WHATS APP

உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.

Bala's Jothidam

CONTACT INFORMATION

BALA'S THIRUPURASUNTHARI JOTHIDAM

நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1. உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
    2. இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க நல்ல முடிவுகள் கொடுக்கப்படும்.
    3. உங்கள் எதிர்காலத்தை திறமை பட செயலாற்ற ஒரு புத்துணர்வு கொடுக்கப்படும்..
    4. உங்கள் சந்தேகங்களை போக்கி வாழ்க்கை வளம்பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது..
    5 - உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
    6. இதன் மூலம் செயல் முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியும் நிலைக்கும்..
    பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
    G.V. Manikanda Sharma
    No.1/404, J.J. Nagar
    Mugappair East, Chennai - 600037.
    Tamil Nadu, India.
    Telephone:+91-9962225358, 9444226039.
    WhatsApp No : +91-9444226039.
    E-mail: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    எங்கள் முகவரி .
    1 / 404, ஜெ.ஜெ.நகர்.
    முகப்பேர் கிழக்கு,
    சென்னை – 600 037.
    செல் : +91-9962225358, 9444226039.
    தமிழ்நாடு – இந்தியா.
    E-mail ID: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    12 - எங்கள் சேவை .
    Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest.
    மூலம் சேவை செய்து தருகிறோம். .

Mani Sharma

Sri Bala's Thirupurasunthari Jothidam
  • இது தமிழர்களுக்கான சிறந்த ஆன்லைன் திருமணத் தகவல் மையம் ஆகும். பதிவு இலவசம். பதிவு செய்ய வரனின் பெயர், வயது, பிறந்த தேதி,பிறந்த நேரம், தந்தை பெயர், தாயர் பெயர், படிப்பு, தொழில், மாத வருமானம், பிறந்த ஊர், மொபைல் எண், ராசி, நட்சத்திரம், இலக்கினம், செவ்வாய் தோஷம், ராது-கேது தோஷம், உள்ளதா, தங்களின் வசதி மற்றும் எதிர்பார்ப்பு ஆகிய விபரங்களுடன் தங்களுடைய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து அனுப்பி வைத்தால் தங்களின் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரணுக்கும் ரூபாய் 50/- மட்டுமே கட்டணமாகும். நீங்கள் தேர்ந்தடுக்கும் வரனின் அடையாள எண் மற்றும் மொத்த வரண்களின் எண்ணிக்கையை கட்டாயம் மணி ஆர்டரில் குறிப்பிட வேண்டும். மேலும் மொத்தக் கட்டணத்துடன் ரூபாய். 30 மட்டும் கூரியர் கட்டணமாக சேர்த்து அனுப்பவும். தாங்கள் விரும்பிய வரங்களின் விபரங்கள் மறு தினமே கூரியர் தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விலாசம் பெற மணிகண்ட ஷர்மா தொடர்பு கொள்ளலாம்.
  • திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சிறந்த துவக்கமே பாதி வெற்றி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு பரம்பரையின் மூலகாரணமாக திருமணத்தை, மிகச்சிறப்பாக அமைத்துத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த நீலா மேட்ரிமோனி திருமண தகவல் மையம் கமிஷன், தரகு ஏதும் இன்றி இருமண வீட்டார்களிடமும் உண்மையான தகவல்களைக் கொடுத்து மிகச்சிறப்பான இல்வாழ்க்கை அமைய உதவ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்கள் தகவல் மையத்தில் பதிவுக் கட்டணம் குறைவாதே பதிவு செய்வதற்கு தங்களின் பயோ-டேட்டா, ஜாதகம், போட்டா மட்டும் போதுமானது. தங்கள் தகவல்களைத் தமிழிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து ஒருவாரத்திற்குள் தங்களது பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தங்களுக்கு பொருத்தமான ஒரு வரனை தேர்ந்தெடுக்க ரூ.50 மட்டுமே. வேறு எந்த கட்டணமும் கிடையாது. மணமக்கள், மண வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல்கள் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும் எங்களது சேவை அனைத்து மதத்தவர்க்கும், அனைத்து இனத்தவர்க்கும் உண்டு. எங்களது சேவயை மேலும் சிறப்புடன் செய்யவும், சேவையில் குறைபாடுகள் எதுவும் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். நீலா மேட்ரிமோனி திருமண தகவல் தொடர்பு மையம் 1 / 255, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9962225358, 9444226039 தம்ழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com

Jothidam

    ஜாதகம் கணிக்க ரூ 700/- மட்டுமே

    ஒரு ஜாதகம் பார்க்க ரூ 300/- மட்டுமே

    திருமணபொருத்தம் ஜாதகம் ஒன்றுக்கு ரூ 250/- மட்டுமே

    நேரில் பிரசன்னம் பார்க்க ரூ 500/- மட்டுமே

Friday 13 September 2013

எண் 6 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் - சுக்கிரன் (Venus) பரிகாரம் உள்பட



எண் 6 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் - சுக்கிரன் (Venus) பரிகாரம் உள்பட
சுக்கிரன் நட்சத்திரம் பரணி, பூரம், பூராடம்
ஒன்பது எண்களிலும் இயற்கையிலேயே அதிர்ஷ்டசாலிகளான 6-ம் எண்காரர்களைப் பற்றிப் பார்ப்போம். இந்த உலகத்தைப் பற்றி மட்டுமே நினைப்பவர்கள் இவர்கள்தான். பூர்வ ஜென்மம், அடுத்த ஜென்மம் போன்றவற்றில் அதிகம் நம்பிக்கையில்லாதவர்கள். அது மட்டுமல்ல அப்படிப் பேசுபவர்களைக் கண்டால் கிண்டலும், குதர்க்கமும் செய்வார்கள்.

