திதிகள்
 ஜோதிட  பாடம் திதிகள்  கணிக்கும்  வழி.  பாடம் -1
திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம். அமாவாசை
அன்று சூரியனும் சந்திரனும் சேர்ந்திருப்பார்கள். அதன் பின் சந்திரன் சூரியனிடம்
இருந்து விலகி செல்வார். திதி எனப்படுவது பஞ்சாங்கத்தின் ஒரு முக்கிய பகுதியாகும்.
ஒவ்வொரு மாதமும் 30 திதிகள்
கடைபிடிக்கப்படுகின்றன. இதில் இரண்டு பட்சங்கள் உள்ளன. அவை கிருஷ்ண பட்சம் அல்லது
தேய்பிறை மற்றும் சுக்கில பட்சம் அல்லது  வளர்பிறை
ஆகும்.
திதியை எவ்வாறு  கணடுபிடிப்பது.
திதியை கணக்கிட ராசி மண்டலத்தை அதாவது 360-00 பாகயை 30-00 சமபாகங்களாக
பிரித்து 30 X12 = 360 பாகை என வகைப்படுத்தி. திதிகள் மொத்தம் 30 இதில் சூரியன் நின்ற
பாகையிலிருந்து 180 பாகைக்குள் , சந்திரன் 
இருந்தால் வளர்பிறை திதி என்றும், 180 பாகைமுதல் 360 பாகைக்குள் இருந்தால் தேய்பிறை
திதி என்றும் கூறுகிறோம்.
     ஓருவர் பிறந்த நேரத்தில்
சந்திரன் நின்ற பாகையில், சூரியன் நின்ற பாகையை கழித்தால் வரும் பாகையை திதி அட்டவணையில்
காண்க, மீதமுள்ள பாகை 180 க்குள் அமைந்தால் வளர்பிறை திதி என்றும், 180 க்குமேல் அமைந்தால்
தேய்பிறை திதி என்றும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
| 
   
எண் 
 | 
  
   
சுக்கில பட்சம் 
 | 
  
   
கிருஷ்ண பட்சம் 
 | 
  
   
தெய்வம் மற்றும் செய்ய
  வேண்டியவை! 
 | 
 
| 
   
1 
 | 
  
  
 
பாகை காலை 00-00
  -12-00  
 | 
  
   
பிரதமை  
பாகை  காலை 180-00 -192-00 
 | 
  
   
முதல் சந்திர நாள் முக்கிய தெய்வம் அக்னி ஆகும். பூஜைகள் மற்றும்
  மங்கள காரியங்கள் செய்ய உகந்த நாள். 
 | 
 
| 
   
2 
 | 
  
   
துவி்தியை பாகை  காலை 192-00 -204-00 
 | 
  
   
இது ப்ரம்மாவுக்கு உரிய நாள் இன்று கட்டிடம் கட்டுவதர்கான அஸ்திவாரம்
  அமைத்தல் மற்றும் நிலைத்தன்மை கொண்டவை உருவாக்குதல் நன்மைதரும். 
 | 
 |
| 
   
3 
 | 
  
   
திருதியை பாகை காலை 204-00 - 216-00 
 | 
  
   
கெளரிமாதாவுக்கு உகந்த நாள்.சிகை திருத்தம் செய்தல்,முகசவரம், நகம்
  வெட்டுதல் முதலியன நன்ைம தரும். 
 | 
 |
| 
   
4 
 | 
  
  
 
பாகை காலை 36-00 -
  48-00 
 | 
  
   
சதுர்த்தி  
பாகை காலை 216-00 -228-00 
 | 
  
   
நான்காம் நாள் எமன் மற்றும் வினாயகருக்குரிய நாள். எதிரிகளை வீள்த்துதல்,தடை
  தகர்தல் முதலிய போர் காரியங்கள் வெற்றி தரும். 
 | 
 
| 
   
5 
 | 
  
   
பஞ்சமி  
பாகை காலை 228-00 -240-00 
 | 
  
   
இது நாகதேவனின் நாள்,விஷம் முரித்தல்,மருத்துவம் செய்தல் அறுவை சிகிச்சை
  முதலியன பலன் தரும். 
 | 
 |
| 
   
6 
 | 
  
  
 
 பாகை காலை 60-00 - 72-00 
 | 
  
   
சஷ்டி  
பாகை காலை 240-00 -
  252-00 
 | 
  
   
நாளின் தெய்வம் முருகன்.புதிய நண்பர்களை சந்தித்தல்,கொண்டாட்டம் கேளிக்கை
  முதலியன சிறப்பு. 
 | 
 
| 
   
7 
 | 
  
  
 
பாகை காலை 72-00 -
  84-00 
 | 
  
   
சப்தமி  
பாகை காலை 252-00 -
  264-00 
 | 
  
   
சூரியனின் நாள்.பிரயாணம் தொடங்குதல்,பிரயாண படி கேட்டல், முதலிய நகர்தல்
  சம்மநதமான காரியங்கள் கைகூடும். 
 | 
 
| 
   
8 
 | 
  
  
 
பாகை காலை 84-00 -
  96-00 
 | 
  
   
அஷ்டமி  
பாகை காலை 264-00 - 276-00 
 | 
  
   
இன்னாளின் கடவுள் மஹாருத்ரன் ஆவார்.ஆயுதம் எடுத்தல்,அரன் அமைத்தல்,போர்
  மற்றும் தற்காப்பு கலை கற்றல் ஆகியவை உகநதது 
 | 
 
| 
   
9 
 | 
  
  
 
 பாகை காலை 96-00 -108-00 
 | 
  
   
நவமி  
பாகை காலை 276-00 -
  288-00  
 | 
  
   
அம்பிகையின் நாள்.எதிரிகளை கொல்லுதல்,வினாசம் செய்தல். 
 | 
 
| 
   
10 
 | 
  
  
 
