Wednesday 14 August 2013

ஆதிசங்கரர் அருளிய ஸௌந்தரிய லஹரி 61 To 70,



ஸௌந்தரிய லஹரி
சவுந்தரிய லஹரி ஆதிசங்கரர் அருளியது.
61. கல்வி அறிவு பெற காரியஸித்தி பீஜம் ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம்
அஸௌ நாஸாவம்ஸஸ்-துஹிநகிரிவம்ஸ-த்வஜபடி
த்வதீயோ நேதீய: பலது பல-மஸ்மாக-முசிதம்
வஹத்யந்தர்-முக்தா: ஸிஸிரகர-நிஸ்வாஸ-கலிதம்
ஸம்ருத்த்யா யத்தாஸாம் பஹிரபி முக்தாமணிதர:
மூக்குத்தி முத்தின் அழகு-மனோ வெற்றி (தமிழ்)
இமய மன்னன் மரபில் வெற்றி இடுபதாகை அனைய என்
அமலை உன்றன் வதன துண்ட அணி சிறந்த மணியையோ
விமலு மன்னு கவிஞர் முத்தை வெற்பில் வல்லி யலர்வதோர்
கமல மன்னு குமிழ் அளித்தல் கண்டதல்ல என்பதே.
பொருள்: பனிமலையரசனின் குலக்கொடியே! மூங்கில் தண்டைப் போன்ற உன் அழகிய மூக்கின் உள்ளே பளபளக்கின்ற அழகிய முத்துக்கள் நிறைய இருக்கின்றன போ லும்! அதனால் தான் உன் இட நாசித் துவாரத்தின் வழியே வெளியாகும் சந்திர நாடி என்னும் மூச்சுக்காற்று, முத்துக்களை வெளியேயும் கொண்டு வருகிறதென எண்ணுகி றேன். அத்தகைய அழகிய நாசி, எங்களுக்குத் தேவையானதும், விரைவில் பலன் தரக்கூடியதுமான நன்மைகளை அளித்துக் காக்கட்டும்.
ஜபமுறையும் பலனும்
8 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 12,000 தடவை ஜபித்து வந்தால், எடுத்த காரியம்  எல்லாவற்றிலும் தடையின்றி வெற்றியுண்டாகும்
62. சுகமான தூக்கம், ஸகல கார்ய ஜயம்  பெற.
பீஜம் ஓம் மம் மம் மம்
ப்ரக்ருத்யா ரக்தாயாஸ்-தவ ஸுததி தந்தச்சதருசே:
ப்ரவக்ஷ்யே ஸாத்ருஸ்யம் ஜநயது பலம் வித்ருமலதா
பிம்பம் தத்பிம்ப-ப்ரதிபலந-ராகா-தருணிதம்
துலா-மத்யாரோடும் கதமிவ விலஜ்ஜேத கலயா
இதழ்களின் அழகு-நல்ல நித்திரை
இறைவி நின் இதழ்ச்சிவப்பு இயற்கை இத்தொடு இணைசொனா
நிறைகொள் கொவ்வை இந்நிறத்தின் நீழல் பெற்று விம்பமாய்
உறைதல் கொண்டு நாணும் மற்றோர் உவமை இல்லை உண்டெனா
அறை கடல் துகிர்ப் பழுக்கின் அன்று சொல்வன் அளியனே!
பொருள்: அழகிய பற்கள் அமைந்த தேவி, இயல்பிலேயே சிவந்திருக்கும் உன்னுடைய உதடுகளின் வர்ணம் இயற்கையாகவே சிவப்பு. இதற்கு உவமை கூற முற்படுகிறேன். பவழக்கொடிக்குப் பழம் கிடையாது. அது பழத்தைத் தோற்றுவித்தால் அதை உவமையாகக் கூறலாம். கோவைப் பழமும் இயற்கையாகச் சிவந்ததல்ல; உன் உதட்டின்  சிவப்பு அதில் பிரதிபலித்திருப்பதால் தான் அதுவும் சிவப்பாக இருக்கிறது. ஆகவே, கோவைப்பழம் பதினாறில் ஒரு பங்கு கூட உன் உதட்டுச் சிவப்புடன் ஒப்பிட முடியா மையால் வெட்கமுற்றிருக்கிறது.
ஜபமுறையும் பலனும்
8 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால், தூக்கம் இல்லாமல் வருந் துபவர்களுக்கு நல்ல தூக்கம் உண்டாகும் என்பது நம்பிக்கை. (ஒரு தங்கத் தகட்டில் சதுரமாகக் கோடு அடித்து, அதன் மத்தியில், மம், மம், மம் என்று எழுதி வைத்து  ஜபம் செய்தபின் தலைகாணிக்கு அடியில் வைத்துப் படுக்கவும்.)
