உங்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். சொந்த பூமி மனை போன்றவற்றையும் வாங்கி சேர்ப்பீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த சுப செய்தியும் உங்களுக்கு வந்து சேரும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.

கொடுக்கல் வாங்கல்
    பண வரவுகள் மிகச் சிறப்பாக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி நல்ல லாபத்தை காண்பீர்கள். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். சிலருக்குள்ள கடன் பிரச்சனைகளும் தீர்வடையும். இது வரை இருந்து வந்த வம்பு வழக்குகளிலும் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக அமையும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். எதிர்பாராத தன வரவுகளாலும் பொருளாதார நிலை மேன்மையடையும். சேமிப்பும் பெருகும்.

தொழில் வியாபாரிகளுக்கு
    பல பெரிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அனுகூலம் கிட்டும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளும் கிட்டும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புகளால் அபிவிருத்தியை பெருக்க முடியும். புதிய கிளைகளையும் நிறுவி மேன்மையினை அடைவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு
    பணியில் எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் தடையின்றி கிடைக்கும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றத்தைப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய கூடிய வாய்ப்புகள் உண்டாகும். பொருளாதார நிலையும் உயரும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக் கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும். உடன் பணி புரிபவர்களின் ஆதரவுகளால் வேலை பளுவும் குறையும்.

அரசியல்வாதிகளுக்கு
    பெயர் புகழ் உயரக் கூடிய காலமாகும். நினைத்ததை நிறைவேற்றக் கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்களின் பேச்சிற்கு மதிப்பும் மரியாதையும் இருக்கும். கட்சிப் பணிகளுக்காக சிறு சிறு வீண் செலவுகளை செய்ய வேண்டியிருந்தாலும் பொருளாதார நிலை உயர்வாகவே இருக்கும்.

விவசாயிகளுக்கு
   பயிர் விளைச்சல் மிகவும் சிறப்பாக இருக்கும். போட்ட முதலீட்டிற்கு மேல் லாபத்தினைப் பெற்று விடுவீர்கள். புதிய நவீன முறைகளை பயன்படுத்தி விசைச்சலைப் பெருக்குவீர்கள். வேலையாட்களின் உதவியும் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்களும் கை கூடும். சொந்த பூமி மனை போன்றவற்றையும் வாங்குவீர்கள். பொருளாதார நிலை மிகவும் சிறப்பாக இருக்கும்.

பெண்களுக்கு
    உடல் நிலை மிகவும் அற்புதமாக அமையும். அன்றாடப் பணிகளில் சுறு சுறுப்பாக செயல் பட முடியும். கணவன்&மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். ஆடை ஆபரணம், குடும்பத்திற்கு தேவையான அதி நவீனப் பொருட்கள் போன்ற யாவும் சேரும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை உண்டாக்கும். சிலருக்கு புத்திர பாக்கியமும் கிட்டும். மகிழ்ச்சி நிலவும்.

படிப்பு
   மாணவ மாணவிகள் கல்வியில் சிறப்புடன் செயல்பட்டு பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பீர்கள். விளையாட்டுப் போட்டிகளிலும் வெற்றிப் பரிசுகளை தட்டிக் செல்வீர்கள். சிலருக்கு உயர்கல்விக்காக வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். அரசு வழியில் ஆதரவுகள் கிட்டும்.

   லாட்டரி, ரேஸ், ஷேர் போன்றவற்றில் எளிதில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபங்களைப் பெற முடியும்.

ஜனவரி
  இனிமையான சுபாவம் கொண்ட உங்களுக்கு, 2-இல் சஞ்சரிக்கும் குரு வக்ரகதியிலிருப்பதாலும், சூரியன் 8-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதாலும் பணவிஷயத்தில் கவனமுடன் செயல்படுவதும், உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவம் நல்லது. 6-ஆம் வீட்டில் சனியும் ராகுவும் சஞ்சாரம் செய்வதால் நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். போட்டி பொறாமைகளை சமாளித்து அபிவிருத்தியைப் பெறுக்குவீர்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர் பார்க்கும் உயர்வுகளும் தடையின்றி கிடைக்கும். சிவபெருமானை வழிபடுவதால் நற்பலன் உண்டாகும்.