இன்பம், பணம், சுகமான அனுபவங்கள் நோக்கிலே இவர்கள் ஓடுவார்கள்! சுயநலம் மிகுந்தவர்கள் இவர்கள்தான். இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழில் மிகவும் ஈடுபாடு உடையவர்கள். நீடித்த இளமை இவர்களது வரப்பிரசாதமாகும். மன்மதர்களின் மைந்தர்கள் இவர்களே புத்திரபாக்யம் நிறைந்தவர்கள் இவர்கள்தான். அதிலும் பெண் குழந்தைகள் இவர்களுக்கு அதிகம் உண்டு. பணவிஷயத்தில் இவர்களே மிகவும் அதிர்ஷ்டமானவர்கள். இவர்களே குபேரனின் மைந்தர்கள்! எவர் மூலமாவது எப்படியாவது இவர்களுக்குச் சமயத்திற்கு ஏற்பப் பணம் வந்து கொண்டே இருக்கும். சாப்பிடுவதிலும், சிற்றின்பத்திலும் பணத்தை நிறைய செலவு செய்வார்கள். ஆனால் மற்ற பொதுவான விஷயங்களிலும், அடுத்தவர்களுக்கு (லாபம் இல்லாமல்) உதவுவதிலும் மிகுந்த கஞ்சத்தனம் பார்ப்பார்கள்.

இந்த 6-ல் எண்காரர்கள் சிற்றின்பத்தில் மிதமாக இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும். 6 எண் பலம் குறைந்தால் கடவுள், சாத்திரங்கள் மீது மிகுந்த அவநம்பிக்கை கொள்வார்கள். ஸ்திரீலோலராகி விடுவார்கள். அடிக்கடி மற்றவர்களிடம் பணம் வாங்குவார்கள். ஆனால் திருப்பிக் கொடுக்கும்போது மட்டும் இழுத்துப் பிடித்துத்தான் கொடுப்பார்கள். இவர்கள் தங்களது நேரத்தை காதல், கவிதை, கதை, வசனம், சினிமா, கருவிகள் என்று வீணாக்குவார்கள். தங்களது சபல புத்தியின் காரணமாகப் பல அன்பர்கள் எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி, ஏங்கி, பல முயற்சிகள் செய்து, பல துன்பங்களை அடைகின்றனர்.
மனத்தில் பலவகைக் குணங்கள், பொறமைகள், மற்றவர்களை புண்படுத்தும் குறும்புப் பேச்சுகள் இவர்களுக்கு உண்டு. ஆனால் எவராவது இவர்களுடைய துயரங்களையும், துன்பங்களையும் பற்றிப் பேசினால் இவர்களுக்கு அந்த இடத்தில் இருக்கப் பிடிக்காது! இவர்களுக்கு ஓரளவு கோப குணமும் உண்டு. கோபம் வரும் போது முரட்டுத்தனமாக நடந்து கொள்வார்கள்.
இவர்களுக்க 5-ம் எண்காரர்களைப் போன்று நண்பர்கள் அதிகம் உண்டு. இவர்கள் எளிதில் மாற்ற முடியாத பிடிவாதம்காரர்களே!
எனவே சிறுவயதிலிருந்தே இந்த எண்காரர்கள் ஒழுக்கம், பொறுமை போன்ற நல்ல குணங்களை விடாமுயற்சியுடன் வளர்த்துக் கொள்ள வேண்டும். பொதுவாகவே ஒரு வீட்டில் 6& எண் குழந்தைகள் பிறப்பது, அந்தக் குடும்பத்தின் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் என்பார்கள். மேலும் 6 எண்காரர்கள், தங்கள் பிறந்த வீட்டின் வசதியைவிடப் பிற்காலத்தில் உயர்ந்த செல்வர்களாகவே விளங்குவார்கள்.
இவர்களின் காம உணர்ச்சிகள், காதல் ஆகியவை நிலையானவை! ஆனால் அவைகள் வேகமும், முரட்டுத்தனமும் உடையவை! பணவிஷயத்தில் தன ஆகர்ஷண சக்தி, இவர்களுக்கு இயற்கையிலேயே நிறைந்து காணப்படும். எப்போதும் இவர்கள் தங்களது அதிர்ஷ்டத்தையே நம்பி இருப்பார்கள். துன்பப்பட்டு உழைப்பதில் அலட்சியம் காட்டும் குணம் இருக்கும். இதை இவர்கள் மாற்றிக் கொண்டால்தான் 'விஜயலட்சுமி' எப்போதும் இவர்களுடன் இருப்பாள். தங்களின் அனாவசியக் குடும்பச் செலவுகள், அனாவசிய ஆடம்பரச் செலவுகள் ஆகியவற்றைக் குறைத்துக் கொண்டால் தான், பணம் எப்போதும் நீங்காமல் இவர்களுடன் இருக்கும். இல்லையெனில் கடன் தொல்லையும், ஏமாற்றமும் ஏன் வறுமையும்கூட ஏற்பட்டு விடும்.
இவர்களது தொழில்கள்
இவர்கள் மனத்திற்கு மிகவும் பிடித்தது கலைத் தொழில்தான். எனவே சினிமா, டிராமா, இசை போன்ற பொழுதுபோக்குத் துறைகளில், எந்தத் தொழிலில் ஈடுபட்டாலும் இவர்களுக்கு வெற்றி நிச்சயம்! மேலும் துணிக்கடை, நகைக்டை, பிளாஸ்டிக் சாமான்கள் வியாபாரம் போன்றவையும் வெற்றி தரும். மற்ற எண்கள் 1, 5 வந்தால் அரசு அதிகாரியாகவும் பிரகாசிப்பார்கள். சிற்பம், சித்திரம் போன்ற நுணுக்கமான துறைகளிலும், அலங்காரப் பொருட்கள், கவரிங் நகை விற்பனை தயாரிப்பு ஆகியவற்றிலும் இவர்கள் வெற்றி அடையலாம். அதுமட்டுமன்று சட்ட நுணுக்கம் பேசி விவாதம் புரியும் வக்கீல்கள், நீதிபதிகள் போன்ற தொழில்களும் ஓரளவு நல்லதே! ஆனால் பணத்திற்காக வளை கொடுக்கும் இயல்பு இவர்களுக்கு உண்டுமேலும் பெண்களுக்கு உபயோகப்படுத்தும் அனைத்துப் பொருட்கள், அழகு சாதனங்கள் வியாபாரமும் போன்றவையும் நன்மை தரும்.
முத்து பவளம் போன்ற நவரத்தினங்கள் வியாபாரமும் செய்யலாம். எப்போதும் பிறரின் உதவியும், மக்கள் வசியமும், இயற்கையாகவே இவர்களுக்கு உண்டு. மற்றவர்களுக்காக வீடுகள் கட்டி, அதை விற்கும் தொழில்களில் இவர்கள் ஈடுபடலாம். கண்ணாடி, வாசனைப் பொருட்கள், பூக்கள், மாலைகள், வியாபாரமும் சிறந்ததே! சங்கீதம், வாய்ப்பூட்டு, இசை வாத்தியங்கள் ஆகியவை மூலம் நல்ல பொருள்கள் ஈட்டலாம்.