63. உயர்ந்த பதவி, அதிகாரம் பெற - பீஜம் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம்
ஸ்மித ஜ்யோத்ஸ்நாஜாலம் தவ வதந-சந்த்ரஸ்ய பிபதாம்
சகோராணா-மாஸீ-ததிரஸதயா சஞ்சு-ஜடிமா
அதஸ்தே ஸீதாம்ஸோ-ரம்ருதலஹரீ-மாம்லருசய:
பிபந்தி ஸ்வச்சந்தம் நிஸி நிஸி ப்ருஸம் காஞ்ஜிகதியா
சிரிப்பின் அழகு-எல்லா உயிர்களும் விரும்ப (தமிழ்)
அன்பு முற்றி வடிவாய, அம்மை நினது ஆனனத்து மதி நகைநிலா
நன்புறத்தமுதம் ஒழுகும் மாமதுர நறை கொள் சீதளமயின்றவாய்
இன் புளிப்பலது உவட்டுறாதினி யெனத் தெவிட்டிய சகோரம் வான்
முன்பரப்பு நிலவு உண்ணுமால் உனது மூரலுக்கு நிகர் மூரலே.
பொருள்: அம்பிகையே! உன்னுடைய முகமாகிய சந்திரன் பொழியும் புன்சிரிப்பாகிய அமுதம் போன்ற நிலவொளியை அளவின்றிப் பருகும் சகோர பக்ஷிகள், அதன்  மிகையான தித்திப்பால் தங்கள் அலகுகள் உணர்விழந்தனவாக ஆகிவிட்டன எனக் கருதி, மாற்று ரஸமாகப் புளிப்பை விரும்பி சந்திரனின் கிரணங்களான அமுதப் பெரு க்கை, புளித்த கஞ்சியாக எண்ணி வேண்டியவரை ஒவ்வோர் இரவிலும் அதைத் திருப்தியாகப் பருகி மகிழ்கின்றன.
ஜபமுறையும் பலனும்

30 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 30,000 தடவை ஜபித்து வந்தால், உயர்ந்த பதவியையும்அதிகாரத்தையும் பெறலாம். இவ்வுலகில் எல்லோரையும் மோகிக்கச் செய்யும் சக்தியும் உண்டாகும்
64. ஸ்த்ரீகளின் வியாதி நீங்க. மகவச்யத்துவம்
கார்யஜயமடைய  பீஜம் ஓம் ஸ்ரீம் க்லீம்
அவிஸ்ராந்தம் பத்யுர்-குணகண-கதாம்ரேடநஜபா
ஜபாபுஷ்பச் சாயா தவ ஜநநி ஜிஹ்வா ஜயதி ஸா
யதக்ராஸீநாயா: ஸ்படிகத்ருஷத்-தச்சச்சவி-மயீ
ஸரஸ்வத்யா மூர்த்தி: பரிணமதி மாணிக்யவபுஷா
நாவின் எழில்-நாமகள் அருள்
விள்ள நாவுரை எழுந்தொறும் தலைவர் வீரமும் புகழும் அழகுமே
தெள்ளு பாடல் மதுரம் பழுத்தனைய செய்ய கேழ் ஒளி வனப்பினால்
அள்ளன் மாமலரை விட்டு வாணியுனது அருண நாவுறைய வெள்ளையாய்
உள்ள மேனியும் என் அம்மை நீ அருள உன் நிறம் பெறுவது ஒத்ததே.
பொருள்: தாயே! உன்னுடைய நாவானது உன் பதியாகிய பரமசிவனின் மங்களகரமான கதைகளை இடைவிடாமல் எந்நேரமும் திரும்பத் திரும்ப மந்த்ர ஜபத்தைப் ÷ பாலச் சொல்லி வருவதால் செம்பருத்திப் பூவைப் போலச் சிவந்து காணப்படுகிறது. அந்த நாக்கின் நுனியில் சரஸ்வதி தேவி வசிக்கின்ற காரணத்தால் தான், தெளிவான  ஸ்படிகம் போன்று வெண்மையாய்க் காணப்படும் சரஸ்வதியின் திருமேனிகூட, மாணிக்கத்தைப் போல் சிவந்து மாறிக் காணப்படுகிறது.