பாகை காலை 108-00 -120-00 
 | 
  
   
தசமி  
பாகை காலை 288-00 - 300-00 
 | 
  
   
தர்மராஜாவின் நாள்.மதவிழாக்கள்,ஆன்மீக செயல்கள் நன்மை தரும். 
 | 
 
| 
   
11 
 | 
  
  
 
 பாகை காலை 120-00 -132-00 
 | 
  
   
ஏகாதசி  
பாகை காலை 300-00-
  312-00 
 | 
  
   
மஹாருத்ரனின் நாள். இன்னாளில் விரதம் மேற்கொள்ளுதல் மற்றும் பரமாத்வாவை
  தியனிதல் சிறப்பு. 
 | 
 
| 
   
12 
 | 
  
  
 
பாகை காலை 132-00 -144-00 
 | 
  
   
துவாதசி  
பாகை காலை 312-00 -
  324-00 
 | 
  
   
மஹாவிஷ்ணுவின் ஆதிக்கமுடய நாள்.விளக்கு ஏற்றுதல், மதவிளாக்கள், பணிகள்
  செய்தல். 
 | 
 
| 
   
13 
 | 
  
   
திரயோதசி பாகை காலை 324-00 - 336-00 
 | 
  
   
மன்மதனின் நாள்.அன்பு செலுதுதல்,நட்பு வளர்தல். 
 | 
 |
| 
   
14 
 | 
  
  
 
பாகை காலை 156-00 -168-00 
 | 
  
   
சதுர்த்தசி  
பாகை காலை 336-00-348-00 
 | 
  
   
காளியின் ஆதிக்கமுடய நாள்.விஷத்தை கைய்யாளுதல்,தேவதைகளை அைழத்தல். 
 | 
 
| 
   
15 
 | 
  
  
 
பாகை காலை 348-00-360-00 
 | 
  
   
அமாவாசை பித்ருகளுக்கு காரியங்கள் செய்யவும்.பௌர்ணமி அன்று அக்னிக்கு
  ஆஹுதி கொடுத்தல் முதலியன நலம் தரும். 
 | 
 
அமாவாசை நாளன்று சூரியனும் சந்திரனும் 0° (0 பாகையில்) காணப்படுவார்கள். அதனால் பூமியில் இருப்போருக்கு சந்திரனைப் பார்க்கமுடியாது.
அதற்குப்பின் சந்திரன் தினமும் ஏறத்தாழ 12° சூரியனின் பார்வையில் இருந்து விலகிச் சென்று
கொண்டிருக்கும். 15 ஆம் நாளான பௌர்ணமி அன்று சூரியனில் இருந்து 180°
தூரத்தில் இருக்கும். அப்போது சூரியனின் முழுப்பார்வையும் சந்திரனின் மேல்
விழுகின்றது. அதாவது இராசிச் சக்கரத்தில் சூரியனில் இருந்து 7-வது ராசியில்
இருக்கும்.
அமாவாசைக்கு மறுநாள் அன்று சந்திரன் 12° தூரம் விலகி இருக்கும். அந்நாள் பிரதமை எனப்படும். அதற்கு மறுநாள் மேலும் ஒரு
12° விலகியிருக்கும். அந்நாள் துதியை எனப்படும். மூன்றாம் நாள் திருதியை, 4-ம் நாள் சதுர்த்தி, 5-ம் நாள் பஞ்சமி, 6-ம் நாள்
சஷ்டி, 7-ம் நாள் சப்தமி. 8-ம் நாள் அஷ்டமி. 9-ம் நாள் நவமி. 10-ம் நாள்தசமி.
11-ம் நாள் ஏகாதசி. 12-ம் நாள் துவாதசி. 13-ம் நாள்திரயோதசி.
14-ம் நாள் சதுர்தசி. 15-ம் நாள் பெர்ணமி.
சந்திரன் அமாவாசையில் இருந்து சிறிது, சிறிதாக
வளர்வதால் இவைகள் எல்லாம் வளர் பிறைத் திதிகள் அல்லது சுக்கில பட்சம் என்பார்கள்.
தேய்பிறைத் திதிகள்
அதே போல் பௌர்ணமியில் இருந்து சந்திரன் தினமும்
சிறிது, சிறிதாக தேய்வது தேய்பிறை எனப்படும். முதல் நாள் பெயர் பிரதமை. 2-ம் நாள் துதியை, 3-ம் நாள் திருதியை, பின்பு சதுர்த்தி, பஞ்சமி,
சஷ்டி, எனச் சென்று அமாவாசையில் முடியும்.
இந்தக் காலத்தில் சந்திரன் தேய்வதால் இவை
கிருஷ்ணபட்சம் அல்லது தேய்பிறைத் திதிகள் என அழைக்கப்படும்.
இவைகள் அனைத்தும் சோதிடத்தில் நல்ல நாட்கள் பார்க்க உதவுகின்றன. பொதுவாக அட்டமி,
நவமித் திதிகளில் நல்ல காரியங்கள் செய்வதை எல்லோரும் தவிர்த்துக் கொள்கின்றனர்.
திதி கணிக்கும் போது சூரியன், சந்திரன், இடைவெளி துள்ளியமாக கணிக்கவும்.
உதாரணம் தேய்பிறை அஷ்டமி திதி கணிக்க சூரியன், 
207 பாகை, சந்திரன், 121 பாகை சுலபமான வழி  207 – 121 ஐ கழிக்க 86 வரும் இதில் 180ஐ கூட்டினால் 266 வரும்.  மேற்படி தேய்பிறை அஷ்டமி திதி பாகை – காலை 264-00 – 276-00 இருப்பது பார்க்கவும்.
No comments:
Post a Comment