Monday 30 November 2015

ஆஞ்சநேயர் மூல மந்திரம்

ஸ்ரீராமதூதாய ஆஞ்சநேயாய, வாயுபுத்ராய, மஹாபலாய, ஸீதாதுக்க நிவாரணாய, லங்காவிதாஹகாய, ம்ஹாபலப்ரசண்டாய, பல்குணஸகாய, கோலாஹல ஸகல ப்ரஹ்மாண்ட பாலகாய,
ஸப்தஸமுத்ர நிராலங்கிதாய, பிங்கள்நயநாய அமித விக்ரமாய, ஸூர்யபிம்பஸேவகாய, துஷ்ட நிராலம்ப க்ருதாய, ஸஞ்சீவிநீ  ஸமாநயந ஸம்ர்த்தாய, அங்கத லக்ஷ்மணகபிஸைந்ய ப்ராணநிர்வாஹ்காய, தசகண்ட வித் வம்ஸநாய ராமேஷ்டாய, பல்குணஸகாசாய,

ஸீதாஸஹித ராம சந்த்ர ப்ரஸாதகாய ஷட்ப்ரயோகாங்க

ஸ்ரீ ஹனுமத் சுலோகம் வெற்றி தரும் அரிய மந்திரம்

நான் சொல்லப்போவதோ மெய்ஞ்ஞான வழி நான் அனுபவித்த வெற்றி பெற்ற வழி பலரும் இன்று வெற்றி பெற்று கொண்டிருக்கும் வழி இந்த வழியை பெறுவதற்கு நீங்கள் ஆகாயத்தை வில்லாக வளைக்க வேண்டாம்.  மணலை கயிறாக திரிக்க வேண்டாம்.  தனியான ஒரு இடம் அது உங்கள் அறையாக இருக்கலாம்.  தெருமுனையாக இருக்கலாம்.  அரைமணி நேரத்தை அதற்கென்று ஒதுக்கி விடுங்கள்.  காலையோமாலையோ, இரவோ எதுவாகவும் இருக்கலாம்


  “ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் வாமே நம:  ஸ்வாஹா

இந்த மந்திரத்தை உதடு அசையாமல் நாக்கு உச்சரிக்காமல் மனதிற்குள் ஆழமாக, மிக ஆழமாக இருபது நிமிட நேரம் தொடர்ச்சியாக சொல்லுங்கள்.  சில நாட்களிலேயே உங்கள் வாழ்க்கையில் மாறுதல் ஏற்படுவதை  அறிவீர்கள்.  மந்திரம், மாயம் என்று நம்புபவர்கள், தன்னம்பிக்கை இல்லாத கோழைகள் என்று சிலர் சொல்லலாம்.  அதற்கான பதிலை தேடி மனதை அலையவிட வேண்டிய அவசியம் இல்லை.  ஆற்று சுழலில் அகப்பட்டு வெளியில் வர முயற்சிப்பவனுக்கு கையில் கிடைக்கும் கட்டை போன்றது இந்த மந்திரம்.  இதை பற்றிக் கொண்டால் கரைசேரலாம் என்று சவால்விட்டு சொல்கிறேன்.  முயன்று பாருங்கள் வெற்றி நிச்சயம்.

5.ஸ்ரீ ஹனுமத் சுலோகம் கெட்ட சக்திகளால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்க

ஓம்  நமோ ஹனுமதே ருத்ராவதாராய |
தேவ தானவ யக்ஷ ராக்ஷஸ பூத ப்ரேத பிசாச|
டாகினி சாகினி துஷ்ட க்ரஹ பந்தனாய ராமதூதாய ஸ்வாஹா ||


அடிக்கடி பயந்து அல்லது கெட்ட கனவு கண்டு திடுக்கிட்டு எழுதல், உறக்கத்தில் ஏதோ ஒன்று அமுக்குவது போல் இருந்தால் இம்மந்திரத்தை மனதுக்குள் ஜெபிக்க அவை உடனே நீங்கும்.உங்களுக்கு படுபட்சி இல்லாத நல்ல நாளாகத்  தேர்ந்தெடுத்து ஒரு நல்ல வெற்றிலையில் செந்தூரம் கொண்டு "ஹ்ராம்" என்று எழுதி  இம்மந்திரத்தை 1008 உரு ஜெபித்து அந்த வெற்றிலையைச்  சுருட்டித் தாயத்துக்குள்  அடைத்து இடுப்பில் அணிந்து கொள்ள பூத,ப்ரேத,பிசாசு,துர்சக்திகளின் பாதிப்புகள் நிரந்தரமாக நீங்கும்.
தனி நபருக்கு இல்லாமல் ஒரு வீடு,கடை,தொழிற்சாலை போன்றவற்றுக்கு துஷ்ட சக்திகளால் பாதிப்பு என்றால் மேற்கண்ட வெற்றிலையை ஒரு சிகப்புத் துணியில் முடிந்து வீடு,கடை,தொழிற்சாலை வாசலில் கட்டி வைக்கவும்.