சந்திராஷ்டமம்
31.12.2013 மதியம் 01.22 மணி முதல் 02.01.2014 மதியம் 03.50 மணி வரை மற்றும் 27.01.2014 இரவு 09.32 மணி முதல் 29.01.2014 இரவு 12.04 மணி வரை

பிப்ரவரி
   எல்லோரையும் வசியப்படுத்தக் கூடிய தோற்றம் கொண்ட உங்களுக்கு சனியும், ராகுவும் 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் கொடுக்கல்&வாங்கல் போன்றவற்றில் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது. புதன் 10-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரரீதியாக நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். எதிர் பார்க்கும் உயர்வுகளும் கிடைக்கும். பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்
 24.02.2014 காலை 05.33 மணி முதல் 26.02.2014 காலை 08.08 மணி வரை.

மார்ச்
   எளிதில் உணர்ச்சி வசப்படாத ஆற்றல் கொண்ட உங்களுக்கு 6-ஆம் வீட்டில் சனியும் ராகுவும், 10-இல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் நினைத்தது நிறைவேறும். தன ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் பண வரவுகள் மிகவும் சிறப்பாக இருக்கும். கொடுக்கல்&வாங்கலிலும் சரளமான நிலை உண்டாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பொன் பொருள் சேரும். சொந்த பூமி மனை வாங்க கூடிய யோகமும் உண்டாகும். தொழில் வியாபார ரீதியாக மேற்க் கொள்ளும் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். இம்மாதம் முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்
23.03.2014 மதியம் 01.27 மணி முதல் 25.03.2014 மாலை 04.04 மணி வரை.

ஏப்ரல்
   சுய நலமில்லாமல், தியாக மனப்பான்மையுடன் செயல்படும் உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 2-இல் குருவும், 10-இல் சுக்கிரனும் 11-இல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் எல்லா வகையிலும் மேன்மைகள் உண்டாகும். பொருளாதார நிலை மிகவும் சிறப்பாக அமைவதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் தடையின்றி நடைபெறும். கொடுக்கல்&வாங்கலிலும் சரளமான நிலையிருக்கும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக அமையும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும் உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு உயர்வுகளும் உண்டாகும். தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்
19.04.2014 இரவு 09.21 மணி முதல் 21.04.2014 இரவு 12.07 மணி வரை.

மே
   நேர்மையே குறிக்கோளாக கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 2&இல் குருவும், 6&இல் சனி ராகுவும், சஞ்சரிப்பதால் பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். குடும்பத்தில் திருமண சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். கணவன்&மனைவியிடையே ஒற்றுமை நிலவும். உறவினர்களின் ஆதரவும் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் சிறு சிறு விரயங்கள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதியில்லை. தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்டும். முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்
17.05.2014 அதிகாலை 05.27 மணி முதல் 19.05.2014 காலை 08.18 மணி வரை.





ஜீன்
  சாந்தமும், சகிப்புத் தன்மையும் கொண்ட உங்களுக்கு குரு பகவான் 2-லும் ராகு 6-லும் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். பொன் பொருள் சேரும். தொழில் வியாபாரத்திலும் சிறப்பான லாபம் கிட்டும். இம்மாதம் 13-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு பகவான் 3&ஆம் வீட்டிற்கு மாறுதலாகவுள்ளார். இதனால் பணம் கொடுக்கல்&வாங்கல் போன்றவற்றில் கவனமுடன் செயல் படுவது நல்லது. 21-ஆம் தேதி ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தால் கேது பகவான் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் வாழ்வில் மேன்மையான பலன்களே உண்டாகும். சிவபெருமானை வழிபடுவதன் மூலம் நற்பலன் உண்டாகும்.

சந்திராஷ்டமம்
13.06.2014 மதியம் 01.35 மணி முதல் 15.06.2014 மாலை 04.21 மணி வரை.

