WHATS APP

உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.

Bala's Jothidam

CONTACT INFORMATION

BALA'S THIRUPURASUNTHARI JOTHIDAM

நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1. உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
    2. இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க நல்ல முடிவுகள் கொடுக்கப்படும்.
    3. உங்கள் எதிர்காலத்தை திறமை பட செயலாற்ற ஒரு புத்துணர்வு கொடுக்கப்படும்..
    4. உங்கள் சந்தேகங்களை போக்கி வாழ்க்கை வளம்பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது..
    5 - உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
    6. இதன் மூலம் செயல் முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியும் நிலைக்கும்..
    பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
    G.V. Manikanda Sharma
    No.1/404, J.J. Nagar
    Mugappair East, Chennai - 600037.
    Tamil Nadu, India.
    Telephone:+91-9962225358, 9444226039.
    WhatsApp No : +91-9444226039.
    E-mail: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    எங்கள் முகவரி .
    1 / 404, ஜெ.ஜெ.நகர்.
    முகப்பேர் கிழக்கு,
    சென்னை – 600 037.
    செல் : +91-9962225358, 9444226039.
    தமிழ்நாடு – இந்தியா.
    E-mail ID: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    12 - எங்கள் சேவை .
    Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest.
    மூலம் சேவை செய்து தருகிறோம். .

Mani Sharma

Sri Bala's Thirupurasunthari Jothidam
  • இது தமிழர்களுக்கான சிறந்த ஆன்லைன் திருமணத் தகவல் மையம் ஆகும். பதிவு இலவசம். பதிவு செய்ய வரனின் பெயர், வயது, பிறந்த தேதி,பிறந்த நேரம், தந்தை பெயர், தாயர் பெயர், படிப்பு, தொழில், மாத வருமானம், பிறந்த ஊர், மொபைல் எண், ராசி, நட்சத்திரம், இலக்கினம், செவ்வாய் தோஷம், ராது-கேது தோஷம், உள்ளதா, தங்களின் வசதி மற்றும் எதிர்பார்ப்பு ஆகிய விபரங்களுடன் தங்களுடைய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து அனுப்பி வைத்தால் தங்களின் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரணுக்கும் ரூபாய் 50/- மட்டுமே கட்டணமாகும். நீங்கள் தேர்ந்தடுக்கும் வரனின் அடையாள எண் மற்றும் மொத்த வரண்களின் எண்ணிக்கையை கட்டாயம் மணி ஆர்டரில் குறிப்பிட வேண்டும். மேலும் மொத்தக் கட்டணத்துடன் ரூபாய். 30 மட்டும் கூரியர் கட்டணமாக சேர்த்து அனுப்பவும். தாங்கள் விரும்பிய வரங்களின் விபரங்கள் மறு தினமே கூரியர் தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விலாசம் பெற மணிகண்ட ஷர்மா தொடர்பு கொள்ளலாம்.
  • திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சிறந்த துவக்கமே பாதி வெற்றி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு பரம்பரையின் மூலகாரணமாக திருமணத்தை, மிகச்சிறப்பாக அமைத்துத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த நீலா மேட்ரிமோனி திருமண தகவல் மையம் கமிஷன், தரகு ஏதும் இன்றி இருமண வீட்டார்களிடமும் உண்மையான தகவல்களைக் கொடுத்து மிகச்சிறப்பான இல்வாழ்க்கை அமைய உதவ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்கள் தகவல் மையத்தில் பதிவுக் கட்டணம் குறைவாதே பதிவு செய்வதற்கு தங்களின் பயோ-டேட்டா, ஜாதகம், போட்டா மட்டும் போதுமானது. தங்கள் தகவல்களைத் தமிழிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து ஒருவாரத்திற்குள் தங்களது பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தங்களுக்கு பொருத்தமான ஒரு வரனை தேர்ந்தெடுக்க ரூ.50 மட்டுமே. வேறு எந்த கட்டணமும் கிடையாது. மணமக்கள், மண வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல்கள் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும் எங்களது சேவை அனைத்து மதத்தவர்க்கும், அனைத்து இனத்தவர்க்கும் உண்டு. எங்களது சேவயை மேலும் சிறப்புடன் செய்யவும், சேவையில் குறைபாடுகள் எதுவும் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். நீலா மேட்ரிமோனி திருமண தகவல் தொடர்பு மையம் 1 / 255, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9962225358, 9444226039 தம்ழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com

