Friday 8 April 2016

09-04-2016 உலக வரலாற்றுச் சுவடுகள்.!

9-4-2016 உலக வரலாற்றுச் சுவடுகள்.

ராகுல் சாங்கிருத்தியாயன்

இந்தி பயண இலக்கியத்தின் தந்தை என்று அழைக்கப்படும் மகா பண்டிட் ராகுல் சாங்கிருத்தியாயன் அவர்கள் 1893 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் தேதி கிழக்கு உத்தரப் பிரதேசத்திலுள்ள ஆஸிம்கார் என்ற கிராமத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் கேதார்நாத் பாண்டே ஆகும். 10 வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறி ஊர் ஊராக சுற்றி ஏராளமான விஷயங்களைக் கற்றார்.

தமிழகம் வந்து இவர் சைவ, வைணவ நூல்களைக் கற்றார். தத்துவம், பயணம், வரலாறு, மதம், மொழி, இலக்கியம் என்று அனைத்து துறைகளிலும் இவரது அறிவு விரிவடைந்தது. இலங்கை முதல் லண்டன் வரை பயணம் மேற்கொண்டார். இந்தி, பாலி, உள்ளிட்ட பல இந்திய மொழிகளையும், சிங்களம், பிரெஞ்சு, ரஷ்ய மொழி உள்ளிட்ட அயல்நாட்டு மொழிகளையும் கற்றார். புகைப்படக் கலையிலும் வல்லவராக இருந்தார்.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார். பல முறை சிறை சென்றுள்ளார். இவர் எழுதிய ஏழடபய ளுந புயபெய என்ற நூல் தமிழ், தெலுங்கு மலையாளம் உட்பட மொத்தம் 14 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. பல்வேறு துறைகளில் ஏறக்குறைய 150 புத்தகங்களை எழுதியுள்ளார்.

1958 இல் சாகித்ய அகாடமி விருது, 1963 ஆம் ஆண்டு பத்மபூஷன் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளும், மகாபண்டிட் உள்ளிட்ட பட்டங்களையும் பெற்றுள்ளார். தனது வாழ்நாளின் 45 வருட காலத்தை பயணங்களில் செலவழித்த ராகுல் சாங்கிருதியாயன் 1963 ஆம் ஆண்டில் ஏப்ரல் 14 ஆம் தேதி தனது 70 வது வயதில் காலமானார்.
1957 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் தேதி மூடப்பட்டிருந்த சுயஸ் கால்வாய், கப்பல் போக்குவரத்துக்கு மீண்டும் திறக்கப்பட்டது.

உலகின் மிகப் பிரபலமான பயணிகள் விமானமான போயிங் -737, முதன் முதலாக 1967 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் தேதி பறந்தது.

1953 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் முப்பரிமாணத் திரைப்படமான வெளியிடப்பட்டது.

2003 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் தேதி சதாம் உசேன் கட்டுப்பாடில் இருந்த ஈராக்கை அமெரிக்கப் படையினர் கைப்பற்றினர்.

No comments:

Post a Comment