இன்றைக் கெல்லாம் செவ்வாய், வியாழன்,  
சனிக் கிழமைகளில்,
சிவாலயங்களில் கூட்டம்  
நிரம்பி வழிகிறது.
அடடே ! 
இத்தனை கூட்டமா  
என்று, 
நம் மனதுக்கும் உற்சாகம்  
தொற்றிக் கொள்ள ஆலயத்துக்குள் நுழைந்தால்,
என்னடா 
இது ? 
நமக்கு முன்னே இங்கே  கோயிலில்
நுழைந்தவர்கள் என்ன ஆனார்கள் ?
இறைவன்  சன்னதியில் யாரையுமே  
காணோமே!
வந்த கூட்டம் தான் எங்கே ? மாயமாய்  
மறைந்து போனார்களா ? 
கண்கள் அங்குமிங்கும் சுழலும் போது தான் தென்படுகிறது. அட....
இராகு கால துர்க்கை,, 
தெற்கு கோட்டத்து  
தட்சிணாமூர்த்தி, நவக்கிரக சன்னதிகளில்  
எள் விழ இடமில்லை !
ஆகா….  
நவக்கிரக சன்னதியில் தான் எத்தனை  
கூட்டம் ! 
கடலை மாலைகளா ! எள்ளெண்ணெய் தீபமா ! 
ஒன்பது தடவை பிரதட்சணமா !
நிமிடத்துக்கு ஒரு அலங்காரம், விநாடிக் கொரு அர்ச்சனை!
குரு பகவான், சனி பகவான்கள் எத்தனை அழகாகக் காட்சி அளிக்கிறார்கள் !
ஆனால், 
இங்கே , இறைவன் சன்னதி முன் ?  
சுத்தம் ! 
ஒரு ஈ, காக்கா கூட இல்லை !  
என்ன தானய்யா நடக்கிறது இங்கெல்லாம் ?
நீங்கள் வழிபடும் சிவனை விட சக்தி  
வாய்ந்தவர்களா அந்த நவக்கிரகங்கள் ? எதற்காக இப்படி அஞ்சி நடுங்குகிறீர்கள் ?
"நாமார்க்கும் குடியல்லோம்"  என்று முழங்கிய  
நாவுக்கரசர் பரம்பரையில் தோன்றி விட்டு "
“ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல  
அடியாரவர்க்கு மிகவே” என்று  
உரத்துச் சொன்ன சம்பந்தர் மரபில்  
தோன்றி 
விட்டு,
சில்லாண்டிற் சிதையும்  
சில தேவர்களை நாடிப் போய் வீழ்ந்து  
கிடக்கிறீர்களே !
உங்களைச் சொல்லிக் குற்றமில்லை !  
நவக்கிர கங்களை,
ஏதோ அஞ்சத்தக்க  
தெய்வங்கள் போல் காட்டி, அச்சுறுத்தி,  
தோஷ பரிகாரம் செய்யணும், அது செய்யணும் இது செய்யணும் என்று வற்புறுத்தி,
உங்களை யெல்லாம் தவறாக வழி நடத்தும் சில பிரபல ஆன்மீக வியாபர பத்திரிகைகள்,
ஆன்மீக வியாபார பேச்சாளர்கள்,
விதவிதமான கலர் கலராக சால்வை பக்தி பழ வேஷத்தில், வண்ண வண்ண கலரில் கண்களே கூசும்  நிறங்களில் ஆடை அணிகலன்
களோடு, ஆளாலுக்கு ஒருவிதமாக புளுகும் ஜோதிடர்களை
சொல்ல வேண்டும் !
சோதிடம் ஒரு அருங்கலை ! மறுக்க 
வில்லை!
நல்லதோ, கெட்டதோ, நடக்கப் போவதை  
அறிந்து கொள்ளும் ஆவலில், சோதிடர்களை  
நாடுவதையோ, சுப காரியங்களுக்கு நல்ல  
நாள் பார்க்க, அவர்களைத்  
துணைக் கழைப்பதையோ, தவறென்று  
கூறவில்லை.
