Saturday 23 April 2016

இறுதியில் தீயில் வெந்து சாம்பலாகும் தத்துவத்தை தாங்கியுள்ளது திருநீறு.!!!



இறுதியில் தீயில் வெந்து சாம்பலாகும் தத்துவத்தை தாங்கியுள்ளது திருநீறு.!!!

இவ்வுலகில் பிறந்து உயிரினங்கள் யாவும் இறுதியில் தீயில் வெந்து சாம்பலாகும் தத்துவத்தை தாங்கியுள்ளது திருநீறு.
காராம் பசுவின் சாணம் மருத்துவ குணம் மிக்கதாகத் திகழ்கிறது. இந்த சாணத்தை நிலத்தில் படாமல், அருகம்புல்லின் மேல் விழ வைத்து, அந்த அருகம்புல்லுடன் அதனை தீயிலிட்டு திருநீறு போல் ஆக்கி, அதனை பூசி வந்தால் தீராத நோயும் தீரும் என மருத்துவ நூல்கள் கூறுகின்றன.
திருநீறு உடலில் உள்ள நீர்த்தன் மையை உறிஞ்சவல்லது. நம்மை சுற்றியுள்ள அதிர்வலைகளில் நமக்கு நன்மை பயக்ககூடிய நல்ல அதிர்வலைகளை மட்டுமே உள்வாங்கும் தன்மையுடையது.
திருநீற்றை முக்குறியாக அணிகிறோம். ஏனென்றால் ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று மலங்களை வேரோடு நீக்கினால் தான் நாம் முக்திக்கு தகுதி உடையவர் ஆகிறோம் என்பதை அக்குறி உணர்த்துகிறது.
திருநீறு இன்னும் பற்பல நன் மைகளை நமக்கு அருள்கிறது.
மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கள்
திருஆலவாயான் திருநீறே
என்பது திருஞானசம்பந்தர் திரு நீற்றுப்பதிக வாக்கு.
கடவுள் பக்தி என்றால் என்ன?
பூலோகத்தில் ஒரே தெருவில் ஒரு செருப்பு விற்கும் தொழிலாளியும், ஒரு செல்வந்தரும் இருந்தனர்.
செருப்புத் தொழிலாளி தினமும் தான் செருப்புக் கடையின் ஓரத்தில் பெருமாள் படம் ஒன்றை வைத்து அதை வணங்கி வந்தான்.
செல்வம் இல்லாவிட்டாலும் சந்தோசமும் மன அமைதியுடனும் இருந்தார்.
செல்வந்தரோ தினமும் காலையில் குளித்துவிட்டு, பல மணி நேரம் பூஜை புனஸ்காரம் எல்லாம் செய்வார்.
பல தலைமுறைக்கு காணும் செல்வம் இருந்தும் நிம்மதியின்றி வாழ்ந்து வந்தார்.
ஒரு நாள் நாரத முனிவர் விஷ்ணுவைப் பார்த்து அந்தச் செல்வந்தர் மிகுந்த பக்திமானாக இருக்கிறார்;
தினமும் உங்களுக்குப் பல மணி நேரம் பூஜை எல்லாம் செய்கிறார்.
அவர் நிம்மதியாய் வாழ, ஏதாவது செய்யக்கூடாதா?” என்றார்.
விஷ்ணுவும் அதற்குச் சம்மதித்துவிட்டு நாரதரை பூலோகத்துக்கு அனுப்பினார்.
போகும்போது நாரதரைப் பார்த்து, “நீங்கள் கீழே சென்று, ‘நான் நாரயணனிடமிருந்த வருகிறேன்,’ என்று செல்வந்தரரிடம் சொல்லுங்கள்.

