WHATS APP

உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.

Bala's Jothidam

CONTACT INFORMATION

BALA'S THIRUPURASUNTHARI JOTHIDAM

நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1. உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
    2. இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க நல்ல முடிவுகள் கொடுக்கப்படும்.
    3. உங்கள் எதிர்காலத்தை திறமை பட செயலாற்ற ஒரு புத்துணர்வு கொடுக்கப்படும்..
    4. உங்கள் சந்தேகங்களை போக்கி வாழ்க்கை வளம்பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது..
    5 - உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
    6. இதன் மூலம் செயல் முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியும் நிலைக்கும்..
    பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
    G.V. Manikanda Sharma
    No.1/404, J.J. Nagar
    Mugappair East, Chennai - 600037.
    Tamil Nadu, India.
    Telephone:+91-9962225358, 9444226039.
    WhatsApp No : +91-9444226039.
    E-mail: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    எங்கள் முகவரி .
    1 / 404, ஜெ.ஜெ.நகர்.
    முகப்பேர் கிழக்கு,
    சென்னை – 600 037.
    செல் : +91-9962225358, 9444226039.
    தமிழ்நாடு – இந்தியா.
    E-mail ID: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    12 - எங்கள் சேவை .
    Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest.
    மூலம் சேவை செய்து தருகிறோம். .

Mani Sharma

Sri Bala's Thirupurasunthari Jothidam
  • இது தமிழர்களுக்கான சிறந்த ஆன்லைன் திருமணத் தகவல் மையம் ஆகும். பதிவு இலவசம். பதிவு செய்ய வரனின் பெயர், வயது, பிறந்த தேதி,பிறந்த நேரம், தந்தை பெயர், தாயர் பெயர், படிப்பு, தொழில், மாத வருமானம், பிறந்த ஊர், மொபைல் எண், ராசி, நட்சத்திரம், இலக்கினம், செவ்வாய் தோஷம், ராது-கேது தோஷம், உள்ளதா, தங்களின் வசதி மற்றும் எதிர்பார்ப்பு ஆகிய விபரங்களுடன் தங்களுடைய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து அனுப்பி வைத்தால் தங்களின் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரணுக்கும் ரூபாய் 50/- மட்டுமே கட்டணமாகும். நீங்கள் தேர்ந்தடுக்கும் வரனின் அடையாள எண் மற்றும் மொத்த வரண்களின் எண்ணிக்கையை கட்டாயம் மணி ஆர்டரில் குறிப்பிட வேண்டும். மேலும் மொத்தக் கட்டணத்துடன் ரூபாய். 30 மட்டும் கூரியர் கட்டணமாக சேர்த்து அனுப்பவும். தாங்கள் விரும்பிய வரங்களின் விபரங்கள் மறு தினமே கூரியர் தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விலாசம் பெற மணிகண்ட ஷர்மா தொடர்பு கொள்ளலாம்.
  • திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சிறந்த துவக்கமே பாதி வெற்றி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு பரம்பரையின் மூலகாரணமாக திருமணத்தை, மிகச்சிறப்பாக அமைத்துத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த நீலா மேட்ரிமோனி திருமண தகவல் மையம் கமிஷன், தரகு ஏதும் இன்றி இருமண வீட்டார்களிடமும் உண்மையான தகவல்களைக் கொடுத்து மிகச்சிறப்பான இல்வாழ்க்கை அமைய உதவ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்கள் தகவல் மையத்தில் பதிவுக் கட்டணம் குறைவாதே பதிவு செய்வதற்கு தங்களின் பயோ-டேட்டா, ஜாதகம், போட்டா மட்டும் போதுமானது. தங்கள் தகவல்களைத் தமிழிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து ஒருவாரத்திற்குள் தங்களது பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தங்களுக்கு பொருத்தமான ஒரு வரனை தேர்ந்தெடுக்க ரூ.50 மட்டுமே. வேறு எந்த கட்டணமும் கிடையாது. மணமக்கள், மண வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல்கள் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும் எங்களது சேவை அனைத்து மதத்தவர்க்கும், அனைத்து இனத்தவர்க்கும் உண்டு. எங்களது சேவயை மேலும் சிறப்புடன் செய்யவும், சேவையில் குறைபாடுகள் எதுவும் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். நீலா மேட்ரிமோனி திருமண தகவல் தொடர்பு மையம் 1 / 255, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9962225358, 9444226039 தம்ழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com

