Wednesday 30 July 2014

ஆயுஷ்ய ஹோமம் - அப்த பூர்த்தி



ஆயுஷ்ய ஹோமம்  - அப்த பூர்த்தி

குழந்தை பிறந்து 12 மாதங்கள் முடிந்து 13 வது மாதம் குழந்தை பிறந்த அதே தமிழ் மாதமாகும். அந்த மாதத்தில் குழந்தை பிறந்த அதே நக்ஷத்திரம் வரும் தினத்தில் சுபவேளையில் அப்தபூர்த்தி ஆயுஷ்யஹோமம் செய்யப்படுகிறது. அப்த என்றால் ஒன்று, பூர்த்தி என்றால் நிறைவு. எனவே அப்தப10 ர்த்தி என்பகை 'ஆண்டு நிறைவுஎன்றும் சொல்வார்கள். ஜன்ம நக்ஷத்திரத்தில் குழந்தைக்கு புண்ணிய தீர்த்தங்களைக் கொண்டு ஸ்நானம் செய்து வைத்து, புது ஆடைகள் அணிவித்து, ஆபரணங்களைக் கொண்டு அலங்காரம் செய்வித்து, குழந்தையின் அம்மான் குழந்தையைத் தூக்கிக் கொண்டு வீட்டிற்குள் பிரவேசிக்க வேண்டும். பின்னர் ஹோமம் வளர்த்து, 'ஆயுஷ்ய சூக்தம்என்னும் மந்திரத்தைக் கொண்டு ஆயிரத்தெட்டு தடவை நல்ல நெய்யைக் கொண்டு ஹோமம் செய்ய வேண்டும். 'மிருத்ய10” பயமின்றி குழந்தை தீர்க்காயுளாக வளர வேண்டுமென்பதற்காக செய்யப்படும் ஹோமமாகும். இதனால் 'ஆயுஷ்ய ஹோமம்என்று இது பெயர் பெற்றது. ஆயுள் அபிவிருத்திக்கு சர்வேஸ்வரனை வேண்டிச் செய்யும் ஹோமமாகும். இத்துடன் கலசத்தால் கும்பம் அமைத்து, வருணனையும், குழந்தையின் நக்ஷத்திர தேவதையையும் ஆவாஹனம் செய்யும் மந்திரங்களைச் செபித்து அக்கலச தீர்த்தத்தை குழந்தைக்கு ஸ்நானம் செய்வித்து தீர்தத்தை உள்ளுக்கும் கொடுக்க வேண்டும். ஹோமம் செய்த நெய்யின் மிச்சத்தில் அன்னத்தைக் கலந்து அதை மந்திர பூர்வமாக குழந்தைக்கு கொடுக்க வேண்டும். இந்த ஆண்டுநிறைவு, நடப்பு மாதத்தில் இரு நக்ஷத்திரங்கள் வருமானால் பின் வருகிற நக்ஷத்திரத்திலேயே இதைச் செய்ய வேண்டுமென்று கூறப்பட்டிருக்கிறது. சில ஸமயம் ஒரே நக்ஷத்திரம் இரண்டு தினங்களில் வரும். இதனால் என்று அநுஷ்டிப்பது என்ற குழப்பமும் வரும். என்றைய தினத்தில் சூரிய உதயத்திலிருந்து உச்சிப் பொழுதுக்குள் குறைந்தது 12 நாழிகை அதாவது 4 மணி 48 நிமிட நேரம் என்று நக்ஷத்திரம் இருக்கிறதோ அன்றைய தினம் அநுஷ்டிக்கவேண்டும்


ஆயுஷ்ய ஹோமம்
மஞ்சள்தூள் - 100 gm, சந்தனம் - 100 gm, குங்குமம் - 50 gm, விபூதி- 50gm,
ஊதுபத்தி -
1 pkt, கற்பூரம் - 2 pkt, கலச நூல் 3 Nos அரிசி - 5 kg, ஏலக்காய் - 10 gm, பச்சைகற்பூரம் - 5 rs, பன்னீர் - 1 ltr, நெய் - 1 kg, மஞ்சள்கிழங்கு - 1/2 kg, கலச சொம்பு – 3, அல்லது 11 Nos, கலச வஸ்த்ரம் - 9/5 வேஷ்டி, துண்டு - 1 nos,10ம் no நூல்கண்டு - 2 nos, வெற்றிலை - 1 கவுளி, பாக்கு - 100 gm, தேங்காய் - 8 nos, To 15 Nos வாழைப்பழம் - 2 டஜன், மற்ற பழங்கள் - வகைக்கு 6, வாழை இலை - 9, எருவிராட்டி - 25 nos, சிராய் - 2 kg, நல்லெண்ணை - 1/2 ltr, விளக்கு திரி, தீப்பெட்டி உதிரி புஷ்பங்கள்,தொடர் புஷ்பங்கள்,ஹாரம், இது போக ஹோம பொருட்கள்.
-----------------------------------------------------------------------------------------------
சுவாமி படங்கள், விளக்கு, கத்தி, தாம்பாலங்கள்-10, டவராக்கள்-12, பூஜை மணி, பஞ்சபாத்திர உத்தரணி, பழைய நியூஸ் பேப்பர், ஜமக்காளம், பட்டுப்பாய் பருப்பு தேங்காய், சர்க்கரை கற்கண்டு, பக்ஷணங்கள்
மாவிலை கொத்து, சில்லரை காயின் - 101

