WHATS APP

உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.

Bala's Jothidam

CONTACT INFORMATION

BALA'S THIRUPURASUNTHARI JOTHIDAM

நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1. உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
    2. இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க நல்ல முடிவுகள் கொடுக்கப்படும்.
    3. உங்கள் எதிர்காலத்தை திறமை பட செயலாற்ற ஒரு புத்துணர்வு கொடுக்கப்படும்..
    4. உங்கள் சந்தேகங்களை போக்கி வாழ்க்கை வளம்பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது..
    5 - உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
    6. இதன் மூலம் செயல் முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியும் நிலைக்கும்..
    பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
    G.V. Manikanda Sharma
    No.1/404, J.J. Nagar
    Mugappair East, Chennai - 600037.
    Tamil Nadu, India.
    Telephone:+91-9962225358, 9444226039.
    WhatsApp No : +91-9444226039.
    E-mail: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    எங்கள் முகவரி .
    1 / 404, ஜெ.ஜெ.நகர்.
    முகப்பேர் கிழக்கு,
    சென்னை – 600 037.
    செல் : +91-9962225358, 9444226039.
    தமிழ்நாடு – இந்தியா.
    E-mail ID: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    12 - எங்கள் சேவை .
    Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest.
    மூலம் சேவை செய்து தருகிறோம். .

Mani Sharma

Sri Bala's Thirupurasunthari Jothidam
  • இது தமிழர்களுக்கான சிறந்த ஆன்லைன் திருமணத் தகவல் மையம் ஆகும். பதிவு இலவசம். பதிவு செய்ய வரனின் பெயர், வயது, பிறந்த தேதி,பிறந்த நேரம், தந்தை பெயர், தாயர் பெயர், படிப்பு, தொழில், மாத வருமானம், பிறந்த ஊர், மொபைல் எண், ராசி, நட்சத்திரம், இலக்கினம், செவ்வாய் தோஷம், ராது-கேது தோஷம், உள்ளதா, தங்களின் வசதி மற்றும் எதிர்பார்ப்பு ஆகிய விபரங்களுடன் தங்களுடைய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து அனுப்பி வைத்தால் தங்களின் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரணுக்கும் ரூபாய் 50/- மட்டுமே கட்டணமாகும். நீங்கள் தேர்ந்தடுக்கும் வரனின் அடையாள எண் மற்றும் மொத்த வரண்களின் எண்ணிக்கையை கட்டாயம் மணி ஆர்டரில் குறிப்பிட வேண்டும். மேலும் மொத்தக் கட்டணத்துடன் ரூபாய். 30 மட்டும் கூரியர் கட்டணமாக சேர்த்து அனுப்பவும். தாங்கள் விரும்பிய வரங்களின் விபரங்கள் மறு தினமே கூரியர் தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விலாசம் பெற மணிகண்ட ஷர்மா தொடர்பு கொள்ளலாம்.
  • திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சிறந்த துவக்கமே பாதி வெற்றி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு பரம்பரையின் மூலகாரணமாக திருமணத்தை, மிகச்சிறப்பாக அமைத்துத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த நீலா மேட்ரிமோனி திருமண தகவல் மையம் கமிஷன், தரகு ஏதும் இன்றி இருமண வீட்டார்களிடமும் உண்மையான தகவல்களைக் கொடுத்து மிகச்சிறப்பான இல்வாழ்க்கை அமைய உதவ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்கள் தகவல் மையத்தில் பதிவுக் கட்டணம் குறைவாதே பதிவு செய்வதற்கு தங்களின் பயோ-டேட்டா, ஜாதகம், போட்டா மட்டும் போதுமானது. தங்கள் தகவல்களைத் தமிழிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து ஒருவாரத்திற்குள் தங்களது பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தங்களுக்கு பொருத்தமான ஒரு வரனை தேர்ந்தெடுக்க ரூ.50 மட்டுமே. வேறு எந்த கட்டணமும் கிடையாது. மணமக்கள், மண வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல்கள் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும் எங்களது சேவை அனைத்து மதத்தவர்க்கும், அனைத்து இனத்தவர்க்கும் உண்டு. எங்களது சேவயை மேலும் சிறப்புடன் செய்யவும், சேவையில் குறைபாடுகள் எதுவும் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். நீலா மேட்ரிமோனி திருமண தகவல் தொடர்பு மையம் 1 / 255, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9962225358, 9444226039 தம்ழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com

