Friday 22 April 2016

சித்திரைத் திருவிழா...!!!



சித்திரைத் திருவிழா...!!!
வைகை ஆற்றில்
கள்ளழகர் இறங்குவது
ஏன்?..
வைகை ஆறு இன்று போல் அன்றில்லை. இந்த நதிக்கரையில் ஏராளமான மரங்கள் இருந்தன.
அவற்றில் வாசனை மலர்கள் பூத்துக் குலுங்கின. அந்த மலர்களெல்லாம் உதிர்ந்து வைகை வெள்ளத்தில் மிதந்து செல்லும் காட்சியே அழகு. இதற்கு சாட்சி பரிபாடல் போன்ற இலக்கியங்கள்.
அப்படிப்பட்ட இயற்கை வளம் மிக்க வைகை, சிவனால் உருவாக்கப்பட்டது. தனது திருமணத்துக்கு வந்தவர்கள் தாகம் தீர இந்த நதியை அவர் உருவாக்கினார். தன் சிரசை சற்றே கவிழ்த்து கங்கையை இங்கே விட்டார். சிவனின் நேரடிப் பார்வையில் உருவான நதி இது. தென்னக கங்கை என்று கூட இதற்கு பெயர் சூட்டலாம். கங்கை என்றாலே பாவம் போக்குவது. இப்படிப்பட்ட நதியில் மூழ்கி எழ யாருக்கு தான் ஆசை வராது! பாவம் தீர்ந்தால் பிறவி இல்லையே! இப்படிப்பட்ட ஆசை தான் சுதபஸ் என்ற முனிவருக்கு எழுந்தது. வைகையில் ஒருமுறை மூழ்கி எழுந்தாலே, செய்த பாவம் நீங்குமென்றால், அங்கேயே பலநாள் மூழ்கிக் கிடந்தால், பிறவியே இல்லாமல் செய்து விடலாமே! நதியில் மூழ்கினால், (பிறவி) கடலையே கடந்து விடலாமே என்று கணக்கு போட்டார். அதற்கேற்றாற்ற போல், மூத்த முனிவர் ஒருவர் இவர் அருகே வர, இவர் கண்டும் காணாதது போல் இருந்தார். வந்தவருக்கு கோபம் வந்துவிட்டது. ஏ! சுதபஸ், நீ மண்டூகமாகப் போ (தவளையாய் மாறு). இந்த நதியில் மூழ்கிக்கிட,'' என்று சாபமிட்டார். சுதபஸ் நினைத்தது நடந்து விட்டது. ஏன்...மண்டூகமாகப் போ என மூத்தவர் சாபம் கொடுத்திருக்க வேண்டும்! மச்சமாகப் போ (மீனாகமாறு) என சாபம் பெற்றிருக்கலாமே! மீன் என்றால் தண்ணீரில் மட்டுமே வாழ முடியும். தவளை என்றால் தண்ணீர், தரை என எங்கும் வாழலாம். முனிவர்களின் கோபம் கூட நல்லதையே செய்யும். அவர்கள் செய்த தவத்தின் பலன் அது. சுதபஸ் அன்று முதல் மண்டூகர் ஆனார். தவளையாய் ஆற்றில் வசித்தார். மிக நீண்டகாலம் தென்னக கங்கையில் கிடந்தார். அவ்வப்போது தரைக்கு
வருவார். காரணம் என்ன! எம்பெருமானான சுந்தரராஜர் அழகர்மலையில் இருந்து என்று வைகைக்கு எழுந்தருளுகிறாரோ அன்று சாப விமோசனம் கிடைக்கும் என்பது மூத்தவர் கொடுத்த வாக்குறுதி....அல்லது சாப விமோசனம். ஒருவேளை பெருமாள் ஆற்றில் இறங்காமல், கரை வழியே நடந்தால் துள்ளிக்குதித்து விழுந்தாவது அவர் திருவடியில் வீழ்ந்து விடலாமே என்ற எண்ணம்!

