WHATS APP

உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.

Bala's Jothidam

CONTACT INFORMATION

BALA'S THIRUPURASUNTHARI JOTHIDAM

நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1. உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
    2. இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க நல்ல முடிவுகள் கொடுக்கப்படும்.
    3. உங்கள் எதிர்காலத்தை திறமை பட செயலாற்ற ஒரு புத்துணர்வு கொடுக்கப்படும்..
    4. உங்கள் சந்தேகங்களை போக்கி வாழ்க்கை வளம்பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது..
    5 - உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
    6. இதன் மூலம் செயல் முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியும் நிலைக்கும்..
    பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
    G.V. Manikanda Sharma
    No.1/404, J.J. Nagar
    Mugappair East, Chennai - 600037.
    Tamil Nadu, India.
    Telephone:+91-9962225358, 9444226039.
    WhatsApp No : +91-9444226039.
    E-mail: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    எங்கள் முகவரி .
    1 / 404, ஜெ.ஜெ.நகர்.
    முகப்பேர் கிழக்கு,
    சென்னை – 600 037.
    செல் : +91-9962225358, 9444226039.
    தமிழ்நாடு – இந்தியா.
    E-mail ID: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    12 - எங்கள் சேவை .
    Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest.
    மூலம் சேவை செய்து தருகிறோம். .

Mani Sharma

Sri Bala's Thirupurasunthari Jothidam
  • இது தமிழர்களுக்கான சிறந்த ஆன்லைன் திருமணத் தகவல் மையம் ஆகும். பதிவு இலவசம். பதிவு செய்ய வரனின் பெயர், வயது, பிறந்த தேதி,பிறந்த நேரம், தந்தை பெயர், தாயர் பெயர், படிப்பு, தொழில், மாத வருமானம், பிறந்த ஊர், மொபைல் எண், ராசி, நட்சத்திரம், இலக்கினம், செவ்வாய் தோஷம், ராது-கேது தோஷம், உள்ளதா, தங்களின் வசதி மற்றும் எதிர்பார்ப்பு ஆகிய விபரங்களுடன் தங்களுடைய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து அனுப்பி வைத்தால் தங்களின் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரணுக்கும் ரூபாய் 50/- மட்டுமே கட்டணமாகும். நீங்கள் தேர்ந்தடுக்கும் வரனின் அடையாள எண் மற்றும் மொத்த வரண்களின் எண்ணிக்கையை கட்டாயம் மணி ஆர்டரில் குறிப்பிட வேண்டும். மேலும் மொத்தக் கட்டணத்துடன் ரூபாய். 30 மட்டும் கூரியர் கட்டணமாக சேர்த்து அனுப்பவும். தாங்கள் விரும்பிய வரங்களின் விபரங்கள் மறு தினமே கூரியர் தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விலாசம் பெற மணிகண்ட ஷர்மா தொடர்பு கொள்ளலாம்.
  • திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சிறந்த துவக்கமே பாதி வெற்றி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு பரம்பரையின் மூலகாரணமாக திருமணத்தை, மிகச்சிறப்பாக அமைத்துத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த நீலா மேட்ரிமோனி திருமண தகவல் மையம் கமிஷன், தரகு ஏதும் இன்றி இருமண வீட்டார்களிடமும் உண்மையான தகவல்களைக் கொடுத்து மிகச்சிறப்பான இல்வாழ்க்கை அமைய உதவ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்கள் தகவல் மையத்தில் பதிவுக் கட்டணம் குறைவாதே பதிவு செய்வதற்கு தங்களின் பயோ-டேட்டா, ஜாதகம், போட்டா மட்டும் போதுமானது. தங்கள் தகவல்களைத் தமிழிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து ஒருவாரத்திற்குள் தங்களது பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தங்களுக்கு பொருத்தமான ஒரு வரனை தேர்ந்தெடுக்க ரூ.50 மட்டுமே. வேறு எந்த கட்டணமும் கிடையாது. மணமக்கள், மண வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல்கள் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும் எங்களது சேவை அனைத்து மதத்தவர்க்கும், அனைத்து இனத்தவர்க்கும் உண்டு. எங்களது சேவயை மேலும் சிறப்புடன் செய்யவும், சேவையில் குறைபாடுகள் எதுவும் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். நீலா மேட்ரிமோனி திருமண தகவல் தொடர்பு மையம் 1 / 255, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9962225358, 9444226039 தம்ழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com

