Thursday 12 May 2016

ஏன் சாப்பிடும் போது பேசக்கூடாது தெரியுமா



ஏன் சாப்பிடும் போது பேசக்கூடாது தெரியுமா?
மனித முகத்தில் மண்டை ஓட்டின் அதாவது கபாலத்தின் அடிப்பகுதியில் தொடங்கி குரல் வளையின் கீழ் பகுதி வரை தொண்டை என்கிறது, மருத்து வம்.  இந்த தொண்டையை மேலும் மூன்று பகுதிகளாக பிரிக்கிறார்கள். அவை: முகத்தோடு இணைந்த தொண்டை, வாயோடு இணைந்த தொண்டை,  குரல் வளையோடு இணைந்த தொண்டை.

வாயிலிருந்து உணவுக் குழாயானது தொண்டை வழியாக வயிற்றுக்குப் போகிறது. அதேபோல் மூக்கிலிருந்து சுவாசக்குழாயும் தொண்டை வழியாக உணவுக் குழாயைக் கடந்து நுரையீரலுக்குப் போகிறது. இது கிட்டத்தட்ட ஒரு லெவல் கிராசிங் போன்றது.

சுவாசப் பாதையை சாலை என்று வைத்துக்கொண்டால் உணவுப் பாதைதான் ரெயில்வே பாதை. சாலை எப்போதும் திறந்தே இருக்கும். காற்று வந்து போய்க் கொண்டிருக்கும். உணவுப் பாதையில் உணவு வரும்போது அதாவது நாம் சாப்பிடும்போது சுவாசப்பாதை மூடிக் கொள்ளும். உணவு போனதும் மீண்டும் திறந்து கொள்ளும்.

இதில் எதற்கு கதவு போன்ற அமைப்பு என்றால் உணவுக் குழாய்க்குள் காற்றோ, சுவாசக் குழாய்க்குள் உணவுப் பொருளோ போய்விடக்கூடாது என்பதற்காகத் தான். பேசிக்கொண்டே சாப்பிடக்கூடாது என்கிறார்கள். அப்படி சாப்பிடும்போது சுவாசக் குழாய் திறக்கும்.

சுவாசக் குழாய் திறந்தால்தான் பேசமுடியும். இப்படி திறக்கும் சுவாசக் குழாய்க்குள் உணவுப் பொருள் தவறாக நுழைந்து விடும். இதை வெளி யேற்றும் முயற்சியில் சுவாசக் குழாய் உள்ளே நுழைந்த உணவை வெளியே தள்ளும். இதைத்தான் புரை ஏறுதல் என்கிறார்கள். மருத்துவத்துறையில் இதைவாட்ச் டாக் மெக்கானிசம்என்று கூறுகிறார்கள்.

சிலருக்கு தூங்கும் போது புரையேறும். அசந்து தூங்கும் போது அவரையும் அறியாமல் உமிழ்நீர் வழிந்து சுவாசக் குழாய்க்குள் நுழைந்து விடும். அதற்கு அதிகாலை எழுதல், தியானம் , யோகா, உடற்பயிற்சிகள் செய்தல், வழிபாடு பிரார்த்தனைகள் இவைகள்தான் உதவும்....புலம்பிக்கொண்டே இருப்பதும், கவலைப்பட்டுக்கொண்டே இருப்பதும் மன உறுதியை குலைத்து பிரச்சினைகளை மேலும் அதிகரிக்க செய்யும்...இதனால் உற்சாகம் கெட்டு வசிய சக்தி நீங்கி விடுகிறது... கவலை, புலம்பலைவிட்டு தள்ளிவிட்டு உள்மனம்,உளுறுப்புகள், மன ஆர்ரலை பெருக்கிக் கொள்ளுங்கள்.. நவகிரகங்களை சமாளித்து வெற்றி பெறுவோம எல்லா பிரச்சினைகளும் தீர எளிமையான பரிகாரம் !!