Jothidam

    ஜாதகம் கணிக்க ரூ 700/- மட்டுமே

    ஒரு ஜாதகம் பார்க்க ரூ 300/- மட்டுமே

    திருமணபொருத்தம் ஜாதகம் ஒன்றுக்கு ரூ 250/- மட்டுமே

    நேரில் பிரசன்னம் பார்க்க ரூ 500/- மட்டுமே

Monday 6 May 2019

சிவாலயங்களில் கூட்டம்

இன்றைக் கெல்லாம் செவ்வாய், வியாழன், 
சனிக் கிழமைகளில்,

சிவாலயங்களில் கூட்டம் 
நிரம்பி வழிகிறது.

அடடே !
இத்தனை கூட்டமா 
என்று,

நம் மனதுக்கும் உற்சாகம் 
தொற்றிக் கொள்ள ஆலயத்துக்குள் நுழைந்தால்,

என்னடா
இது ?
நமக்கு முன்னே இங்கே  கோயிலில்
நுழைந்தவர்கள் என்ன ஆனார்கள் ?

இறைவன்  சன்னதியில் யாரையுமே 
காணோமே!

வந்த கூட்டம் தான் எங்கே ? மாயமாய் 
மறைந்து போனார்களா ?

கண்கள் அங்குமிங்கும் சுழலும் போது தான் தென்படுகிறது. அட....

இராகு கால துர்க்கை,,
தெற்கு கோட்டத்து 
தட்சிணாமூர்த்தி, நவக்கிரக சன்னதிகளில் 
எள் விழ இடமில்லை !

ஆகா…. 
நவக்கிரக சன்னதியில் தான் எத்தனை 
கூட்டம் !
கடலை மாலைகளா ! எள்ளெண்ணெய் தீபமா !
ஒன்பது தடவை பிரதட்சணமா !

நிமிடத்துக்கு ஒரு அலங்காரம், விநாடிக் கொரு அர்ச்சனை!

குரு பகவான், சனி பகவான்கள் எத்தனை அழகாகக் காட்சி அளிக்கிறார்கள் !

ஆனால்,
இங்கே , இறைவன் சன்னதி முன் ? 
சுத்தம் !
ஒரு ஈ, காக்கா கூட இல்லை ! 

என்ன தானய்யா நடக்கிறது இங்கெல்லாம் ?

நீங்கள் வழிபடும் சிவனை விட சக்தி 
வாய்ந்தவர்களா அந்த நவக்கிரகங்கள் ? எதற்காக இப்படி அஞ்சி நடுங்குகிறீர்கள் ?

"நாமார்க்கும் குடியல்லோம்"  என்று முழங்கிய 
நாவுக்கரசர் பரம்பரையில் தோன்றி விட்டு "

“ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல 
அடியாரவர்க்கு மிகவே” என்று 
உரத்துச் சொன்ன சம்பந்தர் மரபில் 
தோன்றி
விட்டு,

சில்லாண்டிற் சிதையும் 
சில தேவர்களை நாடிப் போய் வீழ்ந்து 
கிடக்கிறீர்களே !

உங்களைச் சொல்லிக் குற்றமில்லை ! 
நவக்கிர கங்களை,
ஏதோ அஞ்சத்தக்க 
தெய்வங்கள் போல் காட்டி, அச்சுறுத்தி, 

தோஷ பரிகாரம் செய்யணும், அது செய்யணும் இது செய்யணும் என்று வற்புறுத்தி,

உங்களை யெல்லாம் தவறாக வழி நடத்தும் சில பிரபல ஆன்மீக வியாபர பத்திரிகைகள்,

ஆன்மீக வியாபார பேச்சாளர்கள்,

விதவிதமான கலர் கலராக சால்வை பக்தி பழ வேஷத்தில், வண்ண வண்ண கலரில் கண்களே கூசும்  நிறங்களில் ஆடை அணிகலன்
களோடு, ஆளாலுக்கு ஒருவிதமாக புளுகும் ஜோதிடர்களை
சொல்ல வேண்டும் !