ஜபமுறையும் பலனும்
18 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 25,000 தடவை ஜபித்து வந்தால், பெண்களுக்கு ஏற்படும்  எல்லா நோய்களும் நீங்கும். நினைத்த காரியமும் நிறைவேறும்
65. சகலத்திலும் வெற்றி பெற ரஜ்ஜிய வசியம் அடைய.
பீஜம் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்
ரணே ஜித்வா தைத்யா-நபஹ்ருத-ஸிரஸ்த்ரை: கவசிபி:
நிவ்ருத்தைஸ் சண்டாம்ஸ-த்ரிபுரஹர-நிர்மால்ய-விமுகை:
விஸாகேந்த்ரோபேந்த்ரை: ஸஸிவிஸத-கர்ப்பூரஸகலா
விலீயந்தே மாதஸ்தவ வதந-தாம்பூல-கபலா:
தாம்பூல சிறப்பு-வாக்கு வெற்றி
அற்றை யருள் சிவசேடம் சண்டனுண்ண அது பொறாது ஆவல் தீரக்
கற்றை மலர்க் குழல் உமை! நின் கருப்பூரச் சகலமதிச் சகலம் போல
உற்ற திருத் தம்பலத்தின் ஒரு சகல மேனும் இனி துண்டு வாழப்
பெற்றிலரேல் அமரரெனும் பெயர்பெறவும் இருத்தனரோ பிழைப்பில் விண்ணோர்.
பொருள்: தாயே! தேவசேனாதிபதியான சுப்ரமண்யர், தேவேந்திரன், மகாவிஷ்ணு ஆகியோரெல்லாம் அசுரர்களை வென்று திரும்பி உன் அருகில் வரும்பொழுது, மரிய õதைக்காகத் தலைப்பாகையை எடுத்துத் தம் கைகளில் வைத்திருக்கிறார்கள். அவர்கள் சண்டிகேசுவரரின் பாகமாகிய பரமசிவனின் நிர்மால்யத்தைப் பொருட்படுத்தாமல்வெண்மையான பச்சைக் கற்பூரப் பொடியுடன் கலந்ததும், நீ வாயில் மென்று கொடுத்ததுமான தாம்பூலக் கவளங்களைப் பெற்று நன்கு மென்று தின்கிறார்கள்.
ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால், எடுத்த காரியம் எதுவாக ருந்தாலும் தோல்வியென்பதே இல்லாமல் வெற்றி உண்டாகும். வாக்கு வசியம் உண்டாகும்
66.  வீணை முதலிய ஸங்கீத வாதய வித்தை வளர,                                   சர்வ ரோக நிவாரணம் பீஜம் ஓம் ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீம் ஹ்ரீம்
விபஞ்ச்யா காயந்தீ விவித-பதாநம் பஸுபதே:
த்வயாரப்தே வக்தும் சலிதஸிரஸா ஸாதுவசநே
ததீயைர்-மாதுர்யை ரபலபித-தந்த்ரீ-கலரவாம்
நிஜாம் வீணாம் வாணீ நிசுலயதி சோலேந நிப்ருதம்
தேவியின் குரலினிமை-சங்கீத ஞானம்
பசுத்த மலர்க் கொடி! கருணை பழுத்தனைய கொம்பே! நின் பரமர் பொன்தோள் விசைத் தொழிலை கலைவாணி தனிற்பாடிப் பாடியவள் மெலிவதல்லால் அசைத்திலர் பொன்முடி உனது மதுர மொழிக்கு அசைத்தன ரென்று அதற்கு நாணி தொழிலைக் கைவிட்டாள் எழில் வீணை உறையிலிட்டாள் ஏது செய்வாள்.
பொருள்: தாயே! சரஸ்வதிதேவி பரமசிவனுடைய பலவிதமான அருள்விளையாட்டு லீலைகளை தனது வீணையில் பாடுகிறாள். நீ அதைக்கேட்டு மகிழ்ச்சியோடு  தலையை அசைத்து, ஆஹோ என்று சொல்ல ஆரம்பித்தாய். அந்த உன் பேச்சின் இனிமை, தன் வீணைத் தந்தியின் ஒலியைப் பரிகாசம் செய்வது போலிருப்பதால்  ஓசைப்படாமல் சரஸ்வதி தேவி உறைத்துணியால் தன் வீணையை மறைத்து விடுகிறாள்.
