WHATS APP

உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.

Bala's Jothidam

CONTACT INFORMATION

BALA'S THIRUPURASUNTHARI JOTHIDAM

நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1. உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
    2. இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க நல்ல முடிவுகள் கொடுக்கப்படும்.
    3. உங்கள் எதிர்காலத்தை திறமை பட செயலாற்ற ஒரு புத்துணர்வு கொடுக்கப்படும்..
    4. உங்கள் சந்தேகங்களை போக்கி வாழ்க்கை வளம்பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது..
    5 - உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
    6. இதன் மூலம் செயல் முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியும் நிலைக்கும்..
    பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
    G.V. Manikanda Sharma
    No.1/404, J.J. Nagar
    Mugappair East, Chennai - 600037.
    Tamil Nadu, India.
    Telephone:+91-9962225358, 9444226039.
    WhatsApp No : +91-9444226039.
    E-mail: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    எங்கள் முகவரி .
    1 / 404, ஜெ.ஜெ.நகர்.
    முகப்பேர் கிழக்கு,
    சென்னை – 600 037.
    செல் : +91-9962225358, 9444226039.
    தமிழ்நாடு – இந்தியா.
    E-mail ID: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    12 - எங்கள் சேவை .
    Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest.
    மூலம் சேவை செய்து தருகிறோம். .

Mani Sharma

Sri Bala's Thirupurasunthari Jothidam
  • இது தமிழர்களுக்கான சிறந்த ஆன்லைன் திருமணத் தகவல் மையம் ஆகும். பதிவு இலவசம். பதிவு செய்ய வரனின் பெயர், வயது, பிறந்த தேதி,பிறந்த நேரம், தந்தை பெயர், தாயர் பெயர், படிப்பு, தொழில், மாத வருமானம், பிறந்த ஊர், மொபைல் எண், ராசி, நட்சத்திரம், இலக்கினம், செவ்வாய் தோஷம், ராது-கேது தோஷம், உள்ளதா, தங்களின் வசதி மற்றும் எதிர்பார்ப்பு ஆகிய விபரங்களுடன் தங்களுடைய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து அனுப்பி வைத்தால் தங்களின் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரணுக்கும் ரூபாய் 50/- மட்டுமே கட்டணமாகும். நீங்கள் தேர்ந்தடுக்கும் வரனின் அடையாள எண் மற்றும் மொத்த வரண்களின் எண்ணிக்கையை கட்டாயம் மணி ஆர்டரில் குறிப்பிட வேண்டும். மேலும் மொத்தக் கட்டணத்துடன் ரூபாய். 30 மட்டும் கூரியர் கட்டணமாக சேர்த்து அனுப்பவும். தாங்கள் விரும்பிய வரங்களின் விபரங்கள் மறு தினமே கூரியர் தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விலாசம் பெற மணிகண்ட ஷர்மா தொடர்பு கொள்ளலாம்.
  • திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சிறந்த துவக்கமே பாதி வெற்றி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு பரம்பரையின் மூலகாரணமாக திருமணத்தை, மிகச்சிறப்பாக அமைத்துத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த நீலா மேட்ரிமோனி திருமண தகவல் மையம் கமிஷன், தரகு ஏதும் இன்றி இருமண வீட்டார்களிடமும் உண்மையான தகவல்களைக் கொடுத்து மிகச்சிறப்பான இல்வாழ்க்கை அமைய உதவ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்கள் தகவல் மையத்தில் பதிவுக் கட்டணம் குறைவாதே பதிவு செய்வதற்கு தங்களின் பயோ-டேட்டா, ஜாதகம், போட்டா மட்டும் போதுமானது. தங்கள் தகவல்களைத் தமிழிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து ஒருவாரத்திற்குள் தங்களது பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தங்களுக்கு பொருத்தமான ஒரு வரனை தேர்ந்தெடுக்க ரூ.50 மட்டுமே. வேறு எந்த கட்டணமும் கிடையாது. மணமக்கள், மண வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல்கள் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும் எங்களது சேவை அனைத்து மதத்தவர்க்கும், அனைத்து இனத்தவர்க்கும் உண்டு. எங்களது சேவயை மேலும் சிறப்புடன் செய்யவும், சேவையில் குறைபாடுகள் எதுவும் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். நீலா மேட்ரிமோனி திருமண தகவல் தொடர்பு மையம் 1 / 255, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9962225358, 9444226039 தம்ழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com