4.ஸ்ரீ ஹனுமத் சுலோகம் திருஷ்டி, மந்திர யந்திரங்களால் பாதிப்புகள் நீங்க,

4.பிறரால் செய்யப்பட திருஷ்டி, மந்திர யந்திரங்களால் உண்டான பாதிப்புகள் நீங்க, நோய்கள், பயம் நீங்க, சர்வ கார்யங்களிலும் வெற்றி பெற :

ஓம்  நமோ ஹனுமதே ருத்ராவதாராய |
பர யந்திர மந்திர தந்திர த்ராடக நாசகாய |
சர்வஜ்வர சேதகாய சர்வ வியாதி நிக்ருந்தகாய |
சர்வ பய ப்ரசமனாய சர்வ துஷ்ட முக ஸ்தம்பனாய |
சர்வகார்ய சித்திப்ரதாய ராமதூதாய ஸ்வாஹா ||

மேற்சொன்ன பலன்கள் போக மேலும் சில காரியங்களுக்கும் இம்மந்திரம் பயன்படும்.எதிர்களுடன் வாக்குவாதம், வழக்குகளுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலையில் இடது கையில் ஒரு செம்பில் நீர் வைத்துக் கொண்டு இம்மந்திரத்தை 27 தடவை ஜெபித்து அந்த நீரால் முகம் கழுவிச் செல்ல வெற்றி கிட்டும். 

3.ஸ்ரீ ஹனுமத் சுலோகம் எல்லா ஆபத்துக்களில் இருந்தும் விடுபட

ஓம்  நமோ ஹனுமதே ருத்ராவதாராய |ஆத்யாத்மிகாதி தெய்வீகாதி
பௌதீக தாபத்ரய நிவாரணாய| ராமதூதாய ஸ்வாஹா ||


உங்களுக்கு படுபட்சி இல்லாத நல்ல நாளாகத்  தேர்ந்தெடுத்து 108 தடவை இம்மந்திரம் ஜெபித்து கையில் ரக்ஷை கட்டிக்கொள்ள மனிதர்களாலும், இயற்கை மற்றும் துஷ்ட சக்திகளாலும் எவ்வித ஆபத்தும் ஏற்படாது சர்வரக்ஷையாக விளங்கிக் காக்கும்.ரக்ஷையை அணியும் முன் மேற்சொன்ன மந்திரம் 3 தடவை ஜெபித்து அர்ச்சித்து பின் அணிந்து கொள்ளவும். 

2. ஸ்ரீ ஹனுமத் சுலோகம் வியாதிகள், எதிரிகள் நீங்க , வசீகரம் தரும் மந்திரம்.

2.வியாதிகள்,எதிரிகள் நீங்க ,வசீகரம் தரும் மந்திரம் 

ஓம்  நமோ ஹனுமதே ருத்ராவதாராய |
சர்வ சத்ரு சம்ஹாரணாய சர்வ ரோக ஹராய |
சர்வ வசீகரணாய ராமதூதாய ஸ்வாஹா ||

1.ஸ்ரீ ஹனுமத் சுலோகம்

அசாத்ய  சாதக ஸ்வாமிந் |
அசாத்யம் தவகிம்வத |
ராம தூத க்ருபாசிந்தோ |
மத் கார்யம் சாதய ப்ரபோ|

எந்த ஒரு காரியம் துவங்கும் முன்பும் இந்த ஸ்லோகத்தை மூன்று தடவை கூறி ஆஞ்சநேயரை வணங்கி வேண்டிய பின்னர் துவங்க சிறப்பாக முடியும்.

ஏற்கனவே துவங்கிய வேலை பாதியில் முடிவடையாமல் நின்றால் செவ்வாய்க்கிழமை அன்று ஸ்ரீ ஹனுமன் ஆலயம் சென்று அவருக்கு வெற்றிலை மாலை சாற்றி அமர்ந்து இந்த ஸ்லோகத்தை  27 தடவை ஜெபித்து வேண்டிக்கொள்ள தடைபட்ட காரியம் விரைவில் முடியும் சூழல் உருவாகும்.