Sunday 20 March 2016

திருச்செந்தூர் ஸ்ரீசுப்ரமணியசுவாமி திருக்கோவில்

திருச்செந்தூர் ஸ்ரீசுப்ரமணியசுவாமி திருக்கோவில்

  தூத்துக்குடி மாவட்டம்இ திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்ரமணிய சுவாமி கோவில் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளுள் இரண்டாம் படைவீடாகும். இத்தலத்தில் முருகப்பெருமான் சூரபத்மன் என்னும் அசுரனை வென்றபின் சிவபெருமானை ஐந்து லிங்கங்கள் வடிவில் வைத்து வழிப்பட்டார். அலைகள் வந்து புரளும் கடற்கரையில் இக்கோவில் அமைந்துள்ளது.

கோவில் அமைப்பு :150 அடி உயரம் கொண்ட இக்கோவிலின் கோபுரம்இ ஒன்பது தளங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. முருகப்பெருமான் சூரனை ஆட்கொண்டபின்பு தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக சிவபெருமானுக்கு பூஜை செய்தார். இந்த கோலத்திலேயே முருகன் வலது கையில் தாமரை மலருடன் அருளுகிறார்.
தலையில் சிவயோகி போல ஜடாமகுடமும் தரித்திருக்கிறார். இவருக்கு இடது பின்புற சுவரில் ஒரு லிங்கம் இருக்கிறது. இவருக்கு முதல் தீபாராதனை காட்டிய பின்பேஇ முருகனுக்கு தீபராதனை நடக்கும். சண்முகர் சன்னதியிலும் சுவாமிக்கு பின்புறம் லிங்கம் இருக்கிறது. இவ்விரு லிங்கங்களும் இருளில் உள்ளதால்இ தீபாராதனை ஒளியில் மட்டுமே காண முடியும்.
இது தவிர முருகன் சன்னதிக்கு வலப்புறத்தில் பஞ்சலிங்க சன்னதியும் இருக்கிறது. திருச்செந்தூரில் முருகன் சன்னதியின் மேற்கு திசையில் ராஜகோபுரம் இருக்கிறது. முருகப்பெருமான் இத்தலத்தில் கடலை பார்த்தபடிஇ கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார்.
திருக்கோவில் வரலாறு :

  தேவர்கள் தங்களை தொந்தரவு செய்தஇ சூரபத்மனை அழிக்கும்படி சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன்இ தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு பொறிகளை உண்டாக்கினார். அதிலிருந்து முருகப்பெருமான் தோன்றினார். பின்இ சிவபெருமானின் கட்டளையை ஏற்றுஇ சூரபத்மனை அழிக்க இங்கு வந்தார். இவ்வேளையில் முருகப்பெருமானின் தரிசனம் வேண்டிஇ தேவர்களின் குருவான வியாழன் பகவான் இத்தலத்தில் தவமிருந்தார். அவருக்கு காட்சி தந்த முருகப்பெருமான்இ இவ்விடத்தில் தங்கினார். அவர் மூலமாக அசுரர்களின் வரலாறையும் தெரிந்து கொண்டார். அப்போது தனது படைத்தளபதியான வீரபாகுவைஇ சூரபத்மனிடம் தூது அனுப்பினார். அவன் கேட்கவில்லை. பின்புஇ முருகன் தன் படைகளுடன் சென்றுஇ அவனை வதம் செய்தார். வியாழன் பகவான்இ முருகனிடம் தனக்கு காட்சி தந்த இவ்விடத்தில் எழுந்தருளும்படி வேண்டிக்கொண்டார். அதன்படியே முருகனும் இங்கே தங்கினார். பின்புஇ வியாழன் பகவான் விஸ்வகர்மாவை அழைத்துஇ இங்கு கோவில் எழுப்பினார். முருகன்இ சூரனை வெற்றி பெற்று ஆட்கொண்டதால் ″செயந்திநாதர்″ என அழைக்கப்பெற்றார். பிற்காலத்தில் இப்பெயரே ″செந்தில்நாதர்″ என மருவியது. தலமும் ″திருஜெயந்திபுரம்″ என அழைக்கப்பெற்றுஇ பின்பு திருச்செந்தூர் என மருவியது.

திருக்கோவில் சிறப்புகள் :முருகனுக்குரிய ஆறுபடைவீடுகளில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும்இ பிற ஐந்தும் மலைக்கோவிலாக அமைந்துள்ளது.
திருச்செந்தூரில் பாலசுப்ரமணிய சுவாமிஇ சண்முகர் என்று 2 மூலவர்கள் உள்ளனர். பாலசுப்ரமணிய சுவாமி கிழக்கு பார்த்தும்இ சண்முகர் தெற்கு பார்த்தும் அருள்பாலிக்கிறார்கள்.
திருச்செந்தூர் கோவில் இடது பக்கத்தில் வள்ளிக்குகை உள்ளது. இந்த குகைக்கு முன்புள்ள சந்தன மலையில் தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
திருச்செந்தூர் கோவிலில் உள்ள சண்முக விலாசம் எனும் மண்டபம் 120 அடி உயரமும்இ 60 அடி அகலமும் கொண்டது. 124 தூண்கள் இதை தாங்குகின்றன.

No comments:

Post a Comment