Thursday 12 May 2016

கரும்பின் மருத்துவ குணங்கள்



கரும்பின் மருத்துவ குணங்கள்
 கோடைக்காலத்தில் எளிதில் கிடைக்கும் கரும்பு சாறு நமக்கு குளிர்ச்சியினை தரும். உடலுக்கு குளுமையை தரக்கூடியதும்> செரிமானத்தை தூண்டும் தன்மை உடையதும்> சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்க கூடியதும்> விக்ஷக்கடிக்கு மருந்தாக அமைவதும்> ஊட்டச்சத்து மிக்கதுமான கரும்பின் மருத்துவ குணங்களை பற்றி பார்ப்போம். பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட கரும்பு சாறை பயன்படுத்தி செரிமானத்தை தூண்டும் மருந்து தயாரிக்கலாம்.

மஞ்சள் காமாலை :
 கரும்பு சாற்றில் மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் மருத்துவப் பொருள் நிறைந்துள்ளது. பொதுவாக மஞ்சள் காமாலை வந்தால்> சருமம் மஞ்சள் நிறத்தில் காணப்படும் இதற்கு காரணம்> பிலிரூபின் இரத்தத்தில் கலந்திருப்பதே ஆகும். அதுமட்டுமின்றி மோசமான கல்லீரல் செயல்பாடுகள் மற்றும் பித்த நாளங்களில் அடைப்பு போன்றவைகளும் மஞ்சள் காமாலையை உண்டாக்கும். எனவே மஞ்சள் காமாலையிலிருந்து உடனே குணமாவதற்கு> இரண்டு டம்ளர் கரும்பு சாற்றுடன் எலுமிச்சை மற்றும் உப்பு சேர்த்து குடிக்க வேண்டும்.

தொற்றுநோய்கள் :
 உடலில் உள்ள சிறுநீரக குழாய்> பிறப்புறுப்பு> செரிமான மண்டலக் குழாய் போன்ற பல இடங்களில் தொற்றுநோய்களினால் எரிச்சல்> அரிப்பு போன்றவை ஏற்படும். இத்தகையவற்றை சரிசெய்ய ஒரு டம்ளர் கரும்பு சாறு குடித்தால்> அவை சரியாகிவிடும்.

நீரிழிவு கரும்பு :
இனிப்பாக இருப்பதால்> நீரிழிவு நோயாளிகள் சாப்பிட பயப்படுவார்கள். ஆனால் உண்மையில் இதில் இருக்கும் இனிப்பானது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை சீராக வைக்கும். எனவே உடல் எடையை குறைக்க விரும்புவோர் அல்லது சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டவர்கள்> இதனை எந்த ஒரு அச்சமுமின்றி சாப்பிடலாம்.

ஊட்டச்சத்துக்கள் :
கரும்பில் வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளது. அதிலும் பாஸ்பரஸ்இரும்புச்சத்து> பொட்டாசியம்> கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்றவை அதிக அளவில் இருப்பதால்உடலில் எந்த ஒரு ஊட்டச்சத்து குறைபாடுமின்றிஉடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

சளிஇருமல் மற்றும் தொண்டை வலி :
 நிறைய பேர் இருமல்சளி அல்லது தொண்டை வலி இருந்தால்கரும்பை நிச்சயம் சாப்பிடக் கூடாது என்று சொல்வார்கள். ஆனால் உண்மையில் அந்த மாதிரியான எண்ணம் தவறானது. இந்த மாதிரியான பிரச்சனைக்கு சிறந்தது என்று சொன்னால்அது கரும்பு தான்.

சளிநீர் வறட்சி :
நிறைய மக்கள் அதிக அளவு தண்ணீர் குடிப்பதை விரும்பமாட்டார்கள். எனவே அத்தகையவர்களுக்கு உடலில் ஏற்படும் வறட்சியை நீக்க கரும்பு சாற்றை குடிக்கலாம். மேலும் கோடைகாலத்தில் உடலானது அதிக சூடாக இருக்கும். எனவே உடல் வெப்பத்தை தணிப்பதற்கு தினமும் ஒரு டம்ளர் கரும்பு சாறு குடிப்பது நல்லது.

No comments:

Post a Comment