Jothidam

    ஜாதகம் கணிக்க ரூ 700/- மட்டுமே

    ஒரு ஜாதகம் பார்க்க ரூ 300/- மட்டுமே

    திருமணபொருத்தம் ஜாதகம் ஒன்றுக்கு ரூ 250/- மட்டுமே

    நேரில் பிரசன்னம் பார்க்க ரூ 500/- மட்டுமே

Tuesday 7 August 2018

முப்பத்து முக்கோடி தேவர்கள்

👑 முப்பத்து முக்கோடி தேவர்கள்

🌷முப்பத்து முக்கோடி என்றவுடன் நம் நினைப்பது அவர்களின் எண்ணிக்கை 33 கோடி என்பதே ஆனால் உண்மை யாதெனில் இங்கு குறிப்பிடப்படும் கோடி என்பதன் பொருள் முக்கியமான மற்றும் தலைமையை குறிக்கிறது

🍂 சமஸ்கிருதத்தில் Trayastrimsati Koti என்ற சொல்லை மொழிமாற்றம் செய்யும்போது முப்பத்து மூன்று கோடி என செய்யப்பட்டுள்ளது ஆனால் கோடிக்கு பல பொருள்கள் உள்ளன

🌺 அதிதியின் புத்திரர்கள் ஆதித்யர்கள் பன்னிருவர்

🌺 ஈசன் படைத்த ருத்ரர்கள் பதினொருவர்

🌺 தர்மதேவதையின் மகன்கள் வசுக்கள் எட்டு பேர்

🌺 மற்றும் சூரியனின் மகன்களான அஸ்வினிதேவர்கள் இருவர்

{மன்வந்திரம் சிறு விளக்கம்

கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம் மற்றும் கலியுகம் ஆகிய நான்கும் சேர்ந்தது ஒரு சதுர்யுகம்

71 சதுர்யுகங்கள் = 1 மன்வந்திரம்

14 மன்வந்திரங்கள் = ஒரு கல்பம் இதுவே பிரம்மதேவரின் ஒரு பகல்

2 கல்பங்கள் = பிரம்மதேவரின் ஒரு நாள்}

🌺 நாம் வாழும் இந்த மன்வந்திரத்திலேயே இந்த 33 பேர் ஆவர் இதே போல ஒவ்வொரு மன்வந்திரத்திற்கும் இந்த தலைமை மாறும் அதாவது போன மன்வந்திரத்தில் ஐந்து கனதேவதைகள் முறையே அவர்கள் ஒவ்வொருவருக்கும் கீழ் 8 பேர்கள் இருந்தனர் ஆனால் இந்த மன்வந்திரத்தில் இந்த 33 பேர்கள் ஆவர்

🌻 இவர்களை பற்றியும் மேலும் சில முக்கியமானவர்களை பற்றி தற்போது பார்ப்போம்

💐 சப்தரிஷிகள்
       🌼 ஒவ்வொரு மன்வந்திரத்திற்கும் சப்தரிஷிகளின் பொறுப்பு இன்றியமையாதது ஆகும்
       🌼 முதல் மன்வந்திரத்தில் இவர்கள் பிரம்மாவின் குமாரர்களாக அவதரித்தனர் ஒவ்வொரு மன்வந்திரத்திலும் தங்களின் தவத்தில் உயர்ந்தவர்கள் அடுத்த மன்வந்திரத்தில் சப்தரிஷிகளாவர்
        🌼 உண்மையில் கடவுள்களான மும்மூர்த்திகள் முதலானவர்களுக்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள்
       🌼 சப்தரிஷியாக ஆகவேண்டுமானால் ஒருவர் தவத்தில் சிறந்து விளங்கி பெரும் தவபலம் பெற்று பிரம்மரிஷியாக வேண்டும்
       🌼 இவர்கள் சிரஞ்சீவிகள் போல கல்பாந்த காலம் அதாவது கல்பகாலம் முடிந்தபின் வரும் பிரளயம் வரை இருப்பர்
       🌼 ஆனால் இவர்களுக்கு ஒரு மன்வந்திர காலம் மட்டுமே சப்தரிஷி பட்டம் மற்றும் முக்கிய பொறுப்புகள் இவ்வாறாக ஒவ்வொரு மன்வந்திரமும் சப்தரிஷிகள் மாறுவார்கள்
      🌼 நாம் வாழும் இந்த மன்வந்திரத்தில் வசிஷ்டர், காசியபர், அத்திரி, ஜமதக்னி, கவுதமர், விசுவாமித்திரர், பரத்வாஜர் ஆகியோர் சப்தரிகளாவர்
       🌼 இனிவரும் அடுத்த மன்வந்திரத்தில் தீப்திமான், காலவர், பரசுராமர், கிருபர், அஸ்வத்தாமன் , பாரதம் எழுதிய வியாசர், ருஷிய சிருங்கர் ஆகியோர் சப்தரிஷிகளாவர்

