WHATS APP

உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.

Bala's Jothidam

CONTACT INFORMATION

BALA'S THIRUPURASUNTHARI JOTHIDAM

நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1. உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
    2. இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க நல்ல முடிவுகள் கொடுக்கப்படும்.
    3. உங்கள் எதிர்காலத்தை திறமை பட செயலாற்ற ஒரு புத்துணர்வு கொடுக்கப்படும்..
    4. உங்கள் சந்தேகங்களை போக்கி வாழ்க்கை வளம்பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது..
    5 - உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
    6. இதன் மூலம் செயல் முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியும் நிலைக்கும்..
    பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
    G.V. Manikanda Sharma
    No.1/404, J.J. Nagar
    Mugappair East, Chennai - 600037.
    Tamil Nadu, India.
    Telephone:+91-9962225358, 9444226039.
    WhatsApp No : +91-9444226039.
    E-mail: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    எங்கள் முகவரி .
    1 / 404, ஜெ.ஜெ.நகர்.
    முகப்பேர் கிழக்கு,
    சென்னை – 600 037.
    செல் : +91-9962225358, 9444226039.
    தமிழ்நாடு – இந்தியா.
    E-mail ID: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    12 - எங்கள் சேவை .
    Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest.
    மூலம் சேவை செய்து தருகிறோம். .

Mani Sharma

Sri Bala's Thirupurasunthari Jothidam
  • இது தமிழர்களுக்கான சிறந்த ஆன்லைன் திருமணத் தகவல் மையம் ஆகும். பதிவு இலவசம். பதிவு செய்ய வரனின் பெயர், வயது, பிறந்த தேதி,பிறந்த நேரம், தந்தை பெயர், தாயர் பெயர், படிப்பு, தொழில், மாத வருமானம், பிறந்த ஊர், மொபைல் எண், ராசி, நட்சத்திரம், இலக்கினம், செவ்வாய் தோஷம், ராது-கேது தோஷம், உள்ளதா, தங்களின் வசதி மற்றும் எதிர்பார்ப்பு ஆகிய விபரங்களுடன் தங்களுடைய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து அனுப்பி வைத்தால் தங்களின் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரணுக்கும் ரூபாய் 50/- மட்டுமே கட்டணமாகும். நீங்கள் தேர்ந்தடுக்கும் வரனின் அடையாள எண் மற்றும் மொத்த வரண்களின் எண்ணிக்கையை கட்டாயம் மணி ஆர்டரில் குறிப்பிட வேண்டும். மேலும் மொத்தக் கட்டணத்துடன் ரூபாய். 30 மட்டும் கூரியர் கட்டணமாக சேர்த்து அனுப்பவும். தாங்கள் விரும்பிய வரங்களின் விபரங்கள் மறு தினமே கூரியர் தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விலாசம் பெற மணிகண்ட ஷர்மா தொடர்பு கொள்ளலாம்.
  • திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சிறந்த துவக்கமே பாதி வெற்றி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு பரம்பரையின் மூலகாரணமாக திருமணத்தை, மிகச்சிறப்பாக அமைத்துத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த நீலா மேட்ரிமோனி திருமண தகவல் மையம் கமிஷன், தரகு ஏதும் இன்றி இருமண வீட்டார்களிடமும் உண்மையான தகவல்களைக் கொடுத்து மிகச்சிறப்பான இல்வாழ்க்கை அமைய உதவ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்கள் தகவல் மையத்தில் பதிவுக் கட்டணம் குறைவாதே பதிவு செய்வதற்கு தங்களின் பயோ-டேட்டா, ஜாதகம், போட்டா மட்டும் போதுமானது. தங்கள் தகவல்களைத் தமிழிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து ஒருவாரத்திற்குள் தங்களது பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தங்களுக்கு பொருத்தமான ஒரு வரனை தேர்ந்தெடுக்க ரூ.50 மட்டுமே. வேறு எந்த கட்டணமும் கிடையாது. மணமக்கள், மண வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல்கள் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும் எங்களது சேவை அனைத்து மதத்தவர்க்கும், அனைத்து இனத்தவர்க்கும் உண்டு. எங்களது சேவயை மேலும் சிறப்புடன் செய்யவும், சேவையில் குறைபாடுகள் எதுவும் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். நீலா மேட்ரிமோனி திருமண தகவல் தொடர்பு மையம் 1 / 255, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9962225358, 9444226039 தம்ழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com

Jothidam

    ஜாதகம் கணிக்க ரூ 700/- மட்டுமே

    ஒரு ஜாதகம் பார்க்க ரூ 300/- மட்டுமே

    திருமணபொருத்தம் ஜாதகம் ஒன்றுக்கு ரூ 250/- மட்டுமே

    நேரில் பிரசன்னம் பார்க்க ரூ 500/- மட்டுமே

Friday 13 May 2016

உடலிலுள்ள பஞ்ச பூதங்களை எப்படி கையாள்வது?

உடலிலுள்ள பஞ்ச பூதங்களை எப்படி கையாள்வது?