Jothidam

    ஜாதகம் கணிக்க ரூ 700/- மட்டுமே

    ஒரு ஜாதகம் பார்க்க ரூ 300/- மட்டுமே

    திருமணபொருத்தம் ஜாதகம் ஒன்றுக்கு ரூ 250/- மட்டுமே

    நேரில் பிரசன்னம் பார்க்க ரூ 500/- மட்டுமே

Sunday 3 November 2019

கோபாஷ்டமி மஹிமை



*ராதேக்ருஷ்ணா !*
*கோபாஷ்டமி !*
4.11.19, திங்கட்கிழமை...

*கோபாஷ்டமி மஹிமை !*

1⃣ க்ருஷ்ண பலராமர்கள் 5வயது முடிந்தபிறகு, இன்றைய தினத்தில்தான் மாடுகள் மேய்க்க நந்தகோபர் அனுமதித்தார். அதற்கு முன் தினம் வரை கண்ணனும் பலராமனும் கன்றுகளையே மேய்த்தார்கள். அதுவரை அவர்களுக்கு *வத்ஸபாலன்(வத்ஸ என்றால் கன்றுகள் என்றும், பாலன் என்றால் பாலனம் செய்கிறவன் என்றும் அர்த்தம்)*. கோபாஷ்டமி அன்று மாடுகளுக்கு விசேஷ பூஜை செய்து, கண்ணனையும் பலராமனையும் *கோபாலன்* என்று அழைத்து ஆசீர்வதித்தனர். அதனால் கண்ணன் பலராமனை பூஜிப்பதும், கோமாதாக்களை பூஜிப்பதும் விசேஷம்.

2⃣ தீபாவளி மறுதினம் இந்திர பூஜையைக் கெடுத்து க்ருஷ்ணன் *கோவர்த்தன பூஜை* செய்தான். அதனால் வெகுண்ட இந்திரன் பயங்கரமான மழையைக் கொட்டினான். பகவான் க்ருஷ்ணனும் கோவர்த்தன மலையைத் தூக்கி 7நாள் அன்ன ஆகாரமின்றி எல்லோரையும் காத்தான். தீபாவளிக்கு பிறகு வரும் அஷ்டமியன்று (எட்டாம் நாள்) இந்திரன் கர்வம் அடங்கி மழையை நிறுத்தினான். க்ருஷ்ணனும் எல்லோரையும் மலையின் கீழிருந்து வெளியேறச் சொல்லி, மலையை மீண்டும் கீழே வைத்த நாளே *கோபாஷ்டமி*

3⃣ க்ருஷ்ணன் 7நாள் மலையைத் தூக்கிக்கொண்டிருந்த சமயத்தில் யாருக்கும் பசியோ, தாகமோ களைப்போ இல்லை. க்ருஷ்ண தரிசனத்தில் எல்லோரும் மயங்கியிருந்ததால் அத்தனையும் மறந்தார்கள். கண்ணனும் ஒரு வாரம் ஒன்றும் சாப்பிடவில்லை. ஆனால் கோபிகைகளின் மனசு கேட்கவில்லை. ஏனெனில் கண்ணன் ஒரு நாளைக்கு 8தடவை சாப்பிடுவான்.
அதனால் கோபிகைகள் வேகவேகமாக வீட்டிற்குச் சென்று, கண்ணனுக்கு விதவிதமான விருந்து தயார்செய்தார்கள்.

7 நாளுக்கும் சேர்த்து 56விதமாக அன்னங்கள், பக்ஷணங்கள், சுவையான பழச்சாறுகள் என்றெல்லாம் செய்து கண்ணன் வயிராற சாப்பிடுவதைக் கண்டு
ஆனந்தித்தனர். அதனால் பிருந்தாவனம், துவாரகை போன்ற இடங்களில் கோபாஷ்டமி அன்று 56நிவேதனங்கள் உண்டு. நாமும் நம் இல்லங்களில் 56வகையான நிவேதனங்கள் கண்ணனுக்கு கொடுக்கலாம். 56வகை நிவேதனங்களுக்கு *சப்பன்போக்* என்று பெயர். இன்றும் புரி ஜகந்நாதனுக்கு தினமும் சப்பன்போக் நிவேதனம் உண்டு.