Jothidam

    ஜாதகம் கணிக்க ரூ 700/- மட்டுமே

    ஒரு ஜாதகம் பார்க்க ரூ 300/- மட்டுமே

    திருமணபொருத்தம் ஜாதகம் ஒன்றுக்கு ரூ 250/- மட்டுமே

    நேரில் பிரசன்னம் பார்க்க ரூ 500/- மட்டுமே

Thursday 15 November 2018

ஒருநாள், ஒரு காட்டிற்கு வேடன் ஒருவன் வந்தான்

_ஒருநாள், ஒரு காட்டிற்கு வேடன் ஒருவன் வந்தான்.._
_காட்டின் உட்பகுதிக்குச் சென்ற அவன், ஒரு மரத்தில் ஏராளமான பச்சைக் கிளிகள் இருந்ததைக் கண்டான்.. அவ்வளவு பச்சைக்கிளிகளை மரத்தில் பார்த்ததும் அவனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது.._

_பச்சைக்கிளிகளைப் பிடிக்கும் நோக்கத்துடன் மரத்தினடியில் வலை விரித்து, அதில் தானியங்களைத் தூவினான்.. பின்னர் அங்கிருந்து ஒரு மரத்தின் பின்னால் சென்று மறைந்து நின்றுகொண்டான்.. சிறிது நேரத்தில், அவன் எதிர்பார்த்த படியே பச்சைக்கிளிகள் பறந்து வந்து வலையில் சிக்கிக்கொண்டன.._

_வேடன் மறைவிடத்திலிருந்து வெளியே வந்து, வலையில் சிக்கிய பறவைகளைப் பிடிக்கச் சென்றான்.._

அப்போது அந்த வழியாக முனிவர் ஒருவர் வந்தார்..

_வலையில் சிக்கியிருந்த கிளிகளைப் பார்த்ததும், முனிவரின் மனதில் கருணை உண்டாயிற்று.._ கிளிகளைப் பிடிக்கும் நிலையில் இருந்த வேடனைப் பார்த்து அவர், *வேடனே ! இந்தக் கிளிகளைக் கொல்லாதே..!* என்று கூறினார்.

முனிவரின் வேண்டுகோளுக்கு வேடன் உடன்படவில்லை..

அவன் முனிவரிடம், *சுவாமி ! எனக்கு இந்தக் கிளிகள்தான் இன்றைய உணவு.. எனவே, இவைகளைக் கொல்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை.. கிளிகளுக்கு பதிலாக வேறு ஏதாவது மாற்று உணவு நீங்கள் எனக்குத் தருவதாக இருந்தால், இந்தக் கிளிகளை நான் கொல்லாமல் விட்டு விடுகிறேன்..* என்று கூறினான்.

முனிவர், *என்னிடம் சிறிது உணவு இருக்கிறது.. அதை நான் உனக்குத் தருகிறேன்.. இந்தக் கிளிகளை விட்டுவிடு..* என்று கேட்டுக் கொண்டார்..

அதற்கு வேடனும் சம்மதித்தான்..

_தான் கூறியபடியே முனிவர் தன்னிடமிருந்த உணவை வேடனுக்குக் கொடுத்தார்.. வேடன், முனிவர் தந்த உணவைப் பெற்றுக் கொண்டான்.. பிறகு அவன் வலையில் சிக்கியிருந்த கிளிகளை விடுவித்தான்.._

அப்போது முனிவர், கிளிகளைப் பார்த்து, *கிளிகளே ! இவன் வேடன்.. வேடன் வருவான்.. வலை விரிப்பான்.. அதில் தானியங்களைத் தூவுவான்.. நீங்கள் மரத்திலிருந்து கீழே பறந்து வந்து, வேடன் விரிக்கும் வலையில் சிக்கிக்கொள்ளாதீர்கள்* என்று கூறினார்..
_இவ்விதம் கூறிய பின்பு முனிவர் தன்வழியே சென்றார்.._

ஒருவாரம் கடந்தது.. _வேடன் மீண்டும் கிளிகளைப் பிடிக்கும் நோக்கத்துடன் வலையுடன் அதே மரத்தின் அருகில் வந்தான்.. வேடனைக் கிளிகள் பார்த்தன.._

அவனைப் பார்த்ததும் எல்லாக் கிளிகளும் ஒன்று சேர்ந்து, *கிளிகளே ! இவன் வேடன்.. வேடன் வருவான்.. வலை விரிப்பான்.. அதில் தானியங்களைத் தூவுவான்.. நீங்கள் மரத்திலிருந்து கீழே பறந்து வந்து, வேடன் விரிக்கும் வலையில் சிக்கிக்கொள்ளாதீர்கள்* என்று கூறின.. _கிளிகள் கூறியதைக் கேட்ட வேடன், இந்தக் கிளிகள் முன்பு நடந்ததை இன்னும் மறக்கவில்லை ! இங்கு நான் வலை விரித்தாலும், இந்தக் கிளிகள் என் வலையில் வந்து சிக்காது.._

_எனவே இங்கு வலை விரிப்பதால் பயனில்லை! என்று தனக்குள் நினைத்துக் கொண்டான்.. ஆதலால் அங்கு வலை விரிக்காமல், வேறு இடம் தேடிச் சென்றான்.._
ஒரு மாதம் கடந்தது, _மீண்டும் கிளிகள் இருந்த அதே மரத்தின் அருகில் வேடன் வலையுடன் வந்தான்.._