திருமண வாழ்க்கை
திருமணத்தின் மூலம் ஆதாயமும், இலாபமும் கிடைக்கின்றனவா என்றே இவர்கள் கணக்குப் பார்ப்பார்கள். இருப்பினும் திருமணத்திற்குப் பின்பு மனைவியை நன்கு வைத்துக் கொள்வார்கள்! மனைவியிடம் திருப்தி குறைவு என்றால், மற்ற வழிகளில் ஈடபத் தயங்க மாட்டார்கள். எனவே 6-ம் எண்காரர்களை மணக்கும் பெண்கள் தங்களைத் தினமும் நன்கு அலங்கரித்துக் கொண்டு, கணவன்மார்களின் குணம் அறிந்து நல்ல சமையல், நல்ல உபசரிப்பு மூலம் நன்கு வசியம் செய்து கொள்ள வேண்டும். பின்பு இவர்களைப் போன்று நல்ல கணவர்கள் அமைவது கடினம் என்று அவர்கள் உணர்வார்கள். இவர்களுக்கு 6, 9 எண்களில் பிறந்த பெண்களினால் நல்ல திருமண வாழ்க்கை அமையும். இவர்களின் வேகத்திற்கு  ஈடுகொடுக்க முடியும்! 1, 4, 5 ஆகிய எண்களில் பிறந்தோர்களைத் தவிர்த்துவிட வேண்டும். 3-ம் எண்காரர்களை மட்டும் மணக்கக்கூடாது.
மேலும் திருமண 1, 10, 19, 28, 6, 15, 24, 18, 27 ஆகிய தேதிகளிலும், கூட்டு எண் 1, 6, 9 வரும் தேதிகளிலும் செய்து கொண்டால் மிக்க நன்மை தரும்.
இவர்களது நண்பர்கள்
6, 9 தேதிகளில் பிறந்தவர்களுடன் நண்பர்களாகவும், கூட்டாளிகளாகவும் இருப்பார்கள். 1, 5 ஆகிய தேதிகளில் பிறந்தோராலும் ஓரளவு நன்மை உண்டு. 3 எண்காரர்களின் தொடர்பும் கூட்டும் கூடாது! ஆனால், 3 எண்காரர்களால் தான்இவர்களுக்கு மிகப் பெரிய விதி வசமான உதவிகள் கிடைக்கும். ஆனால் அவை இயல்பாகவே எதிர்பாராமல் அமையும். இவர்களாகத் தேடிச் செல்லக்கூடாத. (3ம் எண்காரர்களால்) வேதனைதான் மிஞ்சும்.

இவர்களது நோய்கள்
பொதுவாகச் சாப்பாட்டு பிரியர்கள். எனவே உடல் பருமன் பிரச்சினைகள் உண்டு. இதய பலவீனம் இரத்த ஓட்டக்கோளாறுகள் ஏற்படும். இந்திரியம் அதிகம் செலவு செய்பவர்களாதலால் பிறப்புறுப்புக் கோளாறுகள், நோய்கள் ஏற்படும். மலச்சிக்கலும் அடிக்கடி ஏற்படும். புகைபிடித்தல், மது போதைப் பொருட்கள் போன்றவற்றையும் அறவே ஒதுக்கிவிடவேண்டும். அடிக்கடி மூச்சுத் தொந்தரவுகளும், சுவாச சம்பந்தப்பட்ட நோய்களும் ஏற்படும். மாதுளை, ஆப்பிள், வால்நட், கீரை வகைகள் இவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். திறந்த வெளிகளில் தினமும் உலாவி வரவேண்டும். இதன் மூலம் பல நோய்களைத் தவிர்த்து விடலாம். இந்த எண்காரர்கள் பக்தி, பொதுத் தொண்டு செய்தல் போன்ற குணங்களை வளர்த்துக் கொண்டால் இவர்களுக்குப் பெரும் புகழும், அமைதியான வாழ்க்கையும் நிச்சயம் ஏற்படும்.
சுக்கிரன் யந்திரம் & சுக்கிரன் & 30
11 6 13
12 10 3
7 14 9