ஜீலை
    தன்னம்பிக்கையும், அசட்டு தைரியமும் கொண்ட உங்களுக்கு ராசியாதிபதி சுக்கிரன் ஆட்சிப் பெற்று சஞ்சரிப்பதால் பணவரவுகளுக்குப் பஞ்சம் ஏற்படாது. இம்மாத பிற்பாதியில் சூரியன் 3-ஆம் வீட்டிலும், செவ்வாய் 6-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யவிருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் நினைத்ததை நிறைவேற்றும் ஆற்றலும் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபாடுத்தும் போது சிந்தித்து செயல் படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் நிம்மதியான நிலையே இருக்கும். கடன்கள் குறையும். சனி ப்ரீதி ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்
10.07.2014 இரவு 09.47 மணி முதல் 12.07.2014 இரவு 12.52 மணிவரை.

ஆகஸ்ட்
    பிடிவாத குணமும், பிறருக்கு அடி பணியாத ஆற்றலும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3-இல் சூரியனும், 6-இல் செவ்வாயும் சனியும் சஞ்சாரம் செய்வதால் இம்மாதமும் நினைத்ததை சாதிப்பீர்கள். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும், பூர்வீக சொத்துக்களாலும், புத்திர வழியிலும் சிறு சிறு நெருக்கடிகள் தோன்றினாலும் எதையும் சமாளிக்க கூடிய பலமும் வலிமையும் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணி புரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். தொழில் வியாபாரமும் சிறப்பாக நடைபெறும். துர்கை அம்மனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்
07.08.2014 காலை 05.58 மணி முதல் 09.08.2014 காலை 09.04 மணி வரை.

செப்டம்பர்
    விரோதிகளை கண்டு பயப்படாத அஞ்சா நெஞ்சம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 6-இல் செவ்வாய் சனி சஞ்சரிப்பதும் 11-இல் கேது சஞ்சாரம் செய்வதும் சாதகமான அமைப்பாகும். திருமண முயற்சிகளில் தடைகள் ஏற்பட்டாலும் எடுக்கும் காரியங்களில் வெற்றியினைப் பெறுவீர்கள். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டி பொறாமைகள் விலகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கான வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகஸ்தர்களின் திறமைகளுக்கேற்றப் பாராட்டுதல்கள் கிட்டும். கடன்கள் குறையும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்
03.09.2014 மதியம் 01.54 மணி முதல் 05.09.2014 இரவு 05.09 மணிவரை.

அக்டோபர்
   முன் கோபமும், முரட்டுத் தனமும் கொண்ட உங்களுக்கு, ஜென்ம ராசிக்கு 3-இல் குரு சஞ்சரிப்பதால் பண வரவுகளில் ஏற்ற இறக்கமானப் பலன்களை ஏற்படுத்தினாலும், 6-இல் சனியும், 11-இல் கேதுவும் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து விடுவீர்கள். இது மட்டுமின்றி மாத பிற்பாதியில் சூரியனும் 6&ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் உங்கள் பலமும் வலிமையும் கூடும். குடும்பத்திலும் சுபிட்சமான நிலையிருக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் இடமாற்றங்கள் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் தேவை. முருகனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்  
30.09.2014 இரவு 09.46 மணி முதல் 03.10.2014 அதிகாலை 01.10 மணி வரை.மற்றும் 28.10.2014 காலை 05.42 மணி முதல் 30.10.2014 காலை 09.15 மணி வரை.

நவம்பர்
    சாமர்த்தியமும், சாதுர்யமும் கொண்ட உங்களுக்கு, ஜென்ம ராசிக்கு 6-இல் சனி, சூரியனும் 11-இல் கேதுவும் சஞ்சாரம் செய்வதால் தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்டும். பணவரவுகளும் தேவைக்கேற்றபடியிருக்கும். கொடுக்கல்&வாங்கலில் பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். 8-இல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களிடம் பேச்சில் நிதானத்தை கடை பிடித்தால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். தேவையற்றப் பயணங்களைத்  தவிர்ப்பது நல்லது. முருகப் பெருமனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்
24.11.2014 பகல் 01.41 மணி முதல் 26.11.2014 மதியம் 05.24 மணி வரை.

