Thursday 21 April 2016

மணிமேகலை மற்றும் ஐம்பெரும் - ஐஞ்சிறுங் காப்பியங்கள்

இலக்கியம் - மணிமேகலை மற்றும் ஐம்பெரும் - ஐஞ்சிறுங் காப்பியங்கள் தொடர்பான செய்திகள்

1. மணிமேகலைக்கு முதன் முதலாக அமுதசுரபியில் பிச்சையிட்டவள் - ஆதிரை

2. தண்டமிழ் ஆசான், சாத்தான் நன்னூற்புலவன் என்று சாத்தனாரைப் புகழ்ந்துப் பாராட்டியவர் - இளங்கோவடிகள்

3. சீத்தலைச் சாத்தனார் வாழ்ந்த காலம் -கி.பி.இரண்டாம் நூற்றாண்டு

4. கூலம் என்பதன் பொருள் - தானியம்

5. யார் உதவியால் மணிமேகலை அமுதசுரபியைப் பெற்றுப் புகார் நகரை அடைகிறாள் - தீவதிலகை

6. எழுந்தெதிர் என்பதனை பிரித்தெழுதுக -எழுந்து + எதிர்

7. பேதைமை என்பதன் பொருள் - அறியாமை

8. நன்மொழி என்பதனை பிரித்தெழுதுக -நன்மை + மொழி

9. சீத்தலைச் சாத்தனாரும் ------------ சமகாலத்தவராவர் - இளங்கோவடிகளும்

10. எனக்கிடர் என்பதனை பிரித்தெழுதுக -எனக்கு + இடர்

11.ஐஞ்சிறுங் காப்பியங்கள் யாவை? -உதயணகுமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், நீலகேசி, சூளாமணி

12.கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மகள் - மணிமேகலை

13.மணிமேகலை பிறந்த ஊர் - பூம்புகார்

14.மணிமேகலை மறைந்த ஊர் - காஞ்சிபுரம்

15.தமிழின் இரண்டாவது காப்பிய நூல் -மணிமேகலை

16.மணிமேகலை ஒரு ------------------ காப்பியம். -பௌத்த காப்பியம்

17.பிணிநோய் என்பதன் பொருள் - நீங்கா நோய்

18.மணிமேகலை நூலின் முதல் காதை -விழாவறை காதை

19.மணிமேகலை நூலின் இறுதி காதை -பவத்திறம் அறுக

20.யாக்கை என்பதன் பொருள் - உடம்பு

21.சீத்தலைச் சாத்தனார் பிறந்த ஊர் -சீத்தலை (திருச்சிராப்பள்ளி)

22.சீத்தலைச் சாத்தானாரின் இயற்பெயர் -சாத்தன்

23.உண்டென்று என்பதனை பிரித்தெழுதுக -உண்டு + என்று

24.கோடு என்பதன் பொருள் - கொம்பு

25.வேட்கை என்பதன் பொருள் - விருப்பம்

No comments:

Post a Comment