சுக்கிரன் மந்திரம்
ஹிமகுந்த ம்ருணாளாபம்,
தைத்யாநாம் பரமம் குரும்
ஸர்வசாஸ்த்ர ப்ரவக்தாரம்
பார்கவம் ப்ரணமாம்யஹம்

எண் 6. சிறப்புப் பலன்கள்
உலக சுகங்களை அனுபவிக்கப் பிறந்தவர்களான 6-ஆம் எண்ணைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். இவர்களுக்கு இந்த பூ உலகம் சொர்க்கமாகத் தெரியும். இந்த வாழ்க்கை வாழ்வதற்கே என்று இன்ப உணர்வுடன் வாழ்பவர்கள் இவர்களே! அசுர குருவான சுக்கிரனின் ஆற்றலை கொண்டது இந்த எண். எனவே, இயற்கையிலேயே உடல் சுகம், போகங்கள், வாசனைத் திரவியங்கள், ஆபரணங்கள் (ஆண்கள்கூட) ஆகியவற்றை அனுபவிக்கும் ஆசையும், அதிர்ஷ்டமும் உண்டு!
இவர்கள் கற்பனை வளமும், கலைகளின் பால் மிகுந்த ஈடுபாடும் போகப் பொருட்கள் மேல் நாட்டமும் உடையவர்கள். அழகிய பொருட்களையும், அலங்காரப் பொருட்களையும் வாங்கி வைத்துக் கொள்ள விரும்புவார்திகள். அதிகம் செலவு செய்து, அழகான வீடு, பங்களா கட்டுவார்கள். பகட்டான வாழ்க்கையை நடத்த விரும்புவார்கள். ஓவியம், இசை, பாடல்கள், நாட்டியம் போன்றவற்றில் மிக்க ஈடுபாடு உண்டு. மற்ற கலைகளுக்கும், கலைஞர்களுக்கும் ஆதரவளிப்பார்கள். நண்பர்களுக்கு அடிக்கடி விருந்து கொடுத்து மகிழ்வார்கள்.
இவர்கள் மற்றவர்களைத் தங்கள் வசப்படுத்தி, தங்களது காரியங்களை முடித்துக் கொள்வதில் வல்லவர்கள். தங்களின் முன்னேற்றத்தின் மீதே கருத்தாக இருப்பார்கள். தங்களின் வசதியைப் பெருக்குவது எப்படி பணத்தை இன்னும் பெருக்குவது எப்படி என்று சிந்தித்தே, காய்களை நகர்த்துவார்கள். 6 எண் வலுப்பெற்றால், ஆன்மீகத்திலும் வெற்றி அடைவார்கள்.
லாட்டரி, குதிரைப்பந்தயம் இவைகளில் மிகுந்த ஆர்வமும், அவற்றில் அதிர்ஷ்டமும் உண்டு. தங்களது சுயலாபத்திற்காகவே, அடுத்தவர்களுக்கு உதவி செய்வார்கள். எக்காரியமானாலும் நன்றாகச் சிந்தித்தே ஒரு முடிவுக்கு வருவார்கள். தேவையற்ற ரிஸ்க்குகளை எடுக்கத் தயங்குவார்கள். மந்திரங்கள், மாய தந்திரங்கள் ஆகியவற்றை அறிந்து கொண்டு, அவற்றைக் காசாக்குவதில் வல்லவர்கள்.
இவர்கள் செல்வத்தைக் குவித்திடும், லட்சுமியின் புத்திரர்கள் ஆவார்கள். மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையும் உண்டு. இன்பங்கள் துய்ப்பதில் சலிக்க மாட்டார்கள். அதற்கேற்றவாறு உடல் சக்தியும் மிகுந்திருக்கும். இவர்களது உருவம் அழகாக இருப்பதால் பெண்களை எளிதில் கவர்ந்து விடுவார்கள். அவர்களும் இவர்ளைப் பயன்படுத்திக் கொள்ளத் தயங்கமாட்டார்கள். இன்ப அனுபவங்களில் தீவிர ஈடுபாடு உண்டு. தலைமுதல் பாதம் வரை ஒரே சீராகவும், அழகாகவும் இருப்பார்கள். அழகான உடை, மற்றும் வாசனைத் திரவியங்கள் மூலம் தங்களை மேலும் அழகுபடுத்திக் கொள்வார்கள். தாங்கள் வசிக்கும் இடத்தினையும் மிகவும் அழகாக வைத்துக் கொள்வார்கள்.