பெருமாளின் திருவடியைப் பார்த்தாலே சொர்க்கம்.... ஸ்ரீரங்கத்திற்கு செல்கிறோம்.
பெருமாளின் திருவடியைத் தான் முதலில் பார்க்கிறோம். பிறகு தான் கமலம் போன்ற முக அழகைத் தரிசிக்கிறோம். அந்தத்திருவடி நம்மை மோட்சத்திற்கே கொண்டு சென்று விடுமாம்.
பார்த்தாலே இப்படி என்றால்.... திருவடி பட்டால் என்னாகும்! அழகர்கோவிலில் இருந்து சுந்தர
ராஜப் பெருமாள் குதிரையில் ஏறி வந்தார். வைகையைக் கடக்கும் போது, அவரது திருவடி மண்டூகர் மீது படுகிறது. சுயஉருவைப் பெற்றார். ஆகா...பெருமாளே! இனி எனக்கு மோட்சம் தானே!
""அடேய், பாரடா! இப்போதே நீ மோட்சத்தில் தானே இருக்கிறாய். மண்டூகர் சுற்றுமுற்றும் பார்த்தார். ஆம்...திருவடி பட்ட அந்த நொடியே அவர் மோட்சத்திற்கு போய் விட்டார்.


நமக்கும் அதே நிலை தான்! இன்று அழகர் ஆற்றிலே இறங்குகிறார். பார்க்க முடியாதவர்களுக்காக நாளையும் வைகைக்குள் இருக்கும் தேனூர் மண்டபத்தில் எழுந்தருளுவார். அவரது திருவடியைத் தரிசித்தாலே போதும். பூலோகத்திலேயே சொர்க்கத்தைக் காணலாம்.ஆம்...அவரிடம் மனதார
பிரார்த்தித்தால் போதும். மழை வேண்டுமென்றால் மழை பெய்யும். பணம் வேண்டுமென்றால் அள்ளித்தருவார். எல்லாம் நாம் அவர் மீது வைக்கும் நம்பிக்கையில் தான் இருக்கிறது.

கள்ளழகர்அருள் வார்த்தைகள் - 44
உனக்கென்று !!
|| ராதேக்ருஷ்ணா ||
உலகில் உனக்கென்று ஒரு
இடம் என்றுமுண்டு !
உலகில் உனக்கென்று ஒரு
வாழக்கை உண்டு !
உலகில் உனக்கென்று ஒரு
பசி உண்டு !
உலகில் உனக்கென்று ஒரு
ஆகாரம் உண்டு !