ஜபமுறையும் பலனும்
30 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 5000 தடவை ஜபித்து வந்தால், எல்லாவித நோய்களும் நீ ங்கும். வீணை, பிடில், மிருதங்கம் முதலிய வாத்தியங்களை கற்றுக் கொள்பவர்கள் இதைப் பாராயணம் செய்தால் அவைகளில் மிக்க வல்லவர்களாகி விடுவார்கள் 
67. பதவி உயர, அம்பாளின் பரிபூர்ண அனுக்ரஹம் பெற ராஜ்ய வச்யம் காரிய ஜயமடைய பிஜம் ஓம் ஐம் க்லீம் க்லீம் க்லீம்
கராக்ரேண ஸ்ப்ருஷ்டம் துஹிநகிரிணா வத்ஸலதயா
கிரீஸேநோதஸ்தம் முஹுரதர-பாநாகுலதயா
கரக்ராஹ்யம் ஸம்போர்-முகமுகுரவ்ருந்தம் கிரிஸுதே
கதங்காரம் ப்ரூமஸ்-தவ-சுபுக-மௌபம்ய-ரஹிதம்
முகவாய்க்கட்டை-தேவியின் பிரசன்னம் (தமிழ்)
மகவாசையால் இமயமலை அரையன் மலர்க்கை தொட மனத்துள் அன்பு
புகவாசையால் இறைவன் கரத்தேந்தப் பொலிவுறு நின் சிபுகம் போற்றின்
முகவாசி அரன் படிமக்கலம் பார்க்க விட்டமுகிழ்க் காம்பு போலுஞ்
சக வாழ்வை இகழ்ந்து இதயம் தனித்தவர்தம் தவக் கொழுந்து தழைத்த கொம்பே.
பொருள்: மலையரசனின் புதல்வியாகிய தாயே! உன் மோவாய் உன் தந்தையான இமவானால் அன்புப் பெருக்கால் அடிக்கடி தன் நுனிக்கையால் தொடப்பட்டதுஅதரபானம் செய்யும் ஆவலுடன் பரமசிவனின் திருக்கரத்தால் அடிக்கடி உயர்த்திப் பிடிக்கப்பட்டது. பரமசிவனின் திருக்கரத்தால் அவ்வாறு தொடுதற்குரியதும்முகமாகிய கண்ணாடிக்குப் பிடி போன்றதுமான அந்த மோவாயை நான் எப்படி வர்ணிப்பேன்?
ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால் நினைத்த காரியம்  அனைத்தும் நிறைவேறும். அரசாங்க அலுவல்களில் அனுகூலம் உண்டாகும்
68. ராஜபதவிகள் கிடைக்க ஆதிசக்தியின் அருள், லோக வச்யம் பீஜம் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம்
புஜாஸ்லேஷாந்நித்யம் புரதமயிது: கண்டகவதீ
தவ க்ரீவா தத்தே முக-கமலநால-ஸ்ரியமியம்
ஸ்வத: ஸ்வேதா காலாகரு-பஹுல-ஜம்பால-மலிநா
ம்ருணாலீ-லாலித்யம் வஹதி யததோ ஹாரலதிகா
கழுத்தின் வர்ணனை-ராஜவசியம்
வயங்குறு நின் தரளவடம் மான்மதச் சேர் அளைய முமது த்தர் மேனி
முயங்கு தொறும் எழுபுளகம் முட்பொதிந்த பசுங்கழுத்தும் முகமும் கண்டால்
இயங்கு புனல் கருஞ்சேற்றின் எழும் வலய முள்ளரைத்தாள் ஈன்ற கஞ்சம்
பயம்புகுதல் கடனன்றோ மாற்றிலாப் பசுமை யொளி பழுத்த பொன்னே.
பொருள்: பராசக்தி தாயே! பரமசிவனின் கைகள் தோள்களைத் தழுவுவதால் ரோமாஞ்சலி ஏற்பட்டு தாமரை மலரின் முள்ளுடன் கூடிய தண்டைப் போல் உன் கழுத்து  காட்சி தருகிறது. அது உன் முகமாகிய தாமரைக்குக் காம்பைப் போல் விளங்குகிறது. அதற்கும் கீழ் நீ கழுத்தில் அணிந்துள்ள முத்துமாலை இயல்பாக வெண்மை  நிறத்தினதாயினும், கறுப்பான அகிலுடன் கூடிய சந்தனக் குழம்பால் பூசப்பட்டு சேற்றில் அழுக்கடைந்த தாமரைக் கொடி போல் காணப்படுகிறது.
ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால், தேவியின் அருளால் அரசா ங்கத்தில் நன்மை ஏற்படும்
69. எடுத்த காரியம் நிறைவேற  சங்கீத சாஸ்த்ரத்தில் உயர
பீஜம் ஓம் க்ஷம் மூம் க்ஷிம் ஸூம்
கலே ரேகாஸ்திஸ்ரோ கதி-கமக-கீதைக நிபுணே
விவாஹ-வ்யாநத்த-ப்ரகுணகுண-ஸங்க்யா-ப்ரதிபுவா:
விராஜந்தே நாநாவித-மதுர-ராகாகர-புவாம்
த்ரயாணாம் க்ராமாணாம் ஸ்திதி-நியம-ஸீமாந இவ தே
கழுத்தின் மூன்று ரேகைகள்-சங்கீத ஞானம் (தமிழ்)
செந்திரு நின் திருமணத்தில் சேர்ந்த சரம் மூன்றெழுந்தித் திகழ்வது என்கோ
மந்தர மத்திம தார மூவகை நாதமும் எல்லை வகுத்த தென்கோ
கொந்திரையுந் துணர்ப்பூகங் கொழுத்த பசுங்கழுத்தின் வரைக் குறிகள் மூன்றும் இந்திரையும் சயமகளும் கலைமாதும் புகழ் வதல்லால் யான் என் சொல்வேன்.
பொருள்: கதி, கமகம், கீதம் என்னும் மூவகையான சங்கீதத்தில் ஒப்புயர்வற்ற திறமை பெற்ற அம்பிகையே! உன் கழுத்தில் காணப்படும் மூன்று கோடுகள், உன் திருமண  காலத்தில் பரமசிவன் உன் கழுத்தில் கட்டிய மாங்கல்யச் சாட்டின் மூன்று நூல்களைக் குறிப்பிடும் பாக்கிய ரேகைகளா மேலும் இசையில் உள்ள பலவிதமான இனிய  இராகங்களுக்கும் அடிப்படையாக உள்ள ஷட்ஜமம், மத்யமம், காந்தாரம் என்ற மூன்று தொகுதிகளுக்கும் இடத்தையும் எல்லையையும் பிரித்துக் காட்டுவன போலவும்  அவை விளங்குகின்றன.
ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால், சகல காரியங்களிலும் சி த்தியுண்டாகும்
70. எடுத்த காரியம் நன்கு நிறைவேற
பீஜம் ஓம் ஐம் க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம்
ம்ருணாலீ-ம்ருத்வீநாம் தவ புஜலதாநாம் சதஸ்ருணாம்
சதுர்ப்பி: ஸெளந்தர்யம் ஸரஸிஜபவ: ஸ்தௌதி வதநை:
நகேப்ய: ஸந்த்ரஸ்யந் ப்ரதம-மதநா-தந்தகரிபோ:
சதுர்ணாம் ஸீர்ஷாணாம் ஸம-மபய-ஹஸ்தார்ப்பண-தியா
தோளின் வர்ணனை-அபராத சாந்தி
முன்னமொரு தலைசின உன் முதல்வரால் இழந்த அயன் முகங்கள் நான்கால்
உன்னழகுக்கு ஏற்ற பசுங் கழைமணித் தோள் ஒரு நான்கும் வழுத்துகின்றான்
இன்னமொரு சீற்றம் எழுந்து அரிதலையை எனினும் இவள் தடமென் தோளைச் சொன்ன தலைக்கு அழிவிலையென்று அதில் துணிந்த துணிவன்றோ சுருதி வாழ்வே.
பொருள்: தாயே! உன்னுடைய நான்கு அழகிய கைகளும் தாமரைக் கொடிகளைப் போல் மிருதுவானவை. ஒரு சமயம் பிரம்மாவின் இந்த ஐந்தாவது தலையைப் பரமசி வன் நகத்தால் கிள்ளி எறிந்து விட்டார். அதற்குப் பயந்து பிரமன் மீதமுள்ள தன் தலைகளுக்கு ஒரே காலத்தில் அபயமளிக்க வேண்டுமென்று உன் நான்கு கைகளின்  அழகைத் தன் நான்கு வாய்களாலும் துதி செய்கிறார்.
ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால், எடுத்த காரியம் அனைத்தும்  நிறைவேறும். வியாபாரத்தில் வெற்றியும், அதிக லாபமும் உண்டாகும். பயம் நீங்கும்
சவுந்தரிய லஹரி ஆதிசங்கரர் அருளியது. இது 61 முதல் 70 வரை உள்ளது.  இதன் தொடர்ச்சி பார்க்கவும்.
புரோகிதர், ஜோதிடர். G.V. மணிகண்ட ஷர்மா - மேற்படி விபரம் திருத்தம் வேண்டும் என்றால் உங்கள் கருத்துக்களை எழுதவும்.        
E-mail : manisharmajothidam@gmail.com என்ற முகவரியில்



No comments:

Post a Comment