Friday 22 April 2016

இராமாயண மஹிமையின் கதை சுருக்கம்





இராமாயண மஹிமையின் கதை சுருக்கம்

தசரத மஹாராஜா செய்த யாகத்தின் பலனாய் அன்னை கோசலையின் மணிவயிற்றில் உதித்து, ரகுகுலத்திற்கு பெருமை அளித்து, வில்வித்தை வாள்வித்தையில் தேர்ந்து,
விஸ்வாமித்ர முனிவரின் யாகத்தை காத்து நின்று,
அகலிகைக்கு சாபவிமோசனமளித்து,


ஜனக நகர் சென்று, சிவ தனுசை வளைத்தொடித்து, நங்கை சீதையை கை பற்றி, சிற்றன்னை கைகேயின் ஆணையால் மரவுரி மான்தோல் தரித்து, மனையாள் சீதை சகோதரன் லக்ஷ்மணுடன் கானகம் சென்று, குஹனின் அன்பான உதவியால் கங்கையை கடந்து, சித்திரகூடம்தனில் தங்கி,
பரதனுக்கு பாதுகையை அளித்து, ராஜ்யத்தை ஆளச்செய்து,
அகஸ்தியரை தரிசித்து, பஞ்சவடி சென்று, அங்கு வந்த அரக்கி சூர்பணகையின் மூக்கை அறுக்கவைத்து, மாய மானான மாரீசனை கொன்று, சீதையை பிறிந்து மனம் தளர்ந்து, ஜடாயு செய்த உதவிக்கு நன்றி கூறி அதற்கு மோக்ஷம் அளித்து, ஸபரியை ஆசிர்வதித்து, அனுமனைக் கண்டு, சுக்ரீவனுடன் நட்பு கொண்டு, வாலியை வதைத்து,
அனுமனுக்கு அனுக்ரஹ பலமளித்து, விளையாட்டாக கடலை தாண்ட செய்து, அஸோக வனம்தனில் அமர்ந் துருந்த சீதையிடம் கனையாழியை கொடுக்கவைத்து,
ராவணனை கண்டு லங்கைக்கு தீயிட்டு வந்த அனுமனிட மிருந்து, சீதை கொடுத்தனுப்பிய சூடாமணியை பெற்று கொண்டு, அலைகடலில் அணைகட்டி பரிவாரங்க ளுடன் லங்கை சென்று, ராவணனை வென்று வதைத்து,
விபீஷணனுக்கு பட்டாபிஷேகம் செய்துவிட்டு,

அன்பு சீதைக்கு அக்னிதேவனின் ஆசியை பெற்று கொடுத்து,
ஆருயிர் சீதை ஆசை லக்ஷ்மண் தாசன் அனுமனுடன் நந்திக் ராமம் சென்று, அங்கு காத்திருந்த பரதனை அணைத்து கொண்டு, யாவரும் அயோத்தி திரும்பி, அங்கு கூடியிருந்த ஜனங்களுக்கு ஆசிகள் வழங்கிவிட்டு, அன்பு தாயார்களின் பொற்பாதங்களில் தலை வைத்து வணங்கி, அனுமன் தாங்கிய அரியணையில் அமர்ந்து, மணிமகுடம் ஏற்று கொண்ட மஹானுபாவன் ஸ்ரீராமபிரானை நான் தாளும் தடக்கையும் கூப்பி வணங்கி பஜிக்கிறேன்.


ஜெய்ஸ்ரீராம். ஸ்ரீராமநவமி நன்நாள் வாழ்த்துக்கள்

ஜோதிடம், புரோகிதம், எண்கணிதம், ராசிரத்தினம், பார்க்கப்படும், ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம், பிரசன்னம் பார்க்கப்படும், ஜாதகம் கணித்து தரப்படும். கணபதிஹோமம், கிரகபிரவேசம், ருதுசாந்தி, நாமகரணம், ராகு-கேது, செவ்வாய், சனி, சுக்கிர தோஷ நிவர்த்தி, ஹோமம் செய்து தரப்படும், திருமணதடை, புத்திர தோஷம் நிவர்த்திக்கு அணுகவும்.
பூஜைக்குறிய யந்திரம்:
கணபதி யந்திரம், லட்சுமிகுபேர யந்திரம், சுதர்ஸன யந்திரம், ஷண்முக யந்திரம், அனுமான் யந்திரம், வியாபாரவிருத்தி யந்திரம், காரிய சித்தி யந்திரம், ஸ்ரீசக்கர யந்திரம், மஹாலட்சுமி யந்திரம், பைரவ யந்திரம், பிரத்தியங்கரா யந்திரம், வாராஹி யந்திரம்,
இவை அனைத்தும் எங்கள்:
ஸ்ரீ பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்.
அம்மன் அருள்லோடு பூஜைசெய்து வழங்கப்படும்,
இந்த யந்திரம் பெறவிரும்பும் அன்பர்கள். கோத்ரம், பெயர், நட்சத்திரம், ஜென்ம ராசி, தெரியப்படுத்தவும் கம்பெனி வைத்து இருப்போர் கம்பெனி பெயர் குறிப்பிடவும்

ஸ்ரீ பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்

ஜோதிடர், புரோகிதர்.
G.V. மணிகண்ட ஷர்மா
Mobile. 9962225358
Mobile. 7092103071
Mobile. 7092103072
WhatsApp No 9444226039

தொடர்பு கொள்ளவும். மேற்படி விபரம் தொடர்பு கொள்வோர் உங்கள் பிரச்சனைகளை தெளிவாக குறிப்பிடுடவும்.
 

No comments:

Post a Comment