பகவானுக்கும் தோஷம்
ஸமஸ்த ஜனங்களுக்கும் கங்கா
ஸ்நானத்தால் தோஷங்கள் போய், அவர்கள் ஸந்தோஷமாகப் பண்டிகை கொண்டாடும்படி வரம் கொடுத்த
கிருஷ்ண பரமாத்மாவோ இப்போது தம்மையே ஒரு தோஷத்துக்கு ஆளாக்கிக்கொண்டார்! தெய்வமேயானாலும்
சாஸ்திரம் சொல்கிற விதி நிஷேதங்களின்படி – ‘இதைச் செய்’ என்பது விதி; ‘இதைச் செய்யாதே’
என்பது நிஷேதம்; இதுகளின்படி – பலன்களை ஏற்றுக் கொண்டு அநுபவித்துக் காட்டினால்தான்
லோகத்தில் தர்மாநுஷ்டானம் நிற்கும் என்பதால் இப்படிப் பண்ணினார். என்ன செய்தாரென்றால்,
‘வீர ஹத்தி’ என்ற தோஷத்தைத் தாம் ஏற்றுக் கொண்டார். மஹா வீரனாக உள்ள ஒருவரைக் கொன்றால்
அதனால் ஏற்படும் தோஷம்தான் ‘வீரஹத்தி’. நரகாஸுரன் துஷ்டனானாலும் உண்மையான வீரமுள்ளவனானதால்,
இப்போது பகவான் வீர்ஹத்திக்குத் தம்மை ஆளாக்கிக் கொண்டார்.
வீரஹத்தி தோஷம் பிடித்ததால்
பகவானுடைய நீலமணி மாதிரியான பிரகாச ஸ்வரூபம் மங்கிப் போயிற்று. கறுத்து, வாடிக் கிடப்பவர்களை
“பிரம்மஹத்தி மாதிரி இருக்கு” என்கிறோமல்லவா பிராம்மணனைக் கொல்வதால் ஏற்படும் தோஷந்தான்
பிரம்மஹத்தி. இம்மாதிரிக் கொலை பாதகங்களால் தேஹ காந்தி, தேஜஸ் போய்விடும்.
ராமசந்திர மூர்த்தி ராவணனைக்
கொன்றதால் அவருக்கு வீரஹத்தி மட்டுமில்லாமல் ப்ரம்மஹத்தி, சாயாஹத்தி என்று மொத்தம்
மூன்று தோஷங்கள் ஸம்பவித்தன. ராவணன் ப்ராம்மணன், விச்ரவஸ் என்ற ரிஷியின் பிள்ளை அவன்.
நன்றாக வேத அத்யயனம் பண்ணியிருந்த அவன், கைலாஸத்துக்கு அடியில் மாட்டிக் கொண்டபோது
ஸாம கானத்தோடு வீணா கானம் செய்தே ஈச்வர்னை ப்ரீதி பண்ணி மீண்டு வந்தான். அதனால் அவனைக்
கொன்றதில் ராமருக்கு ப்ரம்மஹத்தியும் ஏற்பட்டது. ‘சாயா’ என்றால் பிரகாசம், ஒளி என்று
அர்த்தம்; figurative ஆக (உருவகமாக) ‘சாயா’ என்பது கீர்த்திக்குரிய எந்தக் குணத்தையும்
குறிக்கும். இங்கிலீஷில் கூட lustre-illustrious, glow-glory என்கிற போது பிரகாசம்
என்பதே கீர்த்திக்குரிய தன்மைகளையும் குறிக்கிறதைப் பார்க்கிறோம். ராவணனுக்கு ரூப காம்பீர்யம்,
வேத சாஸ்திரப் படிப்பு, ஸங்கீத ஞானம், சிவ பக்தி என்றிப்படி அநேக ‘சாயா’க்களிருந்ததால்
அவனை வதைத்ததில் ராமருக்கு சாயா ஹத்தி தோஷம் உண்டாயிற்று. இந்த மூன்றில் ப்ரம்மஹத்தி
போக அவர் ராமேச்வரத்திலும், வீரஹத்தியிலிருந்து விமோசனம் பெற வேதாரண்யத்திலும், சாயாஹத்தி
விலகுவதற்காகக் கும்பகோணத்துக்குப் பக்கத்திலுள்ள பட்டீச்வரத்திலும் சிவலிங்கப் பிரதிஷ்டை
செய்தார். ராமேச்வர விஷயம் மட்டும் இப்போது எல்லோருக்கும் தெரிகிறது. ஆனால் இதே மாதிரி
மற்ற இரண்டு ஊர் கோவில்களிலும் கூட ‘ராமலிங்கம்’ என்றே இப்போதும் இருக்கிறது.
