WHATS APP

உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.

Bala's Jothidam

CONTACT INFORMATION

BALA'S THIRUPURASUNTHARI JOTHIDAM

நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1. உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
    2. இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க நல்ல முடிவுகள் கொடுக்கப்படும்.
    3. உங்கள் எதிர்காலத்தை திறமை பட செயலாற்ற ஒரு புத்துணர்வு கொடுக்கப்படும்..
    4. உங்கள் சந்தேகங்களை போக்கி வாழ்க்கை வளம்பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது..
    5 - உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
    6. இதன் மூலம் செயல் முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியும் நிலைக்கும்..
    பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
    G.V. Manikanda Sharma
    No.1/404, J.J. Nagar
    Mugappair East, Chennai - 600037.
    Tamil Nadu, India.
    Telephone:+91-9962225358, 9444226039.
    WhatsApp No : +91-9444226039.
    E-mail: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    எங்கள் முகவரி .
    1 / 404, ஜெ.ஜெ.நகர்.
    முகப்பேர் கிழக்கு,
    சென்னை – 600 037.
    செல் : +91-9962225358, 9444226039.
    தமிழ்நாடு – இந்தியா.
    E-mail ID: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    12 - எங்கள் சேவை .
    Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest.
    மூலம் சேவை செய்து தருகிறோம். .

Mani Sharma

Sri Bala's Thirupurasunthari Jothidam
  • இது தமிழர்களுக்கான சிறந்த ஆன்லைன் திருமணத் தகவல் மையம் ஆகும். பதிவு இலவசம். பதிவு செய்ய வரனின் பெயர், வயது, பிறந்த தேதி,பிறந்த நேரம், தந்தை பெயர், தாயர் பெயர், படிப்பு, தொழில், மாத வருமானம், பிறந்த ஊர், மொபைல் எண், ராசி, நட்சத்திரம், இலக்கினம், செவ்வாய் தோஷம், ராது-கேது தோஷம், உள்ளதா, தங்களின் வசதி மற்றும் எதிர்பார்ப்பு ஆகிய விபரங்களுடன் தங்களுடைய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து அனுப்பி வைத்தால் தங்களின் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரணுக்கும் ரூபாய் 50/- மட்டுமே கட்டணமாகும். நீங்கள் தேர்ந்தடுக்கும் வரனின் அடையாள எண் மற்றும் மொத்த வரண்களின் எண்ணிக்கையை கட்டாயம் மணி ஆர்டரில் குறிப்பிட வேண்டும். மேலும் மொத்தக் கட்டணத்துடன் ரூபாய். 30 மட்டும் கூரியர் கட்டணமாக சேர்த்து அனுப்பவும். தாங்கள் விரும்பிய வரங்களின் விபரங்கள் மறு தினமே கூரியர் தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விலாசம் பெற மணிகண்ட ஷர்மா தொடர்பு கொள்ளலாம்.
  • திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சிறந்த துவக்கமே பாதி வெற்றி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு பரம்பரையின் மூலகாரணமாக திருமணத்தை, மிகச்சிறப்பாக அமைத்துத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த நீலா மேட்ரிமோனி திருமண தகவல் மையம் கமிஷன், தரகு ஏதும் இன்றி இருமண வீட்டார்களிடமும் உண்மையான தகவல்களைக் கொடுத்து மிகச்சிறப்பான இல்வாழ்க்கை அமைய உதவ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்கள் தகவல் மையத்தில் பதிவுக் கட்டணம் குறைவாதே பதிவு செய்வதற்கு தங்களின் பயோ-டேட்டா, ஜாதகம், போட்டா மட்டும் போதுமானது. தங்கள் தகவல்களைத் தமிழிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து ஒருவாரத்திற்குள் தங்களது பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தங்களுக்கு பொருத்தமான ஒரு வரனை தேர்ந்தெடுக்க ரூ.50 மட்டுமே. வேறு எந்த கட்டணமும் கிடையாது. மணமக்கள், மண வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல்கள் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும் எங்களது சேவை அனைத்து மதத்தவர்க்கும், அனைத்து இனத்தவர்க்கும் உண்டு. எங்களது சேவயை மேலும் சிறப்புடன் செய்யவும், சேவையில் குறைபாடுகள் எதுவும் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். நீலா மேட்ரிமோனி திருமண தகவல் தொடர்பு மையம் 1 / 255, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9962225358, 9444226039 தம்ழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com