Jothidam

    ஜாதகம் கணிக்க ரூ 700/- மட்டுமே

    ஒரு ஜாதகம் பார்க்க ரூ 300/- மட்டுமே

    திருமணபொருத்தம் ஜாதகம் ஒன்றுக்கு ரூ 250/- மட்டுமே

    நேரில் பிரசன்னம் பார்க்க ரூ 500/- மட்டுமே

Monday 31 December 2018

உத்தராயண புண்யகாலம் - 2019



உத்தராயண புண்யகாலம் - 2019

விளம்பி ஆண்டு - (2018-2019)

மகாசங்கராந்தி புருஷர் (பாலவா) நாமகரணம்
துவாரங்கிசி என்ற பெயரில் (பாலவா) ஆண்புலி வாகன பலன்கள்.

பொங்கல் திருநாள் காலை மணி விளம்பி ஆண்டு தை திங்கள் 01-ம் நாள் 15. 01. 2019 செவ்வாய் கிழமை பொங்கள் வைக்க காலை 08. 00 மணி முதல் 09. 00 மணிக்குள்

இந்த விளம்பி ஆண்டு மார்கழி திங்கள் 30-ம் நாள்  (14-01-2019) திங்கட்கிழமை சுக்லபஷம், நவமி, அசுவனி நட்சத்திரம் 1-ம் பாதம், சித்த நாமயோகம், பாலவ நாம கரணம், குரு ஓரையில் சித்த நாமயோகம் கூடிய சுபநன் நாளில் இரவு மணி 10.43-க்கு கன்னியா லக்கினத்தில் ரிஷப சுக்கிர நவாம்சையில் சித்த யோகம் நல்ல நேரத்தில் லாப ஸ்தானத்தில் கடக ராகு ராஜயோகம் பெற்று இருப்பதும், தேவகுரு அசுர சுக்கிரன் யோகபலம் பெற்று ஸ்ரீ சூரிய பகவான் மகர ராசிக்கு பிரவேசிக்கிறார்.

பொங்கல் திருநாள் காலை மணி விளம்பி ஆண்டு தை திங்கள் 01-ம் நாள் 15. 01. 2019 செவ்வாய் கிழமை பொங்கள் திருநாள், காலை 08. 00 மணி முதல் 09. 00 மணிக்குள் சுக்கிரன் ஓரையில் கும்ப லக்கினத்தில் புது பானை அல்லது பாத்திரம் வைத்து பொங்கல் செய்யவும். இந்த ஆண்டு சித்தயோகத்தில் ஸ்ரீ சூரியபகவான் பிரவே சிப்பதால் எங்கும் சுபீட்ஷம் ஏற்படும். ஐயப்ப கோவில்கள் கட்டி குடமுழுக்கு விழா நடத்த நேரும். இவ்வாண்டு வருஷ தேவதை காமதேனு வருவதால் பால் உற்பத்தி அளவுக்கு அதிகமாக உற்பத்தி ஆகும். கால்நடைகளுக்கு நல்ல யோகம் உண்டு. 