காதல் விஷயங்களில் அதிர்ஷ்டகாரமானவர்கள். அதிக காம குணம் இருப்பதால், ஒழுக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கமாட்டார்கள். (எண்ணின் பலம் குறைந்தால் ஸ்திரீலோலர்கள் ஆகிவிடுவர்)
இவர்களுக்கு நல்ல அழகும், குணங்களும் உள்ள கணவன்/ மனைவி அமைவர். தம்மிடமுள்ள கவர்ச்சியை வெளிப்படுத்தும் சூழ்நிலைகளில் சிக்கிக் கொள்ளாமல் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். எனவே, திருமணமாகாதர்கள். கூடிய விரைவில் திருமணம் செய்து கொண்டால் இந்தப் பிரச்சினைகளிலிருந்து சமாளித்துக் கொள்ளலாம்.
பொதுவாக இந்த எண்காரர்களுக்கு உணவு, உடை, வீடு ஆகியவற்றில் குறைபாடுகள் வாராது. வசதிகளை எப்படியும் உருவாக்கிக் கொள்வார்கள்! பலருக்குப் பிறவியிலேயே அமைந்திருக்கும்.
சினிமா, டி.வி. ரேடியோ போன்றவற்றில் பெரும் புகழ்பெற்ற கலைஞர்களும் பேச்சாளர்களும் இவர்களே! இவர்கள் மற்றவர்களின் கலைத் திறமையைப் பாராட்டுவார்கள். பொறாமையும் பிடிவாதமும் உண்டு.
கீழ்த்தரமானவர்கள் (எண்பலம் மிகவும் குறைந்தவர்கள்) பிறரை ஏமாற்றியும், வஞ்சித்தும் பிழைப்பார்கள். கெட்ட வழிகளில் துணிந்து செல்வார்கள். தங்களை நம்பியவர்களைக் கூட ஏமாற்றுவார்கள். இவர்களது மனதில் அதிக காமமும், பணத்தாசையும் இருக்கும்.
இவர்களுக்குக் குழந்தை பாக்கியம் நிறைய உண்டு! பெண் குழந்தைகள் அதிகம் உண்டு. பொதுவாக உலக கலைகளை அனுபவிக்கப் பிறந்தவர்கள் இவர்களே! இவர்களால் தான் உலகில் பழைய கலைகளும், இலக்கியங்களும் இன்னும் நிலைபெற்று உள்ளன. 
அதிர்ஷ்ட தினங்கள் 
ஒவ்வொரு மாதத்திலும் 6, 15, 24 ஆகிய தேதிகளும் 9, 18, 27 ஆகிய தேதிகளும் மிக்க அதிர்ஷ்டகரமானவையே! கூட்டு எண் 6 மற்றும் 9 எண் வரும் தினங்களும் நல்ல பலன்களையே கொடுக்கும்.
ஒவ்வொரு மாதத்திலும் 3, 12, 21 ஆகிய தினங்களும் கூட்டு எண் 3 வரும் தினங்களும் மிகவும் துரதிர்ஷ்டமானவை. 5, 14, 23 தேதிகளில் முக்கிய முடிவுகள் எடுக்கக்கூடாது! நடுத்தரமான பலன்களே கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறங்கள்  Colours
இவர்களுக்கு மிகவும் உகந்தது பச்சை, நீலம் மற்றும் இரண்டு கலந்த வண்ணங்கள்! இலேசான சிவப்பும் அதிர்ஷ்டத்தைக் கூட்டுவிக்கும். வெள்ளை, ரோஸ், மஞ்சள் ஆகிய வண்ணங்களைத் தவிர்த்து விடவும்.
அதிர்ஷ்ட இரத்தினங்கள் 
இவர்களுக்கு மரகதமே (பச்சை என்பார்கள்) சிறந்தது. ஆங்கிலத்தில் என்பார்கள். மேலும் (பச்சை நிறம்) போன்ற இரத்தினக் கற்களும் அணிந்துவர, யோகங்கள் பெருகும். (செவ்வந்திக்கல்) அணியவே கூடாது!
ஆம் தேதி பிறந்தவர்கள்  
எப்போதும் செல்வத்தில் திளைக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அதற்காகக் கடுமையாக உழைப்பார்கள். எவரையும் சரிக்கட்டி, தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்வார்கள். பெண் தன்மையும் காணப்படும். எதிலும் மிகுந்த ஊக்கத்துடன் ஈடுபடுவார்கள். அடக்க சுபாவமும், ஆழ்ந்த சிந்தனைகளும் உண்டு. கலைகளில் (64 கலைகளில் ஏதாவது ஒன்று அல்லது சில) மிகுந்த ஈடுபாடு கொண்டிருப்பார்கள். இவர்கள் சாந்தமானவர்கள்தாம். கோபம் வந்தால் விசுவரூபமாகிவிடும். சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்தவர்கள். சுகம் நிறைய அனுபவிப்பார்கள்.
15 ஆம் தேதி பிறந்தவர்கள் 
மற்ற மக்களை வசீகரிக்கும் தன்மை இயற்கையிலேயே உண்டு. பேச்சுத்திறமையும், கவர்ச்சியும் உண்டு. கலைகளில் தேர்ச்சியும், நகைச்சுவைப் பேச்சும் உண்டு. எதிரியை எடை போடுவதில் மிகவும் திறமையானவர்கள். ஆனால் எதிரிகளை எப்போதும் மறக்க மாட்டார்கள். பொறுமையுடன், காலம் பார்த்துப் பகையைத் தீர்த்துக் கொள்வார்கள். மனதிற்குள் கவலைகள் இருந்தாலும் அவற்றை வெளியில் காட்டிக் கொள்ளாமல் சமாளிப்பார்கள். நாடகம், சினிமா, டி.வி. போன்றவற்றில் ஈடுபடுவார்கள். நல்ல புகழும், அதிர்ஷ்டமும் தேடி வரும்.
24 ஆம் தேதி பிறந்தவர்கள் 
அரசாங்க ஆதரவு இவர்களுக்குக் கிடைக்கும். அடக்கமும், அமைதியும் ஆனால் அழுத்தமும் நிறைந்தவர்கள். பெரிய இடத்துச் சம்பந்தமும், பெரும் பதவிகளும் தேடி வரும். மிகவும் துணிச்சல்காரர்கள். மற்றவர்கள் தயங்கும் காரியங்களை இவர்கள் ஏற்றுக் கொண்டு, திறமையுடன் செய்து முடிப்பார்கள். எனவே, விரைவிலேயே கிடைத்துவிடும். சிலர் விளையாட்டில் மிகவும் சிறந்து விளங்குவார்கள். தமக்கென ஒரு கொள்கையை ஏற்படுத்திக் கொண்டு அதில் துணிந்து செல்வார்கள். கலையுலகிலும் அதிர்ஷ்டம் உண்டு. சிலருக்குக் கர்வமும் ஏற்படும். தங்கள் கருத்துகளை அடுத்தவர் மீது திணிப்பார்கள். பொதுவாக வாழ்க்கையில் அதிர்ஷ்டசாலிகள் என்றே கூற வேண்டும்.
எண் 6க்கான (சுக்கிரன்) தொழில்கள்
இவர்கள் கலைத் துறைக்காகவே பிறந்தவர்கள். கலையின் பல துறைகளிலும் ஈடுபடுவார்கள். சிற்பம், சித்திரம், சங்கீதம் போன்ற கவின் கலைகளில் (Fine Arts) வெற்றி பெறுவார்கள். சிலர் சட்ட நுணுக்கம் பேசி பணம் அதிகம் சம்பாதிக்கும் வக்கீல்களாகவும், மருத்துவர்களாகவும் இருப்பார்கள். பெண்களின் அழகு சாதனங்கள் உற்பத்தி மிகவும் விற்பனை துறைகள் நன்கு அமையும். பட்டு மற்றும் ஜவுளி வியாபாரம், முத்து, பவளம், வைர வியாபாரம் உகந்தவை! இசைக் கருவிகளில் ஏதாவது ஒன்றில் நாட்டம் இருக்கும்! நளினமாக நடித்துக் காண்பிக்கும் குணமும் உண்டு.
திரைப்படத் தொழில், ஒப்பனைத் தொழில், காட்சி அமைப்புகள் தயார் செய்தல் போன்றவையும் நன்கு அணியும். மதுபான வகைகள், நெல்லி, எலுமிச்சை, தானியங்கள், அரிசி, உப்பு, வாசனைப் பொருட்கள் வியாபாரம், உணவுவிடுதி, தங்கும் விடுதி (Lodge) நடத்துதல், ஜோதிடம் பார்த்தல், பசு, பால், நெய் வியாபாரம், அழகு தையல் நிலையங்கள், ஆண், பெண் அழகு நிலையங்களும் இவர்களுக்கு ஏற்றவை! Fashion Designing, Garment தொழில்களும் உகந்தவை. இயற்கையை இரசிப்பவர்கள், சிலர் மருத்துவத் துறையிலும் பிரகாசிப்பார்கள்.
நவக்கிரக மந்திரங்கள் - சுக்கிரன்