Jothidam

    ஜாதகம் கணிக்க ரூ 700/- மட்டுமே

    ஒரு ஜாதகம் பார்க்க ரூ 300/- மட்டுமே

    திருமணபொருத்தம் ஜாதகம் ஒன்றுக்கு ரூ 250/- மட்டுமே

    நேரில் பிரசன்னம் பார்க்க ரூ 500/- மட்டுமே

Friday 20 January 2017

அன்னை ஸ்ரீ மூகாம்பிகை





  தாய் மூகாம்பிகை
  
அன்னை ஸ்ரீ மூகாம்பிகை
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் செளபர்நிகா நதிக்கரையில் அமைந்துள்ளது, சாஸ்திரத்தின்படி கட்டப்பட்டு, கட்டடக் கலையின் அழகம்சத்துடன் கூடிய தாய் மூகாம்பிகை திருக்கோயில். கர்நாடகம் மட்டுமின்றி, நமது நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தாய் மூகாம்பிகையின் சக்தியை உணர்ந்து பல்லாயிரக்கணக்கில் வந்து செல்கி்ன்றனர்.

விஜயதசமி இத்திருக்கோயிலில் வித்யாதசமி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. தங்களுடைய குழந்தையின் கல்வியை இத்திருத்தலத்திற்கு வந்து தாய் மூகாம்பிகையை வணங்கியே துவக்கி வைக்கின்றனர். அதனால்தான் விஜயதசமி, வித்யாதசமி என்றழைக்கப்படுகிறது.

தல வரலாறு!
கோல மகரிஷி எனும் ரிஷி இங்கு தவமிருந்து அருள் பெற்றதனால் இவ்விடத்திற்கு கொல்லூர் என்றும், கோலபுரா என்றும் அழைக்கப்படுகிறது. காமா அசுரனை ஒடுக்குவதற்காக மகாலஷ்மியின் அருளை வேண்டி கோல மகரிஷி இங்குதான் கடும் தவம் புரிந்தார். அவரின் தவத்தை ஏற்ற மகாலஷ்மி, சிவனின் அருளை வேண்டி தவமிருந்து அமரத்துவம் பெறயிருந்த நிலையில் அவனை தேவி ஊமையாக்கினார். அதன்பிறகு அந்த அசுரன் மூக்காசுரன் (ஊமை அரக்கன்) என்றழைக்கப்பட்டான். ஆனால் அதற்குப் பிறகும் அந்த அசுரன் அடங்கவில்லை. சிவனிடமும், ஹரியிடமும் சாகா வரம் பெற்ற அவனை தேவி தனது படையுடன் வந்து கொண்டார்.




இத்திருத்தலத்தின் மூலஸ்தானத்தில் உள்ள ஜோதிர் லிங்க வடிவத்திலேயேதான் தாய் மூகாம்பிகை வணங்கப்படுகிறார். தண்ணீரில் அமர்ந்தவாறு இருக்கும் பீடத்தில் தங்கத்தால் ஆன கோடுடன் ஜோதிர் லிங்கம் உள்ளது. பிரம்மனும், விஷ்ணுவும், மகேஸ்வரனும் எவ்வாறு ஸ்ரீ சக்கரத்தினால் வழிபடப்படுகின்றனரோ, அதுபோலவே ஜோதிர் லிங்கத்தின் இந்த ஆதி சக்தி இங்கு வணங்கப்படுகிறார்.

இக்கோயிலின் கர்ப்ப கிரகத்தில் பிரகருதி, சக்தி, காளி, லஷ்மி, சரஸ்வதி ஆகிய தெய்வங்களின் விக்ரகங்களும் உள்ளது. ஜோதிர் லிங்கத்தின் மேற்குத் திசையில் பஞ்ச லோகத்தினலான ஸ்ரீதேவியின் சிலை உள்ளது. இதுவே விழாக் காலங்களில் ஊர்வலமாகக் கொண்டுவரப்படும். தாய் மூகாம்பிகை சங்குடனும், சக்கரத்துடனும் பத்மாசனத்தில் அமர்ந்துள்ளார். 