👑 மனு
        🌺 மனுவே மன்வந்திரத்தின் அதிகாரியாவார் இவரே முதலில் படைக்கப்பட்ட மனிதன் ஆவார் மனுவின் வம்சமாதலால் நாம் மனிதர்கள் என அழைக்கப்படுகிறோம்
        🌼 நாம் வாழும் இந்த மன்வந்திரத்தில் சூரியனின் மகனான சிரார்த்த தேவன் மனுவாவார்

👑 இந்திரன்
       🌺 இந்திரன் மூவுலகங்களுக்கும் அதிபதி ஆவார் தேவர்கள், சொர்க்கம் மற்றும் மூவுலங்களுக்கும் இவரே தலைவர்
       👑 பொதுவாக நூறு அசுவமேத யாகங்களை செய்தவர் இந்திர பதவியை அடைவர்
       🌺 மூவுலக அதிபதி என்பதால் இந்திரனை வெற்றிகொண்டு அந்த இடத்தை பிடிக்கவே அசுரர்கள் முயல்வார்கள்
       🌼 நாம் வாழும் இந்த மன்வந்திரத்தில் அதிதியின் புதல்வரான புரந்தரன் இந்திரன் ஆவார் மேலும் அடுத்த மன்வந்திரத்திற்கு வாமனரால் பாதாள லோகத்திற்கு தள்ளப்பட்ட பலிச்சக்ரவர்த்தி இந்திரனாவார்

☀ ஆதித்யர்கள்
            ⛅ அதிதியின் புதல்வர்களாதலால் இவர்கள் ஆதித்யர்கள் என்றழைக்கப்படுகின்றனர்
            💧 இவர்கள் 12 பேரும் முறையே 12 மாதங்களுக்கு பொறுப்பாவார்கள் மேலும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதம் சூரியனாய் இருப்பர்
            ⚡ இவர்கள் ஒவ்வொருவரும் ஒரு பொறுப்பை ஏற்றுள்ளனர் செடி வளர்வதிலிருந்து கர்ப்பத்தில் குழந்தை வளர்வது வரை இவர்களுக்கு பல வேலைகள் தரப்பட்டுள்ளனர்
            🌾 புரந்தரன், வருணன் முதலியோர் ஆதித்யர்களே இவர்களின் பொறுப்பு மற்றும் சக்திகளை விளக்க ஒவ்வொரு ஆதித்யருக்கும் ஒரு பதிவு தேவைப்படும் இங்கு நான் கூறியது மிகக்குறைவே

ருத்ரர்கள்
            🍃 இவர்களை பற்றி ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாக சொல்லப்பட்டுள்ளது
            🌺 பிரம்மாவின் கோபத்தில் பிறந்தவர்களாக கருதப்படுகிறார் மேலும் பிரம்மாவின் உடலிலிருந்து ஈசனால் தோற்றுவிக்கப்பட்டவர்கள் என்ற கதையும் உண்டு
            ☁ ஜந்து கர்மேந்திரங்களாகிய பேசுவது, கை (கையால் செய்யும் வேலைகள்), கால் (நடத்தல்), ஆசனவாய் மற்றும் உறுப்பு
            ❄ ஐந்து ஞானேந்திரங்களாகிய கண், காது, மூக்கு, வாய் மற்றும் உடல்
            🌙 மற்றும் கர்மேந்திரமும் ஞானேந்திரமும் சேர்ந்ததாகிய யோசித்தல்
            🌋 இவை பதினொன்றையும் பதினொரு ருத்ரர்கள் கவனித்து கொள்வர்

🌌 வசுக்கள்
           🍀 தட்ச பிராஜிபதி தனது பத்து மகள்களை தர்மதேவதைக்கு மணமுடித்தார் அவர்களுக்கு பிறந்தவர்களே வசுக்கள் 8 பேர்
           🍁 இவர்கள் எண்மரும் முறையே பூமி, காற்று, ஆகாயம், அக்னி, சூரியன், சந்திரன், அண்டம் மற்றும் நட்சத்திரங்களை தங்கள் கட்டுபாட்டிற்குள் கொண்டுள்ளனர்
           🌺 இங்கு பீஷ்மரை பிறந்த பிரபாசன் எனும் வசுவின் புத்திரரே தேவசிற்பி விஸ்வகர்மா ஆவார்
           🌺 மன்மதனும் தர்மதேவதையின் புத்திரனே

👑 அஷ்டதிக் பாலகர்கள்
           🎆 குபேரன், எமன், இந்திரன், வருணன், ஈசானன், அக்னி, வாயு, நிருதி ஆகிய இவர்கள் எண்மரும் அஷ்டதிக் பாலகராவர்
           🌴 இவர்கள் பிரபஞ்சத்தின் எட்டு திசைக்கும் காவலராவர்