டிசம்பர்
    கஷ்ட நஷ்டங்களை தாங்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 6-இல் சனியும், 9-இல் செவ்வாயும், 11-இல் கேதுவும் சஞ்சரிப்பதால் செல்வம் செல்வாக்குப் பெருகும். எடுக்கும் எல்லா காரியங்களிலும் வெற்றிகளைப் பெறுவீர்கள். பணவரவுகளும் தேவைக்கேற்றபடியிருப்பதால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். ஜென்ம ராசிக்கு 7-இல் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. இம்மாதம் 16-ஆம் தேதி ஏற்படவுள்ள சனி மாற்றத்தால் சனி ஜென்ம ராசிக்கு 7-இல் சஞ்சரிப்பதால் விருப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் குடும்பத்தில் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் உண்டாகும். சனி ப்ரீதி ஆஞ்ச நேயரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்
21.12.2014 இரவு 09.42 மணி முதல் 24.12.2014 அதிகாலை 01.35 மணி வரை

நட்சத்திர பலன்

கிருத்திகை 2,3,4ம் பாதங்கள்
   கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களின் நட்சத்திராதிபதி சூரிய பகவான். இது ரிஷப ராசிக்குரிய நட்சத்திர 2,3,4-ம் பாதங்களாகிறது. இந்த நட்சத்திரம் இரண்டு ராசிக்குரியதாகிறது. கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்திருப்பதால் சமுதாயத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் இருக்கும். இந்த வருடம் உங்களுக்கு தொட்டதெல்லாம் துலங்கக் கூடியதொரு காலமாக இருக்கும். பொன்னும் பொருளும் சேரும். பொருளாதார நிலையும் மிகச் சிறப்பாக இருக்கும். கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும் என்றாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது கவனமுடனிருப்பது நல்லது.

ரோகிணி
    ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களின் நட்சத்திராதிபதி  சந்திர பகவானாவார். இந்த நட்சத்திரத்தில் பிறந்திருப்பதால் எதையும் எளிதில் கற்றுக் கொள்ளக் கூடிய ஆற்றல் உடையவராக இருப்பீர்கள். இந்த வருடம் உங்களுக்கு தொட்டது துலங்கும் என்று சொன்னால் அது மிகையாகாது. தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். சொந்த பூமி மனை போன்றவற்றை வாங்குவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் கடன்கள் குறைவதோடு குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும்.

மிருகசீரிஷம் 1,2ம் பாதங்கள்
   இந்த நட்சத்திராதிபதி செவ்வாய் பகவான் என்பதால் அசாத்திய துணிவும், யாருக்கும் பயப்படாத குணமும் இருக்கும். இந்த வருடம் முழுவதும் உங்களுக்கு சுபிட்சமான நிலையே இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் கை கூடுவதுடன் கணவன் மனைவியிடையே மகிழ்ச்சி நிலவும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். பொன் பொருள் சேரும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல்&வாங்கலில் சற்று கவனமுடன் நடந்தும் கொள்ளவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு குறையும்.

அதிர்ஷ்டம் அளிப்பை

எண்  5,6,8,14,15,17,
நிறம்  வெண்மை, நீலம்,
கிழமை  வெள்ளி,சனி
கல்  வைரம்,
திசை  தென்கிழக்கு,
தெய்வம்  விஷ்ணு, லட்சுமி

பரிகாரம்
   ரிஷப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு 13.06.2014 முதல் குரு பகவான் 3-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய விருப்பதால் வியாழக்கிழமை தோறும் குருவுக்கு பரிகாரம் செய்வது, குருப்ரீதி தட்சிணா மூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது. 21.06.2014 முதல் சர்ப கிரகமான ராகு 5-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபடுவது, சரபேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

No comments:

Post a Comment