அவர் தற்பொழுது நாராயணன் என்ன செய்துகொண்டு இருக்கிறார்?’ என்று கேட்பார்.
அதற்கு நீங்கள் நாராயணன் தற்போது ஓர் ஊசியின் காது வழியாக யானையை நுழைத்துக்கொண்ட
 இருக்கிறார்என்று பதில் சொல்லுங்கள்என்று சொல்லி அனுப்பினார்.
அப்படியே அந்தச் செருப்பு தைக்கும் தொழிலாளியையும் போய்ப் பார்த்துவிட்டு வந்துவிடுங்கள்என்று சொல்லி அனுப்பினார் விஷ்ணு.
நாரதரும் முதலில் அந்தச் செல்வந்தரின் வீட்டுக்கு சென்றர். பூஜை எல்லாம் முடித்துவிட்டு வந்த செல்வந்தர், நாரதரிடம், “நீங்கள் யார்?” என்று கேட்க, நாரதர் தான் நாரயணரிடமிருந்த
வருவதாகச் சொல்கிறார்.
அதற்கு அந்தச் செல்வந்தர் தற்போது நாராயணன் என்ன செய்துகொண்டு இருக்கிறார்?” என்று கேட்க, நாரதரும், நாராயணன் ஒர் ஊசியின் காதுவழியாக யானையை நுழைத்துக்கொண்ட
இருப்பதை பார்த்தாகச் சொல்கிறார்.
அதற்கு அந்த செல்வந்தர் அது எப்படி முடியும்? இது என்ன நடக்கிற காரியமா?” என்று கேட்டார்.
நாரதர் அடுத்தது அந்தச் செருப்புத் தொழிலாளியைப் பார்க்கச் சென்றார்.
அவரிடமும் இதே சம்பாஷணை நடைபெற்றது.
ஆனால் கடைசி பதிலுக்கு அந்தச் செருப்புத் தைக்கும் தொழிலாளி, “இதில் என்ன விந்தை? ஒரு பெரிய ஆலமரத்தை சின்ன விதையில் அடக்கியவர், பிரபஞ்சத்தை தன் வாயில் காண்பித்தவர், அவருக்கு யானையை ஊசியில் நுழைப்பது என்ன பெரிய விஷயமா?” என்று பதில் சொன்னார்.
அவர்கள் இருவரும் சொன்ன பதிலை நாராயணனிடம் வந்து சொன்னார் நாரதர். கடவுள் பக்தி என்பது, பூஜை, புனஸ்காரங்கள் செய்வது மட்டுமில்லை. இறைவனின் பாதத்தை பூரண நம்பிக்கையுடன், நீயே சரணம் என்று பற்றுவதே உண்மையான பக்திஇப்பொழுது தெரிகிறதா?
வெண்மேகங்கள் கருமேகமாய் உருமாறி
சித்திரை திருமகள், எல்லோருக்கும் நல்லமகள் ,
வாடைக்கும் கோடைக்கும் நடுவே நின்று சிரிக்கும் மகள் ,
வசந்தத்தை அழைத்து வந்து வளம் கூட்டும் நல்ல மகள் ,
கொன்றைப்பூ வைத்து கண்ணாடியில் கனி காணும் கன்னிமகள் ,
முக்கனியின் சுவை பேசி , வேம்பின் மகத்துவம் பேசி ,
வாழ்வின் தத்துவம் பேசும் தங்க மகள் ,
தமிழுருவாய் வந்தாளே தரணிஎல்லாம் தழைத்திடவே !
அனைவர்க்கும் கனிவான தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் !
வெண்மழையை பூமிக்கு அனுப்பட்டும்!
மொட்டுக்கள் மலர்ந்து மணமாய் மலர 
வண்டுகள் அங்கே வல்லமை பெறட்டும்!
நெருங்க முடியா விண்மீன் தொலைவை 
நெல் விளைச்சல் தொட்டு விடட்டும்!
அன்னை மடியில் குழந்தை சிரிப்பாய்
இயற்கை அன்னை வளம் பெறட்டும்!

விவசாயமும் இயற்கையும் அழகாக 
விவசாய கரங்களில் பணம் புரளட்டும்!
கடல் சில காலம் ஓய்வெடுக்க 
ஆறுகள் அணைகளில் அடங்கட்டும்!
கடவுள் ஒன்றே வழிபாடு வித விதம் 
மதச்சார்பின்மை மனதில் பதியட்டும்!
உடல் வேறு குருதி நிறம் ஒன்றே 
சாதி வெறிகள் காணாமல் போகட்டும்!
மனக் கசப்பை தீயிலிட்டு எரித்து 
மனங்கள் மல்லிகை மணமாகட்டும்!
சிவந்த இதழ்கள் தீயது பேசாது 
ரோஜா இதழ்களாய் சிரிக்கட்டும்!
அரசியலில் ஊழல் முற்றிலும் அழிந்து
கர்ம வீரராய் தலைவர்கள் மாறட்டும்!
இளைய சிங்கங்கள் பிடரி சிலிர்த்தெழுந்து 
இந்தியாவை வல்லரசாக மாற்றட்டும்!
எல்லோரும் எல்லா வளமும் பெற
புத்தாண்டு புன்னகை புரியட்டும்!
வாருங்கள்! வாருங்கள்! வாருங்கள்!
வாழ்த்தி வரவேற்போம் புத்தாண்டை!
நண்பர்களுக்கும்,அன்பர்களுக்கும்,
உற்றார்,உறவினர்களுக்கும்,
தமிழர் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்,
வரும் துன்முகி ஆண்டு
 உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர்க்கும்,துன்பங்களை போக்கி
இன்பங்களை அள்ளி
தரும் ஆண்டாக அமைய நல்வாழ்த்துக்கள்,அகத்தியமாமுனியும் லோபமுத்திரை தாயாரின் ஆசிர்வாதங்கள் நமக்கு என்றென்றும் கிடைக்க பிரார்த்திப்போம்
வாழ்க வளமுடன்.
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

No comments:

Post a Comment