Wednesday 6 April 2016

திருவள்ளுவர் சிலை அமைப்பு.!

திருவள்ளுவர் சிலை

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு என்று தொடங்கி, ஈரடி குறளில் உலகத் தத்துவங்கள் அனைத்தையும் திருக்குறள் என்னும்உன்னதப் படைப்பில் மக்களுக்கு எடுத்துச் சொன்னவர் தான் திருவள்ளுவர். அவருக்காக அமைக்கப்பட்ட சிலைதான் திருவள்ளுவர்சிலை ஆகும்.

சிலையின் வரலாறு :
திருவள்ளுவர் சிலையானது கன்னியாகுமரிக் கடலில், கடல் நடுவே, நீர் மட்டத்திலிருந்து 30 அடி உயரமுள்ள பாறை மீது அமைத்த 133 அடி உயரச் சிலை ஆகும்.

சிலை உருவான விதம் :
1979 ஆம் ஆண்டு, பாரதப் பிரதமர் மொராஜி தேசாயால் அடிக்கல் நாட்டப்பட்டு பல பிரச்சனைகளால் தடைபட்ட கட்டுமானப் பணி 1990 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில்நிதி ஒதுக்கப்பட்டு 5000 க்கும் மேற்பட்ட சிற்பக்கலைஞர்களால் தமிழகத்தின் மிகச்சிறந்த கணபதி ஸ்தபதியின் மேற்பார்வையில் கட்டுமானப்பணி தொடங்கப்பட்டு 1999 ஆம் ஆண்டு நிறைவு பெற்றது. இந்தப் பிரமாண்டமான சிலையானது ஜனவரி 1 ல் 2000 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.

சிலையின் அமைப்பு :
திருவள்ளுவர் சிலை பல கற்களைக் கொண்டு கட்டப்பட்ட பல மாடிக் கட்டிடம் போன்ற அமைப்பு கொண்டதாகும்.
சிலையினுள் 130 அடி உயரம் வரை வெற்றிடம் உள்ளது. இந்த வெற்றிடம் சிலையின் ஸ்திரத் தன்மையை உறுதிப்படுத்தும் நுட்பமுடையது. கல்லால் ஆன உத்திரங்களும், கட்டாயங்களும் பரவப்பட்டு சிலை எப்பக்கத்திலும் சாய்ந்து விடாது நேரே நிற்குமாறு உறுதி செய்யப்பட்டுள்ளது.
பீடத்தின் 38 அடி உயரமானது திருக்குறளின் அறத்துப்பாலின் 38 அதிகாரங்களையும், பீடத்தின் மேல் நிற்கும் 95 அடி உயரச் சிலையானது திருக்குறளின் பொருள் மற்றும் இன்பத்துப்பாலின் 95 அதிகாரங்களையும் குறிப்பதாகத் திகழ்கின்றது.
மண்டபத்தின் உட்புறச் சுவற்றில் ஒவ்வொரு அதிகாரத்திலிருந்து ஒரு குறள் வீதம் 133 குறட்பாக்கள் தமிழிலும் அவற்றுக்கு நிகராக ஆங்கில மொழி பெயர்ப்பிலும் பொறிக்கப்பட்டுள்ளது.
சிலையின் அளவுகள் :
முக உயரம் - 10 அடி
கொண்டை - 3 அடி
முகத்தின் நீளம் - 3 அடி
தோள்பட்டை அகலம் -30 அடி
கைத்தலம் - 10 அடி
உடம்பு (மார்பும் வயிறும்) - 30 அடி
இடுப்புக்குக் கீழ் தொடை மற்றும் கால் - 45 அடி
கையில் ஏந்திய திருக்குறள் ஏட்டின் நீளம் - 10 அடி
சிலையின் சிறப்புகள் :
இந்த சிலை உலகளவில் மிகப் பிரபலமான சிலைகளில் ஒன்றாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்திலேயே மிகப் பெரிய சிலை இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உலகில் இந்த சிலைபோன்ற கருங்கற்களால் ஆன சிலை கிடையாது.
இந்த திருவள்ளுவர் சிலையானது இந்தியாவில் உள்ள மக்களை மட்டுமல்லாமல் சுற்றுலா வரும் பல நாட்டவரையும் வெகுவாகவியக்க வைக்கிறது.

நமது தமிழிற்கு பெருமை சேர்க்கும் வகையில் உள்ள உலகப் பொதுமறையான திருக்குறளை மட்டும் பாதுகாக்காமல் திருவள்ளுவர் சிலையும் பாதுகாத்து நம் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்ப்போம்.

No comments:

Post a Comment