சோதிடம் ஒரு அருங்கலை ! மறுக்க
வில்லை!

நல்லதோ, கெட்டதோ, நடக்கப் போவதை 
அறிந்து கொள்ளும் ஆவலில், சோதிடர்களை 
நாடுவதையோ, சுப காரியங்களுக்கு நல்ல 
நாள் பார்க்க, அவர்களைத் 
துணைக் கழைப்பதையோ, தவறென்று 
கூறவில்லை.

ஆனால், திருக்கோயில் 
வழிபாடு களிலேயே சோதிட நம்பிக்கை 
மூக்கை நுழைப்பதை, எந்த வகையிலும் 
ஏற்றுக் கொள்ள முடியவே முடியாது !

ஆயிரத்து முன்னூறு வருடங்களுக்கு முன்பே 
சம்பந்தர் பாடிவிட்டார் ஐயா !

இறை
நம்பிக்கை கொண்ட எவரையுமே, நாளும் கோளும் எதுவுமே செய்யாது என்று பின்னே ? எதற்காக இத்தனை அச்சம் ?

ஆழ்ந்து பார்த்தால் ஒன்று மட்டும் 
தெளிவாகிறது. இப்படி தோஷ பரிகாரம், 
கிரகப்
பெயர்ச்சி,
என்று ஆயுளைக் கழிக்கும் 
எல்லோருமே தன்னம்பிக்கை அற்றவர்கள் ! 

எடுத்ததற்
கெல்லாம் அஞ்சி நடுங்கும் கோழைகள் !

உங்களைக் ஏளனம் செய்வதற்காக 
இதைக் கூறவில்லை!

தயவு செய்து உண்மையை உணர்ந்து 
கொள்ளுங்கள்.

இன்றைக்கும் மிகப் பழைய ஆலயங்களுக்குச் 
சென்றீர்களே
ஆனால்,

அங்கே, நவக்கிரக 
விக்ரகங்களே இருக்காது !

அப்படியும் 
இருக்கின்ற
தென்றால் அது மிக மிக அண்மையில் கட்டப்
பட்டதாகவே இருக்கும் !

சுமார் 500 வருடங்களுக்கு முன்பு எந்த 
சிவாலயங்
களிலுமே நவக்கிரக சன்னி
தானங்கள் இருந்த
தில்லை.

அந்தந்த சிவாலயங்கள் யாரால் 
வழிபடப்
பட்டதோ அந்த மூர்த்தி மட்டும் 
தனியாக பிரதிஸ்டை செய்யப்
படிருந்தது.

உதாரணமாக சனி, திருநள்ளாறில் 
சிவ பெருமானை வழிபட்டு அருள் பெற்றதனால் அந்த மூர்த்தியை மட்டும் விசேஷமாக பிரதிஷ்டை பண்ணி இருந்தனர் .

இது நம் நாயன்மார்கள் தோன்றிய தலங்களில் அவர்களின் விசேஷ சந்நிதிகள் அமைவது போல..

திருநள்ளாறு இன்று சிவன்கோயில் இல்லை !

அது சனி பகவான் கோயில், திங்களூர் 
சிவன் கோயில் இல்லை,
அது சந்திரன் 
கோயில் ! வைத்தீசுவரன் கோவில் 
சிவன் கோயில் இல்லை,
அது செவ்வாய் 
கோயில் ! இப்படித்தான் இன்றும் அவை பிரபலம் பெற்று விளங்குகின்றன.

நவக்கிரகங்கள் இறைவன் ஆணைக்குக் 
கட்டுப்பட்டவை !

இறைவனின் பரிவாரம் என்ற வகையில், அவையும் நம் வணக்கத்திற்
குறியவை !

அவை ஒரு மானிடனின் பிறப்பிலிருந்து இறப்பு வரை ஆதிக்கம் செலுத்துபவை !

உண்மை தான் !