2014 வருஷ பலன் மீனம்
மீனம் கடும்சொற்களால் உங்களை
காயப்படுத்துபவர்களைக் கூட அரவனைக்கும் மீன ராசி அன்பர்களே !
எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும்
உங்கள் பொறுப்புகளை நீங்கள் தட்டிக் கழிக்க மாட்டீர்கள். முடிந்தவரை அனைவருக்கும்
நன்மைகள் செய்வதற்கு பாடுபடுவீர்கள். உங்களுக்கு எப்படி இருக்கப் போகிறது இந்த விஜய
வருஷம்
கிரகநிலை:
இந்த விஜய வருஷ புத்தாண்டில் உங்கள் ராசிக்கு தனஸ்தானத்தில் கேதுவும், ராசிக்கு தைரியஸ்தானத்தில்
குருவும், அஷ்டமஸ்தானத்தில் சனி ராகுவும் இருக்கிறார்கள். சுகஸ்தானத்திற்கு குரு
மே மாதம் 27-ம் தேதி மாறுகிறார். இனி பலன்களைப் பார்க்கலாம்.
உங்கள் செயல்களால் நீங்களும் உங்களைச் சார்ந்தவர்களும் பயனடைவீர்கள். நண்பர்களுக்காகவும்,
கூட்டாளிகளுக்காகவும் சில தியாகங்களைச் செய்வீர்கள். உங்களின் இனிமையான பேச்சினால்
பகைவரையும் நண்பர்களாக்கிக் கொள்வீர்கள். சகோதர, சகோதரிகள் உங்கள் எண்ணங்களுக்கு மதிப்பு
கொடுத்து நடந்துகொள்வார்கள். சமுதாயத்தில் உயர்ந்தோரை சந்தித்து அவர்கள் மூலம் செய்தொழிலை
விரிவுபடுத்திக்கொள்வீர்கள். கடினமான செயல்களையும் சுலபமாகச் செய்து முடிப்பீர்கள்.
குடும்பத்தில் திருமணம் போன்ற
சுப நிகழ்ச்சிகளை நடத்தி முடிப்பீர்கள். வருமானம் நன்றாக இருப்பதால் புதிய வீடு,
வாகனம் வாங்க முற்படுவீர்கள். அரசாங்கத்திலிருந்து எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களிடம் கண்டிப்புடன் நடந்துகொள்வீர்கள். இதனால்
அவர்களின் மனக்கசப்புகளுக்கு ஆளாக நேரிடலாம். எனவே எச்சரிக்கையுடன் இருக்கவும். மேலும்
எவருக்கும் உங்கள் பெயரில் பணம் வாங்கித் தர வேண்டாம். சமுதாயத்தால் அங்கீகரிக்கப்படுவீர்கள்.
பெற்றோர் வகையில் இணக்கமான
சூழ்நிலை காணப்படும். அவர்களின் நீண்ட நாளைய உடல் உபாதைகள் மறைந்து மருத்துவச்
செலவுகள் குறையும்.
பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கும்.
வெளிநாட்டுத் தொடர்புகளால் நன்மை உண்டாகும். வருமானம் படிப்படியாக உயரும். உபரி வருமானங்களுக்கு
வழி பிறக்கும். புதிய சேமிப்புத் திட்டங்களில் இணைவீர்கள். ஆனால் மற்றவர்களை
எளிதாக நம்பிவிட வேண்டாம். எவருக்கும் அனாவசியமாக வாக்கு கொடுக்க வேண்டாம். மற்றபடி
குடும்பத்தில் நிம்மதி நிலவும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். தான் பிடித்த முயலுக்கு
மூன்றே கால் என்று வாதிடாமல் சமயத்துக்குத் தகுந்தவாறு விட்டுக்கொடுத்து நடந்துகொள்ளவும்.
மேலும் வழக்குகளில் ஓரளவுக்குத்தான் நன்மைகளை எதிர்பார்க்க முடியும். எனவே விட்டுக்கொடுத்து
சமரசமாக நடந்துகொள்ளவும்.
மற்றபடி திட்டமிடாது நீங்கள்
செய்யும் காரியங்களிலும் சுலபமாக வெற்றி பெறுவீர்கள். உத்யோகஸ்தர்கள் அலுவலக
வேலைகளை முன்கூட்டியே திட்டமிட்டு முடிப்பீர்கள். அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் படிப்படியாகக்
குறைந்து சகஜமான சூழ்நிலையைக் காண்பீர்கள். வருமானம் நன்றாக இருந்தாலும் கடினமாக
உழைக்க வேண்டி வரும். சக ஊழியர்கள் நட்பு பாராட்டுவார்கள். தேவையில்லாத சில
அலைச்சல்கள் உண்டானாலும் உங்கள் வேலைகள் அனைத்தும் சாதகமாகவே முடியும்.
