Sunday 24 April 2016

பெரியபுராணம் மற்றும் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்

இலக்கியம் - பெரியபுராணம் மற்றும் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்

1.பெரியபுராணத்தை இயற்றியவர் ----------- ஆவார் - சேக்கிழார்

2.சேக்கிழாரின் இயற்பெயர் -அருண்மொழித்தேவர்

3.சேக்கிழார் ----------- என்னும் பட்டம் பெற்றவர் - உத்தமசோழப் பல்லவர்

4.பெரியபுராணத்திற்கு சேக்கிழார் இட்ட பெயர் - திருத்தொண்டர் புராணம்

5.இன்னமுது என்பதனை பிரித்தெழுதுக. -இனிமை + அமுது

6.தம் வீட்டிலுள்ள அனைத்துப் பொருள்களுக்கும் திருநாவுக்கரசர் எனப் பெயர் சூட்டியவர் -------------- - அப்பூதியடிகளார்

7.மேதி என்பதன் பொருள் - எருமை

8.பத்திச் சுவைநனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ எனச் சேக்கிழாரை புகழ்ந்துப் பாடியவர் - மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார்

9.ஆ என்பதன் பொருள் - பசு

10.செலவோழியா என்பதனை பிரித்தெழுதுக. -செலவு + ஒழியா

11.சேக்கிழார் பிறந்த ஊர் - காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள குன்றத்தூர்

12.சந்தம் என்பதன் பொருள் - அழகு

13.சேக்கிழார் வாழ்ந்த காலம் - கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு

14.அங்கணர் என்பதன் பொருள் - அழகிய நெற்றிக்கண்ணையுடைய சிவன்

15.நான்மறை எனபதனை பிரித்தெழுதுக. -நான்கு + மறை

16. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள பெருமாள் திருமொழியை பாடியவர் - குலசேகர ஆழ்வார்

17. பெருமாள் திருமொழியில் ------------------ பாசுரங்கள் உள்ளன - 105

18. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தை பாடியவர்கள் - பன்னிரு ஆழ்வார்கள்

19. குலசேகர ஆழ்வார் பிறந்த ஊர் - கேரள மாநிலத்திலுள்ள திருவஞ்சைக்களம்

20. பற்றில்லேன் என்பதனை பிரித்தெழுதுக -பற்று + இல்லேன்

21. போன்றிருந்தேன் என்பதனை பிரித்தெழுதுக - போன்று + இருந்தேன்

22. குலசேகர ஆழ்வார் -------------- ஆழ்வார்களுள் ஒருவர் - பன்னிரு

23. தார்வேந்தன் என்பதன் பொருள் -மாலையணிந்த அரசன்

24. குலசேகர ஆழ்வார் ---------------- எனவும் அழைக்கப்பட்டார் - குலசேகர பெருமாள்

25. குலசேகர ஆழ்வாரின் காலம் - கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு

No comments:

Post a Comment