            இவ்வாண்டு சூரிய பகவான் இராஜாக வருவதால் எங்கும் சுபீட்ஷம் ஏற்படும். வெய்யில் கொடுமை அதிக மாக இருக்கும். உலக ஜெகத் ஜாகதத்திற்கு அஷ்டம குரு நடப்பதால் ஆவணி மாதம் நற்பலனும், இவ்வாண்டு ஏற்படும் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. சந்திர கிரகணம் மட்டும் தெரியும். மலைகளில் நல்ல மழை பொழியும். வனத்தில் உள்ள ஜீவராசிக்களுக்கு தக்க நேரத்தில் உணவு கிடைக்கும். அரசியல் கட்சி தொடர்புடையவர்களுக்கு மற்றும் பழம்பெரும் கட்சித் தலைவர் மற்றும் தலைவிகளுக்கு பெருத்த ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. நடிப்புத் துறையில் உள்ள கலைஞர்கள் சிலர் புதிய கட்சி தொடங்கி அரசியலில் களம் இறங்க நேரும். மகர சங்கராந்தி புருஷர் அசுவனி நட்ஷத்திரத்தில் வருவதால் தனம் நாசம் ஏற்படும். பணத்திற்கு தீ பயம் உண்டாகும். கள்ளர் பயம் உண்டாகும். விலைவாசிகள் தீடீர் என்று குறையும். ஷேர் மார்க்கெட் தீடீர் என சரிய நேரும். பல முக்கிய மலைகளில் தீடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும். விவசாயம் இந்த ஆண்டு நன்றாக இருக்கும். சில முக்கிய கடல்களில் நீர் உள்வாங்குதலும், சுனாமி எச்சரிக்கை ஏற்பட வாய்ப்பு உள்ளது. சென்னை, மகாபலிபுரம், பாண்டி, நாகப்பட்டினம், வேதாரண்யம், கன்னியாகுமரி, நாகர்கோவில், இலங்கை, அந்தமான் போன்ற இடங்களில் கடுமையான சூழல்காற்று மற்றும் புயல் வீசும். மழை நன்றாக பொழியும். 

            பசும் சாணத்தில் சிறிய மேடை அல்லது கோலம் போட்டு, செம்மண் குங்குமம் இட்டு, பசும் சாணத்தில் இரு பிள்ளையார் செய்து, மேடையில் வைத்து சிவப்பு புஷ்பம், சிவப்பு பூசணிப்பூ, அருகம்புல், அலரி பூ இவைகளால் பிள்ளையாரை அலங்கரித்து அவர் எதிரில் சாணம் பள்ளம் அமைத்து , பால், தயிர், நெய், வாழைப்பழம், தேன் விட்டு அமைத்து கரும்பு, மஞ்சள்செடி கொத்து, சிவப்பு பூசணி துண்டு, கிழங்கு வகைகள், மொச்சை, அவரை, பழவகைகள் வைத்து ஸ்ரீ சூரியபகவான் கோலமிட்டு, புதிய செம்மண் இட்டு, இரு குத்துவிளக்கு ஏற்றி காலை 07. 00 -    08. 00 - க்குள் ஸ்ரீ சூரியபகவானுக்கு பூஜை செய்து ஆதித்திய ஹ{ருதய ஸ்தோத்திரம் படித்து, கற்பூர தீபாராதனை செய்து, சாம்பிராணி தூபமிட்டு, பலவகை நைவேத்தியம் வைத்து மூன்று தடவை பிரதஷிண ஷாஷ்டாங்க நமஸ்காரங்கள் செய்து பொங்கலோ பொங்கல் என்று 3 தடவை பயபக்தியுடன் கூறவும்.

            புஷ்பம் அச்சதை கையில் எடுத்து 3-தடவை பிரதிஷிண ஷாஷ்டாங்க நமஸ்காரங்கள் செய்து இரு சாணத்திலான பிள்ளையார் பேரில் அட்சதை போடவும். பூஜை  முடிந்தவுடன் (கோ) பசுவுக்கு (அல்லது) ரிஷபம் எருதுக்கு இவ்வாண்டு முதலில் வாழை இலையில் பொங்கல் பிரசாதம் வைத்து சாப்பிட கொடுத்து நமஸ்கரித்து அட்சதை போட்டு தன் குலதேவதை, தன் முன்னோர்கள் இவர்களை நினைத்து காகத்திற்கு பிரசாதம் கொடுத்த பின் அனைவருக்கும் பிரசாதம் கொடுத்து பின் போஜனம் செய்ய உத்தமம்.

