Wednesday 6 April 2016

சிறுதானிய வற்றல் : வரகுக் கூழ் வற்றல்

சிறுதானிய வற்றல் : வரகுக் கூழ் வற்றல்

தேவையானவை: வரகரிசி - 500 கிராம், ஜவ்வரிசி - 100 கிராம், சீரகம் - 2 டீஸ்பூன், பெருங்காயம் - கால் டீஸ்பூன், புளித்த மோர் - ஒரு கப், உப்பு - தேவையான அளவு, கறிவேப்பிலை - சிறிதளவு, பச்சைமிளகாய் - 4. செய்முறை:வரகரிசியை 3 மணி நேரம் ஊற வைத்து, நைசாக அரைத்துக் கொள்ளவும். உப்பு சேர்த்துக் கலக்கி புளிக்க விடவும். மறுநாள் பெரிய குக்கரில் 4 லிட்டர் தண்ணீர் விட்டு அரைத்த மாவை இதனுடன் சேர்த்துக் கலக்கவும். புளித்த மோர், பெருங்காயம், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், சீரகம் சேர்த்து நன்கு கலக்கி கொதிக்க விடவும். இதனுடன் ஜவ்வரிசியையும் சேர்த்துக் கிளறவும். கெட்டியாக கூழ் காய்ச்சி, ஸ்பூனால் எடுத்து, பாலிதீன் ஷீட்டில், வட்ட வட்டமாக ஊற்றவும். நன்கு காய வைத்து எடுத்து, தேவைப்படும் போது பொரிக்கவும். வரகுக் கூழ் வற்றல் தயார்.

No comments:

Post a Comment