WHATS APP

உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.

Bala's Jothidam

CONTACT INFORMATION

BALA'S THIRUPURASUNTHARI JOTHIDAM

நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1. உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
    2. இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க நல்ல முடிவுகள் கொடுக்கப்படும்.
    3. உங்கள் எதிர்காலத்தை திறமை பட செயலாற்ற ஒரு புத்துணர்வு கொடுக்கப்படும்..
    4. உங்கள் சந்தேகங்களை போக்கி வாழ்க்கை வளம்பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது..
    5 - உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
    6. இதன் மூலம் செயல் முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியும் நிலைக்கும்..
    பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
    G.V. Manikanda Sharma
    No.1/404, J.J. Nagar
    Mugappair East, Chennai - 600037.
    Tamil Nadu, India.
    Telephone:+91-9962225358, 9444226039.
    WhatsApp No : +91-9444226039.
    E-mail: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    எங்கள் முகவரி .
    1 / 404, ஜெ.ஜெ.நகர்.
    முகப்பேர் கிழக்கு,
    சென்னை – 600 037.
    செல் : +91-9962225358, 9444226039.
    தமிழ்நாடு – இந்தியா.
    E-mail ID: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    12 - எங்கள் சேவை .
    Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest.
    மூலம் சேவை செய்து தருகிறோம். .

Mani Sharma

Sri Bala's Thirupurasunthari Jothidam
  • இது தமிழர்களுக்கான சிறந்த ஆன்லைன் திருமணத் தகவல் மையம் ஆகும். பதிவு இலவசம். பதிவு செய்ய வரனின் பெயர், வயது, பிறந்த தேதி,பிறந்த நேரம், தந்தை பெயர், தாயர் பெயர், படிப்பு, தொழில், மாத வருமானம், பிறந்த ஊர், மொபைல் எண், ராசி, நட்சத்திரம், இலக்கினம், செவ்வாய் தோஷம், ராது-கேது தோஷம், உள்ளதா, தங்களின் வசதி மற்றும் எதிர்பார்ப்பு ஆகிய விபரங்களுடன் தங்களுடைய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து அனுப்பி வைத்தால் தங்களின் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரணுக்கும் ரூபாய் 50/- மட்டுமே கட்டணமாகும். நீங்கள் தேர்ந்தடுக்கும் வரனின் அடையாள எண் மற்றும் மொத்த வரண்களின் எண்ணிக்கையை கட்டாயம் மணி ஆர்டரில் குறிப்பிட வேண்டும். மேலும் மொத்தக் கட்டணத்துடன் ரூபாய். 30 மட்டும் கூரியர் கட்டணமாக சேர்த்து அனுப்பவும். தாங்கள் விரும்பிய வரங்களின் விபரங்கள் மறு தினமே கூரியர் தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விலாசம் பெற மணிகண்ட ஷர்மா தொடர்பு கொள்ளலாம்.
  • திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சிறந்த துவக்கமே பாதி வெற்றி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு பரம்பரையின் மூலகாரணமாக திருமணத்தை, மிகச்சிறப்பாக அமைத்துத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த நீலா மேட்ரிமோனி திருமண தகவல் மையம் கமிஷன், தரகு ஏதும் இன்றி இருமண வீட்டார்களிடமும் உண்மையான தகவல்களைக் கொடுத்து மிகச்சிறப்பான இல்வாழ்க்கை அமைய உதவ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்கள் தகவல் மையத்தில் பதிவுக் கட்டணம் குறைவாதே பதிவு செய்வதற்கு தங்களின் பயோ-டேட்டா, ஜாதகம், போட்டா மட்டும் போதுமானது. தங்கள் தகவல்களைத் தமிழிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து ஒருவாரத்திற்குள் தங்களது பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தங்களுக்கு பொருத்தமான ஒரு வரனை தேர்ந்தெடுக்க ரூ.50 மட்டுமே. வேறு எந்த கட்டணமும் கிடையாது. மணமக்கள், மண வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல்கள் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும் எங்களது சேவை அனைத்து மதத்தவர்க்கும், அனைத்து இனத்தவர்க்கும் உண்டு. எங்களது சேவயை மேலும் சிறப்புடன் செய்யவும், சேவையில் குறைபாடுகள் எதுவும் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். நீலா மேட்ரிமோனி திருமண தகவல் தொடர்பு மையம் 1 / 255, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9962225358, 9444226039 தம்ழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com

Jothidam

    ஜாதகம் கணிக்க ரூ 700/- மட்டுமே

    ஒரு ஜாதகம் பார்க்க ரூ 300/- மட்டுமே

    திருமணபொருத்தம் ஜாதகம் ஒன்றுக்கு ரூ 250/- மட்டுமே

    நேரில் பிரசன்னம் பார்க்க ரூ 500/- மட்டுமே

Sunday 23 July 2017

இராமர் எள் தர்ப்பணம் செய்த திலதர்ப்பணபுரி!

 இராமர் எள் தர்ப்பணம் செய்த திலதர்ப்பணபுரி!

முன்னோருக்குத் தர்ப்பணம் செய்ய காசி, ராமேஸ்வரம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, திலதர்ப்பணபுரி,(சிதலைப்பதி) கயா, அலகாபாத், ஆகிய ஏழு தலங்கள் சிறப்பாக சொல்லப்படுகின்றது. இதில் ஐந்தாவது இடமாகிய இந்த தலம் திலதர்ப்பணபுரி இன்று மருவி சிதலைப்பதி, செதலைப்பதி என்று வழங்கப்படுகிறது. திலம் என்றால் எள். இராமர் எள் கொண்டு தர்ப்பணம் செய்தமையால் திலதர்ப்பணபுரி என்று வழங்கப்பட்டது.

