Wednesday 27 November 2013

பிராண பிரதிஷ்டை .





பிராண பிரதிஷ்டை
                                 .
           பிராணன் என்றால் உயிர், பிரதிஷ்டை என்றால் உருவாக்குதல். ஆன்மீகவாதிகளுக்கும், மாந்திரீகவாதிகளுக்கும் பிராண பிரதிஷ்டை என்பது முக்கியமான அம்சமாகும். பிராணன் இல்லாத உயிரை சவம் என்கிறோம். இறந்த மனிதனின் உயிரை உருவாக்குவதற்கு பிரணவ பிராண பிரதிஷ்டை தெரிந்து சித்தி செய்து வைத்திருக்கவேண்டும். இத்தகைய மகான்கள் தான் இறந்த மனிதனை உயிர்பிக்க முடியும். உலக இயக்கத்திற்கு பிராணனும், சக்தியும் தேவை. இவை இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளது.
           பிராணன் என்பது உயிர் ஆகும். சிவ அம்சமாகும். ஆண் தத்துவம் ஆகும். சக்தி என்பது இயக்கம் ஆகும். பெண் அம்சமாகும். தெய்வத்தில் சக்தி ஆகும். ஆண்களின் விந்து உயிர்  உள்ளதாகும். பெண்களின் கரு சக்தி அம்சமாகும். ஆண்களின் உயிர் தத்துவ விந்தை பெண்களின் சக்தி தத்துவமாகிய கருவில் சேர்த்து வளர்த்து கொடுப்பதே பெண்கள் ஆகும். பொதுவாக பிராண பிரதிஷ்டை ஆண்களே, செய்ய வேண்டிய ஒரு முறை என்று கூறுவர்.
           குண்டலினி பயிற்சி விந்தாகிய குண்டலினியை எழுப்பி சக்தியைப் பெற முயற்சிப்பதால் இந்த குண்டலினி பயிற்சி கூட ஆண்களுக்குரிய ஒரு தனிப்பட்ட பயிற்சி என்று எனது குருவானவர்களில் ஒருவர் திரு கணபதி கோன் அவர்கள் கூறுவர்.
           பொதுவாக விக்கிரங்கள், சக்கரங்கள், மைகள், பொடிகள் உயிரற்ற பொருளாக இருக்கின்றன. இவைகளுக்கு உயிராகிய பிராணனை கொடுத்து சக்தியைக் கொடுக்கும் மந்திரங்களை உரு ஏற்றி ஒரு தெய்வம் உருவாக்கப்படுகிறது. இப்பொழுது நீங்கள் பிராண பிரதிஷ்டையின் முக்கியத்தை அறிந்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
           வெளி நாடுகளில் கிறிஸ்டல் எனும் கல் வகைகளுக்கு கூட பிராண பிரதிஷ்டை செய்து மந்திரங்கள் கூறி சக்தியை உருவாக்கி அதை கையில் அணிவர். சிலர் அத்தகைய கற்களைக் கொண்டு குறிசொல்லும் பழக்கமும் உண்டு. பொதுவாக எல்லா கோயில்களிலும் சிலை பிரதிஷ்டை செய்யும் முன் அதன் அடியில் எந்திரம் என்ற ஒரு தகடும், அதைச் சார்ந்த கற்களும் வைப்பதுண்டு.
           பொதுவாக பிராண சக்தியை தகடு எனும் இயந்திரம் சீக்கிரமாக பெற்றுக் கொள்ளும் தன்மைக் கொண்டது. அதில் உள்ள வட்டம், சதுரம் போன்றவைகளுக்கு ஒரு தனி தார்ப்பரியம் உண்டு. இவைகளை ஓரளவு எந்திரம் என்ற பகுதியில் கூறியுள்ளோம். பொதுவாக ஒரு தகட்டை பிராண பிரதிஷ்டை கொடுக்கும் முன் அதில் உள்ள தீட்டுகளைப் போக்க பஞ்ச காய சுத்தி, பஞ்ச கவ்விய அபிஷேகம் நிச்சயமாக தேவை.
           பொதுவாக உங்களால் பிராண பிரதிஷ்டை எந்திரங்களுக்கோ, தெய்வங்களுக்கோ, உங்கள் ராசி கற்களுக்கோ செய்ய முடியவில்லை என்றால் விவரம் தெரிந்த ஒருவரிடம் கொடுத்து பிராண பிரதிஷ்டை செய்து வைத்துக் கொள்ளுங்கள். இருப்பினும் பிராண பிரதிஷ்டையை நீங்களே செய்வது சிறப்பாகும். ஆகவே அதன் முறையை நாங்கள் உங்களுக்கு கீழே கொடுத்துள்ளோம். தினம் பத்து நிமிடங்கள் செலவழித்தால் போதும். இது சம்பந்தமாக ஏதேனும் உங்களுக்கு விளக்கம் தேவை என்றால் எங்களை அணுகுங்கள்.
           பொதுவாக நீங்கள் தேர்ந்து எடுக்கும் மந்திரங்கள் பீஜ கோஜம் சார்ந்த மந்திரங்களாக இருக்கட்டும். நாங்கள் இங்கு கொடுத்துள்ள பிராண பிரதிஷ்டை எல்லா தெய்வங்களுக்கும் பொதுவானதாகும். இருப்பினும் ஒவ்வொரு மாற்றங்களுடன் அமையும்.