சுக்கிரன் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் சுக்கிர தசை அல்லது சுக்கிர அந்தர் தசையின் போதுசுக்கிரனின் கடவுளான மஹாலட்சுமி தேவியைத் தினமும் வழிபடவேண்டும்.
தினசரி ஸ்ரீ ஸூக்தம் அல்லது தேவி துதி அல்லது துர்கா சாலிசா படிக்க வேண்டும்.
சுக்கிர மூல மந்திர ஜபம்:
"
ஓம் ட்ரம் ட்ரீம் ட்ரௌம் ஷக் சுக்ராய நமஹ",

40 நாட்களில் 20000 முறை சொல்ல வேண்டும்.
சுக்கிர ஸ்தோத்திரம் படிக்க வேண்டும்.
ஹிமகுந்த ம்ருணாளாபம்
தைத்யானாம் பரமம் குரும்!
ஸர்வாசாஸ்த்ர ப்ரவக்தாரம்
பார்கவம் ப்ரணமாம் யஹம்!!

தமிழில்,

சுக்கிரமூர்த்தி சுபமிக யீவாய்
வக்கிரமின்றி வரமிகத் தருள்வாய்!
வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே
அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே!! 
தொண்டுதுணி அல்லது வெள்ளிக்கிழமை ஒரு பெண்ணிடம்
 வெண்ணை அல்லது தயிர் நன்கொடை கொடுக்கவேண்டும்.
நோன்பு நாள்: வெள்ளிக்கிழமை.
பூஜை: தேவி பூஜை. மஹாலட்சுமிக்கு வெண்தாமரை
சாத்தி வழிபடா வேண்டும்.
ருத்ராட்சம்: 9 முக ருத்ராட்சம் அணியவேண்டும்.
சுக்கிர காயத்ரி மந்திரம்
அச்வ த்வஜாய வித்மஹே தநு: ஷஸ்தாய தீமஹி|
தந்நோ சுக்ர: ப்ரசோதயாத்||
சுக்கிர தசையின்போது வால்மீகி ராமாயணத்தில் சுந்தர காண்டத்தின், 36 வது அத்தியாயம் தினமும் படிக்க வேண்டும்.