வியாபாரிகளுக்கு கொடுக்கல்,
வாங்கலில் இருந்த சிரமங்கள் மறையும். கூட்டாளிகளால் நன்மைகளைப் பெறுவீர்கள்.
வியாபாரிகளிடையே உங்களின் செல்வாக்கு உயரும். மற்றபடி அரசாங்க விவகாரங்களில்
எச்சரிக்கையுடன் இருக்கவும். கணக்கு வழக்குகளை சரியாக எழுதி வைத்துக்கொள்ளவும். மறதி
காரணமாக வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும்.
விவசாயிகளுக்கு பயிர் விளைச்சல்
அமோகமாக இருக்கும். உங்களின் திறமைகள் வீண் போகாது. கருப்பு நிறப் பயிர்களால்
லாபம் கிடைக்கும். சக விவசாயிகளுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்வீர்கள். உங்களுக்குக்
கடன் கொடுத்தவர்கள் தொல்லை தர மாட்டார்கள். அதனால் நீண்ட கால முதலீடுகளில் ஈடுபட்டு
லாபம் பெறுவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு சங்கடங்கள்
குறையும். எதிர்கட்சியினரும் உங்களுக்கு ஆதரவு தருவார்கள். கட்சி மேலிடத்தின்
ஆதரவைப் பெறுவீர்கள். இதனால் புதிய பொறுப்புகள் வந்து சேரும். தொண்டர்களின் எண்ணங்களைப்
பூர்த்தி செய்வீர்கள். உட்கட்சிப் பூசலில் சிக்கிக்கொள்ளாமல் தப்பித்துக் கொள்வீர்கள்.
கலைத்துறையினர் பழைய ஒப்பந்தங்களை முடித்துக் கொடுத்த பின்னரே புதிய ஒப்பந்தங்களில்
கையெழுத்திடவும். சக கலைஞர்கள் உங்களுக்கு உதவக் கூடிய நிலையில் இருப்பதால் அவர்களை
முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்களின் படைப்புகளை புதிய வடிவத்தில் தருவீர்கள்.
புதிய கலைப் பயணங்களையும் மேற்கொள்வீர்கள்.
பெண்மணிகளுக்கு கணவருடன் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். திருமணம் போன்ற சுபகாரியங்கள்
நடக்கும். பிள்ளைகள் வழியில் சந்தோஷம் உண்டாகும். மற்றபடி உற்றார் உறவினர்களை
அனுசரித்து நடந்துகொள்ளவும். சண்டை, சச்சரவுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும்.
மாணவமணிகள் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற முடியாமல் போகலாம். எனவே கடினமாக படித்து
மனப்பாடம் செய்து முன்னேற முயற்சி செய்யவும். பெற்றோரிடம் எதிர்பார்த்த ஆதரவு
கிடைக்கும்.
பரிகாரம் :
வியாழன்தோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று நவகிரகங்களை வலம் வந்து வணங்கி
வரவும். தினமும் முன்னோர்களை வணங்கவும். காக்கைக்கு அன்னமிடவும். ஏழை எளியோர்க்கு
உதவவும்.
சொல்ல வேண்டிய
மந்திரம்:
தினசரி கோளறு பதிகம் பாராயணம் செய்யவும்.
மலர் பரிகாரம்: வியாழகிழமைதோறும் உங்களால் முடிந்த அளவு அருகம்புல்லை மாலையாகக் கட்டி
விணாயகருக்கு சாத்தவும். முடிந்தவர்கள் தேங்காய் மாலை சாத்தலாம்.
2014 வருஷ பலன் கும்பம்
கும்பம் கடுமையான சூழ்நிலைகளைக்
கூட சமயோசிதமாக கையாண்டு மற்றவர்களை ஆச்சர்யத்துடன் பார்க்க வைக்கும் கும்ப ராசி வாசகர்களே
!
நீங்கள் புது தொழில்நுட்பங்களை
கற்பதில் ஆர்வம் உடையவர்கள். எதிலும் போட்டிகள் இருந்தாலும் பொறாமை கொள்ள மாட்டீர்கள்.
பொறுப்புகளை சரியாக நிறைவேற்றுவீர்கள். உங்களக்கு எப்படி இருக்கப் போகிறது இந்த
விஜய வருஷம்
கிரகநிலை
இந்த விஜய வருஷ புத்தாண்டில் உங்கள் ராசிக்கு தைரியஸ்தானத்தில் கேதுவும், ராசிக்கு
சுகஸ்தானத்தில் குருவும், பாக்கியஸ்தானத்தில் சனி ராகுவும் இருக்கிறார்கள். பஞ்சமபூர்வ
புண்ணிய ஸ்தானத்திற்கு குரு மே மாதம் 27-ம் தேதி மாறுகிறார். இனி பலன்களைப் பார்க்கலாம்.
