Thursday 5 May 2016

அக்னிநட்சத்திரம்

அக்னிநட்சத்திரம்

( மே 4ம் தேதி அக்னி நட்சத்திரம் துவங்குகிறது.
28ம் தேதி காலை நிவர்த்தி.)

அக்னி நட்சத்திரம் பிறந்த கதை
அக்னி நட்சத்திரம் 21 நாட்கள் வரை காணப்படும் என்பதால் அந்த நாட்களில் வெப்பத்தினால் ஏற்படும் நோய் தாக்காத வகையில் குளிர்ச்சியான பொருட்களை உண்ணவேண்டும்.

இதில் முதல் 7 நாட்கள் வெப்பத்தின் அளவு மிதமாகவும் பின் 7நாட்கள் கடுமையாகவும், கடைசி 7 நாட்கள் உஷ்ணம் தணிந்தும் காணப்படும்.

இதுதோஷகாலமாக கருதப்படுவதால் ஏராளமானோர் ஆலயங்களுக்கு சென்று இறைவனை வழிபடுகின்றனர்.

சூரிய பகவான் சித்திரை மாதம் முதல் மேஷ ராசியில் சூரியன் சஞ்சரிக்கிறார்.
எனவே மேஷ ராசியில் உள்ள அசுவினி,பரணி,கார்த்திகை போன்ற நட்சத்திரங்கள் அதற்குண்டான பலனை அனுபவிக்க வேண்டும் என்பது விதிக்கப்பட்டது.

சித்திரை முதல் நாளில் அசுவினியில் நுழையும் சூரியன் பரணி நட்சத்திரத்தில் சஞ்சார காலம் முடிந்து கார்த்திகையில் தொடங்கும் காலமே அக்னி நட்சத்திரம் எனப்படுகிறது.

சந்திரனும்,பூமியும் சூரியனுக்கு அருகில் இருப்பதனால் அக்னி நட்சத்திரத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காரணம் என்கிறது விஞ்ஞானம்.

ஆனால் புராணத்தில் அதற்கு சுவையான கதை ஒன்று உண்டு.

அக்னி நட்சத்திரம் பிறந்த கதை:
கார்த்திகை நட்சத்திரத்திற்குரியவர் அக்னி பகவான்.

இவர் நெருப்பு ரூபமாய்
காணப்படுவதால் இதனையே அக்னி நட்சத்திரம் என்கின்றனர்.

முன்னொரு காலத்தில் பன்னிரெண்டு ஆண்டுகள் இடை விடாது நடை பெற்ற சுவேதகி யாகத்தில் ஊற்றிய நெய்யினை உண்ட அக்னி தேவனுக்கு உடல் நலிவு ஏற்பட்டது.

அதற்கு மருந்தாக காண்டவ காட்டை அழித்து உண்பதற்கு அக்னி தேவன் புறப்பாட்டார்.

இதனை அறிந்து காண்டவ காட்டில் வசித்து வந்த உயிரினங்களும்,தாவரங்களும், தங்களை காக்க வேண்டும் என்று வருணபகவானிடம்வேண்டிக் கொண்டனர்.

வருணபகவானும் விடாது மழை பொழியவே அக்னியால் காட்டை எரிக்க முடியாமல் போனது.

காட்டை எரிக்க தனக்கு உதவுமாறு மகாவிஷ்ணுவிடம் அக்னிதேவன் முறையிட்டதால் அவர் அர்ஜுனனை துணைக்கு அனுப்பி வைத்தார்.

அர்ஜுனனும் தனது அம்புகளினால் காட்டை சுற்றி அரண் எழுப்பி தீ அணையாமல் எரியுமாறு பார்த்து கொண்டார்.

அப்போது அக்னி தேவனுக்கு திருமால் ஒரு நிபந்தனை விதித்தார்.

21 நாட்கள் மட்டுமே காண்டவ காட்டை எரிக்க வேண்டும் என்பதே அது.

இதனை ஏற்று அக்னி தேவனும் 21 நாட்கள் மட்டுமே காட்டை எரித்து விட்டு கிளம்பினார்.

இந்த நாளே அக்னி நட்சத்திர காலமாக கருதப்படுகிறது என்கின்றன புராணங்கள்..

இந்த நாட்களில் செடி, கொடி மரங்களை வெட்டக்கூடாது;
நார் உரிக்கக் கூடாது;
விதை விதைக்கக்கூடாது;
கிணறு,குளம், தோட்டங்கள் அமைக்கக்கூடாது;
நிலம் மற்றும் வீடுகளில் பராமரிப்புகள் செய்யக்கூடாது;
வாகனங்களில் நெடுந்தூரம் பயணம் செய்யக்கூடாது.

இந்த நாட்களில் ஆலயங்களுக்குச் சென்று இறைவனுக்கும் இறைவிக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்வது நல்ல பலனைத் தரும்.
உன்னதமான வாழ்வுக்கும் உயர்வான சிந்தனை உள்ள வாழ்வுக்கும் வளம் தரும்.

தான தர்மங்கள் செய்யலாம்;
தண்ணீர்ப் பந்தல் அமைத்து நீர் மோர் வழங்கலாம்;
நோயாளிகளுக்கு இளநீர் தரலாம்;
உடல் ஊன முற்றவர்களுக்கு காலணி, குடைகளை வழங்கலாம்;
ஏழை, எளியவர்களுக்கு தயிர் சாதம் அளிக்கலாம்;
அந்தணர்களுக்கு விசிறி தானம் அளிக்கலாம்.

அக்னி
நட்சத்திரக் கால கட்டத்தில் மாரியம்மன் கோவிலுக்குச் சென்று வணங்கி அபிஷேக ஆராதனைகள் முடிந்ததும் பானகம் வழங்குவதும் நல்ல பலன்களைத் தரும்.

பரணிக்குரிய துர்க்கையையும் ரோகிணிக்குரிய பிரம்மாவையும் சந்தனாபிஷேகம் செய்து வழிபட வாழ்வில் வசந்தம் வீசும்.

அக்னி நட்சத்திரக் காலகட்டத்தில் நம் உடல்நிலை பாதிக்காமலிருக்க காலை வேளையில் பூஜையறையில் சூரியனுக்குரிய மாக்கோலத்தை பூஜைப் பலகையில் போட்டு சூரிய காயத்திரி மந்திரத்தை 21 முறை ஜெபிக்கலாம்.

அக்னி ரூபானை வழிபடுவோம் அக்னி நட்சத்திரத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க அக்னி ரூபாமாய் இருக்கும் சிவ பெருமானையும் தீப்பொறியில் உதித்த முருகனையும், மீனாட்சி அம்மனையும் வழி பட வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.

கார்த்திகை நட்சத்திரத்திற்கு உரிய அக்னி தேவனுக்கும் அபிஷேகம் செய்து குளிர்விக்க வேண்டும் என்கின்றன புராணங்கள்.

சூரிய காயத்திரி:
ஓம் அஸ்வத் வஜாய வித்மஹே பாஸ ஹஸ்தாய தீமஹி
தந்தோ சூர்ய ப்ரசோதயாத்.

நன்பர்களின் ஆசியுடன்
நல்லவைகள் அனைத்தும் நாடு முழுவதும் பரவட்டும்
ஓம் சிவாய நம
ஓம் மஹேச்வராய நம
ஓம் பரமேஸ்வராய நம🙏🙏 ஸ்வாமி சரணம் 🙏🙏

No comments:

Post a Comment