அதிகாலை 4.30 முதல் காலை 7.30 வரை சூரிய உதயத்தில் பிராண வாயு பூமியில் நிறைந்திருக்கும்.இக்காலங்களில் மூளைக்கு மனப்பாட பயிற்சி ,உடலுக்கு உடற்பயிற்சி அளித்தால் சக்ல உள் உறுப்புகளும் ஆக்சிஜனை குடித்து வலுவாகும்.. இளம் சூரிய ஒளியையும் தோலின் துவாரங்களின் வழியே ஆக்சிஜனுடன் பரவுவது ஹைப்போ தலமசையும்,உயிர் ஹார்மோன் சுரக்கும் பினியல்,பிட்யூட்டரி, தைராய்டு அட்டிரனல் சுரப்பிகளையும் வலுப்படுத்தும். அன்று முழுவதும் சோம்பலும் வராது. கண் , குரல், முகப்பொலிவு போன்ரவை உண்டாகி சர்வஜன வசியம் உண்டாகும்...  அதிகாலையில் எழுதல் தினசரி ஆறுமுறை தியானம் செய்தல் ,உடற்பயிற்சி,மெள்னவிரதம்,சிக்கனப்பழக்கம், போன்றவை மன உறுதியை வளர்க்கும்..சோம்பலை போக்கும்.தீய கிரக திசாபுத்தியை சமாளிக்கும் அறிவு மனோபலம் தரும்..ஏழரை சனி,அஷ்டம சனி, அஷ்டம குரு இவற்றுக்கு பயப்பட தேவையில்லை... உயிரை வளர்க்கும் விதம் அறிந்தே உடலை வளர்த்தேனே என்று திருமூலர் கூறியது போலவே பக்தி உஷ்ணத்தால்தான் உயிர் சக்திகளை உடலில் பலப்படுத்த முடியும் உள்ளத்தில் உள்ளவன் கட-உள்.

செவ்வாய் கெட்டால் வாகனத்தால் பிரச்சினை,வீண் வம்பு,கோர்ட் கேஸ் பிரச்சினை உண்டாகிறது சனி கெட்டால் சோம்பல்,சோர்வு உண்டாகிறது சந்திரன் கெட்டால் நிம்மதி கெடுகிறது சூரியன் ஆரோக்கியம் கெடுகிறது புதன் கெட்டால் அறிவு கெடுகிறது... குரு கெட்டால் செல்வாக்கு கெடுகிறது மரியாதை கெடுகிறது.. சுக்கிரன் கெட்டால் சுகம் கெடுகிறது.. இவ்வாறு நவகிரகங்கள் தரும் தொல்லை களை சமாளிக்க மன உறுதி உடல் உறுதி வசியம். மனிதர் தூக்கத்தில்தானே செய்கிறார் என்று சுவாசக் குழாய் விட்டுவிடாது. உடனே அந்த உமிழ்நீரை வெளியே தள்ளும். இதைத்தான் தூக்கத்திலேயே புரையேறுதல் என்கிறார்கள்.

தூங்கும்போது நடக்கும் மற்றொரு முக்கியமான நிகழ்வு குறட்டை. விழித் திருக்கும்போது தாடை சதைகள் கெட்டியாக இருக்கும். தூங்கும்போது இந்த கெட்டித் தன்மை கொஞ்சம் கொஞ்சமாக தளர்ந்து விடும். ஆழ்ந்த தூக்கத்தில் முழுமையாக கட்டுப்பாடு இழந்து சுவாசக் குழாயின் மேல் விழுந்து அழுத்தும். இதனால் தடங்கல்கள் உண்டாகி காற்று போகும் முயற்சி தடைபடும். அப்போது ஏற்படுகிற கொர்... கொர்.. சத்தம்தான் குறட்டை விடுதல் என்கிறார்கள். குறட்டை விடுதல் சில சமயம் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்றும் கூறுகிறார்கள் மருத்துவர்கள். குறட்டையைத் தடுக்க 500 வழிகள் இருப்பதாகவும், இதில் எது ஒத்துவருமோ அதன் மூலம் குறட்டையை கட்டுப்படுத்தலாம் என்றும் சொல்கிறார்கள். அதிகமாக குறட்டை விடுபவர்கள் கண்டிப்பாக காது, மூக்கு, தொண்டை மருத்துவரை பார்க்க வேண்டும்.

No comments:

Post a Comment