WHATS APP

உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.

Bala's Jothidam

CONTACT INFORMATION

BALA'S THIRUPURASUNTHARI JOTHIDAM

நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1. உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
    2. இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க நல்ல முடிவுகள் கொடுக்கப்படும்.
    3. உங்கள் எதிர்காலத்தை திறமை பட செயலாற்ற ஒரு புத்துணர்வு கொடுக்கப்படும்..
    4. உங்கள் சந்தேகங்களை போக்கி வாழ்க்கை வளம்பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது..
    5 - உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
    6. இதன் மூலம் செயல் முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியும் நிலைக்கும்..
    பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
    G.V. Manikanda Sharma
    No.1/404, J.J. Nagar
    Mugappair East, Chennai - 600037.
    Tamil Nadu, India.
    Telephone:+91-9962225358, 9444226039.
    WhatsApp No : +91-9444226039.
    E-mail: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    எங்கள் முகவரி .
    1 / 404, ஜெ.ஜெ.நகர்.
    முகப்பேர் கிழக்கு,
    சென்னை – 600 037.
    செல் : +91-9962225358, 9444226039.
    தமிழ்நாடு – இந்தியா.
    E-mail ID: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    12 - எங்கள் சேவை .
    Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest.
    மூலம் சேவை செய்து தருகிறோம். .

Mani Sharma

Sri Bala's Thirupurasunthari Jothidam
  • இது தமிழர்களுக்கான சிறந்த ஆன்லைன் திருமணத் தகவல் மையம் ஆகும். பதிவு இலவசம். பதிவு செய்ய வரனின் பெயர், வயது, பிறந்த தேதி,பிறந்த நேரம், தந்தை பெயர், தாயர் பெயர், படிப்பு, தொழில், மாத வருமானம், பிறந்த ஊர், மொபைல் எண், ராசி, நட்சத்திரம், இலக்கினம், செவ்வாய் தோஷம், ராது-கேது தோஷம், உள்ளதா, தங்களின் வசதி மற்றும் எதிர்பார்ப்பு ஆகிய விபரங்களுடன் தங்களுடைய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து அனுப்பி வைத்தால் தங்களின் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரணுக்கும் ரூபாய் 50/- மட்டுமே கட்டணமாகும். நீங்கள் தேர்ந்தடுக்கும் வரனின் அடையாள எண் மற்றும் மொத்த வரண்களின் எண்ணிக்கையை கட்டாயம் மணி ஆர்டரில் குறிப்பிட வேண்டும். மேலும் மொத்தக் கட்டணத்துடன் ரூபாய். 30 மட்டும் கூரியர் கட்டணமாக சேர்த்து அனுப்பவும். தாங்கள் விரும்பிய வரங்களின் விபரங்கள் மறு தினமே கூரியர் தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விலாசம் பெற மணிகண்ட ஷர்மா தொடர்பு கொள்ளலாம்.
  • திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சிறந்த துவக்கமே பாதி வெற்றி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு பரம்பரையின் மூலகாரணமாக திருமணத்தை, மிகச்சிறப்பாக அமைத்துத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த நீலா மேட்ரிமோனி திருமண தகவல் மையம் கமிஷன், தரகு ஏதும் இன்றி இருமண வீட்டார்களிடமும் உண்மையான தகவல்களைக் கொடுத்து மிகச்சிறப்பான இல்வாழ்க்கை அமைய உதவ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்கள் தகவல் மையத்தில் பதிவுக் கட்டணம் குறைவாதே பதிவு செய்வதற்கு தங்களின் பயோ-டேட்டா, ஜாதகம், போட்டா மட்டும் போதுமானது. தங்கள் தகவல்களைத் தமிழிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து ஒருவாரத்திற்குள் தங்களது பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தங்களுக்கு பொருத்தமான ஒரு வரனை தேர்ந்தெடுக்க ரூ.50 மட்டுமே. வேறு எந்த கட்டணமும் கிடையாது. மணமக்கள், மண வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல்கள் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும் எங்களது சேவை அனைத்து மதத்தவர்க்கும், அனைத்து இனத்தவர்க்கும் உண்டு. எங்களது சேவயை மேலும் சிறப்புடன் செய்யவும், சேவையில் குறைபாடுகள் எதுவும் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். நீலா மேட்ரிமோனி திருமண தகவல் தொடர்பு மையம் 1 / 255, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9962225358, 9444226039 தம்ழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com