ஆனால், திருக்கோயில்  
வழிபாடு களிலேயே சோதிட நம்பிக்கை  
மூக்கை நுழைப்பதை, எந்த வகையிலும்  
ஏற்றுக் கொள்ள முடியவே முடியாது !
ஆயிரத்து முன்னூறு வருடங்களுக்கு முன்பே  
சம்பந்தர் பாடிவிட்டார் ஐயா !
இறை 
நம்பிக்கை கொண்ட எவரையுமே, நாளும் கோளும் எதுவுமே செய்யாது என்று பின்னே ? எதற்காக இத்தனை அச்சம் ?
ஆழ்ந்து பார்த்தால் ஒன்று மட்டும்  
தெளிவாகிறது. இப்படி தோஷ பரிகாரம்,  
கிரகப் 
பெயர்ச்சி, 
என்று ஆயுளைக் கழிக்கும்  
எல்லோருமே தன்னம்பிக்கை அற்றவர்கள் !  
எடுத்ததற்
கெல்லாம் அஞ்சி நடுங்கும் கோழைகள் !
உங்களைக் ஏளனம் செய்வதற்காக  
இதைக் கூறவில்லை!
தயவு செய்து உண்மையை உணர்ந்து  
கொள்ளுங்கள்.
இன்றைக்கும் மிகப் பழைய ஆலயங்களுக்குச்  
சென்றீர்களே
ஆனால், 
அங்கே, நவக்கிரக  
விக்ரகங்களே இருக்காது ! 
அப்படியும்  
இருக்கின்ற
தென்றால் அது மிக மிக அண்மையில் கட்டப்
பட்டதாகவே இருக்கும் ! 
சுமார் 500 வருடங்களுக்கு முன்பு எந்த  
சிவாலயங்
களிலுமே நவக்கிரக சன்னி
தானங்கள் இருந்த
தில்லை.
அந்தந்த சிவாலயங்கள் யாரால்  
வழிபடப் 
பட்டதோ அந்த மூர்த்தி மட்டும்  
தனியாக பிரதிஸ்டை செய்யப்
படிருந்தது.
உதாரணமாக சனி, திருநள்ளாறில்  
சிவ பெருமானை வழிபட்டு அருள் பெற்றதனால் அந்த மூர்த்தியை மட்டும் விசேஷமாக பிரதிஷ்டை பண்ணி இருந்தனர் . 
இது நம் நாயன்மார்கள் தோன்றிய தலங்களில் அவர்களின் விசேஷ சந்நிதிகள் அமைவது போல..
திருநள்ளாறு இன்று சிவன்கோயில் இல்லை !
அது சனி பகவான் கோயில், திங்களூர்  
சிவன் கோயில் இல்லை, 
அது சந்திரன்  
கோயில் ! வைத்தீசுவரன் கோவில்  
சிவன் கோயில் இல்லை, 
அது செவ்வாய்  
கோயில் ! இப்படித்தான் இன்றும் அவை பிரபலம் பெற்று விளங்குகின்றன.
நவக்கிரகங்கள் இறைவன் ஆணைக்குக்  
கட்டுப்பட்டவை ! 
இறைவனின் பரிவாரம் என்ற வகையில், அவையும் நம் வணக்கத்திற்
குறியவை ! 
அவை ஒரு மானிடனின் பிறப்பிலிருந்து இறப்பு வரை ஆதிக்கம் செலுத்துபவை !
உண்மை தான் !
ஆனால், 
ஆணை செலுத்து
பவனிடமே  
அடைக்கலம் புகுந்தால், 
அவை நம்மை என்ன  
தான் செய்து 
விட முடியும் ? 