  மகர சங்கராந்தி புருஷர்: 

     ஸ்திரி ரூபமாய் 3- முகங்கள், 2- கால்கள், நேர் புருவமும், செம்பட்டை முடியும், 3- வாய்களும், 8- கைகளும், 2- கால்களும் நிதான ஆலோசனையுடன் கருப்பு சரீரத்துடன் துவாங்கிசி என்ற பெயரில் திடகாத்திர சரிரத்துடன் வேப்பங்குச்சி பல்துலக்கி பன்னீர் சுத்த ஜலத்தில் வாய் கொப்பளித்து கடலில் ஸ்நானம் செய்து அலரி புஷ்பம் நித்திய மல்லி சாம்மந்தி பூ அணிந்து உடலுக்கு ஜவ்வாது, புனுகு, திரவியம் சந்தனம் பன்னீர் கஸ்தூரி கோரோஜனம் உடலுக்கு பூசிக்கொண்டு குங்கும பூ சுத்த காற்றை சுவாசித்து நெற்றியில் சந்தனம் குங்குமம் அட்சதை வைத்துக் கொண்டு செம்பு பாத்திரத்தில் பால் பாயாசம் பூசித்து சர்க்கரை பொங்கல் சாப்பிட்டு இலுப்பை பழம் தின்று வெள்ளை வஸ்திரம் அணிந்து வெள்ளி ஆபரணம் ருத்திராட்சம் மாலை அணிந்து கிழிந்த மயில் குடை பிடித்து அனைத்து மதம் புடை சூழ மங்கள வாத்தியம் வாசித்து ஞாபகதத்துடன் வேத மந்திரங்கள் முழங்க வடக்கு திசை நோக்கி ஆண் புலி வாகனத்தில் சாமரசம் வீசி புன்சிரிப்பு முகத்துடன் ஒரு கையில் ஆயுதம் மறு கையில் துலா கோள் பிடித்து சுமங்கலிகளுடன் திக்கில் அமருகிறார். இவ்வாண்டு பொங்கல் பால் வடக்கே பொங்கும். கவனிக்க....

விசேஷ பலன்கள் :

 இந்த ஆண்டு : தமோமேகம் பதக்கு -1 மரக்கால் மழை வருவதால் அனைத்து இடங்களில் நல்ல மழை பொழியும். எங்கும் சுபீட்ஷம், விமான விபத்துக்கள் (சாலையில்) அதிகரிக்கும்.



வாரம்:
பயிர் வகை மற்றும் நவதானியங்கள் நன்கு விளைந்து பருப்பு விலை வீழ்ச்சி அடையும். வெல்லம் விலை உயர்ந்து குறையும். சந்நியாசிகளுக்கு, பூம் பூம் மாடு வைத்திருப் பவருக்கு நல்ல யோகம். ஏழை மக்கள் அவதி பட நேரும். தனவந்தர்களுக்கு பலவகையில் தொந்தரவு கள் ஏற்படும். ஜீவராசிகளுக்கு புல் நன்றாக கிடைத்து (கால்நடைகள்) நோய் இன்றி நன்றாக வாழும்.  திதி : உத்தரயாணத்தில் ஆலங்கட்டி மழையும்,தட்ஷிணாயத்தில் நல்ல மழையும், முட்டை -பூச்சி - பாம்பு – பூரான் அழிதலும், சைவ உணவு அதிகரிக்கும். அசைவ வகை களுக்கு கெடு பலனும், எங்கும் பணம் பற்றாக்குறை ஏற்படும். அயல் நாட்டில் அதிகமான சூறாவளி காற்றால் கடுமையாக பாதிக்கும். அயல்நாட்டில் பூகம்பம் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. இலங்கையில் அரசியலில் ஈடுபாடு உள்ள தலைவர்களுக்கு கெண்டாதி கெண்டம் உண்டாகும்.