இக்கோயிலின் உள் பிரகாரத்தில் 10 கைகளுடன் கூடிய தச புஜ கணபதியை வணங்கலாம். மேற்கு புரத்தில் ஆதிசங்கரர் தவமிருந்த பீடம் உள்ளது. அதற்கு எதிரில் ஆதிசங்கரரின் வெள்ளைக் கல்லாலான சிலை உள்ளது, அதில் ஆதிசங்கரரின் மந்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகத்தின் சிறப்பு அனுமதி பெற்றே ஆதிசங்கரரின் பீடத்தை தரிசிக்க முடியும். வடகிழக்கு மூலையில் யாசசாலையும், வீரபத்ரேஷ்வரரின் சன்னதியும் உள்ளது. மூகாசுரனுடன் தேவி சண்டையிட்ட வீரபத்ரேஷ்வரர் அவருடன் நின்று சண்டையிட்டார். வீரபத்ரருக்கு விபூதியால்தான் இங்கு பூசை செய்யப்படுகிறது. கோயிலின் வெளி பிரகாரத்தில் பலி பீடமும், கொடிக் கம்பமும், தீபக் கம்பமும் உள்ளது. கொடிக் கம்பம் இங்கு தங்கத் தகடுகளால் வேயப்பட்டுள்ளது.

கார்த்திகை மாதத்தில் இங்கு தீப உற்சவம் நடக்கும் போது தீபக் கம்பத்தில் உள்ள விளக்குகள் அனைத்தும் ஏற்பட்டு அழகுடன் காட்சியளிப்பதைக் காணலாம். இத்திருத்தலத்தில் ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் அளிக்கப்படுகிறது. கோயிலிற்கு வெளியே வந்தால் அதன் மேற்குப் பக்க சாலையில் திரியம்பகேஸ்வரர், சிருங்கேரி மடத்தில் ஈஸ்வரர் கோயிலும், மாரியம்மன் கோயிலும் உள்ளன. மேலும் பல வழிபாட்டுத் தலங்களையும் காணலாம். காஞ்சி காமகோடி பீடம் இங்கு வேத பாடசாலை ஒன்றை நடத்தி வருகிறது.


விழாக்கள் :



வித்யாதசமி மட்டுமின்றி, சந்திர ஆண்டின் துவக்கத்தைக் குறிக்கும் சந்திரமான் யுகாதி, ராம நவமி, நவராத்திரி, சூரிய ஆண்டின் துவக்கத்தைக் குறிக்கும் செளரமன் யுகாதி, மூகாம்பிகா ஜென்மாஷ்டமி, விநாயக சதுர்த்தி, கிருஷ்ண தசமி, நரகா சதுர்தசி ஆகியனவும் இங்கு விமர்சையான திருவிழக்களாகும்.

கொல்லூருக்குச் செல்வது எப்படி?

கர்நாடக மாநிலத்தின் கரையோர மாவட்டமான உடுப்பியில் அமைந்துள்ளது கொல்லூர். கர்நாடக தலைநகர் பெங்களூருவில் இருந்து 500 கி.மீ. தூரத்திலும், துறைமுக நகரான மங்களூருல் இருந்து 135 கி.மீ. தூரத்திலும் உள்ளது. மங்களூருக்கு சாலை, ரயில், விமானம், கடல் மார்க்கங்களில் செல்லலாம். உடுப்பியில் இருந்து 35 கி.மீ. தூரத்திலும், குந்தாபூர் ரயில் நிலையில் இருந்து 43 கி.மீ. தூரத்திலும் உள்ளது. அருகில் உள்ள விமானதளம் மங்களூர்.

தாய் மூகாம்பிகை திருக்கோயிலிற்கு வரும் பக்தர்கள் தங்க சராசரி கட்டணத்திலேயே பல தங்குமிடங்கள் உள்ளன.

No comments:

Post a Comment