Friday, 10 January 2025

உங்கள் தின வழிபாட்டிற்கு உதவும் நவக்கிரக ஸ்தோத்ரம்

 

உங்கள் தின வழிபாட்டிற்கு உதவும் நவக்கிரக ஸ்தோத்ரம்

 


ஸூர்ய நமஸ்காரம்
ஜபா குஸூம ஸங்காசம்
காச்யபேயம் மஹாத்யுதிம்!
தமோரிம் ஸ்ர்வ பாபக்னம்
ப்ரணதோ () ஸ்மி திவாகரம் !!


ஞாயிறு
சீலமாய் வாழச் சீரருள் புரியும்
ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி
சூரியா போற்றி சுதந்திரா போற்றி
வீரியா போற்றி வினைகள் களைவாய்

 

ஸ்ரீ சூரியன் காயத்காயத்ரி

ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே

பாச ஹஸ்தாய தீமஹி

தன்னோ சூர்ய ப்ரயோதயாத்.

 

சூரியன்பகவான்

காசினி இருளை நீக்கும் கதிர்ஒளி வீசி எங்கும்

பூசனை உலகோர் போற்றப் புசிப்போடு சுகத்தை நல்கும்

வாசி ஏழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த

தேசிகா எனை ரட்சிப்பாய் செங்கதிரவனே போற்றி!


சந்த்ர நமஸ்காரம் 
ததி சங்க துஷாராபம்
ஷீரோதார்ணவஸம்பவம்!
நமாமி சசினம் ஸோமம்
சம்போர் மகுடபூஷணம்!!

திங்கள்
எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும்
திங்களே போற்றி திருவருள் தருவாய்
சந்திர போற்றி சத்குரு போற்றி
சங்கடந் தீர்ப்பாய் சதுரா போற்றி.

 

ஸ்ரீ சந்திரன் காயத்காயத்ரி

ஓம் பத்ம த்வஜாய வித்மஹே:

ஹேம ரூபாய தீமஹி 

தன்னோ ஸோம ப்ரயோதயாத்.

 

சந்திரன்பகவான்

அலைகடல் அதனிலிருந்து அன்று வந்து உதித்தபோது

கலைவளர் திங்களாகிக் கடவுளர் எவரும் ஏத்தும்

சிலைநுதல் உமையாள்பங்கன் செஞ்சடைப் பிறையாகி மேரு

மலை வலமாய் வந்த மதியமேபோற்றி!

 


அங்காரக நமஸ்காரம் 
தரணீ கர்ப்ப ஸம்பூதம்
வித்யுத்காந்தி ஸப்ரபம் !
குமாரம் சக்தி ஹஸ்தம்
மங்களம் ப்ரணமாம் யஹம்!!

செவ்வாய்
சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே
குறையிலாது அருள்வாய் குணமுடன் வாழ
மங்களச் செவ்வாய் மலரடி போற்றி
அங்காரகனே அவதிகள் நீக்கு.

 

ஸ்ரீ செவ்வாய் காயத்காயத்ரி

ஓம் வீர த்வஜாய வித்மஹே

விக்ன ஹஸ்தாய தீமஹி 

தன்னோ பௌம ப்ரயோதயாத்.

 

அங்காரகன்பகவான்

வசனநல் தைரியத்தோடு மன்னவர் சபையில் வார்த்தை

புசபல பராக்ரமங்கள் போர்தனில் வெற்றி ஆண்மை

நிசமுடன் அவரவர்க்கு நீள்நிலம் தனில் அளிக்கும்

குசன் நிலமகனாம் செவ்வாய் குரைகழல் போற்றி போற்றி!

 

புத நமஸ்காரம் 

ப்ரிங்கு கலிகா ச்யாம்
ருபேணா ப்ரதிமம் புதம்!
ஸௌம்யம் ஸௌம்ய குணோபேதம்
தம் புதம் ப்ரணமாம் யஹம்!!


புதன்
இதமுற வாழ இன்னல்கள் நீக்கு
புத பகவானே பொன்னடி போற்றி
பதந்தந் தாள்வாய் பண்ணொலியானே
உதவியே அருளும் உத்தமா போற்றி.

 

ஸ்ரீ புதன் காயத்காயத்ரி

 ஓம் கஜத்வஜாய வித்மஹே

சுக ஹஸ்தாய தீமஹி 

தன்னோ புத ப்ரயோதயாத்.

 

புதன்பகவான்

மதன நூல் முதலாய் நான்கு மறை புகல் கல்வி ஞானம்

விதமுடன் அவரவர்க்கு விஞ்சைகள் அருள்வோன் திங்கள்

சுதன் பசு பாரி பாக்கியம் சுகம் பல கொடுக்க வல்லான்

புதன்கவி புலவன் சீர்மால் பொன்னடி போற்றி போற்றி!

 

குரு நமஸ்காரம்


தேவானாம் ரிஷஷீணாம்
குரும் காஞ்சன ஸந்நிபம்!
புத்தி பூதம் த்ரிலோகேசம்
தம் நமமாமி ப்ருஹஸ்பதிம்!!

வியாழன்
குணமிகு வியாழக் குரு பகவானே
மணமுடன் வாழ மகிழ்வுடன் அருள்வாய்
பிரகஸ்பதி வியாழப் பரகுரு நேசா
கிரகதோஷமின்றி கடாஷித் தருள்வாய்.