நட்சத்திரம்:
மூலம் வருவதால் அனைத்து ஜாதியினருக்கு நல்ல யோகம் உண்டாகும். தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்  புதிய கண்டுபிடிப்பு புதிய ரக விமானங்களை அரசாங்கம் வாங்க நேரும். தீடீர் என ஆகாயத்தில் மேக மூட்டம், மூடுபனி உற்பத்தி ஆகும்.

யோகம்:
ஏழை மக்கள் சுகம் அடைவர். எங்கும் சுபநிகழ்ச்சி அதிகமும், யுத்த பீதி உண்டாகும். இந்தியாவிற்கு எந்த வித பாதிப்பு இராது. புதிய புழுக்கள் அதிகம் உற்பத்தி ஆகும். வனங்கள் நன்றாக செழித்து இருக்கும். 

கரணம் :
துவாங்கிசி நாமகரணம் ஆண்புலி வந்தால் வைசீயர் களுக்கு பீடை, வனத்தில் தீடீர் தீ பயம் உண்டாகும்.

லக்கினம், ராசி, நவாம்சம், தசாபுக்தி பலன் :

பூர்விக தேவாலயங்களுக்கு புனர்பிரதிஷ்டை செய்து அரசாங்கமே கும்பாபிஷேகம் செய்ய நேரும். மலைப் பிரதே சங்கள் நிலச்சரிவால் பாதிப்பு உண்டாகும். இடி மின்னல் களால், மேக கர்ஜனை, இடிகளால் விமானம் பாதிப்பு அதிக அளவில் ஏற்பட வாய்ப்புள்ளது. ஸ்நானம் - ஆபரணம் - பொட்டு - பாத்திரங்கள் - பூசித்தல் - வாகனம் எங்கும் சுபசெய்தி, வடக்கு திக்கான வாரணாசி (உத்திரபிரதேசம்) (மத்தியபிரதேசம்) (கயா) கடும் பாதிப்பு மழையால் உண்டாகும். கர்நாடகா, கேரளா நிலநடுக்கம் பாதிப்பு உண்டாகும். பெண்களுக்கு அரசாங்கம் பாதுகாப்பு அளிக்கும். பறவையினம் - விலங்கினம் இனவிருத்தி அதி கமாக காணப்படும். காகம், சிட்டுக்குருவி இனப்பெருக்கம் அதிகமாக நேரும். ஆலங்கட்டி மழை பொழியும். வானத்தில் மின்காந்த அலைகள் ஏற்பட்டு சில நாடுகளில் வாழும் மக்களுக்கு ரத்தம் புற்றுநோய் சம்மந்தப்பட்ட வியாதி உண்டாகும்.

மகரசங்கராந்தி பொங்கல் பண்டிகை ஜென்ம நட்சத்திர பலன்கள்

            ரேவதி, அசுவனி, பரணி ஆக 3 நஷத்திரங்கள் தன நாசம், கிருத்திகை, ரோகிணி, மிருகசீரிஷம், திருவாதிரை, புனாபூசம், பூசம் ஆகிய 6 நஷத்திரங்கள் தனலாபம், ஆயில்யம், மகம், பூரம் ஆகிய 3 நஷத்திரங்கள் ஸ்தான சலனம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம் ஆகிய 6 நஷத்திரங்கள் ஸ்தன லாபம், கேட்டை, மூலம், பூராடம், ஆகிய 3 நஷத்திரங்கள் இராஜ யோகம். உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி ஆகிய 6 நஷத்திரங்கள் இராஜ வெகுமானம். இவ்வாண்டு மகரசங்கராந்தி புருஷர் அசுவனி நஷத்திரத்தில் வருவதால் வங்கிகளில் தனநாசம் ஏற்படும். லாக்கரில் உள்ள முக்கிய பொருள்கள் யாவும் அரசின் கண்காணிப்பில் வரும். யாரும் அரசாங்கத்தை ஏமாற்ற முடியாமல் தவிக்க நேரும்.