நீங்கள் எதையும் எதிர்கொள்ளும் துணிவையும் தைரியத்தையும் பெறுவீர்கள். முடிவெடுக்காமல்
இருந்த விஷயத்தில் ஒரு சுமுகமான முடிவைக் காண்பீர்கள். சமுதாயத்தில் உயர்ந்தோரின்
பார்வை உங்கள் மீது படும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.
உடலில் ஏற்பட்ட உபாதைகள் நீங்கி மிடுக்குடன் நடப்பீர்கள். உங்களை உதாசீனம் செய்த
உற்றார், உறவினர்கள் உங்களுக்கு உதவ முன் வருவார்கள். மற்றவர்களுக்கு கொடுத்த
வாக்கை எப்பாடுபட்டேனும் காப்பாற்றி விடுவீர்கள்.
ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.
பல புராதன ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்வீர்கள். புதிய உறவு
முறைகள் ஏற்பட்டு மனதில் மகிழ்ச்சி நிறையும். கர்வத்தினால் எவரையும் எடுத்தெறிந்து
பேச வேண்டாம். வம்பு வழக்குகளில் விட்டுக்கொடுத்து சமரசமாக முடித்துக் கொள்ளவும்.
உங்கள் செய்தொழிலை விரிவு படுத்த எந்தக் குறுக்கு வழியையும் நாட வேண்டாம்.
சிறிய கௌரவப் பிரச்னைக்காக
நண்பர்களுடன் மனக்கசப்புகள் உண்டாகும். பயணங்கள் ஓரளவு நன்மையே தரும் என்பதால் அனாவசியப்
பயணங்களைத் தவிர்க்கவும். மற்றபடி செய்தொழிலில் எதிர்பார்த்த மாற்றங்கள் உண்டாகும்.
மேலும் செய்தொழிலை வேறு ஊருக்கு மாற்றுவீர்கள். வங்கிகளிடமிருந்து தேவையான நேரத்தில்
தேவையான கடன் கிடைக்கும். உங்கள் உடல் உழைப்பு அதிகரிக்கும். முக்கியமான காரியங்களை
தனித்து நின்றே செயல்படுத்தவும். நண்பர்களிடம் உங்கள் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள
வேண்டாம். மற்றபடி பெற்றோர் பெருமைப் படத் தக்க வகையில் குடும்பத்தில் உங்கள்
அணுகுமுறை இருக்கும். குடும்பத்தாருடன் விருந்து, கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழ்வீர்கள்.
சகோதர, சகோதரிகளிடம் விட்டுக் கொடுத்துப் பழகவும். அவர்களின் தனிப்பட்ட விஷயங்களில்
தலையிட்டு மாட்டிக் கொள்ள நேரிடலாம். அசையாச்சொத்துக்களை நல்ல விலைக்கு விற்று
லாபமடையும் ஆண்டாக இது அமைகிறது. உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும்
கிடைக்கும். எனவே பொறுப்புகளை உணர்ந்து சிறப்பாகப் பணியாற்றவும். அலுவலகத்தில்
பல சலுகைகள் கிடைக்கும். சக ஊழியர்கள் தேவைக்கேற்ப ஒத்துழைப்பு தருவார்கள். அவசரப்படாமல்
நிதானத்துடன் செயல்படுங்கள். வியாபாரிகளுக்கு வியாபாரம் விறுவிறுப்பாக நடக்கும். வருமானம்
நல்லபடியாக வரத் தொடங்கும். ஆனாலும் பழைய பாக்கிகளை சிரமத்துடன் வசூலிப்பீர்கள்.
மற்றபடி புதிய முயற்சிகள் பலனளிக்கும். மொத்த விலைக்கு பொருட்களை வாங்கும்போது
அவற்றுக்கு சிறிது கூடுதல் பணம் கொடுக்க நேரிடும். எனவே சூழ்நிலைக்குத் தகுந்தவாறு
விலையைக் கூட்டியோ குறைத்தோ பொருட்களை விற்பனை செய்யவும். விவசாயிகள் குறுகிய
காலப் பயிர்களையும், ஊடு பயிர்களையும் பயிரிட்டு நலம் பெறுங்கள். கால்நடைகளை
வைத்திருப்போர் நல்ல பலன்களை அடைவீர்கள். விவசாய உபகரணங்களை வாங்கி பயிர் விளைச்சலை
இரட்டிப்பாக்கிக் கொள்வீர்கள். புதிய குத்தகைகளை நன்றாக யோசித்து எடுக்கவும்.