சத்குரு:

அடிப்படையில் இந்த உடல் என்பது பஞ்சபூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, மற்றும் ஆகாயத்தால் ஆனது. பஞ்சபூதங்களால் ஆட்டுவிக்கப்படும் பொம்மை என்று நம் நாட்டில் இந்த உடலைக் குறித்து வழங்குவதுண்டு.

உடலின் கூட்டமைப்பு என்று பார்த்தால்,
அதில் 72% நீரும்,
12% நிலமும்,
6% காற்றும்,
4% நெருப்பும்,
மீதி ஆகாயமும் கலந்து இவ்வுடல் உருவாகி இருக்கிறது.

இந்தப் பஞ்சபூதங்கள் உங்களுக்குள் எப்படி நடந்து கொள்கின்றன என்பதே, எல்லாவற்றையும் முடிவு செய்கிறது. ‘பூத’ என்ற சொல், மூலப் பொருட்கள் (அ) அடிப்படைக் கூறுகளை குறிக்கிறது.

‘பூதஷுத்தி’ என்பது இந்த அடிப்படை மூலப் பொருட்களின் அசுத்தக் கலவைகளில் இருந்து, அதன் கறைகளில் இருந்து விடுபடுவதைக் குறிக்கிறது. அதாவது உடற்சார்ந்த கட்டுப்பாடுகளில் இருந்து விடுபடுவது.

‘பூதஷுத்தி’ என்பது யோகக் கலையின் மிக அடிப்படையான சாதகப் பயிற்சி.
இதனைத் தொடர்ந்து செய்தால், உடற்சார்ந்த கட்டுப்பாடுகளில் இருந்து விடுபட்டு, உடல் தாண்டிய பரிமாணங்கள் திறந்து கொள்வதற்கு வழி செய்யும்.

உடலில் இந்த ‘பூதஷுத்தி’யை மிக எளிமையாக செய்து கொள்ளலாம். இப்படி எளிதாக செய்து கொள்ளும் முறைகள், தீவிரமான பூதஷுத்தி முறைகளைப் போல் கச்சிதமாக வேலை செய்யாவிட்டாலும்,
நிச்சயம் ஓரளவிற்கு வேலை செய்யும்.

✴நீர்:
பஞ்சபூதங்களில், நாம் அதிக சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டியது நீரின் மீது தான். ஏனெனில், நீர் தான் நம் உடலில் எழுபத்தி இரண்டு சதவிகிதம் நிறைந்துள்ளது.
அதுமட்டுமின்றி, அதற்கு ஞாபகசக்தியும் அதிகம்.

இதை சுத்திகரித்துக் கொள்ள, நீங்கள் பருகும் நீரில், வேம்பு அல்லது துளசி இலைகளை போட்டுக் கொள்ளலாம்.
இது இரசாயன மாசுக்களை அகற்றாவிட்டாலும், தண்ணீரை சக்தி வாய்ந்ததாகவும் வீரியமிக்கதாகவும் மாற்றிவிடும்.

நீங்கள் செய்து கொள்ளக் கூடிய வேறொன்று, தண்ணீரை செம்புப் பாத்திரத்தில் ஊற்றி வைக்கலாம். செம்பினால் நீருக்கு ஏற்படும் குணமாற்றம் நமக்கு மிக நல்லது. அல்லது லிங்க வடிவத்திலுள்ள ஜுவரசத்தை தண்ணீரில் போட்டு பயன்படுத்தலாம்.
இது சக்தியூட்டப்பட்ட ஒரு வடிவம்.

✴நிலம்:
நம் உடலின் பன்னிரண்டு சதவிகிதம் நிலம்.
உணவு உங்களுக்குள்ளே செல்லும் விதம், அது யார் வழியே உங்களுக்கு வழங்கப்பட்டது, அதை நீங்கள் உட்கொள்ளும் முறை, அணுகும் முறை என அனைத்துமே மிக முக்கியம்.
இது எல்லாவற்றையும் விட, நீங்கள் உண்ணும் அந்த உணவே உங்கள் உயிர்.
மற்றொரு உயிர் தன் உயிரை மாய்த்துக் கொண்டு, உங்கள் உயிரைக் காக்கிறது.

நாம் வாழ தங்கள் உயிரை விட்டுக் கொடுக்கும் எல்லா உயிரினங்களுக்கும், அளவில்லா நன்றியுணர்வுடன் உணவை உண்டோமேயானால், அந்த உணவு நம்முள் முற்றிலும் வேறு வகையில் செயல்படும்.

✴காற்று:
காற்று ஆறு சதவிகிதம்.
அதில் ஒரு சதவிகிதமோ அல்லது அதிலும் குறைவோ தான் நீங்கள் சுவாசிக்கும் காற்று.
மற்றவை பல்வேறு வகைகளில் நிகழ்கிறது.
நீங்கள் சுவாசிக்கும் காற்று தான் உங்கள் மீது தாக்கம் ஏற்படுத்தும் என்றல்ல.