ஸ்ரீ பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்

ஜாதகம் பார்க்க, ஜாதகம் கணிக்க, திருமண பொருத்தம், எண்கணிதம், ராசிரத்தினம் பார்க்க, பிரசன்னம், பெயர் ராசி பார்க்க அணுகவும். ராகு, கேது, சுக்கிரன், செவ்வாய்,  சனி தோஷ நிவர்த்தி செய்து தரப்படும். திருமணத்தடை, புத்திர பாக்கியம் இன்மை, உத்தியோக தடை, கல்வித் தடை, கடன் தொல்லை, சொந்த வீடு அமையாமை பூமி தோஷம் மற்றும் பல பிரச்சனைகள் நிவர்த்தி செய்து தரப்படும்.

வாக்கிய கணித பிரசன்ன ஜோதிடர்,

புரோகிதர்,  Diploma in Astrology
G.V. மணிகண்ட ஷர்மா.  
ஸ்ரீ வித்யா உபாசகர்

Thursday 27 December 2018

சிந்திக்க வைக்கும் சிந்தனை துளிகள்!

சிந்திக்க வைக்கும் சிந்தனை துளிகள்!

'உங்களால் மறக்க முடியாத மற்றவர்களின் குற்றங்களை மன்னித்து விடுங்கள்.. உங்களால் மன்னிக்க முடியாத மற்றவர்களின் குற்றங்களை மறந்து விடுங்கள்..!"

கெப்ளர்

ஜெர்மனியை சேர்ந்த கணிதவியலாளரும், வானியலாளருமான ஜோகன்னஸ் கெப்ளர் 1571ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி ஜெர்மனியின் வைல்டர்ஸ்டாட் நகரில் பிறந்தார்.

இவர் வானியலில் தான் ஆராய்ந்து அறிந்த விஷயங்களின் அடிப்படையில் 'மிஸ்ட்ரியம் காஸ்மோகிராபிகம்" என்ற மிகப்பெரிய வானியல் நூலை எழுதினார். இந்நூல் 1596ஆம் ஆண்டு வெளிவந்த பிறகு, திறன் வாய்ந்த வானியலாளராக அங்கீகாரம் பெற்றார்.

இவர் 'அஸ்ட்ரோநோமியா நோவா", 'ஹார்மோனிஸ் முன்டி" ஆகிய நூல்களில் கோள்களின் இயக்க விதிகள் தொடர்பாக கூறிய கருத்துகள் பெரும் வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றன.

கோள்களின் இயக்கம் தொடர்பாக பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு 3 விதிகளைக் கண்டறிந்தார். கண்களால் நாம் எப்படி பார்க்கிறோம் என்பதற்கு சரியான விளக்கம் தந்து, இவர் கிட்டப்பார்வை, தூரப்பார்வைக்கான கண்ணாடிகளை கண்டறிந்தார். 'எபிடோமி அஸ்ட்ரோநோமியா" என்ற புகழ்பெற்ற நூலை 1621ஆம் ஆண்டு வெளியிட்டார்.

இவர்தான் முதன்முதலில் 'சாட்டிலைட்" என்ற வார்த்தையை உருவாக்கினார். பன்முகப் பரிமாணம் கொண்ட ஜோகன்னஸ் கெப்ளர் 58-வது வயதில் (1630) மறைந்தார். கோள்களைக் கண்டறியும் நாசாவின் தொலைநோக்கிக்கு இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது.

லூயி பாஸ்டர்

நோய்க் கிருமிகள் பற்றிய ஆராய்ச்சிகள் மூலம் மனித குல நன்மைக்காகப் பாடுபட்ட பிரான்ஸ் விஞ்ஞானி லூயி பாஸ்டர் 1822ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி பிரான்ஸில் பிறந்தார்.

இவர் 1856ஆம் ஆண்டு தன்னுடைய நண்பரான ஒயின் தயாரிப்பாளருக்கு உதவி செய்ய ஓர் ஆராய்ச்சி மேற்கொண்டார். ஒயினை புளிக்கச்செய்வது ஒருவகை பாக்டீரியா கிருமி என்பதைக் கண்டறிந்தார்.