வங்கிக் கடன்கள் பெற தாமதமாகும் என்பதால் பொறுமையுடன் இருந்து கடன்களைப் பெற்று
எதிர்காலத்திற்கு வித்திடவும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். அரசியல்வாதிகள்
தொண்டர்களின் ஆதரவுடன் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். எதிரிகளால் கஷ்டங்கள்
உண்டாகாது என்றாலும் அவர்களின் மீது ஒரு கண் வைத்திருக்கவும். கட்சித் தலைமையிடம் நல்ல
பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவும். சச்சரவுகளில் வாயைக் கொடுத்து மாட்டிக் கொள்ள
வேண்டாம். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் தானாகவே கிடைக்கும். அவற்றை
முடித்துக் கொடுத்து நற் பெயர் வாங்குவீர்கள். மற்றபடி உங்கள் செயல்களை சீரிய
முறையில் திட்டமிட்டுச் செய்யவும். எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாமல் இன்று
எது முக்கியமோ அதை செய்ய முற்படுங்கள். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை அதிகரிக்கும்.
ஆனாலும் உற்றார், உறவினர்கள் அனுகூலமான இருக்க மாட்டார்கள. அனாவசியப் பேச்சுகளைத் தவிர்க்கவும்.
தெய்வ வழிபாட்டில் மனதைச் செலுத்தி நிம்மதி அடையுங்கள். புதிய வாகனங்கள் வாங்கும்
எண்ணத்தைத் தவிர்க்கவும். மாணவமணிகள் படிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். கடுமையாக
முயற்சி செய்து எல்லா தடைகளையும் உடைத்து வெற்றிவாகை சூடுவீர்கள். எதையும் சிந்தித்து
செயல்படுத்துவீர்கள். விளையாட்டில் வெற்றி பெறுவீர்கள்.
பரிகாரம் : சனிக்கிழமைதோறும் அருகிலிருக்கும் சிவன்
கோவிலுக்குச் சென்று 11 முறை வலம் வரவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்: தினசரி மாலை வேளையில் ஸ்ரீலலிதா ஸகஸ்ரநாமம்
பாராயணம் செய்யவும்.
மலர் பரிகாரம்: சனிக்கிழமைதோறும் வினாயகருக்கு அருகம்புல்லை
அணிவித்து வழிபட்டு வர உங்கள் பொருளாதார நிலைமை படிப்படியாக மூன்னேற்றம்
ஏற்படும்.
2014 வருஷ பலன் மகரம்
மகரம் எதிலும்
போராட்ட குணத்துடன் ஈடுபட்டு வெற்றிகளைக் குவிக்கும் மகர ராசி அன்பர்களே !
நீங்கள் தன்னம்பிக்கை
மிக்கவர்கள். கடுமையான உழைப்பின் மூலம் அனைத்து காரியங்களிலும் வாகை சூடுவீர்கள்.
உங்கள் மனசாட்சிக்கு விரோதமான க்காரியங்களை செய்ய மாட்டீர்கள். உங்களுக்கு எப்படி
இருக்கப் போகிறது இந்த விஜய வருஷம்
கிரகநிலை
இந்த விஜய வருஷ புத்தாண்டில் உங்கள் ராசிக்கு சுகஸ்தானத்தில் கேதுவும், ராசிக்கு பஞ்சமபூர்வ
புண்ணிய இடத்தில் குருவும், தொழில்ஸ்தானத்தில் சனி ராகுவும் இருக்கிறார்கள்.
கள்த்திர சப்தமஸ்தானத்திற்கு குரு மே மாதம் 27-ம் தேதி மாறுகிறார். இனி பலன்களைப் பார்க்கலாம்.
உங்களின் செய்தொழிலில் எதிர்பாராத லாபத்தைக் காண்பீர்கள். புதிய முயற்சிகளை வெற்றியுடன்
செயல்படுத்துவீர்கள். உங்களின் தன்னம்பிக்கை உயரும். புத்திக் கூர்மையுடன் சமயோஜிதமாக
யோசித்து நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். சோதனைகளைச் சாதனைகளாக்கிக் கொள்வீர்கள். பொது
நலத் தொண்டுகளில் உங்களை அர்ப்பணித்துக் கொள்வீர்கள். உங்களின் செல்வாக்கு உயரும்.
உங்களைச் சுற்றிலும் ஒரு நண்பர் கூட்டம் இருக்கும்.
பெற்றோருக்கு ஏற்பட்ட
உடல் உபாதைகள் தீரும். பொருளாதார வளத்தைப் பெருக்குவதற்கு துணிவான முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்ந்து எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்வீர்கள்.
பிள்ளைகளுக்கு வெளியூர் அல்லது வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
அறிவாளிகளின் ஆலோசனை தக்க நேரத்தில் கிடைக்கும். அலைச்சல் நீங்கி திட்டமிட்ட காரியங்கள்
முடிவடையும். கடுமையாக உழைத்து எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்வீர்கள். சிலருக்கு
சொந்தத் தொழில் செய்வதற்கான வாய்ப்புகள் தேடிவரும்.