Jothidam

    ஜாதகம் கணிக்க ரூ 700/- மட்டுமே

    ஒரு ஜாதகம் பார்க்க ரூ 300/- மட்டுமே

    திருமணபொருத்தம் ஜாதகம் ஒன்றுக்கு ரூ 250/- மட்டுமே

    நேரில் பிரசன்னம் பார்க்க ரூ 500/- மட்டுமே

Monday 22 September 2014

பாரம்பரிய மருத்துவம் ஆயுர்வேதத்தின் அறிவுரைகள்






Neela Matrimony
Sri Bala Thirupurasuntari Jothidam
1/255, J. J. Nagar Mugappair East, Chennai-37
Cell : 9600068631 - 9600068931


ஆயுர்வேதத்தின் அறிவுரைகள்
"ஜீவராசிகள் அனைத்தும் இன்பம் பெறவே முற்படுகின்றன. இன்பம் பெறுவதற்கான முயற்சிகள் பலன் தர நேர்மையின் துணை தேவை. அவரவரது கடமை வரம்பினுள் அடங்கி, தனக்கும் பிறர்க்கம் பிற்கேடுகள் விளையாதபடி மன வாக்காயங்கள் நேர்மையுடன் பணிபுரிய வாழ்வை அமைத்துக் கொள்வதில் தீவிரமாக ஈடுபடுவது அதற்கு அவசியம்" - வாக்படர்.
"உடலையும் மனதையும் பாதிக்கவல்லவை என அறிந்தே அதில் ஈடுபடுதலாகிய அறிவுத் தடுமாற்றமின்றி பொறிகளை அடக்கி, நல்ல நினைவுடன், தேசத்திற்கும் காலத்திற்கும் தன் உடல்நிலைக்கும் ஏற்றவற்றை உணர்ந்து, நன்னடத்தையைத் தொடர்ந்து கையாள்வதொன்றே நோய் வராமல் பாதுகாக்க உதவக்கூடியது"- சரகஸம்ஹிதை.
"நல்லதும் கெட்டதும் மனதில் பதிகிறது. மனதில் பதிந்தவற்றை எல்லாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்பந்தமில்லை. தவிர்க்க வேண்டியவற்றைத் தவிர்க்கவும், ஏற்க வேண்டியவற்றை ஏற்கவும் சிந்தித்து பகுத்தறிந்து செயல்படும் புத்தி உண்டு. மனம் கொண்டவற்றை எல்லாம் ஏற்கும் சபலம் இந்த புத்தியை தடுமாறச் செய்யலாம். பகுத்தறிவுடன் சிந்தித்து ஏற்றதைச் செயளவில் கொண்டு செலுத்தும் திறமையை திருதி என்பர். மனச்சபலம் இதனையும் கவிழ்க்கும். பகுத்தறிந்தவை நமக்கு - இந்தச் சூழ்நிலைக்கு ஏற்றவையா என எடைபோட முன் அனுபவம் உதவும். இந்த முன் அனுபவத்தை அறிவுக்கண்முன் கொண்டு வருவது ஸ்மிருதி எனும் ஞாபகசக்தி. மனச்சபலம் இந்த ஸ்மிருதியைப் புறக்கணிக்கத் தூண்டும். இதனை பிரஜ்ஞாபராதம் - அறிவுத் தடுமாற்றம் என்பர். இந்தத் தடுமாற்றம் தொடர்ந்து தவறான வழியில் செல்லத்தூண்டும். பின்விளைவு - மனமும் உடலும் எப்போதும் நோய் வாய்ப்படக் காரணமான உடல்நிலை சீர்கேடு." - வாக்படர்.
"உடல், மனம், ஆத்மா என்ற மூன்றின் சேர்க்கை ஆயுள். இந்தச் சேர்க்கை நல்ல முறையில் நீடித்திருத்தல் வாழ்வாகும். நீண்ட ஆயுளை கெடுப்பதற்கு எதிரிகள் பல. அவை எப்போதும் இடைவெளியை எதிர்பார்த்து நிற்கின்றன. தன்னைச் சூழ்ந்து நிற்கும் அவற்றை நன்கு உணர்ந்து அவைகளுக்கு இடமளிக்காமல் ஒவ்வொரு நொடியிலும் ஆயத்தனாக இருந்து மனத்திடத்துடன் தன் நடைமுறைகளை அமைத்துக் கொள்ள வேண்டும்" - சரகர்.
"நன்மை எது என்பதனைக் கருத்துடன் விசாரித்துத் தேர்ந்து எடுப்பவனுக்குக் கல்வி, அறிவு, ஞாபகசக்தி, செயல்திறன், மனோதிடம், நன்மை பயப்பதையே நாடும் சீரிய மனப்பாங்கு, சொல்தூய்மை, மணவடக்கம், தைரியம் இவை எப்போதும் துணை நின்று கை கொடுக்கும். மனதிற்குப் பிடித்ததை நாடுபவனுக்கு இவை துணை நிற்கமாட்டா." - சரகர்.