தற்போது பால் மற்றும் உணவுப் பொருள் பதப்படுத்தும் நிலையங்களில் இந்த தொழில்நுட்பமே பயன்படுத்தப்படுகிறது. இது அவரது பெயரால் 'பாஸ்ச்சரைசேஷன்" என்று அழைக்கப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக, மனித உடலில் நுண்ணுயிரிகள் புகுவதை தடுக்கும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. உயிர்க்கொல்லி என்று கருதப்பட்ட காசநோய்க்கும் மருந்து கிடைத்தது. மேலும் கால்நடைகளுக்கு வரும் கோமாரி நோய்க்கும் மருந்தை கண்டறிந்தார்.

ரேபிஸ் நோய் பற்றி ஆராய்ந்து பல சோதனைகளை மேற்கொண்டு அதற்கான தடுப்பு மருந்தையும் கண்டறிந்தார். இவரது அடிப்படை கோட்பாடுகளைப் பயன்படுத்தி ஜன்னி, போலியோ போன்றவற்றுக்கும் மருந்து கண்டுபிடித்துள்ளனர் விஞ்ஞானிகள்.

இவர் ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். விண்ணில் உள்ள சில கோள்கள் மற்றும் நிலவிலுள்ள பள்ளங்களுக்கும் இவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது. தன் வாழ்நாள் இறுதிவரை மனித குல நன்மைக்காக உழைத்த விஞ்ஞானி லூயி பாஸ்டர் 72-வது வயதில் (1895) மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள்

1956ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

1911ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி இந்தியாவின் தேசிய கீதம் ஜன கண மன முதன்முதலில் கல்கத்தா நகரில் இசைக்கப்பட்டது.

வணக்கம் நண்பர்களே
🌹🙏🌹

கருடபுராணம் சொல்லும் நன்மைகள்.!

*#கருடபுராணம்_சொல்லும்_நன்மைகள்*

*1    அன்னதானம் செய்தல்    விரும்பிய உலகத்தில் ஒரு வருடம் வீதம் சுகித்திருப்பார்.*

*2    கோ தானம் செய்தல்    கோலோகத்தில் வாழ்வர்*

*3    பசு கன்றீனும் சமயம் தானம் கொடுத்தவருக்கு    கட்டாயம் வைகுண்ட வாசம் உண்டு*

*4    குடை தானம் செய்தவர்    1000 ஆண்டுகள் வருணலோகத்தில் சுகம் அனுபவிப்பார்*

*5    தாமிரம,; நெய், கட்டில,; மெத்தை, ஜமுக்காளம், பாய,; தலையனை இதில் எதை தானம் செய்தாலும்    சந்திலலோகத்து சுகங்களை அனுபவிப்பார்*

*6    வஸ்திர தானம் கொடுத்தவருக்கு    10000 ஆண்டுகள் வாயுலோகத்தில் வாழ்வார்*

*7    இரத்தம,; கண,; உடல் தானம் கொடுத்தவருக்கு    அக்கினிலோகத்தில் ஆனந்தமாயிருப்பார்*

*8    ஆலயத்துக்கு யானை தானம் கொடுத்தவருக்கு    இந்திரனுக்கு சமமான ஆசனத்;தில் அமர்ந்திருப்பார்*

*9    குதிரையும், பல்லக்கும் தானம் கொடுத்தவருக்கு*
*14 இந்திரன் காலம் வரை வருணலோகத்தில் வாழ்வார்*

*10    நந்தவனங்களை ஆலயத்துக்கு அளிப்பவர்    ஒரு மன் வந்தரகாலம் வாயுலோகத்தில் வாழ்வார்*

*11    தானியங்களையும், நவரத்தினங்களையும் தானம் கொடுத்தவருக்கு    மறு ஜென்மத்தில் அறிவாளியாகவும் தீர்க்காயுள் கொண்டவராயும் வாழ்வர்*