   பிராண பிரதிஷ்டை மந்திரம்

ஓம் அஸ்யஸ்ரீ ப்ராண பிரதிஷ்ட மந்த்ரஸ்ய ப்ரஹ்ம விஷ்ணு மகேஸ்வர ரிஷி ருக் யஜூர் சாம அதர்வண மந்த்ரம் ஸ்ரீ சகல சக்தி ஹ்ரீ சைதன்ய ரூபிணி பிராண சக்தி தேவதா ஆம்பீஜம்; ஹ்ரீம்சக்தி க்ரோம்கீலகம் ஸ்வாஹா சக்தி ஹம்பீஜம்ச சக்தி அஸ்யபிராண பிரதிஷ்டாகரணே ஜெபே விநியோகஹ

நியாசம்:-
(
 தண்ணீரினால் அந்தந்த உறுப்புக்களை தொட்டு நனைக்க வேண்டும்.)
ஓம் ஆம் ஹ்ரீம் ஹ்ரோம் அம் கம் கம், கம் கம் கம்ஙம் பிருதிவீயப்தஜோ வாய்வாஹாஸாத்மனே அங்குஸ் டாப்யாம் நம” (கட்டை விரலைத் தண்ணீரினால் தொட்டு நனைக்க வேண்டும்)“ அம் ஆம் ஹ்ரீம் இம் சம்சம் ச்சம் ஜம் ஜ்ஜம் ஞம் சப்தஸ்பரிச ரஸகந்தாத்மனே ஈம் தர்ஜனிப்யாம் நம” (ஆள்காட்டி விரலைத் தண்ணீரினால் தொட்டு நனைக்க வேண்டும்)
  ரீம் ஹ்ரோம் உம் டம்டம் டம்டம் டம்ஜிம் த்வக்சஷ ஸ்ரோத்ரா ஜிக்வ பிராணாத்மனே ஊம் மத்யமாப்யாம் நம” (நடுவிரலைத் தண்ணீரினால் தொட்டு நனைக்க வேண்டும்)
) “ஓம் ஆம் ஹ்ரீம் ஹ்ரோம் ஏம் தம்தம் தம்தம் தம்நம் வாக் பாணீ பாதபாயுர் உபஸ்தாத்மனே ஜம் அனாமிகாப்யாம் நம” (மோதிர விரலைத்  தண்ணீரினால் தொட்டு நனைக்க வேண்டும்)
ஓம் ஆம் ஹ்ரீம் ஹ்ரோம் ஒளம் பம்பம் பம்பம் பம்பம் வசபாதன கமன விசர்க்க நந்தாத்மனே அம் கனுஷ்டிகாப்யாம் நம” (சுண்டு விரலைத்  தண்ணீரினால் தொட்டு நனைக்க வேண்டும்)
ஆம் ஹ்ரீம் ஹ்ரோம் அம்யம் நம் லம் வம் ஸம் சம் ஹம் ஹம் ஷம் மனோ புத்தி அகங்கார சித்தாத்மனே அம் கரதல கரப்ப்ருஷ்டாப்யாம் நம” (புறங்கை முழுவதம்  தண்ணீரினால் தொட்டு நனைக்க வேண்டும்)
ஓம் ஆம் ஹ்ரீம் ஹ்ரோம் அம்கம் கம்கம் கம்நம் ப்ரதிவியாச தேஜோ வாய் வாஹாஸாத்மனே ஹ்ருதயாய நம” (இருதயப் பகுதியை  தண்ணீரினால் தொட்டு நனைக்க வேண்டும்)