ஸ்ரீ ராமஜெயம்
அப்தபூர்த்தி சாந்தி கர்ணபூஷண சுபமுஹூர்த்த பத்திரிக்கை
மஹா ராஜ ராஜ ஸ்ரீ................................... அவர்களுக்கு
அநேக நமஸ்காரம் / ஆசீர்வாதம் / உபயக்ஷேமம்
நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ................வருஷம் ................... மாதம்........ம் தேதி (                 ) ............... கிழமை..........................   ................................நக்ஷத்ரம் ....................யோகம் கூடிய சுபதினத்தில் உதயாதி நாழிகை......... க்கு மேல் ....... க்குள் ( காலை மணி ......... க்கு மேல் ........ க்குள் ) ......................லக்னத்தில்
-------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------
அப்தபூர்த்தி சாந்தி கர்ணபூஷணம் செய்வதாய் ஈஸ்வர க்ருபையால் ஆசார்யார்களின் அனுக்ரஹத்துடன் பெரியோர்களாள் நிச்சயிக்கப்பட்டு மேற்படி சுபமுஹூர்த்தம்     
.......................................................................................................................
வைத்து நடக்கிறபடியால் தாங்கள் தங்கள் இஷ்டமித்ர பந்துக்களுடன் முன்னதாகவே வந்திருந்து மேற்படி சுபமுஹூர்த்தத்தை நடத்திக்கொடுத்து குழந்தையை ஆசீர்வதித்து என்னையும் கௌரவிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

குழந்தை பிறந்த முதலாம் ஆண்டில் நீண்ட ஆயுளுக்காக செய்யப்படும் ஹோமம் "ஆயுஷ்ய ஹோமம் ஆகும். குழந்தைக்கு தொடர் தேக உபாதைகள் இருந்தால் இந்த ஹோமத்தின் மூலம் சரிசெய்துவிடலாம். மருந்தால் குணப்படுத்த முடியாத வியாதிகளைக்கூட தீர்த்துவிடலாம். ஒவ்வொரு மாதமும் கூட குழந்தையின் ஜென்ம நட்சத்திர நாளில் இதைச் செய்து வரலாம்.

நீண்ட நாள் நிம்மதியாக வாழ வேண்டும் என்று விரும்புபவர்கள் தவறாமல் ஆயுஷ்ய ஹோமம் செய்ய வேண்டும். குழந்தையின் முதல் பிறந்த நாளில் ஆயுஷ்ய ஹோமம் செய்து பலரின் ஆசியைப் பெற வைக்க வேண்டும். இந்த ஹோமத்திற்கு தேவைப்படும் இரண்டு முக்கிய பொருட்கள் :

1. கருங்காலி சமித்
2. சாதம் (அன்னம்) முதலில் சங்கல்பம் செய்து கொண்டு விக்னேசுவர பூஜை செய்து, கும்பத்தில் புண்யாஹ வசனம் செய்து ஆயுஷ்ய ஹோமம் செய்ய வேண்டும்.

குழந்தையின் நட்சத்திர ராசி பெயர் சொல்லி ஆயுஷ்ய ஸூக்தம் நட்சத்திர மந்திரம் சொல்லி கருங்காலி ஸமித், அன்னம், ஆஜ்யம் (நெய்) ஆகியவற்றிற்குத் தனித்தனியாக 108 அல்லது 1008 முறை மந்திரத்தைச் சொல்லி முதலில் ஸமித்தாலும், பிறகு அன்னத்தில் சரிபாதியைக் கொண்டும், பிறகு நெய்யாலும் ஹோமம் செய்ய வேண்டும்.

பின்னர் நெய்யால் 11 ரிக்குகளால் ஹோமம் செய்ய வேண்டும். அடுத்து சுவிஷ்டக்ருத் ஹோமம் செய்து பாதி அன்னத்தை, வெல்லம், நெய் சேர்த்துக் குழந்தைகளுக்குப் பிராசன மந்திரம் மூலம் மூன்று முறை நெல்லிக்காயளவு ஊட்டி விடவும். பிறகு குரு, தட்சிணை தர வேண்டும்.

பெரியவர்களிடம் ஆசீர்வாதம் பெற்று மங்கள ஆரத்தி எடுத்து இனிதே ஹோமத்தை முடிக்க வேண்டும். எல்லா பிறந்த நாளிலும் தான தர்மங்களுடன் நட்சத்திர - ஆயிஷ்ய ஹோமமாக செய்தால் ஆயுள் பலம் கெட்டியாகும்

புரோகிதர், ஜோதிடர்
Manikanda Sharma G.V
Neela Matrimony
Neela Infomedia  ( WEBDESIGN )
Neela Computers
99 62 22 53 58
94 44 22 60 39

No comments:

Post a Comment