*12    பயன் கருதாது தானம் செய்பவரின் மரணம்    உன்னதமாயிப்பதோடு மீண்டும் பிறவி வாய்ப்பதில்லை*

*13    நற்செயலை விரும்பி செய்கிறவர்கள்    சூரியலோகத்திற்கு செல்கிறார்கள்*

*14    தீர்த்த யாத்திரை புரிகின்றனர்    சத்தியலோக வாசம் கிட்டுகிறது*

*15    ஒரு கன்னிகையை ஒழூக்கமாக வளர்த்து விவாகம் செய்து கொடுப்பவருக்கு    14 இந்திர ஆயுட்காலம் வரை அமராவதியில் சுகித்திருப்பர்*

*16    பொன் வெள்ளி ஆபரணங்களைத் தானம் கொடுத்தவருக்கு    குபேர லோகத்தில் ஒரு மன் வந்தரம் வாழ்வார்*

*17    பண உதவி செய்பவர்கள்    ஸ்வேத தீபத்தில் நெடுங்காலம் வாழ்வார்கள்*

*18    நீர் நிலைகளை சீர்திருத்துபவரும,; உண்டாக்குபவரும்    ஜனலோகத்தில் நீண்டகாலம் ; வாழ்வார்கள்*

*19    பயனுள்ள மரங்களை நட்டுப் பாதுகாப்பவர்    தபோ லோகத்தை அடைகிறார்*

*20    புராண நிகழ்ச்சிகளைக் குறிக்கும் சிற்பங்களையுடைய கோபுரம் கட்டும் செலவினை ஏற்றால்    64 ஆண்டுகள் பரமபத்திலிருப்பான்*

*21    தெய்வம் பவனி வரும் வீதிகளை செம்மைப்படுத்துபவர்    10000 வருடங்கள் இந்திரலோகத்தில் சுகித்திருப்பார்.*

*22    பௌர்ணமியில் டோலோற்சவம் செய்பவர்    இம்மையிலும் மறுமையிலும் இன்பமடைவார்.*

*23    தாமிரப்பாத்திரத்தில் எள்ளைத் தானம் கொடுத்தவருக்கு    நற்குலத்தில் உதித்து திடகாத்திரமாக கீர்த்தியோடு பிரகாசிப்பார்*

*24    சுவையான பழங்களைத் தானம் கொடுத்தவருக்கு    ஒரு கனிக்கு ஒரு ஆண்டு வீதம் கந்தர்வ லோகத்தில் சுகித்திருப்பார்*

*25    ஒரு சொம்பு நல்ல தண்ணீரை நல்லவர்களுக்குத் தானம் கொடுத்தவருக்கு    கைலாய வாசம் கிட்டும்*

*26    அருணோதயத்தில் கங்கையில் நீராடுபவர்    60000 ஆண்டுகள் பரமபத்திலிருப்பர்*

*27    விரதம் நோன்புகளை பக்தியுடன் கடைபிடிப்பவர்    14 இந்திர ஆயுட்காலம் வரை சொர்க்கபுரியில் வாசம் செய்வர்*

*28    சுதர்சன ஹோமமும,; தன்வந்திரி ஹோமமும் செய்பவர்    ஆரோக்கியவானாக சத்ருக்களில்லாதவராக தீர்க்காயுளுடன் வாழ்வர்*

*29    ஷோடச மகாலெட்சுமி பூiஐயை முறையோடு செய்பவர்    குலம் பதினாறு பேறுகளையும் பெற்று பெருமையுடன் விளங்குவர்.*

*30    இதைப் படிப்பவரும, கேட்பவரும,; புண்ணிய காலங்களில் தானம் கொடுப்பவரும்    தனது அந்திம காலத்தில் நல்ல உலகத்தை அடைந்து இன்புறுவார்கள்.  அவர்களின் பெற்றோரும் மிதுர்களும் முக்தி பெறுகின்றனர்.