நண்பர்கள், கூட்டாளிகள்
தேவைக்கு ஏற்ப உதவுவார்கள். தெய்வ பலத்தால் அனைத்தையும் சுலபமாக சாதித்துக் கொள்வீர்கள்.
வழக்கு விவகாரங்களில் கவனமாக இருக்கவும். வாய்தாக்களை தவறாமல் குறித்துக்கொண்டு
ஆஜராகவும். உங்களுக்கு எதிராக, ஒரு தலைப்பட்சமாக தீர்ப்புகள் வழங்கப்படாமல் பார்த்துக்கொள்ளவும்.
குடும்பத்தாருடன் கவலையில்லாமல் கலகலப்பாகப் பேசிப் பழகுவீர்கள். உற்றார், உறவினர்கள்
பாசம் காட்டுவார்கள். சமுதாயத்தில் பிரபலமான குடும்பத்தினருடன் திருமண உறவு உண்டாகும்.
ஷேர் மார்க்கெட் போன்ற துறைகளின் மூலம் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். குழப்பவாதிகளையும்,
அதீத சந்தேகப் பிராணிகளையும் உங்களிடமிருந்து விலக்கி வைக்கவும். நவநாகரீக ஆடைகளை அணிந்து
கம்பீரமாக வலம் வருவீர்கள். அரசாங்கத்திலிருந்து சில சலுகைகளைப் பெறுவீர்கள்.
இந்தக் காலகட்டத்தில் உங்களின் நினைவாற்றம் அதிகரிக்கும். அதன்மூலம் பரிசுகளை வெல்லும்
ஆண்டாகவும் இது அமைகிறது.
உத்யோகஸ்தர்கள் இயந்திர
வாழ்க்கையிலிருந்து விடுபட்டு சிந்தனைகளுக்கு செயல்வடிவம் கொடுப்பீர்கள். உங்களின்
முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பவர்களைக் கண்டு விலக்கிவிடுவீர்கள். மேலதிகாரிகளின்
ஆதரவுடன் பதவி உயர்வு கிடைக்கும். உங்களின் அலுவலக வேலைப் பளு கூடினாலும் அவற்றைச்
சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். சக ஊழியர்கள் தேவைக்கேற்ப உதவி செய்வார்கள். சிலர் கடன்
வாங்கி வாகனங்களை வாங்குவீர்கள்.
வியாபாரிகள் ஓய்வில்லாமல்
உழைத்து நல்ல லாபத்தைக் காண்பீர்கள். புதிய கடன்களை வாங்கி வியாபாரத்தை விரிவுபடுத்த
நினைப்பீர்கள். கூட்டாளிகளுடன் ஏற்பட்ட மனக் கசப்புகளை சமாளித்து விடுவீர்கள். புதிய
யுக்திகளைப் புகுத்தி வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள். சிலர் திட்டமிட்டு செயல்பட்டு
ஏற்றுமதிக்கான வாய்ப்புகளைப் பெறுவார்கள். கொடுக்கல், வாங்கல் சிறப்பாகவே தொடரும்.
விவசாயிகளுக்கு விளைச்சல்
அமோகமாக இருக்கும். அரசு வழியில் உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த வங்கிக் கடன்களைப்
பெற்று கழனிகளை சீரமைப்பீர்கள். மானியங்கள் கிடைக்கும். புதிய விவசாயக் கருவிகளை
வாங்குவீர்கள். விவசாய இடுபொருட்களுக்கு சிறிது செலவு செய்ய நேரிடும். மனதிலிருந்த
அச்சம் விலகும். கால்நடைகளின் மூலம் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். விவசாயக் கூலிகளை
கௌரவமாக நடத்துவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு கட்சி
மேலிடத்தின் ஆதரவு சில நேரங்களில் கூடுதலாக கிடைக்கும். ஆதரவு குறைந்த நேரங்களில் சற்று
அடங்கிப் போகவும். கட்சி மேலிடத்திற்குத் தகவல் அனுப்பும்போது அவர்களின் எண்ணங்களை
அறிந்துகொண்டு எச்சரிக்கையுடன் இருக்கவும். மற்றவர்களுக்கு முன் ஜாமீன் போட வேண்டாம்.
கலைத்துறையினர் வெற்றி மேல் வெற்றி காண்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சக
கலைஞர்களால் பாராட்டப்படுவீர்கள்.
புதிய நண்பர்களால் பலன்
அடைவீர்கள். படைப்புகளை உருவாக்குவதில் முனைப்புடன் ஈடுபடுவீர்கள். பண வரவு நன்றாக
இருக்கும். சேமிப்புகள் உயரும். பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும்.