இன்று திலதைப்பதி என்றழைக்கப்படும் இத்தலம் மயிலாடுதுறை-திருவாரூர் மார்க்கத்தில் உள்ள பூந்தோட்டத்திலிருந்து கிழக்கே 2 கி.மீ தொலைவில் உள்ளது. பெயராலேயே தர்ப்பணம் என்பதைக் கொண்டிருக்கும். இத்தலத்தில் எள் தர்ப்பணம் செய்தால் நமது முன்னோரின் ஆன்மா சாந்தியடையும். திலம் எள், தர்ப்பணம் செய்வதற்கு இறையருள் கொண்ட சிறந்த ஸ்தலம் மேலும் காசி, இராமேஸ்வரத்திற்கு இணையான முக்தி கேத்திரமுமாகும்.

ஸ்ரீ ஆதி வினாயகர்

ஆதிவினாயகரின் மூலமந்த்ரம்

ஓம் நாரமுகாய வித்மஹே ஹரபுத்ராய தீமஹி

தந்நோ ஆதி ப்ரசோயாத்

இத்தல இறைவன் அருள்மிகு முக்தீஸ்வரரை திருஞான சம்பந்தரும், அருணகிரியாரும் பாடியுள்ளார்கள்.

இக்கோயிலை மனிதமுகத்தோடு, வலது கை அபயமளிக்க இடது கை தொடையில் இருக்க, வலது கால் கீழே தொங்க, இடது கால் மடித்திருக்க 4 கைகளுடன் காட்சி தருகிறார். இவரது வரலாறு உலகம்மையான பார்வதி தேவி ஒருமுறை தன் தோழிகளான ஜெயா, விஜயவுடன் நீராடுவதற்காக சென்றார்.

அப்போது ஜெயா, பார்வதியிடன் அம்மையே, நமக்கு காவலாக இருப்பவர்கள் சிவ, பூத கணங்களும் நந்தி தேவரும் தானே. நமக்கென தனியாக ஒருவரைக் காவலாக நீங்கள் ஏன் உண்டாக்ககூடாது? எனக் கேட்க பார்வதி தேவியும், தன் திருமேனியில் உள்ள அழுக்கை தேய்த்து உருட்டி ஒரு உருவம் உண்டாக்கினார். பின் அதற்கு உயிர் தொடுத்தார். அவர் தான் இன்று நாம் தரிசிக்கும் ஆதிவினாயகர்.

உயிர் கொடுத்த பின் மூவரும் அவரைக் காவலாக வைத்து விட்டு குளிக்கச் சென்றனர். அந்த நேரத்தில் பார்வதியைக் காண சிவபெருமான் அவ்விடம் வந்தார். அங்கே புதுக் காவலன். சிவபெருமானை மேலும் செல்லாமல் காவலன் தடுத்து நிறுத்த போர் தொடங்கியது. இறுதியில் புதிய காவலனின் தலையைக் கொய்தார் சிவபெருமான்.

குளித்து ஓடோடி வந்த பார்வதி தான் உண்டாக்கிய உயிரை திருப்பி தர வேண்டுமென சிவபெருமானிடம் வேண்ட, அவரும் வேறு தலை இறுக்கிறதா எனப் பார்த்தார். அப்போது ஒரு யானை தலைவேறு, உடல் வேறாகக் கிடக்க, அந்த யானையின் தலையை மனித உடலோடு பொருத்த வினாயகர் உருவானார். அவரைதான் சிவ,பூத கணங்களுக்கும் முதல்வராகியதால் ‘கணபதி’ என்ற பெயரையும் கொடுத்தார்.

பார்வதி தேவி உண்டாக்கிய முதல் பிள்ளையாரே ஆதி வினாயகர் ஆவார். அவர் திலதைப்பதியில் தான் சன்னிதி கொண்டுள்ளார்.

தசரதருக்கும், ஜடாயுவுக்கும் சிராத்தம் செய்ய எண்ணி இந்தத் தலத்துக்கு வந்த ராமபிரான், இங்கே பித்ரு தர்ப்பணம் செய்தார். ராமபிரான் எள்ளும் நீரும் கொண்டு தர்ப்பணம் கொடுத்ததால், இந்தத் தலத்துக்கு திலதர்ப்பணபுரி என்று பெயர் ஏற்பட்டது. ராமர் தர்ப்பணம் செய்தபோது பிடித்து வைத்த நான்கு பிண்டங்கள் லிங்கங்களாக மாறின. அந்த நான்கு லிங்கங்களையும் கருவறையின் பின்புறத்தில் தரிசிக்கலாம். இந்த லிங்கங்களுக்கு அருகில் வலக் காலை மண்டியிட்டு வடக்கு நோக்கி அமர்ந்திருக்கும் கோலத்தில் ராமபிரானை தரிசிக்கலாம். இந்த வடிவத்தில் ராமபிரானை எங்கும் தரிசிக்க முடியாது. நாம் தர்ப்பணம் கொடுக்கும் முன்னோர்களுக்கு இறைவன் முக்தியைத் தருவதால், முக்தீஸ்வரர் என்ற திருப்பெயர் ஏற்பட்டது. இந்தத் தலத்தில் சூரியனும் சந்திரனும் அருகருகில் இருப்பதால், நித்திய அமாவாசை திருத்தலம் என்ற சிறப்பும் இந்தத் தலத்துக்கு உண்டு.

காசியில் கங்கை நதி வடக்கில் இருந்து தெற்கு நோக்கிப் பாய்வதுபோல் இங்கே காவிரியின் துணை நதியான அரசலாறு, வடக்கில் இருந்து தெற்கு நோக்கிப் பாய்வதால், இத்தலம் காசிக்கு நிகராகப் போற்றப்படுகிறது.

No comments:

Post a Comment