4⃣ கர்வமழிந்த இந்திரனும் கண்ணனிடம் மன்னிப்பு கேட்டு, ஆகாச கங்கை ஜலத்தாலும், காமதேனுவின் பாலாலும் கோவிந்த பட்டாபிஷேகம் செய்தான். கண்ணனுக்கு *கோவிந்தன்* என்னும் திருநாமம் கிடைத்த நாள் கோபாஷ்டமி !

அதனால் இந்த புண்ணியமான தினத்தில்,
🐄 *கோமாதா பூஜை செய்யுங்கள் !*🐄
‼ *கோவிந்த நாமம் ஜபியுங்கள்* ‼
🦚 *கண்ணனுக்கு 56விதமாக நிவேதனங்கள் செய்யுங்கள்*🦚m

*ராதேக்ருஷ்ணா !*





*56 நிவேதனங்கள் !*
(சப்பன்போக்)

கோபாஷ்டமிக்கு பகவான் க்ருஷ்ணனுக்கு நிவேதனங்கள் செய்ய
ஒரு வழிமுறை...
உங்களுக்குத் தோன்றியபடியும் நிவேதனம் செய்யலாம் !

(சிலவகை சித்திரான்னம்)
1. நெய்சாதம்
2. பருப்புசாதம்
3. தேங்காய்சாதம்
4. எலுமிச்சை சாதம்
5. புளியோதரை
6. எள்ளுஞ்சாதம்
7. பருப்புப்பொடி சாதம்
8. சாம்பார் சாதம்
9. ரசம் சாதம்
10.  தயிர்சாதம்

(சில பச்சடிகள்)
11. தயிர்பச்சடி
12. வெல்லப்பச்சடி
13. வெள்ளரிக்காய் பச்சடி
14. காரட் பச்சடி
15. தக்காளி பச்சடி

(சிலவகை பொரியல்)
16. கோஸுமல்லி
17. கத்தரிக்காய் பொரியல்
18. வெண்டைக்காய் பொறியல்
19. உருளைக்கிழங்கு
20. கோவைக்காய்
21. சுண்டைக்காய்
22. காராமணி
23. வாழைக்காய்

(சில பழங்கள்)
24. வாழைப்பழம்
25. சீத்தாப்பழம்
26. கொய்யா
27. சப்போட்டா
28. ஆரஞ்சு
29. ஆப்பிள்
30. அன்னாசிப்பழம்

(சில பருப்புகள்)
31. முந்திரி
32. பாதாம்
33. பிஸ்தா
34. வேர்க்கடலை
35. வால்நட்
36. உலர் திராட்சை

(சிலவகை பால்)
37. பாதாம் பால்
38. பிஸ்தா பால்
39. குங்குமப்பூ பால்

(சிலவகை பாயசம்)
40. வெல்லப்பாயசம்
41. தேங்காய் பாயசம்
42. அவல் பாயசம்
43. சேமியா பாயசம்
44. ஜவ்வரிசி பாயசம்

(சில பழச்சாறுகள்)
45. ஆப்பிள் சாறு
46. இளநீர்
47. மாதுளம்
48. சாத்துக்குடி
49. திராட்சை
50. ஆரஞ்சு

51. அப்பளம்
52. வடாம்
53. ஊறுகாய்
54. வடை
55. வெற்றிலை பாக்கு
56. ஏலக்காய்

இவையில்லாமல் உங்கள் ஊரில் கிடைக்கும் பழங்கள், காய்கறிகள், இவையெல்லாம் கூட நிவேதனம் செய்யலாம்...

பலவிதமான இனிப்புகள் செய்தும் நிவேதிக்கலாம்..

எல்லாம் உங்கள் ஆசைப்படி.
அன்போடு பக்தியோடு பக்தர் தருவதை நான் உள்ளன்போடு ஏற்கிறேன் என்று பகவான் க்ருஷ்ணன் கீதையில் சொல்லியிருக்கிறானே...

ஆனந்தமாய் கண்ணனுக்கு 56வகை பிரசாதங்களை நிவேதனம் செய்வோமே...

ராதேக்ருஷ்ணா



No comments:

Post a Comment