சங்கீத முமூர்த்திகளில் ஓருவரும், வேத விற்பன்னருமான
 ஸ்ரீ மான் முத்துசாமி தக்ஷிதர் அருளியது.
சுக்கிர பகவான் கீர்தனைகளை பரசு ராகத்திலும்
சுக்கிர பகவான் கீர்த்தனம் - பல்லவி
ஸ்ரீசுக்ரம் பகவந்தம் சிந்தயாமி ஸந்தகம்
ஸகல தத்வக் ஞம் (ஸ்ரீ)
அனு பல்லவி
ஹே சுக்ர பகவன்மாம் ஆசுபாலய
வ்ருஷ துலாதீச தைத்ய ஹ்ரிதோபதேச
கேசவ கடாக்ஷைக நேத்ரம் கிரீடதரம் தவளகாத்ரம்
சரணம்
விம்ஸதி வத்ஸரோடு தஸா விபாகம் அஷ்டவர்க்கம்
கவிம் களத்ர காரகம் ரவி நிர்ஜர குருவைரிணம்
நவாம்ஸஹோராத்ரேக்காணாதி வர்க்கோத்தமாவஸரஸம்யே
வக்ரோச்ச நீச ஸ்வக்ஷேத்ர வரகேந்த்ர மூல த்ரிகோணே
த்ரிஸாம்ச ஷஷ்ட யாம்ஸைராவதாம்ஸ பாரிஜாதாம்ஸ கோபுரம்ஸ
ராஜயோக காரகம் ராஜ்யப்ரதம் குரு குஹமுதம் (ஸ்ரீ)
சகல விதமான தத்துவங்களை உணர்ந்தவரே, மஹா விஷ்ணுவின் கடாக்ஷத்தால் ஒரு கண்னை திரும்ப பெற்றவரே, வெளுத்த சரீரம் கொண்டவரே, ரிஷப, துலா ராசிகளின் அதிபதியே, அசுரர்க்கு தலைவனே, சுக்கிர திசையில் 20 ஆண்டுகள் உள்ளவரே, மற்ற கிரகங்களை விட விசாலமானவரே, சூர்ய, குரு கிரகங்களுக்கு பகைவனே, பண்டிதர்,

களத்திர வியஷயங்களுக்கு காரண கர்த்தாவே, ராசியின் 9 பாகமான நவாம்சம், ராசியின் ஹோரை, ராசியின் மூன்று பங்குகளான த்ரேக்கோணம் இவைகளில் வர்கோத்ரமானவரே, த்ரிகோணம், மூல த்ரிகோணம் அல்லது விருச்சிக ராசி இவற்றில் ராசியின் 30 பங்குகளான த்ரிம்சாம்சம், ஜநந லக்னத்தை 60 பிரித்து வரும் ஐராவதாம்சம், பாரிஜாதாம்சம், கோராம்சம் என்ற வர்க்கத்தை அடைந்த காலங்களில் ராஜ யோகத்தை அளிப்பவரே, குரு குஹனுக்கு சந்தோஷம் அளிப்பவரே சுக்கிர பகவானே உம்மை துத்திக்கின்றேன்.
சுக்கிர பகவானான சுக்கிராச்சாரியார்
அசுரர்களின் குருவாக விளங்கியவர் இந்த சுக்கிராச்சாரியார். இறந்தவரை உயிர்ப்பிக்கும் " அமிர்த சஞ்சீவினி " மந்திரத்தை ஈசனிடம் இருந்து பெற்றவர். ஒரு சமயம் தேவர்களுக்கும் , அசுரர்களுக்கும் நடந்த போரில் , இறந்த அசுரர்களை சுக்கிராச்சாரியார் உயிர்ப்பிக்க, சிவ பெருமான் பார்க்கவரை விழுங்கினார். பல காலம் கழித்து தவப் பயனால் வெளிவந்தார் பார்க்கவர்.
இதனால் சிவ புத்திரர் ஆனார். வெண்ணிறம் கொண்டதால் சுக்கிரன் என்ப் பெயர் பெற்றார் பார்க்கவர். வாமன அவதாரத்தில், மகாபலி மகா விஷ்ணுவிற்கு தானம் தருகையில், தானத்தை தடுக்கும் பொருட்டு வண்டாக மாறி, தர்ப்பை புல்லால் தன் ஒரு கண்ணை இழந்தவர். பின்னர் பல காலம் தவம் இருந்து தன் கண்ணை திரும்ப பெற்று, நவகிரகங்களில் ஒருவராக பெரும் பேறு அடைந்தவர்.. சுக்கிரன் அசுர குருவாயினும் அசுரத் தன்மையற்ற சுப கிரகர். ஒருவரது வாழ்வில் சுக்கிர திசை ஒரு முறைதான் வரும். சுக்கிர திசை 30 வருடங்கள் நடக்கும். ஒருவரது ஜாதகத்தில், சுக்கிரன் அருள் கிடைத்தால் நல்ல பல மேன்மைகள் அடைவர்.   சுக்கிர தோஷத்திற்கு கஜ லட்சுமி, ராஜ ராஜேஸ்வரி வழிபாடும், " தேவி மகாத்மிய " பாராயணமும் செய்ய வேண்டும். சுக்கிரனின் ஆசி கிடைக்க அவரை வெள்ளை தாமரை மலர்களால் அர்ச்சித்து, அரசு சமித்து தூபம் காட்டி, தயிரன்னம், மொச்சை பொடி அன்னம் கொண்டு நைவேத்யம் செய்ய்து, சுக்கிர பகவானை 9 முறை வலம் வர வேண்டும்.