"மனிதனுக்கு வேர் தலையில், கீழுடல் முழுவதும் அதன் கிளை என முற்றுணர்ந்தவர் கூறுகின்றனர். அதனால் வேரைப் பாதிக்கும் நோய்களை விரைவில் குணப்படுத்த வேண்டும். எல்லாப் புலன்களும் பிராணசக்தியும் தலையிலேயே பொருந்தியுள்ளன. அதனால் அதைக் காப்பதில் மிகக் கருத்துடனிருக்க வேண்டும்." - வாக்படர்.
"உணவும் பானங்களும் உடலிலுள்ள வாயு, பித்தம், கபம், ரத்தம் இவைகளைத் தனித்தும் சேர்த்தும் கெடுத்து உடல் நோய்களை ஏற்படுத்துகின்றன. விருப்பும் வெறுப்பும் பல்வேறு உருப்பெற்று, கோபம், சோகம், பயம், மகிழ்ச்சி, துயரம், பொறாமை, அசூயை, ரக்கம், அழுக்காறு, வேட்கை, பேராசை முதலிய மனக்கிளர்ச்சிகளை ஏற்படுத்தி மன நோய்களை ஏற்படுத்துகின்றன." - ஸுச்ருதர்.
"நீடித்த ஆயுள் மட்டும் இருந்து, வாழ வசதிகள் இல்லாதிருந்தால் அதனைவிடக் கொடிய வினை ஏதுமில்லை. வாழ்க்கை வசதிகளைப் பெறச் சிறந்த ஜீவனோபாயத்தைக் கையாள்வது அவசியம். நேர்மையுடன் தொடர்ந்து வாழும் நல்லோர்கள் குறை காணாதவாறு ஜீவனோபாயத்தை அமைத்துக் கொள்ளுதல் நலம். அப்படி வாழ்க்கையைச் சீராக்கிக் கொள்பவன், மதிப்புக் குறையாமல் வெகு நாட்கள் எதனையும் சாதிக்க வல்லவனாக வாழ்வான்". - சரகர்.
"சரீரம் மனம் இந்திரியங்கள் ஆத்மா என்று நான்கு கூட்டுப் பொருள்கள் அடங்கியது வாழும் இந்த உடல். இந்த நான்கின் கூட்டையே பிராணன் என்று குறிப்பிடுவார்கள். பிராணன் உடலில் தங்கவும் பிராணனின் இயக்கம் உடலில் சரியே நடக்கவும் உடலுக்கு நெய்ப்பு தேவைப்படுகிறது. உடலில் இந்த நெய்ப்பு உள்ளவரைதான் உறுப்புகள் உரசல் இல்லாமல் மெதுவாக ஒன்றுக்கொன்று பிடிப்புடன் இருக்கின்றன. உயிரே இதனால்தான் உடலில் தரிக்கிறது" - ஸ¨ஸ்ருதர்.
"வாய்மை, ஜீவகாருண்யம், கொடை, தெய்விக வழிபாடு, ஆரோக்ய வாழ்க்கை முறைகளைப் பின்பற்றுதல், புலனடக்கம், மணிமந்திரங்களால் தைவிகப் பாதுகாப்பு, ஆரோக்கியத்திற்கேற்ற வாசஸ்தலங்களில் தங்குதல் இவை ஆயுளை நீடித்துக் காப்பாற்றும் மருத்துவ முறைகளில் சிறப்பானவை". - சரகர்.
ரசாயன கலப்பில்லாத உணவு
ரசாயன கலப்பில்லாத உணவு பொருட்களும், பாரம்பரிய சிறு தானியங்களும், பயிர் வகைகளும், அது சம்பந்த பட்ட உணவு பொருள் தயாரிப்புக்கள் ( ஜாம், ஜூஸ், மற்றும் ஊறுகாய் வகைகள்) விற்பனை துவங்குகிறது.
பல இனம் புரியாத நோய்களும் அது தீர்க்கும் நோய்களும் ஒவ்வொரு நாளும் பெருகிக்கொண்டு தான் இருக்கிறது. இதை தடுக்க ஒரே வழி ரசாயன கலப்பு இல்லாத இயற்கை உணவு வகைகளை உட்கொள்வது மட்டுமே
வளரும் நாடுகளில் (இந்திய உள்பட) சுமார் 10 முதல் 15 சதவிகித தனி நபர் வருமானம் நோய் தீர்க்கும் மருந்துகளுக்கும், உட்டசத்து டானிக்களுக்கும் செலவிட படுகிறது என உலக சுகாதார நிறுவன தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மேலும் அளவுக்கு அதிகமாக குண்டான தன்மையை குறைக்க பலர் தங்களது வருமானத்தில் ஒரு கணிசமான அளவு தொகையை செலவு செய்கிறார்கள்.