உலகில் உனக்கென்று
மனிதர்கள் உண்டு !
உலகில் உனக்கென்று
காற்று உண்டு !
உலகில் உனக்கென்று
உடுத்த ஆடை உண்டு !
உலகில் உனக்கென்று
இளைப்பாற இடம் உண்டு !
உலகில் உனக்கென்று ஒரு
அமைதி உண்டு !
உலகில் உனக்கென்று ஒரு
பலம் உண்டு !
உலகில் உனக்கென்று ஒரு
சமாதானம் உண்டு !
உலகில் உனக்கென்று ஒரு
சந்தோஷம் உண்டு !
உலகில் உனக்கென்று ஒரு
நேரம் உண்டு !
உலகில் உனக்கென்று ஒரு
ப்ரயாணம் உண்டு !
உலகில் உனக்கென்று
பழங்கள் உண்டு !
உலகில் உனக்கென்று
ஒதுங்க நிழல் உண்டு !
உலகில் உனக்கென்று
குடிக்க நீர் உண்டு !
உலகில் உனக்கென்று
அமர இடம் உண்டு !
உலகில் உனக்கென்று ஒரு
படுக்கை உண்டு !
உலகில் உனக்கென்று ஒரு
தூக்கம் உண்டு !
உலகில் உனக்கென்று ஒரு
வெளிச்சம் உண்டு !
உலகில் உனக்கென்று ஒரு
விழிப்பு உண்டு !
உலகில் உனக்கென்று
கடமை உண்டு !
உலகில் உனக்கென்று ஒரு
மனம் உண்டு !
உலகில் உனக்கென்று
ஆத்ம பந்துக்கள் உண்டு !
உலகில் உனக்கென்று
க்ருஷ்ண நாம ஜபம் உண்டு !
உலகில் உனக்கென்று
ராதையும்,க்ருஷ்ணனும் உண்டு !
உலகில் உனக்கென்று
பகவானுடைய கோயில்கள் உண்டு !
உலகில் உனக்கென்று
சத்சங்கம் உண்டு !
உலகில் உனக்கென்று
க்ருஷ்ண லீலா உண்டு !
உலகில் உனக்கென்று
ப்ருந்தாவனம் உண்டு !
உலகில் உனக்கென்று
பகவத் ப்ரசாதம் உண்டு !
உலகில் உனக்கென்று
குரு உண்டு !
உலகில் உனக்கென்று
இத்தனை இருக்கும்போது
ஏன் எதுவுமில்லை என்கிறாய் !
இதுபோல் உனக்கென்று பல உண்டு !
அதனால் இனிமேல் சமாதானாமாக இரு !
அதனால் தெளிந்து விடு !
பயத்தை விட்டு விடு !
மனக்குழப்பத்தை கொன்று விடு !
பலவீனத்தை மறந்து விடு !
பகைமையை அழித்து விடு !
சோம்பேறித்தனத்தை மாற்றி விடு !
வாழ்க்கையை வாழ்ந்து விடு !
சந்தோஷமாக பொழுதை உபயோகப்படுத்திவிடு !
ஹரே ராமா !! ஹரே கிருஷ்ணா !!

*************************************************************
ஜோதிடம், புரோகிதம், எண்கணிதம், ராசிரத்தினம், பார்க்கப்படும், ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம், பிரசன்னம் பார்க்கப்படும், ஜாதகம் கணித்து தரப்படும். கணபதிஹோமம், கிரகபிரவேசம், ருதுசாந்தி, நாமகரணம், ராகு-கேது, செவ்வாய், சனி, சுக்கிர தோஷ நிவர்த்தி, ஹோமம் செய்து தரப்படும், திருமணதடை, புத்திர தோஷம் நிவர்த்திக்கு அணுகவும்.
பூஜைக்குறிய யந்திரம்:
கணபதி யந்திரம், லட்சுமிகுபேர யந்திரம், சுதர்ஸன யந்திரம், ஷண்முக யந்திரம், அனுமான் யந்திரம், வியாபாரவிருத்தி யந்திரம், காரிய சித்தி யந்திரம், ஸ்ரீசக்கர யந்திரம், மஹாலட்சுமி யந்திரம், பைரவ யந்திரம், பிரத்தியங்கரா யந்திரம், வாராஹி யந்திரம்,
இவை அனைத்தும் எங்கள்:
ஸ்ரீ பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்.
அம்மன் அருள்லோடு பூஜைசெய்து வழங்கப்படும்,
இந்த யந்திரம் பெறவிரும்பும் அன்பர்கள். கோத்ரம், பெயர், நட்சத்திரம், ஜென்ம ராசி, தெரியப்படுத்தவும் கம்பெனி வைத்து இருப்போர் கம்பெனி பெயர் குறிப்பிடவும்


ஸ்ரீ பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்

ஜோதிடர், புரோகிதர்.
G.V. மணிகண்ட ஷர்மா
Mobile. 9962225358
Mobile. 7092103071
Mobile. 7092103072
WhatsApp No 9444226039
https://neelamatrimony.wordpress.com/

தொடர்பு கொள்ளவும். மேற்படி விபரம் தொடர்பு கொள்வோர் உங்கள் பிரச்சனைகளை தெளிவாக குறிப்பிடுடவும்.

No comments:

Post a Comment