சுக்கிர பகவானுக்கு உரியவையும், பிரீத்தியானவையும்
ராசி
ரிஷபம், துலாம்
திக்கு
கிழக்கு
அதி தேவதை
இந்திராணி
ப்ரத்யதி தேவதை
இந்திர மருத்துவன்
தலம்
ஸ்ரீரங்கம், கஞ்சனூர், திருநாவலூர்
வாகனம்
தலை
நிறம்
வெள்ளை
உலோகம்
வெள்ளி
தானியம்
மொச்சை பயிறு
மலர்
வெண் தாமரை
வஸ்திரம்
வெள்ளை நிற ஆடைகள்
ரத்தினம்
வைரம்
நைவேத்யம்
மொச்சைப் பொடி அன்னம்
சமித்து
அத்தி
ஸ்லோகம்
" திரவிய லாபம் சேர்ப்பான் தேர்ந்து ஆரோக்கியம் ஈவான்
சயனத்தை சுகமாக செய்வான் நினைவுறு நண்பர் கூட்டம்
நிறைந்திடச் செய்வான் வேனன் மறை புகழ் கொண்ட
சுக்கிரன் மகிமையை யார் சொல்வாரே !!!
ஒருவருக்கு விவாக பிராப்தி வேண்டும் என்றாலும், மலட்டு தன்மை நீங்கி புத்திரப் பேறு கிடைக்க வேண்டும் என்றாலும் சுக்கிரனின் அனுக்கிரகம் மிக அவசியம். இவர் தனது நான்கு கைகளில் தண்டம், வரகஸ்தம், கமண்டலம், அஷமாலை கொண்டு விளங்குபவர். வெண்ணிற ஆடையுடனும் , வெள்ளை பூவுடன் காட்சி தருபவர். தனது அதி தேவதையான தேவேந்திரனின் மனைவி இந்திராணியை வழிபட்டால் மிகுந்த மன மகிழ்வு அடைபவர்.
வெள்ளிக் கிழமைகள் விரதம் இருப்பதாலும், கஞ்சனூர் சென்று வழிபடுவதாலும், ராஜ ராஜேஸ்வரியை வணங்குவதாலும், வெள்ளி, வைர நகைகள் அணிவதாலும், வெண்ணிற ஆடைகள் உடுத்திக் கொள்வதாலும், மொச்சை தானியத்தை தானமாக தருவதாலும் சுக்கிர தோஷங்கள்  நீங்கும். சுக்கிர பகவானின் அருளாசி கிடைக்கும்.
சிறப்பான சில குறிப்புகள்
எண்                     :- 6
எண்ணுக்குறிய கிரஹம்     :- சுக்கிரன்
அதிர்ஷ்ட தேதிகள்        :- 6,15, 24, 9, 18, 27
அதிர்ஷ்ட கிழமை         :- வெள்ளி, செவ்வாய்
அதிர்ஷ்ட மாதம்          :- ஜுன்
அதிர்ஷ்ட ரத்தினங்கள்      :- வைரம், மரகதம்
அதிஷ்ட திசை            :- மேற்கு, தென்மேற்கு
அதிர்ஷ்ட நிறம்           :- வெள்ளை, நீலம், பச்சை      
அதிர்ஷ்ட தெய்வங்கள்      :- மஹாலட்சுமி, துர்கை, கருடாழ்வார்
அதிர்ஷ்ட மலர்கள்         :- மல்லிகை, வெண்தாமரை
அதிர்ஷ்ட தூப, தீபம் :- லவங்க தூபம், குங்குலியம்
அதிர்ஷ்ட சின்னங்கள்       :- கருடன், பசு, தாமரை, புஷ்பம், நீர்
அதிர்ஷ்ட மூலிகைகள்       :- செந்நாயுருவி, அம்மான்பச்சை
அதிர்ஷ்ட யந்திரங்கள்       :- குபேர யந்திரம், அஷ்டலட்சுமி யந்திரம் ஸ்ரீசக்ரம்
அதிர்ஷ்ட எண்               :-   6, 9
ஆகாத எண் மற்றும் கூட்டுத்தொகை :-  3, 5
ஆகாத தேதிகள்           :-   3,12, 21, 30, 5,14, 23
ஆகாத நிறம்             :-   கருப்பு

குறிப்பு :  உங்கள் பிறந்த தேதி நேரம் உங்கள் பெயர் முகவரி, அனுப்பி வைத்தால் எண் கணிதபடி  உங்கள்  யோகமான  பெயர், ராசிரத்தினம், யோகமான நிறம், யோகமான தேதிகள், ஆகாத தேதி, ஆகாத நிறம், போன்றவை அனுப்படும். E-mail : முகவரிக்கே அனுப்படும். அல்லது போஸ்டல் முறையில், அனுப்படும்.
ஜாதகம் கணிக்க வேண்டும் என்றால் அதற்கு உண்டான கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.    
ஜோதிடர், புரோகிதர், G.V. மணிகண்ட ஷர்மா
ஓம் ஐம் க்லீம் சௌ : சௌ க்லீம் ஐம்  இது ஸ்ரீ பாலா திருபுரசுந்தரி மூல மந்திரம்  இதை ஜெபம் செய்பவர்களுக்கு வாக்கு சித்தி உண்டாகும். ஞாபக சக்தி அதிகரிக்கும்.
PROGITHAM , JATHAGAM PARKA, THIRUMANA PORUTHAM ,
JATHAGAM KANIKKA,   NUMEROLOGY,  GEMOLOGY
G.V. MANIKANDA SHARMA
1/267, MMDA Colony, J J Negar Mogappair East
Chennai – 600 037 , Tamil Nadu – India
Cell : +91 9962225358 9444226039

No comments:

Post a Comment