🌹 நவகிரகங்கள்
           🍃 கசியப்பரின் புதல்வரான சூரியன்
           🌼 அத்ரி மஹரிஷியின் புதல்வரான சந்திரன்
           ❄ ஈசனின் வியர்வை துளியில் பிறந்த செவ்வாய்
           🌺 சந்திரனின் புதல்வரான புதன்
           🌺 ஆங்கிரச மஹரிஷியின் புதல்வரும் தேவகுருவுமாகிய பிரகஸ்பதி
           🌺 பிருகுமுனிவரின் புதல்வரும் அசுரகுருவான சுக்ராச்சாரியார்
           🌾 சூரிய புதல்வனும் ஈசனின் சீடனுமான சனீஸ்வரர்
           🍁 அமிர்தம் உண்டவர்களும் அசுர கிரகங்களுமான ராகு-கேது
           👑 இவர்கள் ஒன்பது பேரும் நவகிரகங்களாவர் ஒரு மனிதனின் கர்ம வினைகளுக்கு ஏற்றப்படி அவர்களுக்கு பலன்களை வழங்குகின்றனர்

🌼 கந்தர்வர்கள் - இவர்கள் கசியப்பர் மற்றும் அரிஷ்டா தேவிக்கு பிறந்தவர்கள் இவர்கள் தேவர்களுக்கு உதவியாளர்களாக கருதப்படுகின்றனர்

🌼 அசுரர்கள் - இவர்களும் தேவர்களுக்கு இணையான சக்தியோடு பிறந்தவர்களே ஆனாலும் எண்ணத்தினால் இவ்வாறு அழைக்கப்படுகின்றனர்
இவர்கள் இராவணனின் தாத்தாவான புலஸ்தியரின் வம்சத்தில் வந்தவர்கள்

🌼 தைத்தியர்கள் - இவர்களும் அசுரர்கள் போலவே ஆனால் கசியப்பருக்கும் திதிக்கும் பிறந்தவர்கள் திதியின் மைந்தர்களாதலால் இவர்களின் வம்சம் தைத்தியர்கள் என்றழைக்கப்படுகிறது

🌼 தானவர்கள் - கசியப்பருக்கும் தனுவிற்கும் பிறந்தவர்கள் தனுவின் மைந்தர்களாதலால் தானவர்கள் என இவர்களின் வம்சம் அழைக்கப்படுகிறது

🌼 யட்சர்கள் - இவர்கள் பூமியில் உள்ள வளங்களை காப்பவராக கருதப்படுக்கின்றனர் குபேரனும் யட்சரே இவரே யட்சர்களின் தலைவராவார்

🌼 ராட்ஷசர்கள் - பூதங்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றனர்

👑 அசுரர்கள், தைத்தியர்கள், தானவர்கள், யட்சர்கள், இராட்ஷசர்கள் இவர்களை பொறுத்தவரை அனைவருமே மோசமானவர்கள் என கூறமுடியாது ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதம் அதாவது நல்லவரும் இவர்களில் உண்டு

🌺 கிம்புருஷர் - உடலின் மேல்புறம் சிங்கமாகவும் கீழே மனிதனாகவும் இருப்பவர்கள் (நரசிம்மர் போல)

🌺 கின்னரர்கள் - உடலின் மேற்புறம் மனிதனாகவும் கீழே குதிரையாகவும் இருப்பவர்கள்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இவர்கள் அனைவருக்கும் (கிம்புருஷர்கள் மற்றும் கின்னரர் தவிர) தனித்தனி லோகங்கள் உண்டு இவர்கள் மும்மூர்த்திகளின் ஆணையின் கீழ் தங்களுக்கு அளிக்கப்பட்ட செயல்களை செய்கின்றனர்

ஆச்சரியமான விசயம் என்னவென்றால் இவர்கள் அனைவருமே அதாவது தேவர்களின் தலைவன் இந்திரன் முதல் கந்தர்வர்கள் வரை புவியில் மனிதர்களாய் பிறந்தவர்களே

எனில் இந்நிலையை இவர்கள் எவ்வாறு எட்டினர் என்ற கேள்வி எழுகிறதல்லவா

இவர்கள் அனைவருமே தங்கள் செய்த புண்ணியத்தாலேயே இந்த நிலையை எட்டினர் மேலும் இதன்பிறகு இறைவனிடம் சேர்வர்

இதை பல இடங்களில் அவர்களே கூட ஒத்துகொண்டுள்ளனர்

அனைத்தும் கர்மவினையே

நரகத்தில் சேர்ப்பதும் கர்மாவே
இந்திரனாய் ஆக்குவதும் கர்மாவே.

No comments:

Post a Comment