Saturday 23 April 2016

பூஜை செய்வதற்கான சில குறிப்புகள்

பூஜை செய்வதற்கான சில குறிப்புகள்

♠ பூஜையின் துவக்கத்திலும், கணபதி பூஜையின் போதும், தூப தீபம் முடியும் போதும், பலி போடும் போதும் கை மணியை அடிக்க வேண்டும். மணியின் சத்தத்தோடு செய்யப்படும் பூஜை நல்ல பலன் தரும்.

♠ கோவில்களில் அர்ச்சகரிடமிருந்து தான் பிரசாதங்களை பெற வேண்டும். நாமாக எடுத்துக் கொள்ள கூடாது.

♠ பெருவிரலும், மோதிர விரலும் சேர்த்துத் திருநீறு அளிக்க வேண்டும். மற்ற விரல்களை சேர்க்க கூடாது.

♠ திருவிழாக் காலத்திலும், வீதி வலம் வரும்போதும், பரிவார தேவதைகளின் அலங்காரத்திலும், மற்றைய நாட்களில் உபயோகிக்கத் தகாதென விலக்கப்பட்ட மலர்களை உபயோகிக்கலாம்.

♠ பூஜைக்குரிய பழங்கள், நாகப்பழம், மாதுளை, எலுமிச்சை, புளியம்பழம், வாழை, கொய்யா, நெல்லி, இலந்தை, மாம்பழம், பலாப்பழம் ஆகியவை.

♠ செண்பக மொட்டு தவிர, வேறு மலர்களின் மொட்டுகள் பூஜைக்கு உகந்தவை அல்ல.

♠ மலர்களை கிள்ளி பூஜிக்க கூடாது. வில்வம், துளசியை மாலையாகவே பூஜிக்க வேண்டும்.

♠ முல்லை, கிளுவை, நொச்சி, வில்வம், விளா இவை பஞ்ச வில்வம் எனப்படும் இவை சிவ பூஜைக்கு ஏற்றவை.

♠ துளசி, மகிழம், செண்பகம், தாமரை, வில்வம், செங்கழு நீர், மரிக்கொழுந்து, மருதாணி, தாபம், அருகு, நாயுருவி, விஷ்ணு க்ராந்தி, நெல்லி ஆகியவற்றின் இலைகள் பூஜைக்கு உகந்தவை.

♠ குடுமியுள்ள தேங்காயை சமமாக உடைத்து, குடுமியை நீக்கிவிட்டு நிவேதனம் செய்ய வேண்டும்.

♠ பூஜைக்கு செய்யக்கூடாத மலர்கள் வாசனை இல்லாதது, முடி புழுவோடு சேர்ந்தது, வாடிய மலர்கள், தகாதவர்களால் தொடப்பட்டவை, நுகரப்பட்ட மலர்கள், தரையில் விழுந்த மலர்கள்.

♠ தாமரை, நீலோத்பலம் போன்ற மலர்களை பறித்த அன்றே பூஜை செய்தல் வேண்டிய விதி இல்லை.

♠ ஒருமுறை இறைவன் திருவடியில் சமர்பிக்கப்பட்ட மலர்களை மீண்டும் எடுத்து பூஜிக்கலாகாது.

♠ மலர்களை முழுவதுமாக பூஜிக்க வேண்டும்.

♠ துலுக்க சாமந்தி பூவை பூஜைக்கு பயன்படுத்த கூடாது.

♠ பவள மல்லி சரஸ்வதிக்கு ஆகாது.

♠ தும்பை லட்சுமிக்கு ஆகாது.

♠ அருகம்புல் அம்பிகைக்கு ஆகாது.

♠ விஷ்ணுக்கு துளசி மாலை உகந்தது.

♠ சிவனுக்கு தாழம்பூ ஆகாது.

♠ விநாயகருக்கு துளசி ஆகாது.

♠ ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது, பதினொன்று அடுக்குகள் கொண்ட தீபத்திற்கு மஹாதீபம் அல்லது மஹா நீராஜனம் என்று பெயர்.

மாங்கல்யம் பலம் பெற சொல்ல வேண்டிய மந்திரம்

மங்களே மங்கள தாரே
மாங்கல்யே மங்களப்ரதே
மங்களார்த்தம் மங்களே ஸ்ரீ
மாங்கல்யம் தேஹிமே ஸ்தா

No comments:

Post a Comment