 

ஸ்ரீ குரு காயத்காயத்ரி

ஓம் விருஷப த்வஜாய வித்மஹே

க்ருணி ஹஸ்தாய தீமஹி 

தன்னோ குரு ப்ரயோதயாத்.

 

குருபகவான்

மறைமிகு கலைநூல் வல்லோன் வானவர்க்கு அரசன் மந்திரி,

நறைசொரி கற்பகப் பொன்நாட்டினுக்கு அதிபனாகி

நிறைதனம் சிவகை மண்ணில் நீடு போகத்தை நல்கும்

இறையவன் குரு வியாழன் இருமலர்ப் பாதம் போற்றி!


சுக்ர நமஸ்காரம்
ஹிமகுந்த ம்ருணாளாபம் 
தைத்யானாம் பரமம் குரும்!
ஸர்வாசாஸ்த்ர ப்ரவக்தாரம்
பார்கவம் ப்ரணமாம் யஹம்!!   

வெள்ளி
சுக்கிரமூர்த்தி சுபமிக ஈவாய்
வக்கிரமின்றி வரமிகத் தருள்வாய்
வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே
அள்ளிக்கொடுப்பாய் அடியார்க்கு அருளே.

 

ஸ்ரீ சுக்கிரன் காயத்காயத்ரி

 ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே:

 தநு ஹஸ்தாய தீமஹி 

தன்னோ சுக்கிர ப்ரயோதயாத்

 

சுக்ரன்பகவான்

மூர்க்கவான் சூரன் வாணன் முதலினோர் குருவாய் வையம்

காக்க வான்மழை பெய்விக்கும் கவிமகன் கனகம் ஈவோன்

தீர்க்க வானவர்கள் போற்றச் செத்தவர் தமை எழுப்பும்

பார்க்கவன் சுக்கிராச்சாரி பாதபங்கயமே போற்றி


சனி நமஸ்காரம் 
நீலாஞ்ஜன ஸமாபாஸம்
ரவிபுத்ரம் யமாக்ரஜம்
ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம்
தம் நமாமி சனைச்சரம்!!  

        
சனி
சங்கடந் தீர்க்கும் சனி பகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றி சாகா நெறியில்
இச்சகம் வாழ இன்னருள் தா தா.

 

ஸ்ரீ சனீஸ்வரர் காயத்காயத்ரி

 ஓம் காக த்வஜாய வித்மஹே

கட்க ஹஸ்தாய தீமஹி 

தன்னோ மந்த ப்ரயோதயாத்.

 

சனிபகவான்

முனிவர்கள் தேவர்கள் ஏழு மூர்த்திகள் முதலானோர்கள்

மனிதர்கள் வாழ்வும் உன்றன் மகிமையது அல்லால் உண்டோ?

கனிவுள தெய்வம் நீயே கதிர்சேயே காகம் ஏறும்

சனியனே உனைத் துதிப்பேன் தமியனேற்கு அருள்செய்வாயே!


ராகு நமஸ்காரம் 
அர்த்தகாயம் மஹாவீர்யம்
சந்தராதித்ய விமர்தனம்!
ஸிம்ஹிகா கர்ப்ப ஸம்பூதம்
தம் ராஹீம் ப்ரணமாம் யஹம்!!

இராகு
அரவெனும் இராகு அய்யனே போற்றி
கரவா தருள்வாய் கஷ்டங்கள் நீக்கி
ஆகவருள்புரி அனைத்திலும் வெற்றி
இராகுக்கனியே ரம்மியா போற்றி.

 

ஸ்ரீ ராகு காயத்காயத்ரி

ஓம் நாக த்வஜாய வித்மஹே:

 பத்ம ஹஸ்தாய தீமஹி 

தன்னோ ராகு ப்ரயோதயாத்.

 

ராகுபகவான்

வாகுசேர் நெடுமால் முன்னம் வானவர்க்கு அமுதம் ஈயப்

போகும் அக்காலை உன்றன் புணர்ப்பினால் சிரமே அற்றுப்

பாகுசேர்மொழியாள் பங்கன் பரன் கையால் மீண்டும் பெற்ற

ராகுவே உனைத் துதிப்பேன் ரட்சிப்பாய் ரட்சிப்பாயே!


கேது நமஸ்காரம் 
பலாச புஸ்பஸ்ஙகாசம்
தாராகாக்ரஹ மஸ்தகம்!
ரௌத்ரம் ரௌத்ராத்மகம்
தம் கேதும் ப்ரணமாம் யஹம்!!

 

கேது
கேதுத் தேவே கீர்த்தித் திருவே
பாதம் போற்றி பாவங்கள் தீர்ப்பாய்
வாதம் வம்பு வழக்குகள் இன்றி
கேதுத் தேவே கேண்மையாய் இரஷி.

 

ஸ்ரீ கேது காயத்காயத்ரி

 ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே:

 சூல ஹஸ்தாய தீமஹி 

தன்னோ கேது ப்ரயோதயாத்.

 

கேதுபகவான்

பொன்னை இன்னுதிரத்தில் கொண்டோன் புதல்வர்தம் பொருட்டால் ஆழி

தன்னையே கடைந்து முன்னத் தண்அமுது அளிக்கல் உற்ற

பின்னைநின் கரவால் உண்ட பெட்பினில் சிரம்பெற்று உய்ந்தாய்

என்னை ஆள் கேதுவே இவ்விருநிலம் போற்றத் தானே!

 

No comments:

Post a Comment