🕸🕸🕸🕸🕸🕸🕸🕸🕸

இப்போதும் வேடனை கிளிகள் பார்த்தன.. உடனே அவை வேடனை நோக்கி,_
*கிளிகளே ! இவன் வேடன்.. வேடன் வருவான்.. வலை விரிப்பான்.. அதில் தானியங்களைத் தூவுவான்.. நீங்கள் மரத்திலிருந்து கீழே பறந்து வந்து, வேடன் விரிக்கும் வலையில் சிக்கிக்கொள்ளாதீர்கள்* என்று ஒரே குரலில் கூறின..
_வேடன், முன்பு நடந்ததை இந்தக் கிளிகள் இன்னும் நினைவில் வைத்திருக்கின்றனவே ! இவைகள் என்வலையில் வந்து விழாது.. எனவே இங்கு நான் வந்து பயனில்லை என்று நினைத்து, வலை விரிப்பதற்கு வேறு இடம் தேடிச் சென்றான்.._ அதன்பிறகு சுமார் ஆறு மாதங்கள் கழிந்தன.
_வேடன் மீண்டும் கிளிகள் இருந்த அதே மரத்தினடியில் வலை விரிக்க வந்தான்.._ அவனைப் பார்த்ததோ இல்லையோ, உடனே எல்லாக் கிளிகளும் ஒன்று சேர்ந்து, *கிளிகளே ! இவன் வேடன்.. வேடன் வருவான்.. வலை விரிப்பான்.. அதில் தானியங்களைத் தூவுவான்.. நீங்கள் மரத்திலிருந்து கீழே பறந்து வந்து, வேடன் விரிக்கும் வலையில் சிக்கிக்கொள்ளாதீர்கள்* என்று ஒரே குரலில் கூறின..

வேடன், _*இது என்ன ஆச்சரியம் ! இன்னும் இந்தக் கிளிகள் என்னை நினைவில் வைத்திருக்கின்றன ! இவை என் வலையில் விழாது !*_ என்று நினைத்தான்.. _என்றாலும் அவன், நான் இன்றைய தினம் எங்கெங்கோ அலைந்தும், எனக்கு வேட்டையாடுவதற்கு எந்த மிருகமோ பறவையோ கிடைக்கவில்லை.. இங்கு இந்தக் கிளிகளும் என்னை மறக்கவில்லை.. நானோ இப்போது காட்டில் சுற்றி அலைந்து மிகவும் களைத்துப் போயிருக்கிறேன்.. சரி ! இந்தக் கிளிகள் என் வலையில் சிக்காமல் போனாலும் பரவாயில்லை.. வேறு ஏதேனும் பறவைகள் இந்த வலையில் வந்து சிக்கலாம் என்று நினைத்து, வலையை விரித்து அதில் தானியங்களைத் தூவினான்.._

இப்படி வேடன் செய்ததை அங்கிருந்த கிளிகளெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தன. வேடன் தானியம் தூவி முடிந்ததும் கிளிகளெல்லாம் ஒன்றுசேர்ந்து, *கிளிகளே ! இவன் வேடன்.. வேடன் வருவான்.. வலை விரிப்பான்.. அதில் தானியங்களைத் தூவுவான்.. நீங்கள் மரத்திலிருந்து கீழே பறந்து வந்து, வேடன் விரிக்கும் வலையில் சிக்கிக்கொள்ளாதீர்கள்* என்று கூறிய படியே அத்தனை கிளிகளும் பறந்து வந்து வேடனின் வலையில் சிக்கிக்கொண்டன !

*_அப்போது தான் வேடனுக்கு புரிந்து, இவை சொன்னதைச் சொல்லும் பச்சைக் கிளிகள்.. முனிவர் சொன்னதைச் அப்படியே இவை சொல்கின்றன.. ஆனால் அந்தச் சொற்களுக்கு என்ன அர்த்தம் என்று இந்தக் கிளிகள் புரிந்துகொள்ளவில்லை.. அதனால்தான் அனைத்து கிளிகளும் இப்போது என் வலையில் வந்து விழுந்திருக்கின்றன_* என்று..
_பிறகு அவன் வலையில் சிக்கிய கிளிகள் அனைத்தையும் பிடித்து சென்றான்._

👇
*இப்படித்தான் நம்மில் பெரும்பாலானவர்கள் இருக்கிறார்கள்..*
_*நல்ல விஷயங்களை நிறைய கேட்கவும், படிக்கவும் செய்கிறார்கள்..*_
_*ஆனால், அவர்கள் அவற்றைத் தங்கள் வாழ்க்கையில் பின்பற்றுவதில்லை..*_

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment