Friday 22 April 2016

முயற்சித்த போதும்




சந்தோஷமாக இரு !
*"*"*"*"*"*"*"*"*"*"*"*"*"*"
ராதேக்ருஷ்ணா....

தகப்பனே கொலை செய்ய 
முயற்சித்த போதும்
ப்ரஹ்லாதன் சந்தோஷமாக இருந்தான் . . .

சுடுகாட்டு வெட்டியானுக்கு
அடிமையாக்கிய போதும்
ராஜா அரிச்சந்திரன்
சந்தோஷமாக இருந்தான் . . .

பெற்ற பிள்ளையே
கேவலப்படுத்திய போதிலும் கைகேயி 
சந்தோஷமாக இருந்தாள் . . . 

உறவினர்களே சபை நடுவே அசிங்கப்படுத்திய போதும் விதுரர் சந்தோஷமாக இருந்தார் . . .

அம்புப்படுக்கையில்
வீழ்ந்த போதிலும்
பீஷ்மர் சந்தோஷமாக இருந்தார் . . .

இளம் விதவையான
சமயத்திலும் குந்திதேவி
சந்தோஷமாக இருந்தாள் . . .  

தரித்ரனாக வாழ்ந்த
சமயத்திலும் குசேலர்
சந்தோஷமாக இருந்தார் . . .


ஊனமாகப் பிறந்து
ஊர்ந்த போதிலும்
கூர்மதாஸர்
சந்தோஷமாக இருந்தார் . . .

பிறவிக் குருடனாக 
இருந்தபோதிலும்
சூர்தாஸர் சந்தோஷமாக இருந்தார் . . .

மனைவி
அவமானப்படுத்திய போதிலும் சந்த் துகாராம் சந்தோஷமாக இருந்தார் . . .

கணவன்
கஷ்டப்படுத்திய போதும்
குணவதிபாய்  
சந்தோஷமாக இருந்தாள் . . . 

இருகைகளையும்
வெட்டிய நிலையிலும்
சாருகாதாஸர்
சந்தோஷமாக இருந்தார் . . .

கைகால்களை வெட்டிப்
பாழுங்கிணற்றில் தள்ளியபோதும்
ஜயதேவர் சந்தோஷமாக இருந்தார் . . . 

மஹாபாபியினிடத்தில்
வேலை செய்த போதும்
சஞ்சயன் சந்தோஷமாக இருந்தார் . . .

பெற்ற பிள்ளையை
பறிகொடுத்த போதும்
பூந்தானம் சந்தோஷமாக இருந்தார் . . . 

 கூடப்பிறந்த சகோதரனே
படாதபாடு படுத்தியபோதும்
தியாகராஜர் சந்தோஷமாக இருந்தார் . . .


நரசிம்மர் சன்னிதியில்
விஷ தீர்த்தம் தந்த போதும்
மஹாராஜா ஸ்வாதித் திருநாள் சந்தோஷமாக இருந்தார் . . . 

 சோழ ராஜனின் சபையில்
கண்ணை இழந்த பின்பும்
கூரத்தாழ்வான் சந்தோஷமாக இருந்தார் . . . 


எப்படி முடிந்தது இவர்களால் ?
ரகசியம்.....
அவர்களோடு பகவான் எப்பொழுதும்
இருக்கின்றான் என்று உணர்ந்ததால் ! ! ! 

பகவான் எப்பொழுதும் கூட இருக்கிறான்
என்று உணர வழி?

விடாத நாம ஜபம்...
அதனால் இனிமேல்
அல்ப விஷயங்களுக்காக 
அழாதே ! ! !

எது எப்படி இருந்தாலும்,
யார் எப்படி நடத்தினாலும்,
எவர் மாறினாலும்,
எதை இழந்தாலும்,
யாரை இழந்தாலும்
உன் க்ருஷ்ணன் உன்னுடன்
இருக்கின்றான்....

ஆதலால் ...

விடாது நாம ஜபம் செய் . . .
திடமாக பகவானை நம்பு . . .
நீயும் சந்தோஷமாக இரு . . .

 இப்போதே சந்தோஷம் தெரிகிறதே...


ஜோதிடம், புரோகிதம், எண்கணிதம், ராசிரத்தினம், பார்க்கப்படும், ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம், பிரசன்னம் பார்க்கப்படும், ஜாதகம் கணித்து தரப்படும். கணபதிஹோமம், கிரகபிரவேசம், ருதுசாந்தி, நாமகரணம், ராகு-கேது, செவ்வாய், சனி, சுக்கிர தோஷ நிவர்த்தி, ஹோமம் செய்து தரப்படும், திருமணதடை, புத்திர தோஷம் நிவர்த்திக்கு அணுகவும்.
பூஜைக்குறிய யந்திரம்:
கணபதி யந்திரம், லட்சுமிகுபேர யந்திரம், சுதர்ஸன யந்திரம், ஷண்முக யந்திரம், அனுமான் யந்திரம், வியாபாரவிருத்தி யந்திரம், காரிய சித்தி யந்திரம், ஸ்ரீசக்கர யந்திரம், மஹாலட்சுமி யந்திரம், பைரவ யந்திரம், பிரத்தியங்கரா யந்திரம், வாராஹி யந்திரம்,
இவை அனைத்தும் எங்கள்:
ஸ்ரீ பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்.
அம்மன் அருள்லோடு பூஜைசெய்து வழங்கப்படும்,
இந்த யந்திரம் பெறவிரும்பும் அன்பர்கள். கோத்ரம், பெயர், நட்சத்திரம், ஜென்ம ராசி, தெரியப்படுத்தவும் கம்பெனி வைத்து இருப்போர் கம்பெனி பெயர் குறிப்பிடவும்

ஸ்ரீ பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்

ஜோதிடர், புரோகிதர்.
G.V. மணிகண்ட ஷர்மா
Mobile. 9962225358
Mobile. 7092103071
Mobile. 7092103072
WhatsApp No 9444226039

தொடர்பு கொள்ளவும். மேற்படி விபரம் தொடர்பு கொள்வோர் உங்கள் பிரச்சனைகளை தெளிவாக குறிப்பிடுடவும்.

No comments:

Post a Comment