அதை விடுத்து,  
கிரகங்களை ஆராதித்துக் கொண்டிருப்பது,  
நமக்கு அருள்வதற்காக காத்திருக்கும்  
இறைவனையே அவமதிப்பதே போலாகும் 
அல்லவா ???
கோளறு பதிகம், திரு நீலகண்டப் பதிகம்,  
திருத்தாண்டகம் போன்ற திருப்பதிகங்கள், நம் எத்தகைய ஆபத்துக்
களையும்,  
துன்பங்களையும் நீக்கக் கூடியவை. 
அவற்றை சிக்கெனப் பிடித்துக் கொள்ளுங்கள். நல்லதே நடக்கும்.
மேற்படி பதிகங்களையும், அந்தந்த  
நவகிரகங்கள் வழிபட்ட பரிகார தலங்களில்  
நாயன்
மார்களால் பாடப்பட்ட 
தேவார  
திருப்பதிகங்களையும் பாடி மூலவரான  
சிவபெருமானை வழிபடுவதை 
விட நம் இடர்  
களைவதற்கான உபாயமே வேறு இல்லை  
என்பதை நன்றாக தெளிவாக
தெரிந்து கொள்ளுங்கள்.
மூல மூர்த்தியை வழிபட்ட பின்பு தான்  
நவகிரகங்களை வழிபடுவது ஏற்புடையது.
மூலமூர்த்தி
யாகிய சிவபெருமானை  
வழிபடாமல் செய்யும் நவக்கிரக வழிபாட்டால்  
யாதொரு பலனும் என்றுமே இல்லை.
தோஷ நிவர்த்தி பரிகாரம், 
அது, இது என்று  
கொட்டும் பணத்தை,
வசதி குறைந்த  பழைய 
சிவாலயங்களில் தொண்டு செய்வதற்கும்,  
சிறிய சிதிலமடைந்த சிவாலயங்களை  
புனரமைப் பதிலும், சிவனடியார்
களுக்கு  
உதவுவதிலும் செலவழித்தால்,  
சிவபுண்ணி
யம் பெருகி வந்து  
இம்மையிலும், மறுமையிலும் நம்மை காத்து  
இன்பம் தரும்.
ஏதாவது ஏழை எளியவர்களுக்கு  
உதவுவதிலும், முதியோர் இல்லம்,  
குழந்தைகள் காப்பகம் என்று எங்காவது போய் அன்னதானம், ஆடைதானம் செய்வதிலும் செலவழியுங்கள். 
வயிறும் மனமும் நிறைந்து, நாத்தழுதழுக்க,
“நீங்க நல்லாயி ருக்கணும் ஐயா, அம்மா” என்று அவர்களில் ஒரே ஒருவர் மனதார நினைத்தாலும் போதும்.
அந்த  
வாழ்த்தே சிவன் ஆணையாய், உங்களைப்  
பற்ற வரும் சனிபகவானை ஓட ஓட  
விரட்டி விடுமே!!!
ஆலயங்களில் பெரிய பெரிய பொறுப்பில்  
இருப்பவர்கள், 
சிவாச்சாரி யார்கள் தயவு  
செய்து இதில் கூடிய கவனமெடுங்கள்! 
ஏதோ  
ஆலயத்துக்கு வருமானம் வருகிறதே  
என்பதற்காக, ஈசன் முன்னிலை
யிலேயே  
சிவத்துரோகம் நிகழ்வதற்கு
ஒருபோதும் தயவு செய்து  
அனுமதிக்
காதீர்கள் !
"நமது சமய ஒழுக்கத்தை பேணாமையே  
புற சமய மதமாற்றங்
களுக்கான காரணம்.
நாமும் நலமாக வாழ்ந்து ந்ம் சமயத்தையும்  
வாழ வைப்போம்"
மேன்மை கொள் சைவ சமய நீதி விளங்குக  
உலகமெல்லாம். 
சிவாயநம,
ஓம் நமச்சிவாய.
No comments:
Post a Comment