இதற்கு முக்கிய காரணம், நம்முடைய உணவு பழக்கமே..  இதில் ஓர் அதிர்ச்சியான தகவல் என்னவென்றால் இன்று இந்திய சந்தையில் அல்லது கடைகளில் கிடைக்கும் பொருட்களில் பெரும்பாலானவை மேலை நாடுகளிலும் வளர்ந்த நாடுகளிலும் தடைசெய்யப்பட்ட அல்லது கால்நடைகளுக்குக்காக  தயாரிக்கப்பட்ட உணவுபொருட்களே ஆகும்.
 இது போன்ற உணவு வகைகளை தினசரி உட்கொள்ளும் இந்திய மக்களிடையே புதுமையான நோய்களும் உருவாகிக்கொண்டே இருக்கிறது. புற்று நோயின் தீவிரம் ஒவ்வொரு நாளும் வீரியதன்மையோடு வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இவைகளை தவிர்க்க ஒரே வழி உணவு பழக்க வழக்க மாற்றமும் உடற்பயிற்சி மட்டுமேகுறிப்பாக சொல்லபோனால் உணவு பழக்கம் மாற்றம் தேவையில்லை. நம் முன்னோர்கள் உறுதியாக நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்ததும், சித்தர்கள் நோயின்றி வாழ்ந்ததையும் நாம் புத்தகத்தில் மட்டுமே படித்துள்ளோம்.
இதன் தொடக்கமாக இந்திய பாரம்பரிய உணவான சிறு தானியத்தை எடுத்துகொண்டால், சிறு தானியத்தை விட சத்து மிகுந்த கொழுப்பு அறவே இல்லாத உணவு வேறு எதுவும் உலகத்தில் இல்லை. இதில் வேடிக்கை என்னவென்றால் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் ஓட்ஸ் உணவைவிட சிறு தானியத்தில் சத்து மிகுதியாக உள்ளது. நம் நாட்டில் கிடைக்கும் சுவையான சிறு தானிய உணவு வகைகளை மறந்து எதற்கு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் விலை உயர்வான ஓட்ஸ் உணவு சாப்பிடவேண்டும்.
உணவே மருந்து மருந்தே உணவு
உணவே மருந்து மருந்தே உணவு என நம் மூதாதையர்கள் சொல்லிவிட்டு சென்றுள்ளார்கள். அன்று நம் முன்னோர்கள் உட்கொண்ட ஊட்டச்சத்து மிகுந்த உணவுவை தான் நாம் இன்றை புத்தகத்தில்ஆரோக்கியத்திற்கு சிறந்த உணவுஎன்ற தலைப்பில் படித்துக்கொண்டு இருக்கிறோம். மேலும் இன்றைய தலைமுறையினர்கள் மருந்தே உணவு எனும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இதற்கு முக்கிய காரணம் நம்மில் ஏற்பட்ட உணவுப்பழக்க வழக்க மாற்றம் தான். இந்த நவீன உலகத்தில் உடனடி உணவு என்று அழைக்கப்படும்பாஸ்ட் ஃபுட்கலாச்சாரம் பெருகிவிட்டது. இந்த மாற்றமே நம்மில் உருவாகும் புதிய நோய்களுக்கு முக்கிய காரணம். இந்த நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்க மீண்டும் நம்முடைய முன்னோர்கள் பின்பற்றி உண்ட உணவு முறைக்கு மீண்டும் தொடர வேண்டும் என உணவியல் நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
சிறு தானிய உணவு பொருட்கள் மனிதர்களுக்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்த்தை கொடுக்கின்றன. வரகு, குதிரைவாலி, திணை, கம்பு, சிகப்பரிசி, சோளம், கைகுத்தல் அரிசி, சாமை போன்ற உணவு தானியங்களை சமையல் செய்து சாப்பிடுவதன் மூலம் மனிதர்களுக்கு  நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, கொழுப்பு முற்றிலும் குறையும், உடல் பருமன் உண்டவதர்க்கான கொழுப்பு சத்து ஏதும் இதில் இல்லாது புரத சத்து மற்றும் ஊட்ட சத்து மிகுந்து இருப்பது தான் இதற்கு முக்கிய காரணமாக உணவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
சிறுதானியங்கள்