அம் ஆம் ஹ்ரீம் ஹ்ரோம் இம்சம் ச்சம் ஜ்ஜம் ஞம் ச்ரத ஸ்பரிச ரூபரஸ கந்தாத்மனே இம் சஜரசே ஸ்வாஹா” (தலையைத்  தண்ணீரினால் தொட்டு நனைக்க வேண்டும்)
ஆம் ஹ்ரீம் ஹ்ரோம் உம்டம் டம்டம் டம்டம் த்வக் சஷரோத்ரா ஜிக்வ பிராணத்மனே ஊம் சிகாயை வஷட்” (கூந்தலைத்  தண்ணீரினால் தொட்டு நனைக்க வேண்டும்)
ஓம் ஹ்ரீம் ஹ்ரோம் ஏம் கம்தம் தம்தம் வாக்பாணீ பாதபாயூர் உபசஸ்தாத்மனே ஐம் கவசாய ஹ_ம்” (பிறப்புறுப்புப் பகுதியைத்  தண்ணீரினால் தொட்டு நனைக்க வேண்டும்)
ஓம் ஆம் ஹ்ரீம் ஹ்ரோம் ஒளம் பம்பம் பம்பம் வசபாதன கமன விசர்க்க நந்தாத்மனே அம் நேந்திராய வஷட்” (கண்களைத்  தண்ணீரினால் தொட்டு நனைக்க வேண்டும்)
ஆம் ஹ்ரீம் ஹ்ரோம் அம் யம் ரம் லம் வம் ஸம் சம் ஷப்ழம் ஷம் மனோ புத்தி அகங்கார சித்தாத்மனே அம் அஸ்திராய பட் பூர் புவஸ்வரோம் இதி திக்பந்த” (எட்டு திக்கிற்கும் பூத் துவி நீர் தெளித்து திக் பந்தனம் செய்யவும்)


  தியானம் :-
ரக்தாம் போதிஸ் ஸ்தபோதெல்லா சத்ருணா சரோஜாதீருடா ஹ்ராம்சை பாசம் கோதண்டம் மிச்சுத்வயமன குணம்ம்ப் அங்குசம் பஞ்சபாணம் பீப்ராணாம் ஸ்ருக்கவாள த்ரிநயன வசித பீண தேவி பாலார்க்க வருணா பவது சுகரீ ப்ராணசக்தி ப்ராணா வட்ரோரு கட்யா

மூலமந்திரம் :-
ஓம் ஆம் ஹ்ரீம் ஹ்ரோம் பாசாங்குச புடாசக்தி சாந்தச சபித்து ஹெளம் ஹம் ஸஹ யம் ரம் லம் சம் ஷம் ஸம் ஹம் ஸஹ ஹெளம் ஸஹஸோகம் ஸோகம் ஹம் ஸஹஅஸ்யபிராண மமபிரண மமஜீவ வாக்மன சட்சு ஸ்ரோத்ர ஜிக்வபிராண அபான உதான சமான வியான மானஸ் சக கஸ்ய முகம் சிரம் திஷ்டது ஸ்வாஹா


   இந்த பரிமாற்ற பகுதியில்  ஏதேனும் மாற்றங்கள் குறைகள் இருப்பின் கூறுங்கள். நாங்கள் சரி செய்து கொள்கிறோம்.
           

No comments:

Post a Comment