சீரிய முயற்சி செய்து சுப காரியங்களை நடத்துவீர்கள். உறவினர்கள் வகையில் இருந்த
மனக்கசப்புகள் நீங்கி அமைதி நிலவும். பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகள் மறையும். சமையல்
செய்யும்போது கவனத்துடன் இருக்கவும்.
மாணவமணிகள் கல்வியிலும்
விளையாட்டிலும் நன்கு தேர்ச்சி பெறுவீர்கள். ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெற்று மகிழ்வீர்கள்.
அதிக மதிப்பெண்களைப் பெறுவதற்காக போதிய பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். விளையாட்டினால்
உடல் ஆரோக்யத்தை வளர்த்துக் கொள்வீர்கள்.
பரிகாரம் :
சனிதோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று ஸ்ரீபைரவரை வணங்கி வரவும். முடிந்தால்
மிளகு விளக்கு போடவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்:
தினசரி காலபைரவாஷ்டகம் பாராயணம் செய்யவும்.
மலர் பரிகாரம்: சனிக்கிழமைதோறும் பெருமாள் கோவிலில் இருக்கும் தாயாருக்கு மல்லிகைப்
பூவை அர்ப்பணித்து 3 முறை வலம் வரவும். உங்களுக்கு பொன்னான காலம் கனிந்து வரும்.
2014 வருஷ பலன் தனுசு
தனுசு நேர்மையுடனும் விடாமுயற்சியுடனும்
செயல்பட்டு முன்னுதாரணமாக வாழும் தனுசு ராசி அன்பர்களே !
நீங்கள் அனைத்து பிரச்சனைகளையும்
உங்கள் வாக்கு சாதுர்யத்தால் சமாளீப்பீர்கள். ஆனால் எந்தக் காரியத்தையும் தள்ளிப் போடுதல்
கூடாது என்பதனை கவனித்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கு எப்படி இருக்கப் போகிறது இந்த
விஜய வருஷம்:
கிரகநிலை
இந்த விஜய வருஷ புத்தாண்டில் உங்கள் ராசிக்கு பஞ்சமபூர்வ ஸ்தானத்தில் கேதுவும், ராசிக்கு
6ம் இடத்தில் ராசிநாதன் குருவும், லாபஸ்தானத்தில் சனி ராகுவும் இருக்கிறார்கள்.
கள்த்திர சப்தமஸ்தானத்திற்கு குரு மே மாதம் 27-ம் தேதி மாறுகிறார். இனி பலன்களைப் பார்க்கலாம்.
செய்தொழிலில் உங்களை முன்னிலைப்படுத்திக்கொள்ளும் சந்தர்ப்பங்கள் உருவாகும். எதிர்பாராத
நபர்களிடமிருந்து நல்லாதரவு கிடைக்கும். இன்முகத்துடன் வலம் வருவீர்கள். உங்களுக்கு
கீழ் வேலை செய்பவர்களின் சிறுசிறு தவறுகளைக் கண்டுகொள்ள மாட்டீர்கள். பெற்றோர் பெருமைபடத்
தக்க வகையில் குடும்ப ஒற்றுமையைப் பேணிக் காப்பீர்கள். எல்லா விஷயங்களுக்கும் உடனடி
தீர்வைக் காண்பீர்கள். நண்பர்களிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்துவீர்கள்.
பூர்வீகச் சொத்துக்களில்
இருந்த பிரச்னைகள் அகலும். அவற்றிலிருந்து வருமானம் வரத்தொடங்கும். பிள்ளைகளின் நலனில்
அக்கறை செலுத்துவீர்கள். எதிரிகள் தானாகவே அடங்கி விடுவார்கள். செய்தொழிலை விரிவுபடுத்துவதற்காக
அடிக்கடி வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும்.
எதிரிகளையும் நண்பர்களாக்கிக் கொள்வீர்கள். வெளியில் கொடுத்திருந்த கடன் வட்டியும்
முதலுமாகத் திரும்பி வரும். உங்களின் சொந்தக் காலில் நின்று வெற்றி பெறுவீர்கள்.
தெய்வ பலத்தைப் பெருக்கிக்கொள்வீர்கள்.
குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். உறவினர்களை எக்காரணம் கொண்டும் சந்தேகப் பார்வை
பார்க்க வேண்டாம். எந்த வியாதி என்று அறிய முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தவர்கள்
சட்டென்று குணமடைந்துவிடுவார்கள். மரியாதை நிமித்தமாக உயர்ந்தோரை சந்தித்து பெருமையடைவீர்கள்.
சிலருக்கு இந்த ஆண்டு விசாலமான இல்லங்களுக்கு மாறும் யோகம் உண்டாகும். கூட்டு
வியாபாரத்தில் உள்ளவர்கள் புதிய நண்பர்களைச் சேர்க்கும்போது எச்சரிக்கையுடன் இருக்கவும்.