ஆனால்,
ஆணை செலுத்து
பவனிடமே 
அடைக்கலம் புகுந்தால்,
அவை நம்மை என்ன 
தான் செய்து
விட முடியும் ?

அதை விடுத்து, 
கிரகங்களை ஆராதித்துக் கொண்டிருப்பது, 

நமக்கு அருள்வதற்காக காத்திருக்கும் 
இறைவனையே அவமதிப்பதே போலாகும்
அல்லவா ???

கோளறு பதிகம், திரு நீலகண்டப் பதிகம், 
திருத்தாண்டகம் போன்ற திருப்பதிகங்கள், நம் எத்தகைய ஆபத்துக்
களையும், 
துன்பங்களையும் நீக்கக் கூடியவை.

அவற்றை சிக்கெனப் பிடித்துக் கொள்ளுங்கள். நல்லதே நடக்கும்.

மேற்படி பதிகங்களையும், அந்தந்த 
நவகிரகங்கள் வழிபட்ட பரிகார தலங்களில் 
நாயன்
மார்களால் பாடப்பட்ட
தேவார 
திருப்பதிகங்களையும் பாடி மூலவரான 
சிவபெருமானை வழிபடுவதை
விட நம் இடர் 
களைவதற்கான உபாயமே வேறு இல்லை 
என்பதை நன்றாக தெளிவாக
தெரிந்து கொள்ளுங்கள்.

மூல மூர்த்தியை வழிபட்ட பின்பு தான் 
நவகிரகங்களை வழிபடுவது ஏற்புடையது.

மூலமூர்த்தி
யாகிய சிவபெருமானை 
வழிபடாமல் செய்யும் நவக்கிரக வழிபாட்டால் 
யாதொரு பலனும் என்றுமே இல்லை.

தோஷ நிவர்த்தி பரிகாரம்,
அது, இது என்று 
கொட்டும் பணத்தை,

வசதி குறைந்த  பழைய
சிவாலயங்களில் தொண்டு செய்வதற்கும், 

சிறிய சிதிலமடைந்த சிவாலயங்களை 
புனரமைப் பதிலும், சிவனடியார்
களுக்கு 
உதவுவதிலும் செலவழித்தால், 
சிவபுண்ணி
யம் பெருகி வந்து 
இம்மையிலும், மறுமையிலும் நம்மை காத்து 
இன்பம் தரும்.

ஏதாவது ஏழை எளியவர்களுக்கு 
உதவுவதிலும், முதியோர் இல்லம், 
குழந்தைகள் காப்பகம் என்று எங்காவது போய் அன்னதானம், ஆடைதானம் செய்வதிலும் செலவழியுங்கள்.

வயிறும் மனமும் நிறைந்து, நாத்தழுதழுக்க,

“நீங்க நல்லாயி ருக்கணும் ஐயா, அம்மா” என்று அவர்களில் ஒரே ஒருவர் மனதார நினைத்தாலும் போதும்.

அந்த 
வாழ்த்தே சிவன் ஆணையாய், உங்களைப் 
பற்ற வரும் சனிபகவானை ஓட ஓட 
விரட்டி விடுமே!!!

ஆலயங்களில் பெரிய பெரிய பொறுப்பில் 
இருப்பவர்கள்,

சிவாச்சாரி யார்கள் தயவு 
செய்து இதில் கூடிய கவனமெடுங்கள்!

ஏதோ 
ஆலயத்துக்கு வருமானம் வருகிறதே 
என்பதற்காக, ஈசன் முன்னிலை
யிலேயே 
சிவத்துரோகம் நிகழ்வதற்கு
ஒருபோதும் தயவு செய்து 
அனுமதிக்
காதீர்கள் !

"நமது சமய ஒழுக்கத்தை பேணாமையே 
புற சமய மதமாற்றங்
களுக்கான காரணம்.

நாமும் நலமாக வாழ்ந்து ந்ம் சமயத்தையும் 
வாழ வைப்போம்"

மேன்மை கொள் சைவ சமய நீதி விளங்குக 
உலகமெல்லாம்.
சிவாயநம,
ஓம் நமச்சிவாய.

No comments:

Post a Comment