சோளம், கம்பு, வரகு, கேழ்வரகு, சாமை போன்ற சிறுதானியங்களை வைத்து இன்றும் கிராம புறங்களில் சமைத்து சாப்பிடுகிறார்கள். ஆகவே தான் அவர்களுக்கு மருத்துவமனையும், மருந்துகளும், மருத்துவர்களும் தேவைபடுவதில்லை. மேலும் இவர்களுக்கு நீரிழிவு, இதயநோய், உடல்பருமன், போன்றவைகள் ஏற்படுவது இல்லை.
கம்ப சோளம்
கம்பில் சுண்ணாம்பு, புரதம், பாஸ்பரஸ் ஆகிய தாதுக்கள் மற்றும் உயிர்ச்சத்துக்கள் உள்ளது. கம்புக்கு ஜீரண சக்தியை அதிகரித்து கொடுக்கும் தன்மை உண்டு. உடலில் உள்ள வெப்பநிலையை சமமான நிலையில் வைத்திருக்கும். உடலுக்கு தேவையற்ற கொழுப்பை கரைத்து பருமனைக்குறைவாக்கும். இது குழந்தை பெற்ற அன்னையர்களுக்கு தாய்பால் உற்பத்தியை கூடுதலாக்கும். உடலின் வலிமையை கூடுதலாக்கும்.
சோளத்தில் உடலிற்கு அத்தியாவசியமான புரத சத்து, இரும்பு சத்து, மற்றும் கால்சியம் சத்துக்கள் கூடுதலாக இருக்கிறது. சோள தானிய உணவு வகைகள் உடலிற்கு உறுதி யளிக்க வல்லது. மேலும் சோளம் உடல் பருமனை வேகமாக குறைக்கும். அதுமட்டுமல்லாது சோளம் மருத்துவ குணம் கொண்டது. அது வயிற்றுப்புண் ஆற்றும், வாய் வீச்சத்தைப்போக்கும். மூலநோயாளிகளுக்கு மட்டும் சோள உணவு உகந்தது அல்ல..
வரகு ராகி
தமிழக பாரம்பரிய தானியமான வரகில் புரத சத்து, இரும்புசத்து மற்றும் சுண்ணாம்புச்சத்து கூடுதலாக உள்ளது. இது கொழுப்பை குறைத்து உடல் எடையையும் குறைவாக்கக்கூடியது. மாதவிடாய் கோளாரினால் அவதியுறும் பெண்கள் வரகை சமையல் செய்து உண்பது நல்லது.
தானியங்களிலேயே அதிக சத்துநிறைந்தது கேழ்வரகு. ராகி என பிரபலமாக அழைக்கபடும் இந்த தானியத்தில் புரத சத்து, தாது உப்பு, சுண்ணாம்புச்சத்து, உயிர்ச்சத்து, மற்றும் இரும்புச்சத்துக்களும் நிறைந்து இருகின்றது. இது உடல் வெப்பத்தை தனித்து சமமான நிலையில் நிறுத்தி வைத்திருக்கும் தன்மை கொண்டது. குடல் வலிமையை அளிக்க வல்லது. நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் கூட கேழ்வரகு தானியத்தில் சமையல் செய்யப்பட்ட உணவு பண்டங்களை உண்ணலாம். கேழ்வரகு தானியத்தை வைத்து தான் ராகி மால்ட்தயாரிக்கபடுகிறது.
மலட்டு தன்மையை போக்கி ஆண்மையை அதிகபடுத்தும் தானியம் சாமை
சாமை தானிய உணவு எல்லா வயதினருக்கும் உகந்தது. இந்த தானியம் மலச்சிக்கல் நோயை போக்கும். வயிறு மற்றும் குடல் சம்பந்தப்பட்ட நோய்களை தீர்க்கும். ஆண்களுடைய விந்து உற்பத்தியை அதிகரித்து ஆண்மை தன்மை குறைபாடுகளை நீக்க உகந்தது. நீரிழிவு நோயினால் பாதிப்படைந்த நோயாளிகளும் கூட சாமை தானியத்தில் தயாரிகப்பட்ட உணவை உட்கொள்ளலாம்.


Matrimony, Jothidam, aanmegam
Tamil Monthly Books, Service 
Price Rs-20,  6-Month Rs-120,
1-Year Rs 240, Rupees Only
Matrimony, Register,
For  All Caste Service,
Single Price 500/- Only
E-mail, Books, Post, online, Cell, &
Facebook, Twitter, All Service,
Cell : 9600068631, 9600068931
E-mail ID : gmneelamatrimony@gmail.com
www.nmmanamalai.blogspot.in
www.neelamatrimony.com


No comments:

Post a Comment