ஏனெனில் தகுதியில்லாதவர்களால் வில்லங்கம் வரலாம். மற்றபடி நஷ்டம் வரும் தொழில்களிலிருந்து
பக்குவமாக விலகிவிடுவீர்கள். பணப்புழக்கத்தில் பின்னடைவுகள் ஏற்படாது. எவருக்கும்
முன் ஜாமீன் போட வேண்டாம். உங்கள் பெயரில் கடன் வாங்கித் தர வேண்டாம்.
உத்யோகஸ்தர்கள்
கவனமாகப் பணியாற்றி உழைப்புக்கேற்ற பலன்களைப் பெறுவீர்கள். உங்களுக்குக் கீழ் பணியாற்றுபவர்களால்
சில பிரச்னைகள் ஏற்படும் என்பதால் கவனமாக நடந்துகொள்ளவும். அவர்களின் குறைகளை
உடனுக்குடன் தீர்த்து வைக்கவும். பிரச்னைகளை வளரவிட வேண்டாம். ஊதிய உயர்வு சிறப்பாக
அமையும். மேலிடத்தின் நம்பிக்கைக்கு உரியவர் என்ற பெயரை வாங்குவீர்கள்.
வியாபாரிகள் வியாபாரத்தில்
முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உங்களின் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். புதிய
முதலீடுகள் செய்வதற்கு பழைய முதலீடுகள் கைகொடுக்கும். போட்டிகள் சற்று கடுமையாக இருந்தாலும்
அவற்றை சாதுர்யத்துடன் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள்
சாதகமாக முடியும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பைப் பெற்று செயல்பட்டால் உங்களின்
முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும்.
விவசாயிகளுக்கு கொள்முதல்
அதிகரித்தாலும் லாபம் குறைவாகவே கிடைக்கும். அதனால் உபரி வருமானத்தைப் பெருக்க
காய்கறிகள், கிழங்குகள் போன்றவற்றை பயிரிட்டு பலனடைவீர்கள். சந்தையில் போட்டிக்குத்
தகுந்தவாறு விலையை நிர்ணயம் செய்து விற்றால் நஷ்டங்களைத் தவிர்க்கலாம். அரசியல்வாதிகளுக்கு
சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். கடந்த காலத்தில் ஒதுக்கி வைத்திருந்த திட்டங்களை
செயல்படுத்த முனைவீர்கள். கட்சிப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். கட்சியில்
மாற்றங்களைக் கொண்டு வர முயற்சிக்க வேண்டாம். தற்போது உள்ள நிலைமையைப் பயன்படுத்தி
கட்சி மேலிடத்திடம் நல்ல பெயர் வாங்க முயற்சிக்கவும். சமுதாயத்தில் உங்கள் கௌரவமும்,
புகழும் உயரும்.
கலைத்துறையினருக்கு விருதுகளும்
பாராட்டுகளும் கிடைக்கும். கால தாமதம் ஏற்பட்டாலும் புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள்.
சக கலைஞர்களில் நம்பகமானவர்களைக் கலந்தாலோசித்த பிறகே முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
தொழிலில் நிலவிய போட்டி, பொறாமைகள் குறையும். பல நாட்களாக வராமல் இருந்த தொகை
உங்கள் கையைத் தேடி வரும். புதிய தொழில் நுட்பத்தை அறிந்துகொள்வீர்கள்.
பெண்மணிகளுக்கு கணவரிடம்
நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். குடும்பத்தில் சந்தோஷம் நிறையும். உங்களின்
பொறுப்புகளை சரியாக நிறைவேற்றுவீர்கள். சகோதர, சகோதரி உறவில் ஏற்பட்ட விரிசல்கள்
மறையும். உடல் ஆரோக்யத்தில் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. மாணவமணிகள் நல்ல முறையில்
படித்து மதிப்பெண்களைப் பெறுவீர்கள். விளையாட்டுகளில் ஈடுபட்டு உற்சாகம் அடைவீர்கள்.
உங்களின் வருங்காலக் கனவுகள் பலிப்பதற்கான அறிகுறிகள் தென்படும்.
பரிகாரம் :
வியாழன்தோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று ஸ்ரீகுருபகவானை வணங்கி வரவும்.
தினமும் முன்னோர்களை வணங்கவும்.
சொல்ல வேண்டிய
மந்திரம்:
தினசரி காலை சிவபுராணம் படிக்கவும். தேவாரம் தெரிந்தவர்கள் அதனை பாராயணம் செய்யவும்.
மலர் பரிகாரம்: வியாழகிழமைதோறும் வினாயகருக்கு அருகம்புல்லை அணிவித்து வழிபட்டு
வர உங்கள் பொருளாதார நிலைமை படிப்படியாக மூன்னேற்றம் ஏற்படும்..