உங்களுக்குள் இருக்கும் காற்றை நீங்கள் எப்படி வைத்துக் கொள்கிறீர்கள் என்பதும் உங்கள் நலனில் பங்கு வகிக்கிறது. அதற்காக நீங்கள் சுவாசிக்கும் காற்று முக்கியமல்ல என்று அர்த்தம் அல்ல.

நீங்கள் சுவாசிக்கும் அந்த ஒரு சதவிகிதமும் முக்கியம் தான் என்றாலும் நகரில், வாழும் உங்களுக்கு நீங்கள் சுவாசிக்கும் காற்றின் மீது எவ்வித கட்டுப்பாடும் கிடையாது.
அதனால் குறைந்தபட்சமாக பூங்காவிலோ அல்லது ஏதேனும் ஏரிக் கரையிலோ சிறிது நேரம் நடக்கலாம்.

அதிலும் குழந்தைகள் இருந்தால், கண்டிப்பாக மாதம் ஒரு முறையேனும் அவர்களை நீங்கள் வெளியே கூட்டிச் செல்ல வேண்டும் சினிமா அரங்கிற்கோ அல்லது அதுபோன்ற பிற இடங்களுக்கோ அல்ல.

சினிமா அரங்கம் போன்ற காற்றடைத்த இடங்களில், அதிலும் அங்கு திரையில் நிகழும் சப்தம், எண்ணங்கள், உணர்ச்சிகள் என்பது மட்டுமல்லாது, அதைப் பார்க்கும் மனிதர்களின் மனதில் அது ஏற்படுத்தும் அதிர்வுகள் என அந்த அடைபட்ட காற்றிலும் அதன் தாக்கம் அதீதமாக இருக்கும்.

அதனால் அவர்களை சினிமாவிற்கு அழைத்துச் செல்வதை விட, அவர்களை ஏதேனும் நதிக் கரைக்கு கூட்டிச் சென்று,
அவர்களுக்கு நீந்தச் சொல்லிக் கொடுக்கலாம்,
அல்லது மலையேற்றம் செய்யக் கூட்டிச் செல்லலாம்.

அதற்காக அவர்களை இமாலய மலைக்கு கூட்டிச் செல்ல வேண்டும் என்றல்ல.
ஊரருகில் இருக்கும் சிறு குன்றும் குழந்தைக்கு பெரும் மலைதான்.

அதனால் சின்னதாக ஏதோ ஒரு பாறை இருக்கிறது என்றால் அது கூடப் போதும்.
அதில் ஏறி சிறிது நேரம் அமர்ந்து கொள்ளுங்கள்.

குழந்தைகளுக்கு அதுவே குதூகலமாக இருக்கும். அத்தோடு இது போன்ற செயல்கள் அவர்களை ஆரோக்கியமாகவும் வைக்கும். நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள், உங்கள் உடலும் மனமும் வேறு வகையில் செயல்படும், இது எல்லாவற்றையும் விட, உங்களை மறந்து நீங்கள் இந்தப் படைப்போடு ஒன்றி இருக்கும் அந்தத் தருணங்களும் அம்சமும் உங்களுக்கு மிக அற்புதமாக வேலை செய்யும்.

✴நெருப்பு:
தினமும் சிறிது நேரம் உங்கள் மீது சூரிய ஒளி படுமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இன்றும் சூரிய ஒளி பரிசுத்தமாகத்தான் இருக்கிறது. அதிருஷ்டவசமாக, அதை யாரும் மாசுபடுத்த முடியாது.
அத்தோடு, உங்களுக்குள் எவ்விதமான நெருப்பு கொழுந்து விட்டு எரிகிறது என்பதையும் நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஆம், உங்களுக்கு கொழுந்து விட்டு எரிவது, பேராசைத் தீயா, வெறுப்பா, கோபமா, அன்பா அல்லது கருணையா என்பதைப் பாருங்கள். அதை நீங்கள் பார்த்துக் கொண்டால், உங்கள் உடல், மன நலனைப் பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையிராது.
அது தானாகவே சரியாகச் செயல்படும்.

✴ஆகாயம்:
ஆகாயம் என்பது ஒரு இடைப்பட்ட நிலை.
படைப்பிற்கும், படைப்பின் மூலம் என்பதற்குமான இடைபட்ட நிலை.

மற்ற நான்கினையும் நல்ல நிலையில் நாம் வைத்திருந்தால், ஆகாயக் கூறு தானாகவே சரியாக நிகழும்.

‘ஆகாய’த்தின் ஒத்துழைப்பை மட்டும் நீங்கள் பெற்றுவிட்டால், உங்கள் வாழ்வில் அது போன்ற ஒரு திருவருட்பேறு வேறொன்றுமில்லை.

✴ஜீவரசம்…
இது சத்குரு அவர்களால் சக்தியூட்டப்பட்ட லிங்கம் போன்ற அமைப்புடைய ஒரு வடிவம். இதனை தண்ணீரில் இட்டு பருகுவதன் மூலம் நாம் பருகும் நீரை வீரியமிக்கதாக ஆக்கிக் கொள்ள முடியும்.

No comments:

Post a Comment